Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images-1-1-2.jpg?resize=272,185&ssl=1

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1405986

தேர்தலில் தோற்றால் இதையே காரணமாக சொல்லா விட்டால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஜனநாயக கூட்டணி எப்படியும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஈழதமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணும் கால கட்டம் நெருங்கி வருகிறது என்பதை நன்கறிந்த  பக்கத்து வீட்டுக்காரியின் இந்த அட்டாக் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது. உள்நோக்கம் கொண்டது. ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால்.

வன்மையாக கண்டிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தொடக்கம் தான். மிச்ச கட்சிகளுக்கும் பார்த்து பாராமல்  வெளுத்து வாங்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசிகலாவின்ர வீட்டுக்கு கல்லெறிஞ்ச ஆக்களின்ர சொந்தக்காரரும் ஜேர்மனியிலை இருக்கினம். சசிகலாவின்ர சொந்தக்காரரும் ஜேர்மனியிலை தான் இருக்கினம்.:cool:
வாற டிசம்பர் மாதம் ஒரு பெரிய பங்சனிலை இரு பகுதியும் சந்திக்கும் எண்டு நினைக்கிறன்.
சந்திச்சால் கொத்துரொட்டி காரசாரமாய் இருக்கும்...🤣

 

தம்பி @nunavilan  சௌக்கியமா? 😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

images-1-1-2.jpg?resize=272,185&ssl=1

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1405986

இதுவும் ஒரு வகையான விளம்பரம்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சசிகலாவின்ர வீட்டுக்கு கல்லெறிஞ்ச ஆக்களின்ர சொந்தக்காரரும் ஜேர்மனியிலை இருக்கினம். சசிகலாவின்ர சொந்தக்காரரும் ஜேர்மனியிலை தான் இருக்கினம்.:cool:
வாற டிசம்பர் மாதம் ஒரு பெரிய பங்சனிலை இரு பகுதியும் சந்திக்கும் எண்டு நினைக்கிறன்.
சந்திச்சால் கொத்துரொட்டி காரசாரமாய் இருக்கும்...🤣

 

தம்பி @nunavilan  சௌக்கியமா? 😀

எப்படி தெரியும்??   நீங்களும் அந்தப் பக்கமே?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சசிகலாவின்ர வீட்டுக்கு கல்லெறிஞ்ச ஆக்களின்ர சொந்தக்காரரும் ஜேர்மனியிலை இருக்கினம். சசிகலாவின்ர சொந்தக்காரரும் ஜேர்மனியிலை தான் இருக்கினம்.:cool:
வாற டிசம்பர் மாதம் ஒரு பெரிய பங்சனிலை இரு பகுதியும் சந்திக்கும் எண்டு நினைக்கிறன்.
சந்திச்சால் கொத்துரொட்டி காரசாரமாய் இருக்கும்...🤣

 

தம்பி @nunavilan  சௌக்கியமா? 😀

 

நல்ல சுகம். நீங்கள் எப்படி??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இதுவும் ஒரு வகையான விளம்பரம்தான் .

அதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/10/2024 at 00:20, Kandiah57 said:

எப்படி தெரியும்??   நீங்களும் அந்தப் பக்கமே?? 🤣

அந்த றோட்டாலை தான் சந்தைக்கு போறனான்...😀

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியோர் மீது பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை

sasikala.jpg

என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுடைய வீட்டுக்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர் என்று கருதப்படும் பெண் ஒருவரால் என்னுடைய வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் நொருங்கின.

அதேவேளை, வீட்டு வாசல் தூணில் என்னுடைய கணவர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் மீது மை பூசி அழிக்கப்பட்டது.

அதேவேளை,எமது மதில் சுவர்களில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

என்னுடைய கணவர் ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போதே தென்னிலங்கையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று வரை அவரை கொலை செய்தவர்களையோ அதற்கு காரணமானவர்களையோ நீதியின் முன் நிறுத்தவில்லை-தண்டிக்கவில்லை. இந்த நாட்டில் அநீதிகளுக்கு முடிவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

https://thinakkural.lk/article/311328

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.