Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்

Oruvan

இந்தியாவின் 70 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, கடந்த 2022 ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா புறடக்ஸன் தயாரித்திருந்தது.

இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டும் வெளிவந்தன. 

பொன்னியின் செல்வன் முதலாவது படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைதிருந்தன.

சிறந்த தயாரிப்பாளர் - லைகா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்

சிறந்த பின்னணி இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான்

சிறந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்

சிறந்த இசை வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://oruvan.com/sri-lanka/2024/10/08/இந்திய-ஜனாதிபதியிடம்-இருந்து-இந்திய-ஜனாதிபதியிடம்-தேசிய-விருதினை-பெற்றுக்-கொண்டார்

இன்னொரு அடிமை இந்தியாவுக்கு இதன் மூலம் நிரந்தரமாக கிடைத்து விட்டார்.

இவரை எப்படியாவது பயன்படுத்தி தமிழர் அரசியலில் மேலும் பிரச்சினைகளை இந்தியா உருவாக்கும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே வருமான வரி இலாகாவின் மூலம் லைகாவின் இந்திய முதலீடுகளுக்கு ஆப்பு வைக்க முனைந்த இந்திய அரசு, இப்ப விருது கொடுக்கிறது என்பதை இலகுவாக ஏற்க முடியவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இன்னொரு அடிமை இந்தியாவுக்கு இதன் மூலம் நிரந்தரமாக கிடைத்து விட்டார்.

இவரை எப்படியாவது பயன்படுத்தி தமிழர் அரசியலில் மேலும் பிரச்சினைகளை இந்தியா உருவாக்கும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே வருமான வரி இலாகாவின் மூலம் லைகாவின் இந்திய முதலீடுகளுக்கு ஆப்பு வைக்க முனைந்த இந்திய அரசு, இப்ப விருது கொடுக்கிறது என்பதை இலகுவாக ஏற்க முடியவில்லை.

 

 

புகழ்ச்சி என்ற மாயைக்குள் சிக்கிவிட்டால் அடிமைதான் (அத்துடன் xxx), சிங்களம் & இந்தியா இரண்டும் திட்டமிட்டு விழுத்திவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

*******    ராஜாக்கள் சிறிலங்காவில் உள்ள சில கட்சிகளுக்கு பணம் வழங்குகிறது என்ற வதந்தி உண்மையா??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

*******    ராஜாக்கள் சிறிலங்காவில் உள்ள சில கட்சிகளுக்கு பணம் வழங்குகிறது என்ற வதந்தி உண்மையா??

இருக்கலாம். 

கட்சிகளுக்கு நன்கொடை வழங்குதல் எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே,.....ஆனால் இலங்கையில் நன்கொடையின் பெரும்  பகுதியை அரசியல்வியாதிகள் ஏப்பமிட்டுவிடுவார்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2024 at 00:25, கிருபன் said:

 

இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்

Oruvan

இந்தியாவின் 70 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, கடந்த 2022 ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா புறடக்ஸன் தயாரித்திருந்தது.

இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டும் வெளிவந்தன. 

பொன்னியின் செல்வன் முதலாவது படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைதிருந்தன.

சிறந்த தயாரிப்பாளர் - லைகா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்

சிறந்த பின்னணி இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான்

சிறந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்

சிறந்த இசை வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://oruvan.com/sri-lanka/2024/10/08/இந்திய-ஜனாதிபதியிடம்-இருந்து-இந்திய-ஜனாதிபதியிடம்-தேசிய-விருதினை-பெற்றுக்-கொண்டார்

மாநில மொழிக்கான சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் 1 க்கு விருது கிடைத்தது. இதனால்தான் அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனும் இயக்குனர் மணிரத்தினமும் விருதினை வாங்கினார்கள்.  சிறந்த தயாரிப்பாளருக்காக விருதுகள் வழங்கப்படவில்லை. இது தவறான செய்தி.   

 

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

இன்னொரு அடிமை இந்தியாவுக்கு இதன் மூலம் நிரந்தரமாக கிடைத்து விட்டார்.

இவரை எப்படியாவது பயன்படுத்தி தமிழர் அரசியலில் மேலும் பிரச்சினைகளை இந்தியா உருவாக்கும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே வருமான வரி இலாகாவின் மூலம் லைகாவின் இந்திய முதலீடுகளுக்கு ஆப்பு வைக்க முனைந்த இந்திய அரசு, இப்ப விருது கொடுக்கிறது என்பதை இலகுவாக ஏற்க முடியவில்லை.

 

 

ஒவ்வொருவருடமும் மாநில மொழியான தமிழில் வந்த சிறந்த படத்துக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இம்முறை பொன்னியின் செல்வன் 1 க்கு கிடைத்திருக்கிறது. முன்பு மகாநதி சேது விசாரணை முதல் மரியாதை , பெரியார் , பாரதி, தங்கமீன்கள், அசுரன் , கடைசி விவசாயி போன்ற படங்களுக்கு கிடைத்தபோது அப்பட்டங்களின் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் விருதினை பெற்றார்கள்.  இம்முறை பொன்னியின் செல்வன் 1 க்கான விருதினை சுபாஸ்கரன், மணிரத்தினம் அவர்கள் வாங்கினார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை ஒரு தடவை பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை ஒரு தடவை பார்க்க வேண்டும்.

நீங்கள் அண்மைக்காலங்களில் பார்த்த  தமிழ்ப்படங்களின் பெயர்களை அறிய ஆவல். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

சிறந்த தயாரிப்பாளருக்காக விருதுகள் வழங்கப்படவில்லை. இது தவறான செய்தி.   

லைக்காவின் ஒருவன் தளச் செய்தி..

  • கருத்துக்கள உறவுகள்

லைக்காவின் ஒருவன் தளம், ஆதவன் தொலைக்காட்சியில்தான் தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்தியா ஊடகங்களில்  சிறந்த தமிழ் படதுக்கான விருதினை இப்படத்தினை தயாரித்த சுபாஸ்கரனுக்கும் மணிரத்தினமுக்கும் கிடைத்ததாக சொல்கிறார்கள். 

Edited by கந்தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.