Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இத் திரியை பார்த்து ஏன் பதட்டபட வேண்டும்?

வரலாற்றில் நடந்தவற்றை மீள நினைவூட்டுவதில் தவறில்லை என்பதுடன் தேவையும் கூட.

சிங்களம் ஒரு போதும் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. நிறம் மட்டும் மாறலாம்.

திரிக்கு நன்றி ரஞ்சித்.

  • Replies 237
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

இத் திரியை பார்த்து ஏன் பதட்டபட வேண்டும்?

வரலாற்றில் நடந்தவற்றை மீள நினைவூட்டுவதில் தவறில்லை என்பதுடன் தேவையும் கூட.

சிங்களம் ஒரு போதும் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. நிறம் மட்டும் மாறலாம்.

திரிக்கு நன்றி ரஞ்சித்.

இதிலே எழுதியது மட்டுமல்ல எவ்வளவு கீழ்தரமாக பதிவு செய்கிறார்கள்.

நடந்தவைகளைத் தானே எழுதியிருக்கிறார்கள் என்று கூட யோசிக்கத் தோன்றவில்லை.

ஊரிலே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

வாக்கே இல்லாத நாம தான் அடித்துப் புடுங்குகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை நினைவு கூறுகிறோம் என்ற போர்வையில் வன்மத்தையும்  குரோதத்தையும் விதைப்பது  சிங்கள , தமிழ் இனவாதிகளின் வாடிக்கை.

முதலில், “இனவெறியன் அநுர” என்ற இத்தலைப்பு சரியானதுதானா என்பதை  பொறுப்புடன் யாழ் இணையம் சிந்திக்க வேண்டும். 

அநுர அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணிக்குள் பல மாற்றங்கள் வந்து பல இனவாதிகள் வெளியேற்றப்பட்டு ஹரணி அமரசூர போன்ற சமூக ஆர்வலர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவற்றை கண்ணக்கெடுக்காமல் பழைய ஜேவிபி செய்த அரசியல் நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக அநுர மீது திணித்து அவரை இனவாதாக கட்டமைப்பது தவறானது.  

அநுர பதவிக்கு வந்து இனவாதத்திற் தீமைகளையும் எவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் எமது பழைய  அரசியல்வாதிகள்   இனவாதத்தை வளர்ததார்கள் என்று விரிவாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்து புதிய பாதையில் இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோன் என ற அறைகூவலை விடுத்த நிலையில் அவர் தனது ஆட்சியை முழுமையாக ஆரம்பிக்க முதலே  அநுரவை ஒரு இனவெறியர் என்று கட்டமைக்க முன்வருவது வரலாற்றை நினைவுகூற அல்ல. மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை மறைய விடாமல் அதன் மூலம. தாம் அரசியல் நடத்தும் நயவஞ்சகமே.   

9 minutes ago, island said:

வரலாற்றை நினைவு கூறுகிறோம் என்ற போர்வையில் வன்மத்தையும்  குரோதத்தையும் விதைப்பது  சிங்கள , தமிழ் இனவாதிகளின் வாடிக்கை.

முதலில், “இனவெறியன் அநுர” என்ற இத்தலைப்பு சரியானதுதானா என்பதை  பொறுப்புடன் யாழ் இணையம் சிந்திக்க வேண்டும். 

அநுர அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணிக்குள் பல மாற்றங்கள் வந்து பல இனவாதிகள் வெளியேற்றப்பட்டு ஹரணி அமரசூர போன்ற சமூக ஆர்வலர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவற்றை கண்ணக்கெடுக்காமல் பழைய ஜேவிபி செய்த அரசியல் நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக அநுர மீது திணித்து அவரை இனவாதாக கட்டமைப்பது தவறானது.  

அநுர பதவிக்கு வந்து இனவாதத்திற் தீமைகளையும் எவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் எமது பழைய  அரசியல்வாதிகள்   இனவாதத்தை வளர்ததார்கள் என்று விரிவாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்து புதிய பாதையில் இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோன் என ற அறைகூவலை விடுத்த நிலையில் அவர் தனது ஆட்சியை முழுமையாக ஆரம்பிக்க முதலே  அநுரவை ஒரு இனவெறியர் என்று கட்டமைக்க முன்வருவது வரலாற்றை நினைவுகூற அல்ல. மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை மறைய விடாமல் அதன் மூலம. தாம் அரசியல் நடத்தும் நயவஞ்சகமே.   

