Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது

adminOctober 31, 2024
anura-kumara-dissanayake.jpg

அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட சமூகங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ,  அமைச்சர்களுக்கு  எதிர்வரும் காலங்களில்   கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது  எனவும் வறுமையை ஒழிப்பதிலேயே  அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் எனவும் தொிவித்துள்ளாா்.    மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தொிவித்துள்ளாா்.

மேலும் தங்களுக்கு மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் தேவை  எனத் தொிவித்த அவா்  தலைவர்கள் தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.

நவம்பர் 14 க்குப் பிறகு புதிய அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தை நிறுவுவதற்கான திட்டங்களை   வெளிப்படுத்திய ஜனாதிபதி “இந்த அரசாங்கம் தனது பணிகளைச் செய்வதற்கு கிராமங்களைச் சென்றடைய வேண்டும் எனவும்  கிராமப்புறங்களில் வறுமையை அகற்றுவதே  தன்  முன்னால் உள்ள மிக முக்கியமான பணி  எனவும் ஜனாதிபதி   மேலும்  குறிப்பிட்டாா்.

 

 

https://globaltamilnews.net/2024/207923/

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருந்து கொண்டு  கொழுப்பெடுத்து கஸினோக்களுக்கு செல்லாமல் ........ கிராமத்தில் இருந்து கொண்டு கிரமமாக மக்களுக்கு சேவை செய்யவும் என்று சொல்கின்றார் . .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

தீர்க்க தங்கள் மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.

இதை தானே நாங்களும் சொல்லுறம் ஊர் கட்டமைப்புக்களை பலமாக்கி ஆட்சியை செய்தால் சிறப்பாக இருக்கும்..
தோழர் டக்கிளசும் இதை தானே 30 வருடமா சொல்லுறார் மாகாணத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று உங்கன்ட ஆட்கள் கண்டு கொள்ளவில்லையே 

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து வசதிகளை இலங்கை முழுவதும் மேம்படுத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் சரியாக இருக்கும்.   ஆனால், நூறுக்கணக்கான கிலோமீற்றர்கள்  பயணம் செய்து தினமும் அலுவலகங்களுக்கு வந்து அமைச்சர்கள் பணியாற்ற முடியுமா?  அமைச்சர்களின் கடமைகளை சரியாக நிறைவேற்ற முடியுமா?  தேவையற்ற செலவுகளும் துஷ்பிரயோகங்களும் தடுக்கப்பட வேண்டியது அவசியம் தான், அதற்காக இது கொஞ்சம் ஒவர். 

ஜனாதிபதி தம்புத்தேகமவில் இருந்து தினமும் அலுவலகம் வரமுடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, island said:

 

ஜனாதிபதி தம்புத்தேகமவில் இருந்து தினமும் அலுவலகம் வரமுடியுமா? 

சூம் சந்திப்பில் எல்லாத்தையும் பேசி முடிக்கலாம் என நினைக்கிறார் போல....இவங்கள் பாராளுமன்றம் வந்து என்னத்தை பெரிசா செய்யபோயினம்...சும்மா கையை தூக்குவதற்க்கு ஏன் வீணாக ஒர் கட்டிடம் என நினைக்கிறார் போல் ....அடுத்த முறை தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி மாளிகையே தேவையில்லை ....
சந்தியில் இருக்கும் டீ கடையில் சந்திக்கலாம் என சொன்னாலும் சொல்லுவார்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் குடுத்து வைச்ச மனிசன். எல்லா சுகபோகங்களையும் அனுபவிச்சு போட்டு பரலோகம் போய் சேர்ந்திட்டுது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

போக்குவரத்து வசதிகளை இலங்கை முழுவதும் மேம்படுத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் சரியாக இருக்கும்.   ஆனால், நூறுக்கணக்கான கிலோமீற்றர்கள்  பயணம் செய்து தினமும் அலுவலகங்களுக்கு வந்து அமைச்சர்கள் பணியாற்ற முடியுமா?  அமைச்சர்களின் கடமைகளை சரியாக நிறைவேற்ற முடியுமா?  தேவையற்ற செலவுகளும் துஷ்பிரயோகங்களும் தடுக்கப்பட வேண்டியது அவசியம் தான், அதற்காக இது கொஞ்சம் ஒவர். 

ஜனாதிபதி தம்புத்தேகமவில் இருந்து தினமும் அலுவலகம் வரமுடியுமா? 

இங்கே பலரும்  வீட்டில் இருந்து வேலை. செய்கிறார்கள்   

அமெரிக்கா வேலையை  இந்தியாவில் இருந்து செய்கிறார்கள் 

கேள்விப்படவில்லையா??? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஜனாதிபதி தம்புத்தேகமவில் இருந்து தினமும் அலுவலகம் வரமுடியுமா? 

