Jump to content

ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ranil-and-mahindha-e1729321472612.webp?r

ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1404815

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்.

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த தேசத்தியாகிகளுக்கே இந்த நிலமையா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த தேசத்தியாகிகளுக்கே இந்த நிலமையா? 😁

அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்….
இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nochchi said:

உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

சகல அதிகாரங்கள் கொண்ட அனுரா மாத்தையா ஏன் இதை உடனே செய்ய முடியவில்லை....சும்மா வாகனத்தை பறிமுதல் செய்வேன் கோவணத்தை பறிமுதல் செய்வேன் என அறிக்கை விடுயினம் ஆனால் நடவடிக்கை எடுக்கிற மாதிரி  தெரியவில்லை...

அடுத்த யூடியுப் தலையங்கம்...

முன்னாள் ஜனாதிபதிகள் 1000 கோவணம் பாவித்தன்ர் ....ஒரு ஜனாதிபதிக்கு 50 கோவணம் காணும்....முகுதி கோவணங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த தேசத்தியாகிகளுக்கே இந்த நிலமையா? 😁

பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் எனும் உத்தரவுக்கு, மஹிந்த பயங்கரவாதத்தை முறியடித்தபடியால் அவருக்கு உயிர் ஆபத்து இருக்கென்றும் அதை மீளப்பெற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்ததாக செய்தி ஒன்று சொல்கிறது. எல்லா இடமும் போகிறார்கள், விழா எடுக்கிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள், புலிகளை அழித்துவிட்டோம் இனி இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்கிறார்கள், உலகிலேயே சிறந்த இராணுவ, புலனாய்வு பிரிவு தம்மிடம் இருப்பதாக பீற்றிக்கொள்கிறார்கள், பிறகு பாதுகாப்பு வேண்டுமாம். இதெல்லாம் சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியே வர முடியாத நிலை.

3 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் பணம் வீணடிக்கப்படும் விதம். பதின்மூன்று வாகனங்களில் எப்படி பயணம் செய்கிறார்கள்? அதற்கு எரிபொருள், சாரதி. ஒரு கார் காணாதா? சந்ததிக்கு வாகனம் சேர்க்கிறார்களோ? ரணிலுக்கு எதற்கு பதின்மூன்று?           

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

நாடு வங்குரோத்தாகியிருக்கும் நிலையில் முன்மாதிரியாக நடக்க வேண்டிய தலைவர்கள் எவ்வளவு ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

இந்த நாடு எப்படி உருப்படும்?

இவர்களுக்கு 3 அரச வாகனங்களே கூடிப்போய் விட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

சகல அதிகாரங்கள் கொண்ட அனுரா மாத்தையா ஏன் இதை உடனே செய்ய முடியவில்லை....சும்மா வாகனத்தை பறிமுதல் செய்வேன் கோவணத்தை பறிமுதல் செய்வேன் என அறிக்கை விடுயினம் ஆனால் நடவடிக்கை எடுக்கிற மாதிரி  தெரியவில்லை...

அடுத்த யூடியுப் தலையங்கம்...

முன்னாள் ஜனாதிபதிகள் 1000 கோவணம் பாவித்தன்ர் ....ஒரு ஜனாதிபதிக்கு 50 கோவணம் காணும்....முகுதி கோவணங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்..

 

இதனைப் படமாக்க ...தமிழ் யூடுயூப்பர்...வீணி வடிந்தபடி காத்திருக்கினம் ...புத்தரே...வெயிட்டிங் கால்...அந்த கோவணங்களை துக்கிக்காட்ட ..அல்லக்கை  ஒன்றும் கூடத்திரியும்...

Edited by alvayan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்….
இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣

எல்லாமே நாடகம் சிறியர்...ஒன்றுமே நடக்காது...எல்லாம் காவித்துணிகளின் செட்டப்...இப்ப சிங்களவி ஒவ்வொருதரினதும் நோக்கம் எம்மினத்தை ப்ரித்து சின்னாபின்னமாக்கி ..நாடற்ற அனாதைகள்  ஆக்குவதுதான்...எந்தவித உதவியையும் கிடைக்காமல் செய்வது...அதன் பின்பு விசிட்டர் விச்சவுக்கு திறந்து விடுவ்து...தாமிழரின் ஆட்டம் முடிந்தது...இதில் முசுலிம் பதுங்கியிருந்து காரியம் பார்க்க கங்கணம் கட்டுகிறான்...இது தெரியாமல் .நம்மடயள் நாற்பது கட்ட்சியாக எலச்சன் கேட்கினம் ..அதிலை தொட்டுக்கொள்ள ஊறுகாய் பாவிப்பதுபோல..தேசியம் சொல்லுகினம்...தூ ...*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் இனம்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்களுக்கு 3 அரச வாகனங்களே கூடிப்போய் விட்டது.

