Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

விஜய்யின் காலண்டரை யாரோ நிரப்பி வைத்திருக்கின்றார்கள் போல. தற்போதைய நிலையில் சசிகலாவின் பிறந்தநாளுக்கு கூட ஒரு வாழ்த்து சொல்லி வைத்துக் கொள்வார்...........

அரசியல் எண்டு வந்தா இனி தினம் ஒரு நினைவு கூரல் மாதம் ஒரு  அறிக்கை என இருந்தாதானே மக்கள் நினைவில் வைப்பார்கள்🤣.

இதே போல பெரியாருக்கு நேரில் போய் மாலை, சாதி தலைவர் முத்து இராமலிங்கத்துக்கு வீட்டில் வைத்து படத்துக்கு அஞ்சலி செலுத்தியமையும் ஒரு செய்தியை சொல்வதாகவே படுகிறது.

இந்த நகர்வுகளின் மூலம் யார் என தெரியவில்லை.

விஜை நாம் எவரும் எதிர்பார்க்கா வண்ணம் இயற்கையிலே அரசியல் நுணுக்கம் தெரிந்தவரா அல்லது இப்படி ஒரு ஆள் அல்லது டீம் அவரிடம் இருக்கிறதா என்பது புரியவில்லை.

நீங்கள், @வாலி, @பகிடி போல தமிழ் நாட்டு அரசியலை சோசல் மீடியா அலப்பறைகளை தாண்டி அவதானிப்பவர் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல்.

@பாலபத்ர ஓணாண்டிக்கு விஜையினை  சூழ இருந்து அட்வைஸ் பண்ணும் ஆட்கள் யார் என்ற முழு விபரமும் தெரியுமாம். நேரம் இன்மையால் இன்னும் எழுதவில்லை. எதுக்கும் ஒரு ரிமைட்டர போட்டு வைப்பம்.

  • Replies 93
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அரசியலில் நீ வெற்றி பெறுகிறாயோ இல்லையோ, அதிகாரத்தை பிடித்து தமிழர்களுக்கு நல்லது செய்யறியோ இல்லையோ, ஆனால் ஒன்று நீ தூவிய தமிழ் தேசிய விதைகள் தமிழர் வாழும் மண்ணெல்லாம் முளைக்கத் தொடங்கி விருட்சமாக வளர்

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம்

  • நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்.... பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று  சர்வதேச நாடுகள் முன்னிலையில்  புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து  புலிகளின் ஆயுத களை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வாழ்த்து  திரியில் தம் வக்கிரத்தை வழித்து  கொட்டுபவர்கள்..... போராட்ட காலங்களில் எப்படி இருந்திருப்பார்கள் என அதிகம் யோசிக்கத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அரசியல் எண்டு வந்தா இனி தினம் ஒரு நினைவு கூரல் மாதம் ஒரு  அறிக்கை என இருந்தாதானே மக்கள் நினைவில் வைப்பார்கள்🤣.

இதே போல பெரியாருக்கு நேரில் போய் மாலை, சாதி தலைவர் முத்து இராமலிங்கத்துக்கு வீட்டில் வைத்து படத்துக்கு அஞ்சலி செலுத்தியமையும் ஒரு செய்தியை சொல்வதாகவே படுகிறது.

இந்த நகர்வுகளின் மூலம் யார் என தெரியவில்லை.

விஜை நாம் எவரும் எதிர்பார்க்கா வண்ணம் இயற்கையிலே அரசியல் நுணுக்கம் தெரிந்தவரா அல்லது இப்படி ஒரு ஆள் அல்லது டீம் அவரிடம் இருக்கிறதா என்பது புரியவில்லை.

நீங்கள், @வாலி, @பகிடி போல தமிழ் நாட்டு அரசியலை சோசல் மீடியா அலப்பறைகளை தாண்டி அவதானிப்பவர் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல்.

@பாலபத்ர ஓணாண்டிக்கு விஜையினை  சூழ இருந்து அட்வைஸ் பண்ணும் ஆட்கள் யார் என்ற முழு விபரமும் தெரியுமாம். நேரம் இன்மையால் இன்னும் எழுதவில்லை. எதுக்கும் ஒரு ரிமைட்டர போட்டு வைப்பம்.

எனக்குத் தெரிந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் திராவிடர் கழகம் உள்ளது, அதற்கு தி மு க வின் திரைமறைவு ஆசீர்வாதமும் உள்ளது. 

திராவிடர் கழகம் தமிழ் நாடு அடுத்த 25- 50 ஆண்டுகளுக்கு  அரசியல் ரீதியாக எப்படிப் போக வேண்டும் என்று சிந்திக்கும் அமைப்பு. நாங்கள் நினைப்பது போல் பன்றிக்கு பூணூல் மட்டும் போடும் கூட்டம் அல்ல.

அவர்களின் இன்றைய கவலை தமிழ் நாட்டில் உருவெடுத்து வரும் இந்துத்துவ சிந்தனைகளை ( பிஜேபி ) ஒடுக்க வேண்டும். மற்றும் தமிழ் தேசியம் என்னும் பெயரில் திராவிடத்தை மறங்கடிக்க நினைக்கும் சிந்தனையை வளர விடாமல் இந்த அளவில் நிறுத்த வேண்டும் 

இதற்கு தி மு க vs அதிமுக என்று ஒரு அரசியலைக் கட்டமைப்பது இனியும் பலன் தராது. அதிமுக பலம் குன்றி அதன் வாக்குகள் மெல்ல மெல்ல சாதிய வாக்குகளாகவும் இந்துத்துவ ஆதரவு வாக்குகளாகவும் மாறி வருவது கண்கூடு. இது திராவிடர் கழகத்தை உறுத்தி இருக்கும் 

இதற்காக உள்ளே கொண்டு வரப்பட்டவர் தான் விஜய்.

