Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனிநபரின் கம்பனியாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி - கே.வி.தவராசா

Vhg அக்டோபர் 21, 2024
1000360857.jpg

 

இலங்கை தமிழரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி இருக்கின்றது என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நேற்றையதினம் (20-10-2024) நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சி

மேலும் தெரிவிக்கையில், “16 ஆண்டுகள் தமிழரசுக் கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன்.

கட்சிக்கு வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தேன். அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் முன்னிலையாகி உள்ளேன். வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை.

இலங்கை தமிழரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி இருக்கின்றது.

கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கின்றார். கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றிருந்தார். இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது.

1000360855.jpg

ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசை

தமிழ் தேசியம் தான் எமது தமிழரசு கட்சியின் தாரகை மந்திரம். தமிழ் தேசியமானது பாதுகாக்கப்பட வேண்டும். 

நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.ஆனால் தமிழரசு கட்சிக்குள் அது நடைபெறவில்லை.

கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்க கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள்.

மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன்.

நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர் பலர் என்னிடம் கேட்டார்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து சரிசெய்திருக்கலாம் தானே என்று. எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல பதவிகளிலும் இருந்து விலகினார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை காட்டுகின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

https://www.battinatham.com/2024/10/blog-post_351.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள்.

இவருக்கு பதவி ஒண்டும் குடுக்கேல்லையாம் அதாலை choonஆகி வெளியில வந்திட்டாராம்.  இந்த அழுகிப்போன மாம்பழங்கள் 5% கூட தேறாதுகள்! என்ன ரப்பர் முள்ளுகளை கடிச்சுக்கொண்டு திரியுற பட்டாசு கோஷ்டிக்கு நவம்பர் 14 வரை மல்டிபிள் ட்ரீட்ஸ் தான்😂

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வர மாட்டார் என சொன்ன  அரசியல் வித்தகர்கள் உங்கள் கையை உயர்த்தி நான் என்று சொல்ல உங்களிடம் நேர்மை  உள்ளதா? அதே போன்றதே இத்தேர்தலும். 
முடிந்தால் உங்களின் எதிர்வு கூறலை கந்தப்புவின் போட்டியில் காட்டலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.

தமிழ் தேசியமானது மண்ணுக்குள் புதைத்து, அதற்கு மேல் நின்றுதான் அரசியலே நடக்கிறது. அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க என்ன இருக்கிறது? ஒன்றும் பெறாதவர்கள் பெறுவதற்கு ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால் எதுவும் சாதிக்காமல், நான்தான் எப்போதும் முன்னுக்கு இருக்கவேண்டும் என்று இருப்பவர்கள், நாம் தான் இந்த பதவிக்கு தகுதியுடையவர் என்று சொல்லிக்கொண்டு  இருக்கலாம், யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பது கட்சியுமல்ல, ஜனநாயகமுமல்ல. அது, சுத்த போக்கிரித்தனம், சுயநலம், சர்வாதிகாரம். இப்படி பலர் வெளியிலேயே இருக்கின்றனர், அதனால் அது அவர்களுக்கு தப்பாக தெரிவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

இவருக்கு பதவி ஒண்டும் குடுக்கேல்லையாம் அதாலை choonஆகி வெளியில வந்திட்டாராம்.  இந்த அழுகிப்போன மாம்பழங்கள் 5% கூட தேறாதுகள்! என்ன ரப்பர் முள்ளுகளை கடிச்சுக்கொண்டு திரியுற பட்டாசு கோஷ்டிக்கு நவம்பர் 14 வரை மல்டிபிள் ட்ரீட்ஸ் தான்😂

 

என் தவராசாவுக்கு தேர்தலில் நிற்க சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை?

80 களில் இருந்து தொண்டனாக இருந்தவனுக்கு இடமில்லை.

ஆனால் சைக்கிளில் கேட்கப் போன பிள்ளை கொண்டுவந்து செருகிவிட்டு ஏதோ ஆனையிறவு முகாம் அடித்தது போல துள்ளிக் குதிக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஆங்கிலேயேருக்கு அடிமைப் பட்ட காலம் முதல் எதிர்த்து நின்றாலும் இயலுமான வரைக்கும் எங்களை மேற்கொண்டவர்களிடம் இணங்கியே போனோம், அதனால் தான் ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுப்போன பின் சிங்களவரை விட கல்வியிலும் பொருளாதாரதிலும் சனத்தொகையிலும் நல்ல நிலையில் இருந்தோம். இன்றும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின் நாம் தோல்வி அடைத்து விட்டோம் என்பதை ஏற்போம், கிட்டத்தட்ட வெள்ளையர்கள் சில நூற்றாண்டுக்கு முன் எம்மை அடிமைப் படுத்த வந்த காலம் போல் ஆகி விட்டது நம் நிலை, ஆகவே இனி இணக்க அரசியல் தான் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன் தரும்.அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு இனி தமிழ் தேசியம் என்பதன் பொருள்  கல்வி, பொருளாதாரம் தான் . அதனை அடிபட்டு பிரிவினை பேசி விட்டுக்கொடுக்காமல்  இருந்தால் அடைய முடியாது. முக்கியமாக இந்தியா என்கின்ற நாடு உடையாமல் அது நடக்காது.எங்களின் உண்மையான பகையாளிகள் சிங்களவர் அல்லர், மாறாக இன்றைய உலக ஒழுங்கும் அருகில் உள்ள இந்தியா என்ற நாடுமே ஆகும். இந்த உலக ஒழுங்கு மாறும் வரைக்கும் நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.ஆகவே இன்றைய தமிழ் அரசுக் கட்சி மற்றவர்கள் போல் அரசியல் செய்யாமல் சிங்களாவரோடு ஒத்து இணங்கி நாம் இருக்கும் நம் நிலம் மற்றும் பொருள் வளத்தை காப்பாற்ற முயல வேண்டும். பிரியாணிக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடந்தது போதும், கிடைக்கும் சாப்பாட்டை இப்போது சாப்பிடுவோம். 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.