1. அவரத்தில் நீங்கள் தலைப்பு திருத்தப்பட்டதை கவனிக்கவில்லை

2. அதிகார பரவலாக்கத்துக்கு முழு எதிர்ப்பை காட்டும் ஒரு கட்சி, அதன் சனாதிபதி இனவாதமற்ற ஆட்சியை தருவார் என கனவு காண்பதற்கு உங்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

இதிலே எழுதியது மட்டுமல்ல எவ்வளவு கீழ்தரமாக பதிவு செய்கிறார்கள்.

நடந்தவைகளைத் தானே எழுதியிருக்கிறார்கள் என்று கூட யோசிக்கத் தோன்றவில்லை.

ஊரிலே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

வாக்கே இல்லாத நாம தான் அடித்துப் புடுங்குகிறோம்.

சிங்கள அதிகாரவர்க்கத்தில் கடுமையான இனவாதிகள் இருக்க வேண்டும் என்ற விருப்பில் எப்போதுமே உள்ள  தமிழர் தரப்பு செய்த  தூண்டுதல்கள், தவறுகள் பலவற்றை இங்கு கூறினால் ஐயோ பழசை கிளறுகினான் என்று ஒப்பாரி வைப்பவர்களும் தாங்களே!

கடந்த சில நாட்களுக்கு முன்பு  கூட ஜஸ்ரின் சில பழைய விடயங்களை ஆதாரத்துக்காக சுட்டிக்காட்டியபோது அவர்  அவர் கூறிய வரலாற்று  உண்மையை மறுக்க முடியாமல் போனதால் அவர் தேவையற்று பழசு காவி திரிவதாக கூறியவர. தாங்கள் என்பதை மிக சீக்கிரமே மறந்து விட்டீர்கள்.

ஜஸ்ரின் மிகசிறப்பாக கூறினார், வரலாற்றில் நடந்த பலவற்றை சுட்டிக்காட்டும் போது பூனைப்பாதங்களால் மொள்ள கள்ள மௌனத்துடன் கடந்து போக விரும்புபவர்களே வரலாற்றை நினைவு கூருகிறோம் என்ற போர்வையில் இன குரோதத்தை இலங்கையில் தக்க வைக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

1. அவரத்தில் நீங்கள் தலைப்பு திருத்தப்பட்டதை கவனிக்கவில்லை

2. அதிகார பரவலாக்கத்துக்கு முழு எதிர்ப்பை காட்டும் ஒரு கட்சி, அதன் சனாதிபதி இனவாதமற்ற ஆட்சியை தருவார் என கனவு காண்பதற்கு உங்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது.

அவர் இனவாதமற்ற ஆட்சியை நடத்த போவதாக கூறியுள்ள நிலையில், அவர் தனது ஆட்சியை சரிவர ஆரம்பிக்க முதலே அவசரப்பட்டு  அவரை இனவெறியர் என்று  பிரச்சாரம் செய்வது சரி என உங்களுக்கு  பட்டிருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அநுரா இனவெறிக்கு எதிராக தெரிவித்த விடயங்கள் தமிழ் இனவெறியர்களை பதட்டமட செய்துள்ளது. தமது  தமிழ்  தேசிய வியாபாரத்துக்கு  புலம்பெயர் தாயக பிரதேசங்களில் பாதிப்பு வந்துவிடும் என்று இத்தரப்புகள் அச்சம் கொண்டுள்ளன. 

எனவே  அநுரா தனது ஆட்சியை சரியாக ஆரம்பிக்க முதலே அவசரமாக பழைய மக்கள் விடுதலை முன்னணி செயற்பாடுகளை தூசி தட்டி எடுத்து அதை வைத்து அநுர மீது வசைமாரி பொழிந்து அநுரவை சிங்கள இனவெறியனாக தமிழ் மக்கள் மத்தியில்  காட்டி தமது தமிழ் தேசிய வியாபாரத்தை நடத் முயல்கிறார்கள் என்பது தெரிகிறது.  