மிகுதி பத்தும், வாடகைக்கு விட்டு உழைப்பதற்கு, பின்னாளில் அவர்களின்  வாழ்வாதாரத்திற்கு.

13 hours ago, alvayan said:

இப்ப சிங்களவி ஒவ்வொருதரினதும் நோக்கம் எம்மினத்தை ப்ரித்து சின்னாபின்னமாக்கி ..நாடற்ற அனாதைகள்  ஆக்குவதுதான்..

ம்...... இந்த காவியள் அடிக்கடி சொல்லி பயமுறுத்துதுகள், கடந்தகாலத்தை மறந்து போச்சினம் தமிழர், ரத்த ஆறு ஓடும், நாடு பற்றி எரியுமென்று. தொண்ணூறொன்பது வீதந்தை  நாசமாக்கி போட்டுதுகள், இருக்கிற மிச்சத்தையும் வம்புக்கிழுத்து, போகலையென்றால் இழுத்துவந்து முடிச்சுப்போடுங்கள். சிங்களவரோடு இருப்பது அதிஸ்ரம் என்று அறிக்கை விட்டதுகள், சங்கமமானதுகள் எல்லாம் கொழும்போடு வாழப்போய் விடுங்கள், போவதென்ன? வாழுவதே அங்கேதான். வாக்கு சுற்றுலா மட்டும் வடகிழக்கில். அவர்கள் போட்ட பிச்சைதான் அவர்களது சுக வாழ்க்கை. அதை விடுங்க ......  பிறகு லங்கா சிங்கள பௌத்த நாடு கோசந்தான். யாரும் கேள்வி கேட்கமுடியாது. கொழும்புகாரருக்கும் வேறு நாதியில்லை ஏமாற்றி இருப்பை தக்க வைத்துக்கொள்ள. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

எல்லாமே நாடகம் சிறியர்...ஒன்றுமே நடக்காது...எல்லாம் காவித்துணிகளின் செட்டப்...இப்ப சிங்களவி ஒவ்வொருதரினதும் நோக்கம் எம்மினத்தை ப்ரித்து சின்னாபின்னமாக்கி ..நாடற்ற அனாதைகள்  ஆக்குவதுதான்...எந்தவித உதவியையும் கிடைக்காமல் செய்வது...அதன் பின்பு விசிட்டர் விச்சவுக்கு திறந்து விடுவ்து...தாமிழரின் ஆட்டம் முடிந்தது...இதில் முசுலிம் பதுங்கியிருந்து காரியம் பார்க்க கங்கணம் கட்டுகிறான்...இது தெரியாமல் .நம்மடயள் நாற்பது கட்ட்சியாக எலச்சன் கேட்கினம் ..அதிலை தொட்டுக்கொள்ள ஊறுகாய் பாவிப்பதுபோல..தேசியம் சொல்லுகினம்...தூ ...*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் இனம்..

