Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

புரிகிறது…..

முன்பே எழுதியதுதான் அண்ணா. 

கருணாநிதியாலோ வேறு எவராலோ நடந்ததை நிறுத்த முடிந்திராது.

ஆனால் பதவியாவது ஹைகோர்ட்டாவது என தூக்கி எறிந்து விட்டு கருணாநிதி வந்திருக்க வேண்டும், அப்படி வரும் படி அவரை ஏனையோர் தூண்டி இருக்க வேண்டும்.

குறிப்பாக வீரமணி.

இங்கே பலர் இலவசமாக வக்காலத்து வாங்கி வைரமுத்து.

திருமா…

இப்படி கருணாநிதி காதுக்கு நெருக்கமாய் இருந்தோர்.

இது துரோகம்தான். மறக்க முடியாதுதான்.

ஆனால் திமுக, அதிமுக, போல அல்ல தி. க தொண்டர்கள்.

நான் அப்போ தமிழ் நாட்டில் இருந்தேன். நா.த. க வில் இருந்து விலகிய கல்யாணசுந்தரம் அப்போ கல்லூரி மாணவன் அல்லது விரிவுரையாளர்…கம்யூடிஸ்டுகளோடு சேர்ந்து…இவர் போன்றோரும்…தி. க வினரும் தம்மால் முடிந்தளவு முயன்றார்கள். 

ஒவ்வொரு நாளும் கருணாநிதி கோட்டைக்கு போகும், வரும் போது வேறு வேறு இடங்களில் நின்று கொழுத்தும் வெய்யிலில் போராடுவார்கள்.

ஆனால் இது மிக சொற்பமானோரே. 

ஜல்லி கட்டுக்கு எழுந்த கூட்டத்தில் 1/100000 ஒன்று கூட சேர்வதில்லை.

எல்லோரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது…கூடாது.

அதுதான் “சுட்டல்” என சொல்லி விட்டேனே, எனது பெயரை குரிப்பிட வேணும் என்பதில்லை. நான் செய்த விடயத்தை சுட்டல் செய்தால் நான் பதில் கொடுப்பேன்.

தாத்தா பேரனுடன் கொஞ்சுவதை தனி மடலில் வைத்தால் எவரும் கேட்கப்போவதில்லை. நான் செய்த விடயத்தை நாகரீகம் அற்ற செயல் என பொது வெளியில் சுட்டல் செய்யின்…பதில் வரும்.

அது சீமான்-காதலரான ஆணாக இருந்தாலும்.

அருமையான ஆதாரம். இணைப்பு உள்ளதா?

சும்மா இருப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் தேவை இல்லா முர‌னை வ‌ள‌ப்ப‌தும் ஒருவ‌கை ம‌ன‌நோய் தான்

இந்த‌ திரியில் சீமானை கேலியும் கிண்ட‌லும் சில‌ர் செய்து இருக்கின‌ம் 

நான் பொதுவாய் முன் வைச்ச‌ க‌ருத்துக்கு ஏன் என் மேல் எரிஞ்சு விழுறீங்க‌ள்😁😛

 

ம‌றுப‌டியும் சொல்லுகிறேன் சீமான் எதிர்ப்பு ம‌ன‌ நோயாளிக‌ளிட‌ம் நான் விவாத‌ம் செய்வ‌தில்லை

ப‌ல‌ வாட்டி சொல்லியும் 

கீழ‌ விழுந்தும் மீசையில் ம‌ண் ஒட்ட‌ வில்லை ரேஞ்சுக்கு என்னை நோக்கி எழுதுகிறீர்😁

வேறு பாதைய‌ தேட‌வும்  இத‌ற்க்கு நான் ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டேன்

 

இந்த‌ திரி நிர்வாக‌த்தால் பூட்டும் நிலை வ‌ந்தால் அத‌ற்க்கு நீங்க‌ள் தான் கார‌ண‌மாய் இருப்பிர் 

இது என‌து வெளிப்ப‌டையான‌ குற்ற‌ச்சாட்டு

 

உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ன்ம‌த்தோட‌ என‌க்கும் எழுத‌த் தெரியும் வேண்டாம் என்று ப‌ல‌ திரிக‌ளில் க‌ட‌ந்து போய் இருக்கிறேன்.........................யாழ் விதிமுறைய‌ க‌டை பிடிக்க‌வும்

 

ஒரு க‌ள‌ உற‌வு ச‌க‌ க‌ள‌ உற‌வுட‌ன் க‌ருத்தாட‌ பிடிக்க‌லை என்றால் அத‌ற்க்கு ஏற்ற‌ போல் உங்க‌ளை மாற்றி கொள்ளுங்கோ🫤😉.......................

  • Replies 93
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அரசியலில் நீ வெற்றி பெறுகிறாயோ இல்லையோ, அதிகாரத்தை பிடித்து தமிழர்களுக்கு நல்லது செய்யறியோ இல்லையோ, ஆனால் ஒன்று நீ தூவிய தமிழ் தேசிய விதைகள் தமிழர் வாழும் மண்ணெல்லாம் முளைக்கத் தொடங்கி விருட்சமாக வளர்

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம்

  • நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்.... பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று  சர்வதேச நாடுகள் முன்னிலையில்  புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து  புலிகளின் ஆயுத களை

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

புரிகிறது…..

முன்பே எழுதியதுதான் அண்ணா. 

கருணாநிதியாலோ வேறு எவராலோ நடந்ததை நிறுத்த முடிந்திராது.

ஆனால் பதவியாவது ஹைகோர்ட்டாவது என தூக்கி எறிந்து விட்டு கருணாநிதி வந்திருக்க வேண்டும், அப்படி வரும் படி அவரை ஏனையோர் தூண்டி இருக்க வேண்டும்.

குறிப்பாக வீரமணி.

இங்கே பலர் இலவசமாக வக்காலத்து வாங்கி வைரமுத்து.

திருமா…

இப்படி கருணாநிதி காதுக்கு நெருக்கமாய் இருந்தோர்.

இது துரோகம்தான். மறக்க முடியாதுதான்.

ஆனால் திமுக, அதிமுக, போல அல்ல தி. க தொண்டர்கள்.

நான் அப்போ தமிழ் நாட்டில் இருந்தேன். நா.த. க வில் இருந்து விலகிய கல்யாணசுந்தரம் அப்போ கல்லூரி மாணவன் அல்லது விரிவுரையாளர்…கம்யூடிஸ்டுகளோடு சேர்ந்து…இவர் போன்றோரும்…தி. க வினரும் தம்மால் முடிந்தளவு முயன்றார்கள். 

ஒவ்வொரு நாளும் கருணாநிதி கோட்டைக்கு போகும், வரும் போது வேறு வேறு இடங்களில் நின்று கொழுத்தும் வெய்யிலில் போராடுவார்கள்.

ஆனால் இது மிக சொற்பமானோரே. 

ஜல்லி கட்டுக்கு எழுந்த கூட்டத்தில் 1/100000 ஒன்று கூட சேர்வதில்லை.

எல்லோரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது…கூடாது.

நன்றி சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

அருமையான ஆதாரம். இணைப்பு உள்ளதா?