உங்களுக்கு இறந்த காலம் , நிகழ்காலம் பற்றி தெரியும் என நினைக்கிறேன். ரஞ்சித் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு செய்தவற்றை எழுதுகிறார். மேலும் அநுரவும் அக்கட்சியில் ஜேவிபியின் அட்டூளியங்களை பார்த்த வண்ணம் இருந்தவர் தான். அவர் நல்லவரா என காலம் தான் சொல்லும். 
சந்திரிக்காவும் வந்தவுடன் முந்திரிக்கொட்டையாக எழுதியவர்களும் உள்ளார்கள். இறுதியில் அவர் என்ன செய்தார் என்பதை அனைவரும் அறிவர். ஆகவே   அநுர என்ன செய்ய போகிறார் என்பதை  உன்னிப்பாக கவனிப்போம்.

 

6 hours ago, ரஞ்சித் said:

தமிழர்களுக்கு தீர்வொன்றினை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மாகாணசபை முறைமையினை எதிர்த்துப் படுகொலைகளில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி தற்போது மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதை எதிர்க்கிறது ‍- ஆவணி 1997

undefined

மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடும் அரசின் முடிவினை சட்ட ரீதியில் எதிர்க்கப்போவதாக சூளுரைத்திருக்கிறார். தனது கட்சி உட்பட அனைத்து இடதுசாரிகளையும் திரட்டி அரசின் இம்முடிவிற்கெதிராகப் போராடப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜே வி பி இன் இம்முடிவினை விமர்சித்திருக்கும் அரசாங்கத்தின் பிரதியமைச்சர் செனிவிரட்ன, மக்கள் விடுதலை முன்னணி அரசியல் ஆதாயத்திற்காகவே இதனைச் செய்கிறது என்று கூறியிருக்கிறார். "இன்று மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவேண்டும் என்று கூப்பாடு போடும் இதே கட்சியினர்தான் 1988 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் மாகாணசபைத் தேர்தலில் ஈடுபடுவோர் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டி வந்தனர்" என்றும் கூறினார்.

இனவாதிகளின் வரிசையில் முன்னுக்கு இருப்பவர் இவர் தான். அதிஸ்ட வசமாக அநுரவுடன் இவர் இல்லை என்பது ஒரு மன ஆறுதல்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

உங்களுக்கு இறந்த காலம் , நிகழ்காலம் பற்றி தெரியும் என நினைக்கிறேன். ரஞ்சித் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு செய்தவற்றை எழுதுகிறார். மேலும் அநுரவும் அக்கட்சியில் ஜேவிபியின் அட்டூளியங்களை பார்த்த வண்ணம் இருந்தவர் தான். அவர் நல்லவரா என காலம் தான் சொல்லும். 
சந்திரிக்காவும் வந்தவுடன் முந்திரிக்கொட்டையாக எழுதியவர்களும் உள்ளார்கள். இறுதியில் அவர் என்ன செய்தார் என்பதை அனைவரும் அறிவர். ஆகவே   அநுர என்ன செய்ய போகிறார் என்பதை  உன்னிப்பாக கவனிப்போம்.

 

எனக்கு கடந்த காலம் பற்றிய புரிதல் நன்றாகவே உள்ளது . இலங்கையில் இனவாதத்தை தூண்டியதிலும் அதை வளர்ததெடுத்ததுலும் சிங்களம், தமிழ் ஆகிய இரு பகுதியிலும் அரசியல் செய்த  அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்பது .  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

எனக்கு கடந்த காலம் பற்றிய புரிதல் நன்றாகவே உள்ளது . இலங்கையில் இனவாதத்தை தூண்டியதிலும் அதை வளர்ததெடுத்ததுலும் சிங்களம், தமிழ் ஆகிய இரு பகுதியிலும் அரசியல் செய்த  அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்பது .  

இருக்கும் எனில் ஏன் ரஞ்சித் எழுதுவதற்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறீர்கள். அநுர  கட்சியில் இருக்கும் போதே மேற்படி சம்பவங்கள் நடந்தன. அதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்???

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

1. அவரத்தில் நீங்கள் தலைப்பு திருத்தப்பட்டதை கவனிக்கவில்லை

2. அதிகார பரவலாக்கத்துக்கு முழு எதிர்ப்பை காட்டும் ஒரு கட்சி, அதன் சனாதிபதி இனவாதமற்ற ஆட்சியை தருவார் என கனவு காண்பதற்கு உங்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது.