யாழ்/கிளி மாவட்டத்திலிருந்து இம்முறை முஸ்லீம் பிரதிநிதி வந்தாலும் வரலாம் ...தமிழினம் அழிந்தாலும் முஸ்லீம் இனம் சிங்களவருக்கு ஆப்பு அடிக்க காத்திருக்கின்றது ...நாங்கள் கேட்டது வடக்கு கிழக்கு அவர்கள் கேட்பது சிறிலங்கா முழுவதும்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள்  விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே தமிழர்களின் வெளிவிவகார அமைச்சரான  விஜித்த ஹேரத், அதே தமிழர்களின் பெருவிருப்பிற்குரிய பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகிய முப்பெரும் தலைவர்கள் உட்பட பல மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் இதனை கடந்த சில தினங்களாகக் கூறி வருகிறார்கள்.  "தமிழருக்கு இருப்பது இனப்பிரச்சினையல்ல, நாட்டிலுள்ள ஏனைய இன மக்களுக்கிருப்பது போன்ற அதே பொருளாதாரப் பிரச்சினைகள் தான், வடக்குக் கிழக்கு இணைக்கப்படக் கூடாது, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை, போர்க்குற்றவாளிகள் என்று எந்த இராணுவ வீரனையோ தளபதியையோ நாம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை, சுதந்திரமான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கோ அல்லது அது தொடர்பான சாட்சித் தேடல்களுக்கோ நாம் அனுமதியளிக்கப்போவதில்லை" என்கிற "தெமுழுவோ" க்களுக்கு பெரிதும் நண்மை பயக்கும் வரங்களை அள்ளி வழங்கிக்கொண்டு வருகிறார்கள். இங்கு யாழ்க்களத்தில் இந்த இனவாதிகளுக்கு அப்பட்டமாக செம்புதூக்கும் ஒருவரும் அவரின் மேலும் இரு ஆதரவாளர்களும் இத்தனை வரங்களுக்குப் பின்னரும் அக்கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் தமிழர் என்கிற அடையாளம்  வேண்டாம் , இலங்கையராக இணைந்து, மக்கள் விடுதலை முன்னணியுடன் பணியாற்றுவோம் என்று அழுகிறார். சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் இணைந்து பணியாற்றிய முஸ்லீமான அஞ்சன் உம்மா, தமிழரான சந்திரசேகரன் மற்றும் தற்போது அநுரவின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசிவந்த அல்லது பேசி வருகின்ற விடயங்களைக் கேட்பவர்களுக்கு இவ்வாறான இனத்துரோகிகளை அக்கட்சி இணைப்பது தமிழருக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவல்ல, மாறாக இவ்விரு சமூகங்களுக்குள்ளும் தமது இனவாத வேர்களை நுழையவிட்டு அவ்வினங்களைப் பலவீனப்படுத்தத்தான் என்பது இந்த செம்புதூக்கிகளுக்கு நன்கு தெரிந்தபின்னரும், அதனையே செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.   போலி மாக்ஸிஸம் பேசிக்கொண்டு, அப்பட்டமான சிங்க‌ளப் பேரினவாதம் கக்கும்  ஒரு கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களைப்போன்றே "தமிழ் எனும் அடையாளம் துறந்து இலங்கையராக இணைவோம்" என்று ஊளையிடும் செம்புதூக்கிகள் செய்ய விரும்புவது தமிழர்களை மேலும் மேலும் மூளைச்சலவை செய்து, அவர்களின் தாயகத்தில் சிங்கள இனவாதிகளை வேரூன்றச் செய்வதுதான்.  சிங்கள இனவாதிகளுக்கு தமிழர் தாயகத்தில் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கும் இப்புல்லுருவிகளின் கனா கலைக்கப்பட வேண்டுமானால், தமிழர்கள் செய்யவேண்டியது இந்த இனவாதிகளையும், அவர்களைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கத் தவமிருக்கும் புல்லுருவிகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதுதான்.  தமிழர்களின் பொருளாதாரத்தைச் சரிசெய்கிறோம் என்று கூவும் இதே இனவாதிகள் 1983 இல் இருந்து இன்றுவரை அதே தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டக் காரணமாக இருந்தவர்கள் என்பதை செம்புதூக்கிகள் மறக்கலாம், மறைக்கலாம், ஆனால் தமிழர்கள் இதுகுறித்து அவதானமாக‌ இருப்பதும், தாயகத்தில் சிங்கள இனவாதிகள் காலூன்றுவதைத் தடுப்பதும் காலத்தின் கட்டாயம்.
    • ஊழல் ,லஞ்சம் பெறாத நபர்கள் நல்லது ஆனால் இந்த தேர்தல் ஒர் ஆபத்தான் தேர்தல் ...தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என கூறி சிங்கள கட்சிகள் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வருகின்றனர்...ஆகவே நாம் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்... அரசாங்கம் அரச அதிகாரிகள் ஊழல் செய்வதை தடுக்க வேண்டும் அதை விடுத்து அரசியல்வாதிகளின் ஊழலை பேசிக்கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்....
    • தமிழர்கள் மீதான போர்க்குற்றம் தொடர்பான ஐநா பீரேரணையில் தமிழ்,தமிழர் என்றே சொல்லே இல்லை. அதுபோலவே அனுராவின் பேச்சிலே தமிழ்மக்கள் பற்றியும் இந்த நாட்டில் பல ஆண்டுகளாகப் புரையோடியிருக்கும் இனப்பரிச்சினை பற்றி எதுவே இல்லை. தமிழர்களைப் பொறுத்த மட்டில் இதுவரை இருந்த அரசாங்ககளுக்கும் ஜேவிபி அமைக்க விருப்பதாகச் சொல்லும் அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் யெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. தமிழர்களின் பிர்சினைகளை விங்கிக் கொள்ளாத வரை அதனை சிங்கள மக்களுக்கும் புரிய வைத்து  எமது சுயநிர்ணய உரிமை யை ஏற்றுக் கொள்ளாதவரை இநத நாடு ஒரு அடிகூட முன்னேற முடியாது. இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கின்றது என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் அதனைத் துpர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்காதவர்கள். ஆனால் ஜேவியியினர். இந்த நாட்டில் தமிழர்கள் என்றொரு தனியான தேசிய இனம் இருப்பதாகவே கருதவில்லை. எல்லோரும் இலங்யைர் என்ற மாயைக்குள் அமுக்கப் போகிறார்கள். இனி விகாரைகள் எல்லா இடத்திலும் முளைக்கும். ஆகவே ஜேவிபியை நம்பி தமிழ்கள் மோசம் போக வேண்டாம்.
    • இல்லை  இவர்களில் ஊழல் லஞ்ச பெறாத,  ஊக்குவிக்காத மற்றும் சொத்து மதிப்பை தரும் தமிழர்களுக்கு வாக்களிக்கலாம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.