இலங்கை தமிழர்களின்  கவுரவ ஜனாதிபதி மக்களுக்கான அலுவல்கள் பார்ப்பதற்கு மட்டும் ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்திவிட்டு பின்னேரம் தனது சிறிய வீட்டிற்கு சென்றுவிடுவாராம் அது தம்புத்தேகமவா என்பது  தெரியாது இலங்கை தமிழர்கள் சொன்னார்கள் 🙄

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களின்  கவுரவ ஜனாதிபதி மக்களுக்கான அலுவல்கள் பார்ப்பதற்கு மட்டும் ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்திவிட்டு பின்னேரம் தனது சிறிய வீட்டிற்கு சென்றுவிடுவாராம் அது தம்புத்தேகமவா என்பது  தெரியாது இலங்கை தமிழர்கள் சொன்னார்கள் 🙄

செய்தி வடிவாக. வாசித்தீர்களா.??    

அரசாங்கம் இலவசமாக வீடு கொடுக்கமாட்டாது    

கொழும்பில் இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை   

வாடகைக்கு வீடு எடுத்து கொழும்பில் இருக்க கூடாதா??   

அரச தனியார் உத்தியோகத்தர்கள்   வாடகைக்கு இருக்கிறார்கள்  இல்லையா??   

இவர்களுக்கு மட்டும் ஒசி  வீடு தேவையா?? 

இது வரவேற்கப்படுகின்றன… நல்ல முடிவு    

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

தேவையற்ற செலவுகளும் துஷ்பிரயோகங்களும் தடுக்கப்பட வேண்டியது அவசியம் தான், அதற்காக இது கொஞ்சம் ஒவர். 

வாக்குகள் பெற்று கொள்ளலாம் என்பதற்காக தான்
வாக்குகள் பெற்று கொள்வதற்காக மற்றய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில்  இருந்த போது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கபட வேண்டும் என்ற அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி இப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை தானும் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, putthan said:

சூம் சந்திப்பில் எல்லாத்தையும் பேசி முடிக்கலாம் என நினைக்கிறார் போல....இவங்கள் பாராளுமன்றம் வந்து என்னத்தை பெரிசா செய்யபோயினம்...சும்மா கையை தூக்குவதற்க்கு ஏன் வீணாக ஒர் கட்டிடம் என நினைக்கிறார் போல் ....அடுத்த முறை தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி மாளிகையே தேவையில்லை ....
சந்தியில் இருக்கும் டீ கடையில் சந்திக்கலாம் என சொன்னாலும் சொல்லுவார்..

நீங்கள் சொன்னாலும் சொன்னீங்க. அநுர ரீ கடைல  அவரோட அலுவலகத்தை மாத்திட்டார். 😂large.IMG_7899.jpeg.93131b45b1f8e30d47e15233d5c7c3cc.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, island said:
1 hour ago, island said:

நீங்கள் சொன்னாலும் சொன்னீங்க. அநுர ரீ கடைல  அவரோட அலுவலகத்தை மாத்திட்டார். 😂

 

இவ்வளவு விரைவில் மாத்துவார் என நான் எதிர் பார்க்கவில்லை😅

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

இவ்வளவு விரைவில் மாத்துவார் என நான் எதிர் பார்க்கவில்லை😅

புத்தன் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி.🙂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, island said:

நீங்கள் சொன்னாலும் சொன்னீங்க. அநுர ரீ கடைல  அவரோட அலுவலகத்தை மாத்திட்டார். 😂large.IMG_7899.jpeg.93131b45b1f8e30d47e15233d5c7c3cc.jpeg

ரீ கடை என்பது இந்திய  இலங்கை தலைவர்களுக்கு முக்கியமானது.
இந்திய தலைவர் ரீ கடையில் வேலை பார்த்து தான் நாட்டின் தலைவரானார்.
இலங்கை தலைவர் ரீ கடையை தனது அலுவலகமாக மாற்றி கொண்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ரீ கடை என்பது இந்திய  இலங்கை தலைவர்களுக்கு முக்கியமானது.
இந்திய தலைவர் ரீ கடையில் வேலை பார்த்து தான் நாட்டின் தலைவரானார்.
இலங்கை தலைவர் ரீ கடையை தனது அலுவலகமாக மாற்றி கொண்டவர்.

மோடி ரீ கடையில் வேலை செய்த ஆள்,யோக தியானம் போன்ற வற்றை கடைபிடிப்பவர்...ஆனா
நம்ம தோழர் ரீ கடையை சொந்தமா போட்ட பிஸ்தா,ஆயுதபயிற்சி எடுத்த கட்சியின் பின்புலம் கொண்டவர் ..

பிராந்திய வல்லரசாகும் சகல தகுதிகளும் சிறிலங்காவுக்கு வர  தொடங்கி விட்டது என சொல்ல வாறீங்கள்....
ஒளிமயமான எதிர்காலம் மாம்பழதீவில் தெரிகின்றது....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.