விஜய் குடும்பம் தி மு க ஆதரவு குடும்பம். கிறிஸ்தவர்கள். லயோலா கல்லூரி இவர்களின் ஆட்களால்த் தான் நடத்தப்படுகின்றது என்றும் கேள்வி. தமிழ் நாட்டு அரசியலை கன காலமாக கவனிப்பவர்களுக்கு லயோலா கல்லூரி எந்தக் கட்சியின் பின்புலம் என்று தெரியும்.

திட்டம் இது தான் 

விஜய்க்கு தி மு க கடும் நெருக்கடி கொடுப்பது போல் பல காரியங்கள் நடக்கும், அது பேசு பொருளாக வைக்கப்படும், இது வரைக்கும் சீமானை பற்றி வாயே திறக்காத ஸ்டாலின் போன்றவர்கள் வேண்டும் என்றே விஜய்யை எதிர்த்து அவரை பெரிய ஆள் ஆக்குவார்கள், ஆனால் தி மு க கூட்டணி உடையாமல் அப்படியே இருக்கும், இந்தா அந்தா என்று வதந்திகள் உலாவி விஜய் அரசியலில் சொல்லிக்கொள்ளும் படி வளர வைக்கப்படுவார். ஆக வரும் தேர்தலில் 5 முனைப் போட்டி உறுதி செய்யப்படும். இதில் பிஜேபி, நாம் தமிழர், அதிமுக மரண அடி வாங்கும். மீண்டும் திமுக ஆட்சி மலரும், விஜய் 15%- 20% வரைக்கும் வாக்குகள் வாங்க அனுமதிக்கப் படுவார். உதயநிதி கொஞ்ச நாளில் முதல்வர் ஆவார்.

2020 தேர்தலில் விஜய் ஆகப் பெரும் கட்சியாக காங்கிரஸ்,, Vck, கம்யூனிஸ்ட் புடை சூழ ஆட்சிக்கு வருவார். அதுவரை விஜய் அரசியலில் தாக்குப் பிடிக்க அவருக்கு பண உதவிகள் திரைமறைவில் செய்யப்படும் 

திமுக vs திவெக என்று களம் மாற்றி அமைக்கப்படும். 

 

யாவும் கற்பனை 😄😄

  • கருத்துக்கள உறவுகள்

கொண்ட கொள்கையில் இன்றுவரை உறுதியாக நின்று தேசியத்திற்காக குரல்கொடுக்கும் அண்ணன் சீமானுக்கு இனிய அகவைதின வாழ்த்துக்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

எனக்குத் தெரிந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் திராவிடர் கழகம் உள்ளது, அதற்கு தி மு க வின் திரைமறைவு ஆசீர்வாதமும் உள்ளது. 

திராவிடர் கழகம் தமிழ் நாடு அடுத்த 25- 50 ஆண்டுகளுக்கு  அரசியல் ரீதியாக எப்படிப் போக வேண்டும் என்று சிந்திக்கும் அமைப்பு. நாங்கள் நினைப்பது போல் பன்றிக்கு பூணூல் மட்டும் போடும் கூட்டம் அல்ல.

அவர்களின் இன்றைய கவலை தமிழ் நாட்டில் உருவெடுத்து வரும் இந்துத்துவ சிந்தனைகளை ( பிஜேபி ) ஒடுக்க வேண்டும். மற்றும் தமிழ் தேசியம் என்னும் பெயரில் திராவிடத்தை மறங்கடிக்க நினைக்கும் சிந்தனையை வளர விடாமல் இந்த அளவில் நிறுத்த வேண்டும் 

இதற்கு தி மு க vs அதிமுக என்று ஒரு அரசியலைக் கட்டமைப்பது இனியும் பலன் தராது. அதிமுக பலம் குன்றி அதன் வாக்குகள் மெல்ல மெல்ல சாதிய வாக்குகளாகவும் இந்துத்துவ ஆதரவு வாக்குகளாகவும் மாறி வருவது கண்கூடு. இது திராவிடர் கழகத்தை உறுத்தி இருக்கும் 

இதற்காக உள்ளே கொண்டு வரப்பட்டவர் தான் விஜய்.

விஜய் குடும்பம் தி மு க ஆதரவு குடும்பம். கிறிஸ்தவர்கள். லயோலா கல்லூரி இவர்களின் ஆட்களால்த் தான் நடத்தப்படுகின்றது என்றும் கேள்வி. தமிழ் நாட்டு அரசியலை கன காலமாக கவனிப்பவர்களுக்கு லயோலா கல்லூரி எந்தக் கட்சியின் பின்புலம் என்று தெரியும்.