யாழ். முகப்பில் இருக்கும் திரியின் தலைப்பில் ரஞ்சித் கொடுத்த தலைப்புத் தான் இன்னும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

இருக்கும் எனில் ஏன் ரஞ்சித் எழுதுவதற்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறீர்கள். அநுர  கட்சியில் இருக்கும் போதே மேற்படி சம்பவங்கள் நடந்தன. அதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்???

 

ரஞ்சித்  எழுதுவதற்கு நான் எப்படி முட்டுக்கடை போட முடியும்?  ஆனால்,  இவ்வாறு முன்முடிவுடன்  அவரை போன்ற பலர் சமூகவலைத்தளங்ககளில் கிளம்பி  உள்ளார்கள்.    அவர்களது இனவாத  நோக்கங்களை விபரித்து,  வாசிக்கும் மக்கள்   தெளிவு பெற நான் எனது கருத்துகளை  எழுதினேன். அவ்வளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

இருக்கும் எனில் ஏன் ரஞ்சித் எழுதுவதற்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறீர்கள். அநுர  கட்சியில் இருக்கும் போதே மேற்படி சம்பவங்கள் நடந்தன. அதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்???

 

ஒரு கட்டுரையின் தொனிக்கு (உள்ளடக்கத்திற்கு அல்ல!) எதிர் கருத்து வைப்பது எப்ப இருந்து "முட்டுக் கட்டையாகப்" பார்க்கப் படுகிறது? "சில கட்டுரைகளையே இணைக்க முடியாது" என்ற எழுதாத விதி இருக்கும் யாழ் களத்தில், எதிர் கருத்தும் இப்போது முட்டுக் கட்டை என்று தடை பெறும் என்கிறீர்களா😂?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

ரஞ்சித்  எழுதுவதற்கு நான் எப்படி முட்டுக்கடை போட முடியும்?  ஆனால்,  இவ்வாறு முன்முடிவுடன்  அவரை போன்ற பலர் சமூகவலைத்தளங்ககளில் கிளம்பி  உள்ளார்கள்.    அவர்களது இனவாத  நோக்கங்களை விபரித்து,  வாசிக்கும் மக்கள்   தெளிவு பெற நான் எனது கருத்துகளை  எழுதினேன். அவ்வளவு தான். 

சரி சரி. உங்களின் செந்தோழனுக்கு  தமிழில் பாட்டுக்கூடி வந்து விட்டது. கேட்டு மகிழுங்கள்.

தோழர் அநூரவை வாழ்த்தி பாடிய வாழ்த்துப்பாடல் வரிகள் & குரல் :- ஹனூஸ்

https://www.facebook.com/watch?v=499515166283447

Just now, Justin said:

ஒரு கட்டுரையின் தொனிக்கு (உள்ளடக்கத்திற்கு அல்ல!) எதிர் கருத்து வைப்பது எப்ப இருந்து "முட்டுக் கட்டையாகப்" பார்க்கப் படுகிறது? "சில கட்டுரைகளையே இணைக்க முடியாது" என்ற எழுதாத விதி இருக்கும் யாழ் களத்தில், எதிர் கருத்தும் இப்போது முட்டுக் கட்டை என்று தடை பெறும் என்கிறீர்களா😂?

அவர் எழுத முதலே முந்திக்கொட்டைகளாக வருபவர்களை தான் சொன்னேன். நீங்கள் இப்போது வரை இல்லை என்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

யாழ். முகப்பில் இருக்கும் திரியின் தலைப்பில் ரஞ்சித் கொடுத்த தலைப்புத் தான் இன்னும் இருக்கிறது.

அநுர இனவெறியரக இருக்க வேண்டும் என்பதே ரஞ்சித் போன்ற இனவாதிகளின் நோக்கம். ஆனால் தாயகத்தில்  உள்ள மக்களினதும்  உலகம. முழுவதும் வாழும. லட்சக்கணக்கான மக்களுனதும் நோக்கம் இனிமேலாவது இலங்கையில. இனவாதம் ஒழியவேண்டும் என்பதும் அநுர  இனவாதமற்ற ஆட்சியை தரவேண்டும் என்பதும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

அநுர குமார திசாநாயக எனும் சிங்கள இனவெறியனும் அவனது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி

நிழலி, தலைப்புகள் இரண்டு இருக்கின்றன. ஒன்றைத்தான் நீங்கள் திருத்தியிருக்கிறீர்கள்.