இணைப்பு தற்சமயம் இல்லை.  கிடைத்தால் இணைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வீரப் பையன்26 said:

சும்மா இருப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் தேவை இல்லா முர‌னை வ‌ள‌ப்ப‌தும் ஒருவ‌கை ம‌ன‌நோய் தான்

இந்த‌ திரியில் சீமானை கேலியும் கிண்ட‌லும் சில‌ர் செய்து இருக்கின‌ம் 

நான் பொதுவாய் முன் வைச்ச‌ க‌ருத்துக்கு ஏன் என் மேல் எரிஞ்சு விழுறீங்க‌ள்😁😛

 

ம‌றுப‌டியும் சொல்லுகிறேன் சீமான் எதிர்ப்பு ம‌ன‌ நோயாளிக‌ளிட‌ம் நான் விவாத‌ம் செய்வ‌தில்லை

ப‌ல‌ வாட்டி சொல்லியும் 

கீழ‌ விழுந்தும் மீசையில் ம‌ண் ஒட்ட‌ வில்லை ரேஞ்சுக்கு என்னை நோக்கி எழுதுகிறீர்😁

வேறு பாதைய‌ தேட‌வும்  இத‌ற்க்கு நான் ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டேன்

 

இந்த‌ திரி நிர்வாக‌த்தால் பூட்டும் நிலை வ‌ந்தால் அத‌ற்க்கு நீங்க‌ள் தான் கார‌ண‌மாய் இருப்பிர் 

இது என‌து வெளிப்ப‌டையான‌ குற்ற‌ச்சாட்டு

 

உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ன்ம‌த்தோட‌ என‌க்கும் எழுத‌த் தெரியும் வேண்டாம் என்று ப‌ல‌ திரிக‌ளில் க‌ட‌ந்து போய் இருக்கிறேன்.........................யாழ் விதிமுறைய‌ க‌டை பிடிக்க‌வும்

 

ஒரு க‌ள‌ உற‌வு ச‌க‌ க‌ள‌ உற‌வுட‌ன் க‌ருத்தாட‌ பிடிக்க‌லை என்றால் அத‌ற்க்கு ஏற்ற‌ போல் உங்க‌ளை மாற்றி கொள்ளுங்கோ🫤😉.......................

எனக்கும் சீமான் காதலர்களோடு பேசப்பிடிப்பதில்லை.

சீமானை போலவே என் மீதும் காதல் வயப்பட்டு விடுவார்களோ என்ற பயம்தான்🤣.

ஆனால் மறைமுக சுட்டல், குத்தல், சொறிச்சேட்டைகளை கண்டும் காணாது போக நான் ஒன்றும் டீசண்டான கருத்தாளர் அல்ல.

திரியை பூட்டினாலும் பூட்டாவிட்டாலும் ஐ டோன் கேர்.

என்னை நோக்கி பூவை எறிந்தால் பூ…

பவ்வியை எறிந்தால்…பவ்வி…

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ் க‌ள‌த்தில் க‌ற்ப‌னையில் கிறுக்கும் ந‌ப‌ர் த‌ன்னை தானே புக‌ழ்வ‌து வெக்க‌க் கேடு

 

யாழில் ப‌ல‌ அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்பின‌ நப‌ர் யார் என்ற‌ தேட‌லுக்கு போனால் அதில் உம‌து பெய‌ர் தான் முத‌ல் இட‌த்தில் வ‌ரும்

 

இதில‌ பூ ப‌ற்றி தான் பெரிய‌ யோக்கிய சிகாமணி வேச‌ம் வேற‌..................

 

க‌ருத்தை க‌ருத்தால் எதிர் கொள்ள‌ முடியாம‌ விட்டால் சொல்லாம‌ கொள்ளாம‌ எஸ்கேப் ஆகின‌ கோழை

த‌ன்னில் எத்த‌னை குறைக‌ள் இருக்கு என்று தெரியாம‌ சீமான் சீமான் என்று தின‌மும் தொண்டை கிழிய‌ க‌த்துகிற‌ ம‌ன‌ நோயாளி போல் ஆகி விட்டார்................................

திமுக்கா 200ரூபாய் இணைய‌ கைகூலிய‌லை விட‌ ப‌டு மோச‌மாய் இருக்கே🫤😉...................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வீரப் பையன்26 said:

 யாழ் க‌ள‌த்தில் க‌ற்ப‌னையில் கிறுக்கும் ந‌ப‌ர் த‌ன்னை தானே புக‌ழ்வ‌து வெக்க‌க் கேடு

 

யாழில் ப‌ல‌ அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்பின‌ நப‌ர் யார் என்ற‌ தேட‌லுக்கு போனால் அதில் உம‌து பெய‌ர் தான் முத‌ல் இட‌த்தில் வ‌ரும்

 

இதில‌ பூ ப‌ற்றி தான் பெரிய‌ யோக்கிய சிகாமணி வேச‌ம் வேற‌..................

 

க‌ருத்தை க‌ருத்தால் எதிர் கொள்ள‌ முடியாம‌ விட்டால் சொல்லாம‌ கொள்ளாம‌ எஸ்கேப் ஆகின‌ கோழை

த‌ன்னில் எத்த‌னை குறைக‌ள் இருக்கு என்று தெரியாம‌ சீமான் சீமான் என்று தின‌மும் தொண்டை கிழிய‌ க‌த்துகிற‌ ம‌ன‌ நோயாளி போல் ஆகி விட்டார்................................

திமுக்கா 200ரூபாய் இணைய‌ கைகூலிய‌லை விட‌ ப‌டு மோச‌மாய் இருக்கே🫤😉...................

சீமான்-காதலரே,

யாழ்களத்தில இதவிட பெரிய வசவுகளை எல்லாம் இடது கையால் டீல் பண்ணி இருக்கேன்🤣.

இதுக்கு சு…….

சுண்டு விரல் கூட தேவையில்லை. சின்ன விரல் நிகம் போதும் 🤣.

இன்னும் முயலவும். முன்னேற இடமுண்டு.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில‌மும் த‌மிழும் க‌ல‌ந்து கிறுக்குவ‌து 

அதில் சிறு அவ‌தூறு 

சிறு க‌ட‌ல‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு

போலி திராவிட‌ம்

சீமான் மீது வாந்தி எடுத்த‌ல் அதில் அவ‌தூறு நிறைய‌ இருக்கும் 😁😛 சீமான் த‌லைம‌றைவு ஊட்டிக்கு சென்ற‌து காவ‌ல்துறை இதோ சீமான் கைது ஆகிறார் அட‌ அட‌  என்ன‌ அவ‌தூறு................