திட்டம் இது தான் 

விஜய்க்கு தி மு க கடும் நெருக்கடி கொடுப்பது போல் பல காரியங்கள் நடக்கும், அது பேசு பொருளாக வைக்கப்படும், இது வரைக்கும் சீமானை பற்றி வாயே திறக்காத ஸ்டாலின் போன்றவர்கள் வேண்டும் என்றே விஜய்யை எதிர்த்து அவரை பெரிய ஆள் ஆக்குவார்கள், ஆனால் தி மு க கூட்டணி உடையாமல் அப்படியே இருக்கும், இந்தா அந்தா என்று வதந்திகள் உலாவி விஜய் அரசியலில் சொல்லிக்கொள்ளும் படி வளர வைக்கப்படுவார். ஆக வரும் தேர்தலில் 5 முனைப் போட்டி உறுதி செய்யப்படும். இதில் பிஜேபி, நாம் தமிழர், அதிமுக மரண அடி வாங்கும். மீண்டும் திமுக ஆட்சி மலரும், விஜய் 15%- 20% வரைக்கும் வாக்குகள் வாங்க அனுமதிக்கப் படுவார். உதயநிதி கொஞ்ச நாளில் முதல்வர் ஆவார்.

2020 தேர்தலில் விஜய் ஆகப் பெரும் கட்சியாக காங்கிரஸ்,, Vck, கம்யூனிஸ்ட் புடை சூழ ஆட்சிக்கு வருவார். அதுவரை விஜய் அரசியலில் தாக்குப் பிடிக்க அவருக்கு பண உதவிகள் திரைமறைவில் செய்யப்படும் 

திமுக vs திவெக என்று களம் மாற்றி அமைக்கப்படும். 

 

யாவும் கற்பனை 😄😄

நீண்ட பதிலுக்கு நன்றி.

நீங்கள் சொல்லும் இந்த கருத்து பல வகைகளில் நடக்க கூடியதாகவே தெரிகிறது.

எப்படி இந்துதுவா அரசியலை ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு வழி நடத்தியதோ, நடத்துகிறதோ அது போல் திக வும் செய்கிறது என்கிறீர்கள்.

தி க இப்படி செய்யும் ஓக்கே ஏற்கிறேன்.

ஆனால் திமுக? சித்தாந்தம் வாழ வேண்டும் என்பதற்காக விஜையை வளரவிடுமா?

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

எனக்குத் தெரிந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் திராவிடர் கழகம் உள்ளது, அதற்கு தி மு க வின் திரைமறைவு ஆசீர்வாதமும் உள்ளது. 

திராவிடர் கழகம் தமிழ் நாடு அடுத்த 25- 50 ஆண்டுகளுக்கு  அரசியல் ரீதியாக எப்படிப் போக வேண்டும் என்று சிந்திக்கும் அமைப்பு. நாங்கள் நினைப்பது போல் பன்றிக்கு பூணூல் மட்டும் போடும் கூட்டம் அல்ல.

அவர்கள் ஈழப்போராளிகளுக்கு ஆதரவு கொடுத்ததுதும் இதே கருத்தியலுக்காககத்தான். பெரியாரின்  கொள்கைகளில் குறிப்பாக கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்வதற்காககத்தான். ஆனால் பேராளிகள் கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்லவில்லை. அதை மக்களின் விருப்பிற்கு விட்டார்கள்.சாதி மறுப்புக் கொள்கையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டார்கள். திராவிடத் தேசியம் ஒன்றில்லை அதற்கு மாற்றறீடாக உண்மையான மண்ணுக்குரிய தமிழத்தேசியத்தை முன்னிறுத்தினார்கள். திராவிட மேடையில் நின்ற சீமானை தமிழ்த்தேசிய மேடையில் எற்றிவிட்டார்கள். இன்று  சுpமன் பேசும் தமிழத்தேசியமே திராவிடக் கூட்டத்தின்  கதறல்களுக்கு சீமானின் தமிழத்தேசியக் குருத்தியலே காரணம். அதானல்தான் நேற்றுவரை விஜைஜய ஆதரித்த சீமான். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்ற இரு தோணிகளில் கால்வைத்தவுடன் கடுமையாக எதிர்த்தார். போலித்திராவிடக்கட்சிகள். அதைமெளனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசியத்தைக் கடுமையாக எதிர்க்குத் திராவிடக்கட்சிகள் விஜையின் இரட்டை நிலைப்பாட்டை ஏன் எதிர்க்கவில்லை. ஒன்றுதான் இருக்க முடியும் திராவிடம் அல்லது தமிழத்தேசியம். லிலாங்கு மீனாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பெரிய லிஸ்ட்டு.. வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொன்ன சீமான்! அன்புத் தம்பி விஜயை மறக்கலையே!

Rajkumar RPublished: Saturday, November 9, 2024, 19:25 [IST]

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் சீமான் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருக்கும், பிற தலைவர்களுக்கும் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர்," நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சகோதரர்' சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

 

சீமான் பிறந்தநாள் அன்று விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் ஆரோக்கியம் என்று பார்க்கப்படுகிறது. விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்த சீமானுக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருப்பதை நாம் தமிழர் கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் சீமான்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில்,"என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக-தமிழ்நாடு முன்னாள் தலைவருமான அம்மையார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும்,

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் பெருமதிப்பிற்குரிய பெருந்தகை எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும்,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும், புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா டி.டி.வி.தினகரன்அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் முனைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், பாஜகவின் மகளிர் அணி தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நடிகர் இராமராஜன் அவர்களுக்கும், அண்ணன் இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும், மற்றும் அரசியல், திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்." என கூறியுள்ளார்.