இனவெறியன்  என்று சொல்லும் போதே இந்தப் பதிவின் உள்நோக்கம் புரிந்துவிடுகிறது.  உண்மையைத்தானே பதிவிடுகிறார் என்றால், ஜனாதிபதித் தேர்தலிலேயை இவைகளைப் பதிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தில் அனுரா சொன்னதுக்கு எதிராக ரணில் கேட்டபோதவது போட்டிருக்கலாம்.

இந்த இடத்தில் சுமந்திரன் ஏன் சுஜித்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்த்திருந்தார் என்பதற்கான விளக்கம் இப்பொழுது கிடைத்து விடுகிறது. சுமந்திரன் மட்டும் அனுராவை (நேரடியாக) ஆதரித்திருந்தால், சங்கு மட்டுமல்ல முரசும் அடித்திருப்பார்கள். சுமந்திரனின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

அனுராவின் விடயம் மட்டுமல்ல கந்தன் கருணை சம்பவங்களும்,தவறான குண்டு வெடிப்புகளும்பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு .சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்இல் வந்துவிடப் போகிறது.  இதற்கென்று ஏன் இப்பொழுது அவசரம். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அனுராவுக்கு என்று ஒரு அலை எழுந்துவிடக் கூடாது என்பதுதானே அதன் நோக்கம்.

வெண்ணை திரண்டு வர எப்பொழுதும் வாய்ப்பில்லை. அதற்கு முன்னரே நாங்கள் சட்டியை உடைத்து விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

அநுர இனவெறியரக இருக்க வேண்டும் என்பதே ரஞ்சித் போன்ற இனவாதிகளின் நோக்கம். ஆனால் தாயகத்தில்  உள்ள மக்களினதும்  உலகம. முழுவதும் வாழும. லட்சக்கணக்கான மக்களுனதும் நோக்கம் இனிமேலாவது இலங்கையில. இனவாதம் ஒழியவேண்டும் என்பதும் அநுர  இனவாதமற்ற ஆட்சியை தரவேண்டும் என்பதும். 

சோச‌ல் மீடியாக்க‌ளில் இப்போது இது தான் ந‌ட‌க்குது

எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ழ‌சை ம‌ற‌ந்து நாட்டை க‌ட்டி எழுப்புவ‌தில் இருந்து ஒற்றுமையை தான் விரும்புகின‌ம்

 

இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அனுரா பின்னால் போவ‌த‌ க‌ண் கூடா பார்க்க‌ முடியுது

 

முல்லைதீவு ம‌க்க‌ள் அனுரா புக‌ழ் பாட‌ ஆர‌ம்பித்து விட்டின‌ம் ப‌ட்டு நுந்த‌துக‌ளுக்கு தான் அத‌ன் வ‌லி தெரியும் அதுக‌ள் இனியாவ‌து நின்ம‌தியாய் வாழ‌ட்டும்

 

இதுக்கை இன்னும் எழுதினால் என‌க்கும் க‌ல் எறி அதிக‌ம் விழும் இதோட‌ நிறுத்துகிறேன்...........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

அனுராவின் விடயம் மட்டுமல்ல கந்தன் கருணை சம்பவங்களும்,தவறான குண்டு வெடிப்புகளும்பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு .சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்இல் வந்துவிடப் போகிறது.  இதற்கென்று ஏன் இப்பொழுது அவசரம். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அனுராவுக்கு என்று ஒரு அலை எழுந்துவிடக் கூடாது என்பதுதானே அதன் நோக்கம்.

 

இந்த "சங்கம்" இணையம் பற்றிய அவதானிப்பையும் இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.  "இலங்கைத் தமிழ் சங்கம்-ITS என்ற அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தை பௌதீக மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட பழம் பெரும் ஈழத்தமிழர் அமைப்பின் இணையத் தளம் இது. இந்த தளத்தையும் (சங்கத்தையும்) நடத்துவோரையும் அறிவேன் - சிலர் என் நண்பர்கள். பல் வேறு காரணங்களால் புலம்பெயர்ந்து, இடையிடையே இலங்கைக்கு விடுமுறை போய் வரும் இந்த நிர்வாகிகள், ஈழத்தமிழர் பிரச்சினை என்றதும், உடனே தீவிர நிலைப்பாடுகள் பக்கம் மட்டுமே நிற்பர்.