 

இதை த‌வ‌ற‌ யாழில் புடிங்கின‌து எல்லாம் தேவை இல்லா ஆணி................எத்த‌னையோ ந‌ல்ல‌ அன்பான‌ ப‌ன்பான‌ க‌ருத்தாள‌ர்க‌ள் க‌ருத்து எழுதின‌ இதே யாழ் க‌ள‌த்தில்

 

இப்போது ம‌ன‌ நோயாளிக‌ள் போல் ஒருத‌ர் க‌ருத்து என்ற‌ பெய‌ரின் த‌ன் அடி ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை க‌க்குகிறார் 

 

வெற்றியோ தோல்வியோ அதை ப‌ற்றி சிறுதுளி கூட‌ க‌வ‌லைப் ப‌டாம‌ல் அர‌சிய‌ல் செய்யும் சீமானை பார்த்து ஒருத‌னுக்கு அதிக‌ம் வேர்க்கு என்றால் ச‌ம்திங்ரொங் ............................ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ரை நாடுவ‌து ந‌ல்ல‌ம்

 

யாழில் நானும் ப‌ல‌ கொசுக்க‌ளை பார்த்து இருக்கிறேன் ஒரு போதும் பின் வாங்கிய‌து கிடையாது

 

நிர்வாக‌ம் திரிக்கு பூட்டு போடாட்டி என‌து வேட்டை ப‌ல‌ திரிக‌ளில் தொட‌ர்ந்து இருக்கும்💪..............................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ஆங்கில‌மும் த‌மிழும் க‌ல‌ந்து கிறுக்குவ‌து 

அதில் சிறு அவ‌தூறு 

சிறு க‌ட‌ல‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு

போலி திராவிட‌ம்

சீமான் மீது வாந்தி எடுத்த‌ல் அதில் அவ‌தூறு நிறைய‌ இருக்கும் 😁😛 சீமான் த‌லைம‌றைவு ஊட்டிக்கு சென்ற‌து காவ‌ல்துறை இதோ சீமான் கைது ஆகிறார் அட‌ அட‌  என்ன‌ அவ‌தூறு................

 

இதை த‌வ‌ற‌ யாழில் புடிங்கின‌து எல்லாம் தேவை இல்லா ஆணி................எத்த‌னையோ ந‌ல்ல‌ அன்பான‌ ப‌ன்பான‌ க‌ருத்தாள‌ர்க‌ள் க‌ருத்து எழுதின‌ இதே யாழ் க‌ள‌த்தில்

 

இப்போது ம‌ன‌ நோயாளிக‌ள் போல் ஒருத‌ர் க‌ருத்து என்ற‌ பெய‌ரின் த‌ன் அடி ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை க‌க்குகிறார் 

 

வெற்றியோ தோல்வியோ அதை ப‌ற்றி சிறுதுளி கூட‌ க‌வ‌லைப் ப‌டாம‌ல் அர‌சிய‌ல் செய்யும் சீமானை பார்த்து ஒருத‌னுக்கு அதிக‌ம் வேர்க்கு என்றால் ச‌ம்திங்ரொங் ............................ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ரை நாடுவ‌து ந‌ல்ல‌ம்

 

யாழில் நானும் ப‌ல‌ கொசுக்க‌ளை பார்த்து இருக்கிறேன் ஒரு போதும் பின் வாங்கிய‌து கிடையாது

 

நிர்வாக‌ம் திரிக்கு பூட்டு போடாட்டி என‌து வேட்டை ப‌ல‌ திரிக‌ளில் தொட‌ர்ந்து இருக்கும்💪..............................

15/100.

மாணாக்கரின் பெறுபேறு மிகவும் பின் தங்கி உள்ளது.

கடும் முயற்சி தேவை.

சாதாரண சித்திக்கு 40/100 எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தி உள்ள‌வ‌ர்க‌ளுக்கு நான் எழுதின‌து விள‌ங்கும்

 

என‌க்கு பாட‌ம் எடுக்க‌ வேண்டாம் முடிந்தால் உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று தெரியாத‌வ‌ர்க‌ளிட‌ம் உங்க‌ட‌ அவ‌தூறுக‌ள் குரங்கு சேட்டைக‌ளை அவ‌ர்களோடு  வைத்து கொள்ளுங்கோ என்னிட‌த்தில் வேண்டாம் .....................

உங்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்வ‌தும் பார்க்க‌ ஊமை ப‌ட‌ம் பார்க்க‌லாம் புரியுதா ( உங்க‌ட‌ த‌ர‌ம் ) இவ‌ள‌வ‌த்துக்குள் தான் இருக்குது 😆😁😄

திராவிட‌ சில்ல‌றைக்கு இனி ப‌தில் அளிக்க‌ மாட்டேன்🫠............................    

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

புத்தி உள்ள‌வ‌ர்க‌ளுக்கு நான் எழுதின‌து விள‌ங்கும்

 

என‌க்கு பாட‌ம் எடுக்க‌ வேண்டாம் முடிந்தால் உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று தெரியாத‌வ‌ர்க‌ளிட‌ம் உங்க‌ட‌ அவ‌தூறுக‌ள் குரங்கு சேட்டைக‌ளை அவ‌ர்களோடு  வைத்து கொள்ளுங்கோ என்னிட‌த்தில் வேண்டாம் .....................

உங்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்வ‌தும் பார்க்க‌ ஊமை ப‌ட‌ம் பார்க்க‌லாம் புரியுதா ( உங்க‌ட‌ த‌ர‌ம் ) இவ‌ள‌வ‌த்துக்குள் தான் இருக்குது 😆😁😄

திராவிட‌ சில்ல‌றைக்கு இனி ப‌தில் அளிக்க‌ மாட்டேன்🫠............................    

தானாக வந்து சொறிவது…

அதே மொழியில் பதில் கொடுத்தால்…

இனி பதில் தரமாட்டேன் என ஓடுவது….🤣

கடந்த மூன்று நாளில் இப்படி ஓடிய மூன்றாவது வது திரி இது🤣.

விஜை சம்பந்தபட்ட திரி என்பதால் ஒரு விஜை பாடலோடு திரியை நிறைவு செய்யலாம் (சீண்டல் தொடர்ந்தால் திரி நீளும்) என நினைக்கிறேன்.

Badass ம்மா….உரசாம ஓடிடு….

லியோ…..ஒ…ஒ…

 

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

புரிகிறது…..

முன்பே எழுதியதுதான் அண்ணா. 

கருணாநிதியாலோ வேறு எவராலோ நடந்ததை நிறுத்த முடிந்திராது.

ஆனால் பதவியாவது ஹைகோர்ட்டாவது என தூக்கி எறிந்து விட்டு கருணாநிதி வந்திருக்க வேண்டும், அப்படி வரும் படி அவரை ஏனையோர் தூண்டி இருக்க வேண்டும்.

குறிப்பாக வீரமணி.

இங்கே பலர் இலவசமாக வக்காலத்து வாங்கி வைரமுத்து.

திருமா…

இப்படி கருணாநிதி காதுக்கு நெருக்கமாய் இருந்தோர்.

இது துரோகம்தான். மறக்க முடியாதுதான்.

ஆனால் திமுக, அதிமுக, போல அல்ல தி. க தொண்டர்கள்.

தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்றே இருந்திருக்கும் என்பதை கூற பெரிய அரசியல் விற்பன்னராக இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. சாதாரண உலக அரசியலை அவதானிக்கும் ஒரு சாதாரண அவதானிப்பளரக இருந்தாலே போதும். 