 

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-katchi-leader-seeman-celebrates-birthday-thanks-vijay-and-others-for-wishes-653199.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி 

டிஸ்கி  போடலாமா என யோசித்தேன். பொறகு கோஷான் அந்த சாதியா, இந்த சாதியா என பல பி எச் டி ஆய்வு கேள்விகளை சிலர் மனதில் அது ஏற்படுத்தி விடும் என்பதால் தவிர்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

அவர்கள் ஈழப்போராளிகளுக்கு ஆதரவு கொடுத்ததுதும் இதே கருத்தியலுக்காககத்தான்

இதை ஏற்கலாம். இதை பிழை என்றும் சொல்ல முடியாதே? அவர்கள் தாம் வரித்து கொண்ட முற்போக்கு கொள்கைகள் இன்னொரு தமிழ் மண்ணிலும் நிலை பெற வேண்டும் என எண்ணினர். அதிலும் பல குப்பைகளை தவிர்த்து விட்டு தலைவர் மீது தனி அக்கறை காட்டினர்.

ஏன்? பலர் தத்துவம் பேசினாலும் செயலில் முற்போக்காளர் தலைவர் என்பதை கண்டு கொண்டதால்.

 

4 hours ago, புலவர் said:

குறிப்பாக கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்வதற்காககத்தான்

இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. திக, புலிகள் இடையான உறவு யூகே லேபர், அமெரிக்கன் டெமோகிரட்ஸ், கன்சேவேடிவ்-ரிபப்ளிகன் உறவு போல, ஒத்த கொள்கை உடைய அமைப்புகளின் பரஸ்பர நட்பு உதவி என்ற எல்லையை தாண்டவில்லை.

அப்படி தாண்ட கூடாது, அவரவர் விடயத்தில் மற்றவர் தலையிட கூடாது என்பதில் திகவும், தலைவரும் உறுதியாகவே இருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

சாதி மறுப்புக் கொள்கையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டார்கள்

கொள்கை அளவில்???

நீங்களா இப்படி எழுதுவது…. தமிழ் நாட்டை விட சாதி மறுப்பை கடுமையாக நடைமுறைபடுத்தினார்கள்.

யாராவது வறணி ஆட்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள்🤣

5 hours ago, புலவர் said:

. திராவிடத் தேசியம் ஒன்றில்லை அதற்கு மாற்றறீடாக உண்மையான மண்ணுக்குரிய தமிழத்தேசியத்தை முன்னிறுத்தினார்கள். திராவிட மேடையில் நின்ற சீமானை தமிழ்த்தேசிய மேடையில் எற்றிவிட்டார்கள். இன்று  சுpமன் பேசும் தமிழத்தேசியமே திராவிடக் கூட்டத்தின்  கதறல்களுக்கு சீமானின் தமிழத்தேசியக் குருத்தியலே காரணம். அதானல்தான் நேற்றுவரை விஜைஜய ஆதரித்த சீமான். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்ற இரு தோணிகளில் கால்வைத்தவுடன் கடுமையாக எதிர்த்தார். போலித்திராவிடக்கட்சிகள். அதைமெளனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசியத்தைக் கடுமையாக எதிர்க்குத் திராவிடக்கட்சிகள் விஜையின் இரட்டை நிலைப்பாட்டை ஏன் எதிர்க்கவில்லை. ஒன்றுதான் இருக்க முடியும் திராவிடம் அல்லது தமிழத்தேசியம். லிலாங்கு மீனாக இருக்க முடியாது.

இது முழுக்க முழுக்க இப்போ நீங்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டுக்காக வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.

புலிகள்,

ஈழத்தில் தமிழ் தேசியம்.

தமிழகத்தில் திராவிடம்.

அவரவர் நிலத்தில் அந்தந்த கொள்கை என உணர்ந்து அந்த வரையறைக்குள்தான் நிண்டார்கள்.

தலைவர் இருக்கும் வரை சீமான் திராவிடத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் என்றால் அப்படி செய்ய அவர் அனுமதிக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

தலைவர் இருக்கும் வரை சீமான் திராவிடத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் என்றால் அப்படி செய்ய அவர் அனுமதிக்கப்படவில்லை.

நான் நினைக்கிறேன் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரே திராவிட இயக்கங்களின் கோரமுகம் எமக்கு முழுமையாக தெரியவந்ததாக. 

அதன் பின்னரே தமிழ் தேசியமும் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளணும் என்பது உறைத்ததாக. 

இப்பொழுதும் நினைப்பதுண்டு முள்ளிவாய்க்கால் நேரம் தமிழகத்தை ஒரு தமிழர் ஆண்டிருந்தால் தடுத்திருக்க முடியும் என்று.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

கொளத்தூர் மணி

இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு சொன்ன‌தை நினைவில் வைச்சு இருக்க‌னும்

 

ஈழ‌த‌மிழ‌ர் உங்க‌ளுக்காக‌ நாங்க‌ள் அர‌சிய‌ல் செய்ய‌ வில்லை.....................இதுக்கு மிஞ்சி திருட்டு திராவிட‌த்திட‌ம் இருந்து என்ன‌த்த‌ எதிர் பார்க்க‌ முடியும்😡................................

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஒரு வாழ்த்து  திரியில் தம் வக்கிரத்தை வழித்து  கொட்டுபவர்கள்..... போராட்ட காலங்களில் எப்படி இருந்திருப்பார்கள் என அதிகம் யோசிக்கத் தேவையில்லை.