பல உதாரணங்கள் காட்டலாம் என்றாலும் ஒரு அண்மைய உதாரணம்: சம்பந்தனும், ஈழ வேந்தனும் சில மாதங்கள் முன்பு காலமானார்கள். சம்பந்தனின் மரணச் செய்தி ஒரு செய்திக் குறிப்பாகக் கூட சங்கம் இணையத்தில் வெளிவரவில்லை. ஈழ வேந்தனுக்கு ஒரு இரு பாக நினைவுக் கட்டுரை சச்சி சிறிகாந்தாவினால் எழுதப் பட்டிருந்தது. என்ன வேறு பாடு இரு அமரர்களுக்கும்?

சம்பந்தன்  தாயகத்திலேயே இருந்து அரசியல் செய்த ஒருவர். அமரர் ஈழவேந்தன், தேசியப் பட்டியலில் கூட்டமைப்பு பா.உ பதவி கிடைத்த கொஞ்சக் காலத்திலேயே லீவு போட்டு விட்டு உலகம் பூராகவும் குடும்ப சுற்றுப் பயணம் செய்த ஒருவர். பின்னர் இந்த லீவு காரணமாகவே பதவியை இழந்து, கனடாவில் தஞ்சமடைந்தார்.

சங்கம் இணையத்தின் "ஈழவர்களுக்கு யார், அல்லது எது முக்கியம்?" என்ற கேள்விக்கான பதில் கிட்டத்தட்ட ரஞ்சித் போன்ற தீவிர தேசியவாதிகளின் பதிலோடு ஒத்துப் போகும். அதனால், சங்கம் இணையத்தை ரஞ்சித் மூலமாகப் பாவிப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

சரி சரி. உங்களின் செந்தோழனுக்கு  தமிழில் பாட்டுக்கூடி வந்து விட்டது. கேட்டு மகிழுங்கள்.

தோழர் அநூரவை வாழ்த்தி பாடிய வாழ்த்துப்பாடல் வரிகள் & குரல் :- ஹனூஸ்

https://www.facebook.com/watch?v=499515166283447

அவர் எழுத முதலே முந்திக்கொட்டைகளாக வருபவர்களை தான் சொன்னேன். நீங்கள் இப்போது வரை இல்லை என்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்.😁

கருத்துக்கு எதிர்கருத்தாக உங்கள் செந்தோழர் என்று நக்கல். இதுவே தமிழ் தேசியவாமிகளின் கடந்த 75 வருட நடைமுறை. 

நான் அநுர ஆதரவாளன் அல்ல. இலங்கையின் ஜனாதிபதியாக அவர்  தெரிவு செய்யப்டுள்ள நிலையில்  இலங்கையில் இதுவரு புரையோடிப்புள்ள இனவாதத்தை  அகற்ற போவமாக அவர் உறுதி அளித்துள்ள போது   இவ்வாறான அவதூறுகள் தேவையா? 

  • கருத்துக்கள உறவுகள்+

வணக்கம்,

ரஞ்சித் அவர்களே... தாங்கள் இதுவரை மொழிபெயர்த்துள்ள கட்டுரைகளை இரட்டை சரிபார்க்க ஏதுவாக அவற்றின் ஆங்கில விருத்திற்கான (version) கொழுவிகளையும் (link) வழங்கினால் நன்றென்பது என்னுடைய தாழ்மையான கோரிக்கையாகும்.

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள்  அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்.  

ஜே வி பியினர் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களின் போது அவர்களோடு இருந்தவர் என்பதை எளிதில் மறைக்க பார்க்கிறீர்கள். தமிழ் மக்கள் மீது 75 வருடங்களாக சிங்கள தலைவர்கள் வெற்று வார்த்தைகளை இட்டதையும் மறப்பதற்கில்லை. அநுர நல்லது செய்தால் நல்லது. அதற்காக அவரின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைப்பது  எவ்வளவு நன்மை பயக்கும் என தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனபிரச்சனை தீர்க்கப் படக் கூடாது என்று நினைத்து செயல்படும் இரண்டு கூட்டங்கள் உள்ளது. அதில் முக்கியமானது தமிழ் வெறியேற்றி பிள்ளைகளைக் கொலைக்களம் அனுப்பும் கூட்டம். 