சர்வதேச நாடுகள் அனைத்தையும் புறக்கணித்து எந்த பொறுப்புணர்சியும் இல்லாமல் தொடர்சசியாக  தவறன அரசியல் தீர்மானங்களை எடுத்து இறுதி நிமிடம் வரை சென்றுவிட்டு அடுத்தவரை குற்றம் சாட்டுவதற்கு எமக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.  

தோல்வியால்  ஏற்பட்ட  கோபத்திலும் விரக்தியிலும் அவ்வாறு உடனடிக் கோபம் வந்ததில்  தவறில்லை. அது இயல்பானது  ஆனால் தொடர்சியாக எமது அரசியல் தவறுகளை மறைக்கும் நோக்கிலும், புலம் பெயர் நாடுகளில் இறுதி போருக்கு பணம் சேர்த்து அதை கொள்ளையிட்டதை மறைக்கும் நோக்கிலும்,  தமது பொறுப்பை முற்றாக தட்டிக்கழித்து தொடர்ச்யாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது  தவறானது மட்டுமல்ல நேர்மையற்ற அயோக்கியத்தனமான  செயலும்  செயலும் ஆகும்.  இதனால் சம்பந்த பட்ட ஒரு சிலர் பலனடையலாம். ஆனால்,   மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதையே தாயகத்தின் இன்றைய அரசியல் நிலை உணர்ததி நிற்கின்றது.  பிச்சை வேண்டாம் தாயை பிடி என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். 

எமக்கு தேவை வரும் போதெல்லாம் போராட்ட ஆரம்பத்தில் இருந்தே தம்மாலான எல்லா உதவிகளையும் கட்சி பேதமின்றி செய்தவர்கள் அவர்கள். சமீபத்தில் கூட  நாட்டில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்ட போது தமிழ் நாடு அரசின் சார்பில்  தம்மால் ஆன உதவிகளை செய்திருந்தார்கள்.  ஆனால்,  தமிழ் நாட்டில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி இயற்கை பேரிடர் ஏற்பட்ட ஒரு முறையாவது புலம் பெயர் தமிழரிடம் இருந்து தமிழ் நாடு மக்களுக்கு  ஒரு சிறிய உதவியை தானும் வழங்கியுள்ளார்களா இந்த சுயநலவாதிகள்? 

மலையக தமிழர்களை கூட அரவணைக்காமல் தோட்டக்காட்டான் என று ஒதுக்கிய சுயநலக் கூட்டம் பேச்சுவழக்கில் சற்றே மலையக தமிழ்  கொழும்பு தமிழ் வாடை இருந்தால் கூட மாற்றாந்தாய்  மனப்பாங்கில் பார்ககும் கூட்டம் தனக்கு பிரச்சனை என்றால் மட்டும் அடுத்தவன் எல்லோரும் தனது வேலைகளை விட்டுவிட்டு தன்னை தூக்கி சுமக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கை தவறானது.  நமது அரசியல் தவறுகளின் விளைவுகளை அனுபவித்தே தீரவேண்டும்.   அதனை நாமே திருத்தி முன்னேற வேண்டும். 

( நான் கூறிய இந்த  உண்மை உறைப்பதால் ஒருவர் சிறிது நேரத்தில் வந்து guilty கோபக் குறி இட்டு எனது கருத்தில் உள்ள உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திச் செல்வார், பொறுத்திருங்கள்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

ஒரு கருத்து களத்தில் எந்த பகுதியில் நிற்கிறோம் என்ற நிதானம் கூட இல்லை, இதில் மற்றவனுக்கு நாகரீகம் பற்றி வகுப்பெடுப்பும், தாத்தா-பேரன் பரஸ்பர முதுகு சொறிதலும் வேறு🤣.

என்றும் உங்கள் பக்கம் நியாயம் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலம் விஜயை வைத்து பகலவன் என்று ஒரு திரைப்படம் இயக்கும் முனைப்புவரை அது பின்னர் கைகூடாமல் போனாலும் சீமானும் விஜையும் நெருக்கமாக இருந்தார்கள்.

விஜய்யின் கட்சிமாநாடுக்கு ஓரிருவாரங்கள்  முன்புவரை , அவரின் கட்சிக்கொடி, மாநாடு, அவருடனான கூட்டணி திட்டம்வரை, அனைத்துக்கும் ஆதரவாய் குரல் கொடுத்தார் சீமான்

 

விஜய் என்ன பண்ணினாலும் என் தம்பி என்ன கொள்கை வைத்திருந்தாலும் என் தம்பி , என்னை எதிர்த்து வேலை செய்தாலும் என் தம்பி  என்று விஜய் புகழ் பாடினார் சீமான், என்ன பண்ணினாலும் அவரை ஆதரிப்பேன் என்றார் சீமான்

 

 

 

மாநாடு முடிந்ததும் அப்படியே எதிர்மறையாகி விஜய்யை திட்டி தீர்க்கிறார். ஒருவேளை கூட்டணிக்கு விஜய் மறுத்தாரோ தெரியவில்லை.

சீமான். எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பு அரசியல் விமர்சனம் செய்வது அரசியல் சாணக்கியமல்ல.

விஜயகாந்த் பின்னாளில் தன்னுடைய பரம எதிரியாக கருதிய ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்காவிட்டால் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துவரை பல தொகுதிகளில் வென்றிருக்க முடியாது, கட்சிக்கு பெரும் அடித்தளமும் இட்டிருக்க முடியாது.

பின்னர் வைக்கோவின் பேச்சைகேட்டு முதல்வர் ஆசையில் பிரிந்துபோய் பின்னாளில் கட்சியில் இருந்தவர்களெல்லாம் கழண்டுபோக கட்சி தேய்ந்துபோனது.

காலத்தின் தேவையறிந்து நட்பு வளர்ப்பதே கட்சிபணிகளுக்கு அழகு.

விஜய்கட்சி அமைக்கும்வரை சீமான் தமிழக அரசியலில் நான்காம் இடத்திலிருந்தார், விஜய்யின் வருகையின் பின்னர் ஐந்தாமிடத்துக்கு போவார், இதுவரை எந்த தொகுதியிலும் வென்றிராத நாம் தமிழர் கட்சி எப்போபாரு எதிர்மறை அரசியல் செய்து எதுவும் ஆகபோவதில்லை, முதலில் எமக்கென்றொரு அடையாளத்தை நிரூபிக்க    உறுதியாக சட்டசபையில் பதிக்காதவரை எந்த ஒரு அங்கீகாரமும் தேர்தல் ஆணையத்தில் கிடைக்கபோவதில்லை,

காலத்தின் தேவை கருதி விஜய்யுடன் இணக்க அரசியல் செய்வதே சிறப்பு.

எதிரிகள் மலிந்துபோனால் தமது பலத்தை நிரூபிக்க தவறிய கட்சிகள் என்று சொல்லி கட்சிக்கான  அங்கீகாரம்கூட  இல்லாமல் போகலாம்.

இது அவர்கள் நாட்டு அரசியல், இருந்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒன்றென்பதால் நாமும் மனதுக்கெட்டியதை  நமக்குள் பேசலாம் தப்பில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, valavan said:

இது அவர்கள் நாட்டு அரசியல், இருந்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒன்றென்பதால் நாமும் மனதுக்கெட்டியதை  நமக்குள் பேசலாம் தப்பில்லை.