அப்பேக்க‌ வேற‌ முக‌ மூடி இப்பேக்க‌ ஜிங்சாங் முக‌ மூடி

 

என‌க்கு தெரிந்து 50க்கு குறைவான‌ உற‌வுக‌ள் தான் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு ஒரே பெய‌ரில் யாழில் தொட‌ர்ந்து எழுதுகினம்

 

2009க்கு பின்ன‌ர் வேறு பெய‌ர்க‌ளில் வ‌ந்து ந‌க்க‌ல் நையாண்டி செய்வ‌து...................இதில் சீமானை வ‌சை பாடுவ‌து ஏதோ தாங்க‌ள் ம‌ட்டும் நேர்மையான‌வ‌ர்க‌ள் போல்

 

உங்க‌ளை ஒரு வித‌த்தில் இன்னும் ரொம்ம‌ பிடிக்கும் பொய் சொல்ல‌ மாட்டிங்க‌ள்.................யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு ஒரே பெய‌ரில் எழுதுவ‌து.............................உங்க‌ளை மாதிரி இன்னும் சில‌ உற‌வுக‌ள் ஒரே பெய‌ரில் தொட‌ர்ந்து எழுதுகின‌ம் ...........................

 

வாழ்த்து திரியில் எதை எழுத‌னும் எதை எழுத‌க் கூடாது என்ற‌ புரித‌ல் கூட இல்லாத‌வ‌ர்க‌ளுட‌ன் எப்ப‌டி தாத்த்தா க‌ருத்தாட‌ல் செய்யிறீங்க‌ள்..........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

திராவிட இயக்கங்களின் கோரமுகம்

திமுக, அதிமுகவின் கோரமுகம். இதில் வீரமணியையும் சேர்த்துக்கொள்ளலாம். எல்லோர் வாயையும் கட்டிய தலைமை பூசாரி கருணாநிதி.

 

1 hour ago, விசுகு said:

நான் நினைக்கிறேன் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரே திராவிட இயக்கங்களின் கோரமுகம் எமக்கு முழுமையாக தெரியவந்ததாக. 

அதன் பின்னரே தமிழ் தேசியமும் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளணும் என்பது உறைத்ததாக. 

 

அதன் பிந்தான் எவரையும் நம்பி பலனில்லை என்பது எமக்கு உறைத்தது.

இதில் பிரித்தானியாவும், பிரான்சும் திமுக அதிமுகவை விட மோசமாக நடந்து கொண்டன. ஆனால் அவற்றை நாம் திராவிட இயக்கங்களை எதிர்ப்பது போல் எதிர்ப்பதில்லை. ஏன் என்றால் அது நாம் இருக்கும் மரத்தின் கொப்பு.

தமிழ் நாடு? அப்படியில்லை. ஆகவே அங்கே என்ன விசத்தையும் வளர்த்து விட நாம் ரெடி.

ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு விடயம் சரி, 2009 இன் பிந்தான் தமிழ் தேசியம் Vs திராவிடம் என்ற முரண் வலிந்து உருவாக்கப்பட்டது.

ஆகவே மேலே புலவர் செய்தது 2009 க்கு முன்னான வரலாற்றை தன் இஸ்டபடி எழுதும் முயற்சி என்பது சரியாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஒரு வாழ்த்து  திரியில் தம் வக்கிரத்தை வழித்து  கொட்டுபவர்கள்..... போராட்ட காலங்களில் எப்படி இருந்திருப்பார்கள் என அதிகம் யோசிக்கத் தேவையில்லை.

தாத்தாவுக்கு மறதி வரலாம் வயது அப்படி?

பேரனுக்குமா?

இது வாழிய, வாழிய பகுதி அல்ல. தமிழக செய்திகள் பகுதி. இதில் விஜை என்ற அரசியல்வாதி சீமான் என்ற அரசியல்வாதிக்கு வாழ்த்துச்சொன்ன செய்தியும் அதை பற்றிய உரையாடலும் வழமை போல் இடம்பெறுகிறது.

ஒரு கருத்து களத்தில் எந்த பகுதியில் நிற்கிறோம் என்ற நிதானம் கூட இல்லை, இதில் மற்றவனுக்கு நாகரீகம் பற்றி வகுப்பெடுப்பும், தாத்தா-பேரன் பரஸ்பர முதுகு சொறிதலும் வேறு🤣.

47 minutes ago, வீரப் பையன்26 said:

அப்பேக்க‌ வேற‌ முக‌ மூடி இப்பேக்க‌ ஜிங்சாங் முக‌ மூடி

 

என‌க்கு தெரிந்து 50க்கு குறைவான‌ உற‌வுக‌ள் தான் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு ஒரே பெய‌ரில் யாழில் தொட‌ர்ந்து எழுதுகினம்

 

2009க்கு பின்ன‌ர் வேறு பெய‌ர்க‌ளில் வ‌ந்து ந‌க்க‌ல் நையாண்டி செய்வ‌து...................இதில் சீமானை வ‌சை பாடுவ‌து ஏதோ தாங்க‌ள் ம‌ட்டும் நேர்மையான‌வ‌ர்க‌ள் போல்

 

உங்க‌ளை ஒரு வித‌த்தில் இன்னும் ரொம்ம‌ பிடிக்கும் பொய் சொல்ல‌ மாட்டிங்க‌ள்.................யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு ஒரே பெய‌ரில் எழுதுவ‌து.............................உங்க‌ளை மாதிரி இன்னும் சில‌ உற‌வுக‌ள் ஒரே பெய‌ரில் தொட‌ர்ந்து எழுதுகின‌ம் ...........................