அந்தக் கூட்டம் பின்வரும் பண்புகளைகளை முழுதாகவோ பகுதியாகவோ கொண்டிருக்கும் 

1) உள்ளே மறைந்துள்ள கடும் இந்திய விசுவாசம் 

2) தமிழர்கள் சிங்களவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் 

3) சாதிய அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை, அதனை மேற்கொள்ள தமிழ்வெறி முலாம் பூசும் தன்மை 

4) சிங்களாவரோடு சேர்ந்தால் இன்னொரு தமிழனை அடக்கி ஆள முடியாது என்னும் உயர் சாதி மனோபாவம் 

5) திருத்தவே முடியாத இந்து மத வெறி

6) ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை அற்ற மேற்புல் மேயும் நிலை 

7) திமுக கருணாநிதி அண்ணா ஆகியோரிடம் வன்மம் 

8) குடும்பம் மற்றும் சமூக வாழ்வில் ஜனநாயகம் அற்ற தன்மை 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

யாழ்ப்பாண‌த்து யூடுப்ப‌ர் அனுரா வீட்டை போன‌ போது எடுத்த‌ காணொளி

அனுராவின் உற‌வின‌ர்க‌ள் சொல்லுகின‌ம் எல்லாரும் நாட்டில் ஒற்றுமையாய் இருக்க‌னுமாம்.......................................... 

2 hours ago, nunavilan said:

இருக்கும் எனில் ஏன் ரஞ்சித் எழுதுவதற்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறீர்கள். அநுர  கட்சியில் இருக்கும் போதே மேற்படி சம்பவங்கள் நடந்தன. அதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்???

 

நுணா,

ஐலண்ட் முட்டுக்கட்டை போடவில்லை. தன் எதிர்க்கருத்தை பதிகின்றார். இது தான் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு அவசியம்.

எதிர்கருத்துகளே இல்லாத, அவற்றுக்கு சந்தர்ப்பம் கொடுக்காத அரசியல் எம்மை சூனியத்துக்குள் தள்ளிய வரலாறும் எம்மிடம் உண்டு.

 

2 hours ago, Kavi arunasalam said:

நிழலி, தலைப்புகள் இரண்டு இருக்கின்றன. ஒன்றைத்தான் நீங்கள் திருத்தியிருக்கிறீர்கள்.

 

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தியுள்ளேன்.

 

3 hours ago, island said:

அவர் இனவாதமற்ற ஆட்சியை நடத்த போவதாக கூறியுள்ள நிலையில், அவர் தனது ஆட்சியை சரிவர ஆரம்பிக்க முதலே அவசரப்பட்டு  அவரை இனவெறியர் என்று  பிரச்சாரம் செய்வது சரி என உங்களுக்கு  பட்டிருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்.  

இனவாதமற்ற ஆட்சி  எப்படிப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள் island? அதன் அம்சங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

  • நிழலி changed the title to அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இதிலே எழுதியது மட்டுமல்ல எவ்வளவு கீழ்தரமாக பதிவு செய்கிறார்கள்.

ஈழப்பிரியன், நடந்தவைகளை நினைவூட்டுவதில் தவறில்லை. அதற்காக ‘இனவெறியன்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறு. நாங்கள் கூட சிங்களவர்களின் பார்வையில் தமிழ் இனவெறியர்களாக இருக்கலாம்.

அதேநேரம் இப்பொழுதுதான் அவர் ஜனாதிபதியாகி ஒரு வாரம் ஆகியிருக்கிறது.  என்ன செய்யப் போகிறார் என காத்திருப்போம். அதற்கு கால அவகாசம் வேண்டும். அதற்குப்பின் பார்க்கலாம். இப்பொழுது அவசரமாக ஓடி வந்து வெறுப்பை அள்ளித் தெளிப்பதற்கான தேவை என்ன? அனுராவின் அலை வடக்கு கிழக்கிலும் பெரிதாக எழுந்து தமிழ் தேசியம் பேசுவோரை அழித்து விடும் என்ற பயமா? நீங்கள் குறிப்பிட்டுளதுபோல், ‘மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்றால் எதற்காக குழப்ப வேண்டும்?

நாட்டில் எனக்கான வாக்குகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழன் என்ற நிலையில்  உங்களைப் போல எனக்கும்  தேவை இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.