மேலைத்தேய அரசியலில் அல்லது இந்தியா தவிர்ந்த ஏனைய நாட்டு அரசியலில் கட்சி கொள்கையில் நிதானமாக, உறுதியாக இருப்பார்கள். அதே போல் சீமான் அவர்களும் தன் கொள்கை சார்பாக  உறுதியாக நிற்கின்றார்.

தமிழ்நாட்டு திமுக/அதிமுக சுத்துமாத்து அரசியல் நாடகங்களை புலம்பெயர்  தமிழ்நாட்டவர்களே ஏற்கவில்லை...

இப்படி நிலவரம் இருக்க ஈழத்தமிழர் சீமானுக்கு மட்டும் எதிராக நிற்பதன் அர்த்தம் புரிந்தால் சந்தோசம்.

27 minutes ago, valavan said:

 

காலத்தின் தேவையறிந்து நட்பு வளர்ப்பதே கட்சிபணிகளுக்கு அழகு.

விஜய்கட்சி அமைக்கும்வரை சீமான் தமிழக அரசியலில் நான்காம் இடத்திலிருந்தார், விஜய்யின் வருகையின் பின்னர் ஐந்தாமிடத்துக்கு போவார், இதுவரை எந்த தொகுதியிலும் வென்றிராத நாம் தமிழர் கட்சி எப்போபாரு எதிர்மறை அரசியல் செய்து எதுவும் ஆகபோவதில்லை, முதலில் எமக்கென்றொரு அடையாளத்தை நிரூபிக்க    உறுதியாக சட்டசபையில் பதிக்காதவரை எந்த ஒரு அங்கீகாரமும் தேர்தல் ஆணையத்தில் கிடைக்கபோவதில்லை,

 

 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

என்றும் உங்கள் பக்கம் நியாயம் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

என் பக்கம் நியாயம் இல்லாத போது, அதை சுட்டும் வகையில் போது,  அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளேன், கேட்ப்பேன்.

மேலே நீங்கள் சொன்ன கருத்தை, கடந்துதான் போனேன், நீங்கள் நேரடியாக என்னை போல இந்த திரியில் கருத்து எழுதியோரை சுட்டி எழுதியபோதும், அதை ஒரு மனித வழு என கடந்தே போனேன். அதன் பின் பல கருத்துக்களை எழுதினேன், அதை பற்றி ஒரு சொல்கூட எழுதவில்லை.

குழுவாத மனோநிலை தலைக்கேறிய இன்னொருவர், ஏதோ உங்கள் கருத்துக்கு வலுச் சேர்பதாக நினைத்து, அதே பிழையான, நியாயமற்ற கருத்தை மீள எழுதிய பின்பே, இதை டீல் பண்ணுவதை தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்தேன்.

நாம் எல்லோரும் பிழை விடுவது வழமை. 

இது நாளைக்கு எனக்கும் நடக்கலாம் என்பதை உணர்ந்தே உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

எமக்கு தேவை வரும் போதெல்லாம் போராட்ட ஆரம்பத்தில் இருந்தே தம்மாலான எல்லா உதவிகளையும் கட்சி பேதமின்றி செய்தவர்கள் அவர்கள். சமீபத்தில் கூட  நாட்டில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்ட போது தமிழ் நாடு அரசின் சார்பில்  தம்மால் ஆன உதவிகளை செய்திருந்தார்கள்.  ஆனால்,  தமிழ் நாட்டில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி இயற்கை பேரிடர் ஏற்பட்ட ஒரு முறையாவது புலம் பெயர் தமிழரிடம் இருந்து தமிழ் நாடு மக்களுக்கு  ஒரு சிறிய உதவியை தானும் வழங்கியுள்ளார்களா இந்த சுயநலவாதிகள்? 

மலையக தமிழர்களை கூட அரவணைக்காமல் தோட்டக்காட்டான் என று ஒதுக்கிய சுயநலக் கூட்டம் பேச்சுவழக்கில் சற்றே மலையக தமிழ்  கொழும்பு தமிழ் வாடை இருந்தால் கூட மாற்றாந்தாய்  மனப்பாங்கில் பார்ககும் கூட்டம் தனக்கு பிரச்சனை என்றால் மட்டும் அடுத்தவன் எல்லோரும் தனது வேலைகளை விட்டுவிட்டு தன்னை தூக்கி சுமக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கை தவறானது.  நமது அரசியல் தவறுகளின் விளைவுகளை அனுபவித்தே தீரவேண்டும்.   அதனை நாமே திருத்தி முன்னேற வேண்டும். 

👆இதில் ஒவ்வொரு சொல்லுடனும் உடன்படுகிறேன்.

1 hour ago, island said:

தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்றே இருந்திருக்கும் என்பதை கூற பெரிய அரசியல் விற்பன்னராக இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. சாதாரண உலக அரசியலை அவதானிக்கும் ஒரு சாதாரண அவதானிப்பளரக இருந்தாலே போதும். 

👆 இதனோடும் உடன்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, valavan said:

ஒருகாலம் விஜயை வைத்து பகலவன் என்று ஒரு திரைப்படம் இயக்கும் முனைப்புவரை அது பின்னர் கைகூடாமல் போனாலும் சீமானும் விஜையும் நெருக்கமாக இருந்தார்கள்.

விஜய்யின் கட்சிமாநாடுக்கு ஓரிருவாரங்கள்  முன்புவரை , அவரின் கட்சிக்கொடி, மாநாடு, அவருடனான கூட்டணி திட்டம்வரை, அனைத்துக்கும் ஆதரவாய் குரல் கொடுத்தார் சீமான்

 

விஜய் என்ன பண்ணினாலும் என் தம்பி என்ன கொள்கை வைத்திருந்தாலும் என் தம்பி , என்னை எதிர்த்து வேலை செய்தாலும் என் தம்பி  என்று விஜய் புகழ் பாடினார் சீமான், என்ன பண்ணினாலும் அவரை ஆதரிப்பேன் என்றார் சீமான்

 

 

 

மாநாடு முடிந்ததும் அப்படியே எதிர்மறையாகி விஜய்யை திட்டி தீர்க்கிறார். ஒருவேளை கூட்டணிக்கு விஜய் மறுத்தாரோ தெரியவில்லை.

சீமான். எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பு அரசியல் விமர்சனம் செய்வது அரசியல் சாணக்கியமல்ல.

விஜயகாந்த் பின்னாளில் தன்னுடைய பரம எதிரியாக கருதிய ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்காவிட்டால் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துவரை பல தொகுதிகளில் வென்றிருக்க முடியாது, கட்சிக்கு பெரும் அடித்தளமும் இட்டிருக்க முடியாது.

பின்னர் வைக்கோவின் பேச்சைகேட்டு முதல்வர் ஆசையில் பிரிந்துபோய் பின்னாளில் கட்சியில் இருந்தவர்களெல்லாம் கழண்டுபோக கட்சி தேய்ந்துபோனது.