 

வாழ்த்து திரியில் எதை எழுத‌னும் எதை எழுத‌க் கூடாது என்ற‌ புரித‌ல் கூடா இல்லாத‌வ‌ர்க‌ளுட‌ன் எப்ப‌டி தாத்த்தா க‌ருத்தாட‌ல் செய்யிறீங்க‌ள்..........................

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

தாத்தாவுக்கு மறதி வரலாம் வயது அப்படி?

பேரனுக்குமா?

இது வாழிய, வாழிய பகுதி அல்ல. தமிழக செய்திகள் பகுதி. இதில் விஜை என்ற அரசியல்வாதி சீமான் என்ற அரசியல்வாதிக்கு வாழ்த்துச்சொன்ன செய்தியும் அதை பற்றிய உரையாடலும் வழமை போல் இடம்பெறுகிறது.

ஒரு கருத்து களத்தில் எந்த பகுதியில் நிற்கிறோம் என்ற நிதானம் கூட இல்லை, இதில் மற்றவனுக்கு நாகரீகம் பற்றி வகுப்பெடுப்பும், தாத்தா-பேரன் பரஸ்பர முதுகு சொறிதலும் வேறு🤣.

 

சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🍰🍍🍓🍇🎂” – தவெக தலைவர் விஜய்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🍰🍍🍓🍇🎂” – தவெக தலைவர் விஜய்

இது செய்தி. 

இதை விஜை வந்து யாழ் களத்தில் ஒரு வாழ்த்து திரியாக திறக்கவில்லை.

செய்தி திரியில் கருத்து சொல்லாமல், வாழ்த்து சொல்லி விட்டு, கருத்து சொன்னவன் மீது பிராது வேறு🤣.

# புரிதலாவது புரியாணியாவது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இது செய்தி. 

இதை விஜை வந்து யாழ் களத்தில் ஒரு வாழ்த்து திரியாக திறக்கவில்லை.

செய்தி திரியில் கருத்து சொல்லாமல், வாழ்த்து சொல்லி விட்டு, கருத்து சொன்னவன் மீது பிராது வேறு🤣.

# புரிதலாவது புரியாணியாவது.

உங்க‌ளை மாதிரி இடம் பொருள் ஏவ‌லுக்கு ஏற்ற‌ மாதிரி மாற்றிக் கொள்ள‌ என்னால் முடியாது
மனதில் ப‌ட்ட‌தை எழுதுவேன்

 

இந்த‌ திரியில் எத்த‌னையோ வ‌ய‌தில் மூத்தவ‌ர்க‌ள் சீமானுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் என்று எழுதினது தான் அதிக‌ம்

 

திரியின் த‌லைப்பு வேறு மாதிரி இருந்து  இருந்தால் இம்ம‌ட்டு வாழ்த்தும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து இருக்காது

 

உங்க‌ட‌ அறிவுஜீவி விளையாட்டை வேறு யாருட‌னும் வைத்து கொள்ளுங்கோ என்னோட‌ வேண்டாம்👎............................

 

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளை மாதிரி இடம் பொருள் ஏவ‌லுக்கு ஏற்ற‌ மாதிரி மாற்றிக் கொள்ள‌ என்னால் முடியாது
மனதில் ப‌ட்ட‌தை எழுதுவேன்

 

இந்த‌ திரியில் எத்த‌னையோ வ‌ய‌தில் மூத்தவ‌ர்க‌ள் சீமானுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் என்று எழுதினது தான் அதிக‌ம்

 

திரியின் த‌லைப்பு வேறு மாதிரி இருந்து  இருந்தால் இம்ம‌ட்டு வாழ்த்தும் இந்த‌ திரிக்குள் வ‌ந்து இருக்காது

 

உங்க‌ட‌ அறிவுஜீவி விளையாட்டை வேறு யாருட‌னும் வைத்து கொள்ளுங்கோ என்னோட‌ வேண்டாம்👎............................

 

நிச்சயம் அறிவு ஜீவி விளையாட்டுக்கு உங்களுடன் நான் வரவில்லை. 

செய்தி திரியில் வாழ்த்து சொன்னால் எனக்கு அது மேட்டர் இல்லை.

ஆனால் நான் விதிப்படி நடந்து கொண்டுள்ளேன், ஆகவே நான் நடந்து கொண்டமை பற்றி கேள்வி கேட்டால் அதுக்கு பதில் கொடுப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நிச்சயம் அறிவு ஜீவி விளையாட்டுக்கு உங்களுடன் நான் வரவில்லை. 

செய்தி திரியில் வாழ்த்து சொன்னால் எனக்கு அது மேட்டர் இல்லை.

ஆனால் நான் விதிப்படி நடந்து கொண்டுள்ளேன், ஆகவே நான் நடந்து கொண்டமை பற்றி கேள்வி கேட்டால் அதுக்கு பதில் கொடுப்பேன்.