காலத்தின் தேவையறிந்து நட்பு வளர்ப்பதே கட்சிபணிகளுக்கு அழகு.

விஜய்கட்சி அமைக்கும்வரை சீமான் தமிழக அரசியலில் நான்காம் இடத்திலிருந்தார், விஜய்யின் வருகையின் பின்னர் ஐந்தாமிடத்துக்கு போவார், இதுவரை எந்த தொகுதியிலும் வென்றிராத நாம் தமிழர் கட்சி எப்போபாரு எதிர்மறை அரசியல் செய்து எதுவும் ஆகபோவதில்லை, முதலில் எமக்கென்றொரு அடையாளத்தை நிரூபிக்க    உறுதியாக சட்டசபையில் பதிக்காதவரை எந்த ஒரு அங்கீகாரமும் தேர்தல் ஆணையத்தில் கிடைக்கபோவதில்லை,

காலத்தின் தேவை கருதி விஜய்யுடன் இணக்க அரசியல் செய்வதே சிறப்பு.

எதிரிகள் மலிந்துபோனால் தமது பலத்தை நிரூபிக்க தவறிய கட்சிகள் என்று சொல்லி கட்சிக்கான  அங்கீகாரம்கூட  இல்லாமல் போகலாம்.

இது அவர்கள் நாட்டு அரசியல், இருந்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒன்றென்பதால் நாமும் மனதுக்கெட்டியதை  நமக்குள் பேசலாம் தப்பில்லை.

 

நல்ல கருத்துக்கள்.. உறவாடிக் கெடுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.. சீமானும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றால் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து பின் தன் திட்டங்களை நிறைவேற்றலாம்.. சீமான் தமிழ்தேசியாதில் விடும் தவறுகளை தான் விடக்கூடாது எண்டு விஜய் வந்திருப்பதுபோல் தெரிகிறது.. மகிழ்ச்சி.. உறவாடித்தான் வெல்ல வைக்க வேண்டும் தமிழ்தேசியத்தை..

தமிழ்தேசியத்தில் நான் விரும்பும் ஒரு தமிழ்த்தேசியவாதி அண்ணன் காட்டூனிஸ்ட் பாலா.. தமிழ்தேசியவாதிகள் பிழை விட்டாலும் அதை விமர்சித்து திருத்தும்படி சொல்பவர்.. நீங்கள் எழுதிய கருத்தின் சாராம்சத்துடன் ஒத்துப்போகும் அவரின் இன்றைய பேட்டி.. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சர்வதேச நாடுகள் அனைத்தையும் புறக்கணித்து எந்த பொறுப்புணர்சியும் இல்லாமல் தொடர்சசியாக  தவறன அரசியல் தீர்மானங்களை எடுத்து இறுதி நிமிடம் வரை சென்றுவிட்டு அடுத்தவரை குற்றம் சாட்டுவதற்கு எமக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.  

இருக்கிறது? எப்படி தெரியுமா? மனிதர்களாக, தமிழர்களாக.

இதில் புலிகள் செய்தது சரியா, எத்தனை வீதம் சரி என்பது கருது பொருள் அல்ல.

யுத்தத்தை எப்படியாவது வெல்லவேண்டும் என்ற முனைப்பில், தமிழர்கள் மீது போர்குற்றம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தனியே புலிகள் மீது மட்டும் அல்ல.

அந்த யுத்தத்தை நிறுத்த ஒரு மனிதனாக, சக தமிழனாக கருணாநிதி தன்னால் முடிந்த அத்தனையையும் செய்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு சக தமிழனாக, மனிதனாக நாம் எதிர்பார்த்தது தவறில்லை.

அப்படி செய்யாத அவரை தூற்றுவதும் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சர்வதேச நாடுகள் அனைத்தையும் புறக்கணித்து எந்த பொறுப்புணர்சியும் இல்லாமல் தொடர்சசியாக  தவறன அரசியல் தீர்மானங்களை எடுத்து இறுதி நிமிடம் வரை சென்றுவிட்டு அடுத்தவரை குற்றம் சாட்டுவதற்கு எமக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.  

நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்....

பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று  சர்வதேச நாடுகள் முன்னிலையில்  புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து  புலிகளின் ஆயுத களைவையே முதலில்  முன்னிறுத்தியும்,  மறுபக்கம் மறைவில் புலிகளின் சர்வதேச வலைபின்னலையும், ஆயுத கடத்தலையும் நிதி சேகரிப்பையும்   முடக்கும் கைங்கரியங்களிலும், புலிகளை இரண்டாய் பிரிக்கும்  ஒரு பொறியை வைத்தது இலங்கை அரசாங்கம்,

அதாவது உயிருக்கும்போதே உள்ளுக்குள் கைவிட்டு குடல்தொகுதியையே வெளியே பிடுங்கி எடுக்கும் நடவடிக்கை அது.

அதிலிருந்து ஒவ்வொருமுறையும் விலகி சென்றார்கள் புலிகள் அதுவே உங்கள் கண்ணில் சர்வதேசத்தை புறக்கணித்ததாய் தோன்றியிருக்கலாம். ஆனால் புலிகளை நேசித்த மக்களுக்கு அன்றும் இன்றும் அது தவறானதாக இல்லை.

அது தவறென்றால் முள்ளிவாய்க்காலில் இறுதிநாள்வரை நின்ற மக்களும் போராளிகளு,உறவுகளை இழந்த எம் பல லட்சம் மக்களும் ம் இன்றுவரை எம் தலைமை எமக்கு செய்தது தவறென்று சொன்னதில்லை, சொல்லும் ஒருசிலர் யாரென்பது யாவரும் அறிந்தவர்களே.

முள்ளிவாய்க்கால் முடிவென்பது தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும்,சிங்களவர்களுக்கு ஒத்தூதிய டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி உட்பட அனைவருமே   எதிர்பார்த்திராதது.

கடைசிவரை சிங்களவன் எம்மை வெல்லமுடியாது என்று நாம் நம்பினோம், கடைசிவரை சிங்களவனுடன் ஒட்டியிருந்து வண்டி ஓட்டிவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள்,

இறுதியில் இருபகுதி நம்பிக்கையும் தோற்றுபோனது, அவர்களின் நம்பிக்கையில் ஈனம் இருந்தது, எம் நம்பிக்கையில் மானம் இருந்தது அவ்வளவுதான் வித்தியாசம்.

நாம் மொக்குதனமாய் தோத்தவர்களல்ல, இனவிடுதலைக்காய் முயன்று பார்த்து தோத்தவர்கள், முயற்சி செய்து தோற்பது பாவமும் அல்ல கேவலமும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

விஜயகாந்த் பின்னாளில் தன்னுடைய பரம எதிரியாக கருதிய ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்காவிட்டால் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துவரை பல தொகுதிகளில் வென்றிருக்க முடியாது, கட்சிக்கு பெரும் அடித்தளமும் இட்டிருக்க முடியாது.

பின்னர் வைக்கோவின் பேச்சைகேட்டு முதல்வர் ஆசையில் பிரிந்துபோய் பின்னாளில் கட்சியில் இருந்தவர்களெல்லாம் கழண்டுபோக கட்சி தேய்ந்துபோனது.

இது தரவு பிழை என நினைக்கிறேன்.

ஜெ யுடன் விஜயகாந்த் கூட்டு வைத்து, தேர்தல் முடிந்து அவர் எதிர்கட்சி தலைவரானதுமே அவரின் ஜெ யுடனான கூட்டணி முறிந்து விட்டது, எதிர் கட்சி, ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்க ஜேர்மனி இல்லையே தமிழ் நாடு. அப்புறம் விஜயகாந்த நாக்கை துருத்தி பேசி, உறவு முற்றிலுமாக பகை என்றான பின்பே வைகோ மக்கள் நல கூட்டணி ஐடியாவோடு வந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இருக்கிறது? எப்படி தெரியுமா? மனிதர்களாக, தமிழர்களாக.

இதில் புலிகள் செய்தது சரியா, எத்தனை வீதம் சரி என்பது கருது பொருள் அல்ல.

யுத்தத்தை எப்படியாவது வெல்லவேண்டும் என்ற முனைப்பில், தமிழர்கள் மீது போர்குற்றம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தனியே புலிகள் மீது மட்டும் அல்ல.

அந்த யுத்தத்தை நிறுத்த ஒரு மனிதனாக, சக தமிழனாக கருணாநிதி தன்னால் முடிந்த அத்தனையையும் செய்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு சக தமிழனாக, மனிதனாக நாம் எதிர்பார்த்தது தவறில்லை.

அப்படி செய்யாத அவரை தூற்றுவதும் தவறில்லை.

அவ்வாறு எதிர்பார்ததிலும் தவறு இல்லை. அவரை தூற்றியதிலும் தவறில்லை. அது கோபத்தில் இயல்பானது.  ஆனால்  அழிவுக்கு எமது பக்கம் உள்ள பாரிய பொறுப்பை,  அரசியல் தீர்மானங்களை மறைத்து,   அவர்கள் மட்டுமே முழுமையான காரணம் என்று முழு பழியையும் காலா காலமாக  சுமத்துவதும் அவர்களின் நாட்டின் அரசியலில் தலையிட்டு அங்கு  இன வெறிக்கு தூபம் போடும் செயலில் ஈடுபடுவது  நேர்மையானது அல்ல. அது எமது மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்கவும் இல்லை போவதில்லை. 

 யுத்தம் என்றாலும்,  சமாதானம் என்றாலும் எல்லா தீர்மானங்களையும் நாமே எடுத்தோம். அதன் விளைவுகளுக்கும் நாமே முதன்மைப் பொறுப்பை ஏற்கவேண்டும்.  தனது தீர்மானங்களின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாதவர்கள் மற்றயவர்களிடம் இருந்து அதை எதிர்பார்கக முடியாது.  அது தனிப்பட்ட வாழ்வுக்கும் பொருந்தும்,  கூட்டிணைந்து குழுவாக எடுக்கும் பொதுத் தீர்மானங்களுக்கும் பொருந்தும்.  

  • கருத்துக்கள உறவுகள்

@valavan உங்கள் கருத்தை ஒட்டி என் கருத்து.

சீமான் விஜையை எதிர்த்த காரணங்கள் இரண்டு.

1. சீமான் கருவறுப்பேன் என்ற திராவிட கொள்கையை, விஜை தன் கண்ணில் ஒன்று என்றது. பெரியாருக்கு மாலைபோட்டபோது கூட அமைதியாக இருந்தார். ஆனால் விஜை அப்படி ஒரு கொள்கை விளக்கம் கொடுத்த பின், சீமான் எதிர்த்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அல்லது விஜை தள்ளினார்.

இனி, ஒன்றில் விஜை திராவிடம் என் ஒரு கண்ணில்லை என சொல்ல வேண்டும். அல்லது சீமான்  திராவிட கொள்கையும் தனக்கு ஏற்பு என சொல்லி, திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை கைவிட வேண்டும். 

இது இரெண்டுக்கும் வாய்பில்லை என நான் நினைக்கிறேன்.

2. யார் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி.

இத்தனை காலம் சீமான் உழைத்ததே இந்த பதவிக்குதான். 

அதேபோல் நம்பர் 1 ஸ்டார் சம்பளத்தை விட்டு விஜை வந்ததும் இந்த பத்விக்குத்தான்.

அடுத்து இன்னொர் விடயம், விஜய், சீமான் இருவரும், தலைவரோ, அம்பேத்கரோ இல்லை. அந்தளவு கொள்கைவாதிகள் அல்ல. ஆகவே இந்த உறவாடி கெடுத்தல் எல்லாம்¥ வெறும் கற்பனை கதைகளே.

விஜைக்கு தமிழ்நாட்டில் வாக்கு எங்கே இருக்கிறது என புரிகிறது. அதாவது திராவிட கொள்கை வாக்கு வங்கியில் ஒரு பங்கு, தமிழ் தேசிய வாக்கு வங்கியில் ஒரு பங்கு எடுக்க நினைக்கிறார் விஜை.  அதை தனதாக எடுத்து கொள்கிறார். 

இது முழுக்க முழுக்க வாக்கு வங்கி கணக்கு.

முன்னர் கருணா பிரிந்த சமயம் - யாழில் சிலர் முதலில் அப்படி எதுவும் இல்லை என எழுதினார்கள், பின்னர் ரணிலை ஏமாற்ற தலைவரும் கருணாவும் பிரிவு போல் நடிப்பதாகவும் எழுதினர் சிலர்.

அதே போலத்தான் வந்த வெள்ளம் நிண்ட வெள்ளத்தை கொண்டு போய் விடுமோ என்ற பதற்றத்தில் தம்மைதாமே தேற்றி கொள்ள சிலர் சொல்லிகொள்ளும் கதைதான் இந்த உறவாடி கெடுக்கும் கதை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்....

பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று  சர்வதேச நாடுகள் முன்னிலையில்  புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து  புலிகளின் ஆயுத களைவையே முதலில்  முன்னிறுத்தியும்,  மறுபக்கம் மறைவில் புலிகளின் சர்வதேச வலைபின்னலையும், ஆயுத கடத்தலையும் நிதி சேகரிப்பையும்   முடக்கும் கைங்கரியங்களிலும், புலிகளை இரண்டாய் பிரிக்கும்  ஒரு பொறியை வைத்தது இலங்கை அரசாங்கம்,

அதாவது உயிருக்கும்போதே உள்ளுக்குள் கைவிட்டு குடல்தொகுதியையே வெளியே பிடுங்கி எடுக்கும் நடவடிக்கை அது.

அதிலிருந்து ஒவ்வொருமுறையும் விலகி சென்றார்கள் புலிகள் அதுவே உங்கள் கண்ணில் சர்வதேசத்தை புறக்கணித்ததாய் தோன்றியிருக்கலாம். ஆனால் புலிகளை நேசித்த மக்களுக்கு அன்றும் இன்றும் அது தவறானதாக இல்லை.