இந்த திரியில் நான் உங்க‌ளுட‌ன் ஏதும் க‌ருத்தாட‌ல் செய்து ஒருக்கிறேனா

நான் முன் வைத்த‌ கேள்வி தாத்தாவிட‌ம்

 

உங்க‌ளுட‌ன் க‌ருத்தாட‌ல் செய்யாம‌ விலகி இருப்ப‌து புத்திசாலித்த‌னம் அதை நான் ச‌ரியாக‌ க‌டை பிடிக்கிறேன்

புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்🫤😉....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இந்த திரியில் நான் உங்க‌ளுட‌ன் ஏதும் க‌ருத்தாட‌ல் செய்து ஒருக்கிறேனா

நான் முன் வைத்த‌ கேள்வி தாத்தாவிட‌ம்

 

உங்க‌ளுட‌ன் க‌ருத்தாட‌ல் செய்யாம‌ விலகி இருப்ப‌து புத்திசாலித்த‌னம் அதை நான் ச‌ரியாக‌ க‌டை பிடிக்கிறேன்

புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்🫤😉....................

நிச்சயமாக நீங்கள் புத்திசாலிதனமாக நடப்பதை புரிந்து கொள்கிறேன்.

உங்களுடனும் “கருத்தாடல்” செய்தே தீர வேண்டும் என்ற தீரா ஆசை ஏதும் எனக்கும் இல்லை என்பதையும் பணிவன்புடன் அறியத்தருகிறேன்.

ஆனால்……

நான் உட்பட சிலர், செய்தி திரியில், கருத்து எழுதியதை….ஏதோ வாழ்த்து திரியில் கருத்து எழுதியது போல் திரித்து எழுதி…எமக்கு நாகரீக வகுப்பு எடுக்க வெளிகிட்டால் அதுக்கு பதில் வந்தே தீரும்.

உங்கள் தாத்தாவிடமோ, பாட்டியிடமோ, முப்பாட்டனுடனோ நீங்கள் - என்னை சுட்டி பொது வெளியில் எழுதினால், அதை கடந்து போவதா இல்லையா என்பதை நான் மட்டுமே தீர்மானிப்பேன்.

புரிய முயல்வீர்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

திமுக, அதிமுகவின் கோரமுகம். இதில் வீரமணியையும் சேர்த்துக்கொள்ளலாம். எல்லோர் வாயையும் கட்டிய தலைமை பூசாரி கருணாநிதி.

 

அதன் பிந்தான் எவரையும் நம்பி பலனில்லை என்பது எமக்கு உறைத்தது.

இதில் பிரித்தானியாவும், பிரான்சும் திமுக அதிமுகவை விட மோசமாக நடந்து கொண்டன. ஆனால் அவற்றை நாம் திராவிட இயக்கங்களை எதிர்ப்பது போல் எதிர்ப்பதில்லை. ஏன் என்றால் அது நாம் இருக்கும் மரத்தின் கொப்பு.

தமிழ் நாடு? அப்படியில்லை. ஆகவே அங்கே என்ன விசத்தையும் வளர்த்து விட நாம் ரெடி.

ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு விடயம் சரி, 2009 இன் பிந்தான் தமிழ் தேசியம் Vs திராவிடம் என்ற முரண் வலிந்து உருவாக்கப்பட்டது.

ஆகவே மேலே புலவர் செய்தது 2009 க்கு முன்னான வரலாற்றை தன் இஸ்டபடி எழுதும் முயற்சி என்பது சரியாகிறது.

நம்பிக்கை துரோகமும் அண்ணண் தம்பியிடம் முதுகில் குத்து வாங்குவதும் 

அந்நியனின் எதிர்ப்பும் ஒன்றா சகோ? 

இந்த வலி புரியவில்லையா சகோ?

இந்தியன் தானே எல்லோரையும் ஆட வைத்தான் அவனை அடக்க ஒரு ஊசி எம்மவரிடம் இருந்ததே சகோ. அப்படி நாம் நம்பினோமே சகோ? இவ்வளவும் பொய்யா சகோ????

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

நிச்சயமாக நீங்கள் புத்திசாலிதனமாக நடப்பதை புரிந்து கொள்கிறேன்.

உங்களுடனும் “கருத்தாடல்” செய்தே தீர வேண்டும் என்ற தீரா ஆசை ஏதும் எனக்கும் இல்லை என்பதையும் பணிவன்புடன் அறியத்தருகிறேன்.

ஆனால்……

நான் உட்பட சிலர், செய்தி திரியில், கருத்து எழுதியதை….ஏதோ வாழ்த்து திரியில் கருத்து எழுதியது போல் திரித்து எழுதி…எமக்கு நாகரீக வகுப்பு எடுக்க வெளிகிட்டால் அதுக்கு பதில் வந்தே தீரும்.

உங்கள் தாத்தாவிடமோ, பாட்டியிடமோ, முப்பாட்டனுடனோ நீங்கள் - என்னை சுட்டி பொது வெளியில் எழுதினால், அதை கடந்து போவதா இல்லையா என்பதை நான் மட்டுமே தீர்மானிப்பேன்.

புரிய முயல்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த‌ திரியில்  எங்கையாவ‌து உங்க‌ளின் பெய‌ரை குறிப்பிட்டு க‌ருத்து எழுதி இருந்தால் காட்ட‌வும் அத‌ற்க்கு பிற‌க்கு ஏதும் விவாதிக்க‌ இருந்தால் விவாதிப்போம்😡..................நான் தாத்தாவிடம் என் க‌ருத்தை முன் வைத்தேன்

 

சீமான் எதிர்ப்பு ம‌ன‌ நோயாளியிட‌ம் அல்ல‌👎................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

1978 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கியூபாவுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பிய போது அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இது. இதில் தமிழர் என்பதற்கும் திராவிடர் என்பதற்கும் எந்த வேறுபாட்டையும் அவர்கள் காணவில்லை.  

large.IMG_7905.jpeg.dacdac5b7f836805c07a7af7444470cf.jpeg

விடுதலைப்புலிகள் இருக்கும் வரை அவர்கள் எப்போதும் தமிழையும் திராவிடத்தையும் ஒன்றாகவே பார்ததார்கள். இது சம்பந்தமாக திரு அன்ரன  பாலசிங்கம் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற நூலில் அவர் தமிழர்களை திராவிடர்கள் என்று குறிப்பிட்டதை முன்னரே இணைத்திருந்தேன். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நம்பிக்கை துரோகமும் அண்ணண் தம்பியிடம் முதுகில் குத்து வாங்குவதும் 

அந்நியனின் எதிர்ப்பும் ஒன்றா சகோ? 

இந்த வலி புரியவில்லையா சகோ?

இந்தியன் தானே எல்லோரையும் ஆட வைத்தான் அவனை அடக்க ஒரு ஊசி எம்மவரிடம் இருந்ததே சகோ. அப்படி நாம் நம்பினோமே சகோ? இவ்வளவும் பொய்யா சகோ????

புரிகிறது…..

முன்பே எழுதியதுதான் அண்ணா. 

கருணாநிதியாலோ வேறு எவராலோ நடந்ததை நிறுத்த முடிந்திராது.

ஆனால் பதவியாவது ஹைகோர்ட்டாவது என தூக்கி எறிந்து விட்டு கருணாநிதி வந்திருக்க வேண்டும், அப்படி வரும் படி அவரை ஏனையோர் தூண்டி இருக்க வேண்டும்.

குறிப்பாக வீரமணி.

இங்கே பலர் இலவசமாக வக்காலத்து வாங்கி வைரமுத்து.

திருமா…

இப்படி கருணாநிதி காதுக்கு நெருக்கமாய் இருந்தோர்.

இது துரோகம்தான். மறக்க முடியாதுதான்.

ஆனால் திமுக, அதிமுக, போல அல்ல தி. க தொண்டர்கள்.

நான் அப்போ தமிழ் நாட்டில் இருந்தேன். நா.த. க வில் இருந்து விலகிய கல்யாணசுந்தரம் அப்போ கல்லூரி மாணவன் அல்லது விரிவுரையாளர்…கம்யூடிஸ்டுகளோடு சேர்ந்து…இவர் போன்றோரும்…தி. க வினரும் தம்மால் முடிந்தளவு முயன்றார்கள். 

ஒவ்வொரு நாளும் கருணாநிதி கோட்டைக்கு போகும், வரும் போது வேறு வேறு இடங்களில் நின்று கொழுத்தும் வெய்யிலில் போராடுவார்கள்.

ஆனால் இது மிக சொற்பமானோரே. 

ஜல்லி கட்டுக்கு எழுந்த கூட்டத்தில் 1/100000 ஒன்று கூட சேர்வதில்லை.

எல்லோரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது…கூடாது.

12 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ திரியிக் எங்கையாவ‌து உங்க‌ளின் பெய‌ரை குறிப்பிட்டு க‌ருத்து எழுதி இருந்தால் காட்ட‌வும் அத‌ற்க்கு பிற‌க்கு ஏதும் விவாதிக்க‌ இருந்தால் விவாதிப்போம்😡..................நான் தாத்தாவிடம் என் க‌ருத்தை முன் வைத்தேன்

 

சீமான் எதிர்ப்பு ம‌ன‌ நோயாளியிட‌ம் அல்ல‌👎................................

அதுதான் “சுட்டல்” என சொல்லி விட்டேனே, எனது பெயரை குரிப்பிட வேணும் என்பதில்லை. நான் செய்த விடயத்தை சுட்டல் செய்தால் நான் பதில் கொடுப்பேன்.

தாத்தா பேரனுடன் கொஞ்சுவதை தனி மடலில் வைத்தால் எவரும் கேட்கப்போவதில்லை. நான் செய்த விடயத்தை நாகரீகம் அற்ற செயல் என பொது வெளியில் சுட்டல் செய்யின்…பதில் வரும்.

அது சீமான்-காதலரான ஆணாக இருந்தாலும்.

9 minutes ago, island said:

1978 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கியூபாவுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பிய போது அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இது. இதில் தமிழர் என்பதற்கும் திராவிடர் என்பதற்கும் எந்த வேறுபாட்டையும் அவர்கள் காணவில்லை.  

large.IMG_7905.jpeg.dacdac5b7f836805c07a7af7444470cf.jpeg

விடுதலைப்புலிகள் இருக்கும் வரை அவர்கள் எப்போதும் தமிழையும் திராவிடத்தையும் ஒன்றாகவே பார்ததார்கள். இது சம்பந்தமாக திரு அன்ரன  பாலசிங்கம் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற நூலில் அவர் தமிழர்களை திராவிடர்கள் என்று குறிப்பிட்டதை முன்னரே இணைத்திருந்தேன். 

 

 

அருமையான ஆதாரம். இணைப்பு உள்ளதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.