அது தவறென்றால் முள்ளிவாய்க்காலில் இறுதிநாள்வரை நின்ற மக்களும் போராளிகளு,உறவுகளை இழந்த எம் பல லட்சம் மக்களும் ம் இன்றுவரை எம் தலைமை எமக்கு செய்தது தவறென்று சொன்னதில்லை, சொல்லும் ஒருசிலர் யாரென்பது யாவரும் அறிந்தவர்களே.

முள்ளிவாய்க்கால் முடிவென்பது தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும்,சிங்களவர்களுக்கு ஒத்தூதிய டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி உட்பட அனைவருமே   எதிர்பார்த்திராதது.

கடைசிவரை சிங்களவன் எம்மை வெல்லமுடியாது என்று நாம் நம்பினோம், கடைசிவரை சிங்களவனுடன் ஒட்டியிருந்து வண்டி ஓட்டிவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள்,

இறுதியில் இருபகுதி நம்பிக்கையும் தோற்றுபோனது, அவர்களின் நம்பிக்கையில் ஈனம் இருந்தது, எம் நம்பிக்கையில் மானம் இருந்தது அவ்வளவுதான் வித்தியாசம்.

நாம் மொக்குதனமாய் தோத்தவர்களல்ல, இனவிடுதலைக்காய் முயன்று பார்த்து தோத்தவர்கள், முயற்சி செய்து தோற்பது பாவமும் அல்ல கேவலமும் அல்ல.

அப்படியானால் அப்படி முயன்று பார்த்து றிஸ்க் எடுத்தோம் அதனால் மக்கள் பேரழிவைச் சந்தித்தோம் என்பதை நேர்மையாக வெளிப்படையாக  கூற வேண்டும். அதை வெளிப்படையாக கூறிய உங்களுக்கு நன்றி.  அடுத்தவர் மீது முழு பழியையும் போட்டு தப்பிக்க நினைக்க கூடாது என்பதே எனது கருத்தின் சாராம்சம்.

  உலக அரசியல் பிராந்திய அரசியல் என்பவை  எமது தனி நாட்டுக்கு  கோரிக்கைக்கு முழுமையாக எதிராக இருக்கிறது என்பது  ஏதோ ஒன்றும் இரகசியம் அல்ல. அது வெளிப்படையானது என்பது, உலக அரசியலை  நீண்ட  காலமாக  அவதானிக்கும் சாமான்யர்கள் கூட  அறிந்த விடயம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

ஜெ யுடன் விஜயகாந்த் கூட்டு வைத்து, தேர்தல் முடிந்து அவர் எதிர்கட்சி தலைவரானதுமே அவரின் ஜெ யுடனான கூட்டணி முறிந்து விட்டது, எதிர் கட்சி, ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்க ஜேர்மனி இல்லையே தமிழ் நாடு. அப்புறம் விஜயகாந்த நாக்கை துருத்தி பேசி, உறவு முற்றிலுமாக பகை என்றான பின்பே வைகோ மக்கள் நல கூட்டணி ஐடியாவோடு வந்தார்.

நீங்கள் சொல்லவருவது உண்மையாகவே எனக்கு புரியவில்லை கோஷான்,2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயுடன் கூட்டு சேர்ந்தபோது ஜெ ஒதுக்கிய 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வென்று திமுகவை ஓரம்கட்டி எதிர்கட்சி தலைவரானார் விஜயகாந்த்.

தலைவரானதும் கூட்டணி முறியவில்லை சட்டசபையில் ஏற்பட்ட வாக்குவாதங்களின்போது ஜெ முன்னிலையில் விஜயகாந்த் நாக்கை கடிச்சுக்கொண்டு அவர் கட்சிக்காரர்களை மிரட்டியதால் பகை ஆரம்பமானது,

குடிகாரன் என்று அவ சொல்ல, இவதான் எனக்கு ஊத்தி கொடுத்தாவா என்று வியஜயகாந்த் சொல்ல பெரும் மோதல் வெடிக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த் கட்சி சந்திரகுமார், அருண்பாண்டியன் உட்பட்ட  எம் எல் ஏக்கள் ஜெயை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து பிரிந்து சென்று விஜயகாந்த் கட்சியை பலவீன படுத்தினார்கள்,

பின்னாட்களில் திமுகவில் சேர்ந்து பதவியும் பெற்றார்கள்

அது ஒருபக்கமிருக்க, நான் சீமான் விஷயத்தில் இதை குறிப்பிட்டதுக்கு காரணம், முதலில் சட்டசபையில் ஒருசில உறுப்பினர்களையாவது கொண்டிருந்தாலே கட்சியின் பேச்சுக்கள் மாநிலத்தில் சபையேறும், எப்போதும் எந்த அங்கீகாரமும் பெறாமல் மேடைக்கு மேடையும், பத்திரிகையாளர் முன்னாடியும் எதிர்ப்பு விமர்சனம் பண்ணி ஏதும் ஆகபோவதில்லை, அதனால் முதலில் அங்கீகாரத்துக்காக சீமான் கொஞ்சம் சிந்தித்து செயற்படலாம் என்பதே.

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

தி க இப்படி செய்யும் ஓக்கே ஏற்கிறேன்.

ஆனால் திமுக? சித்தாந்தம் வாழ வேண்டும் என்பதற்காக விஜையை வளரவிடுமா?

1) திமுக வரும் தேர்தலில் தோல்வி அடைந்தால் அதன் நிலை அதோகதி தான். 13 வருடங்கள் ஆட்சி போன பின்பும் மீண்டும் வர கட்சியில் இங்கு இன்னொரு கலைஞர் இல்லை. 

2) வரும் தேர்தலில் வெற்றி பெற்றால்த் தான் உதயநிதி விசுவாசிகளை அவர்கள் குடும்பங்களை தொடந்து திமுக தக்கவைக்க முடியும். உதய நிதி தான் ஒரு நல்ல தலைவர் என்று காண்பிக்க வரும் தேர்தல் வெற்றி அவசியம் 

3) சித்தாந்தம் வாழ வேண்டும் என்பதற்காக விஜையை தி மு க வளரவிடுமா என்று கேட்க்கிறீர்கள். சிலர் அதற்கு ஓம் என்று சொல்லலாம் ஆனால் இன்னொரு பக்கம் இப்படியும் நோக்கலாம்.

சிந்தாந்தம் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட அந்த சிந்தாந்தம் இருக்கும் வரைக்கும் தான் தி மு க என்ற கட்சியே இருக்க முடியும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் தி முக தனித்து போட்டி இட்டபொழுது அதற்கு 23% வாக்குகள் கிடைத்தது. ஆகவே அந்தக் கட்சிக்கு என்று தமிழ் நாட்டில் 20%+ வாக்குகள் தொடந்து இருக்கிறது. அதை தக்க வைத்தாலே ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆடசிக்கு வர முடியும். அந்த 20% வாக்குகளும் இவர்கள் நம்ப வைத்துள்ள தீவிர திராவிட அரசியல் கருத்தை ஆதரிக்கும் மக்கள் கூட்டம். இந்த வாக்குகள் தொடர்ந்து உதயநிதி பக்கம் செல்வதை உறுதிப் படுத்த இன்னும் ஒரு 5 ஆண்டு ஆட்சி தி மு க வுக்கு தேவை. 

Edited by பகிடி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.