Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை!

1796257907.jpeg

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் இன, மத ரீதியிலான சில பிரச்சினைகள் இருக்கின்றமை உண்மைதான். அவற்றுக்கு நாம் தீர்வு காண்போம்.

ஆனால், அந்தப் பிரச்சினைகளை ஊதிப்பெருக்கும் வகையில் - வன்முறைகளைத் தூண்டும் வகையில் எவராயினும் கருத்துக்களை வெளியிட்டால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம். 

வேரூன்றியிருந்த தேசிய இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறியதால்தான் வடக்கு - தெற்கு இடையேயான உறவு அறுந்தது. 

பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். அந்த நிலைமை மீண்டும் வர இடமளியோம். புதிய அரசமைப்பின் ஊடாகத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்." - என்றார்.

 

 

https://newuthayan.com/article/நாட்டில்_மீண்டும்_இரத்த_ஆறு_ஓட_இடமளியோம்!_-_அமைச்சர்_சுனில்_கடும்_எச்சரிக்கை!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒரு sample நடவடிக்கை எடுத்து காட்டுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, RishiK said:

முதலில் ஒரு sample நடவடிக்கை எடுத்து காட்டுங்கள். 

இருந்தால் தானே காட்டுவதற்கு. இப்படியே ஐந்து வருடங்கள் கழித்து விட்டால் ..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தமிழர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய பூமி தமிழர்கள பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடக்கக்கூடாது.தமிழர்கள் ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறார்கள். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று யாராவது கதைத்தால் அவர்களுக்டகு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருள் கொள்க.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, RishiK said:

முதலில் ஒரு sample நடவடிக்கை எடுத்து காட்டுங்கள். 

70 வருடப் புற்ரை ஒரே இரவில் ஆற்ற முடியாது. 

1 hour ago, Kapithan said:

70 வருடப் புற்ரை ஒரே இரவில் ஆற்ற முடியாது. 

இந்த புற்றை வளர்த்தவர்களில் ஒரு பிரிவினர் தான் இவர் சார்ந்த ஜேவிபி யினர்.

சாத்தான் தேவை ஏற்படின் வேதமும் ஓதும். இப்போ அதைத் தான் இவர்கள் செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

இந்த புற்றை வளர்த்தவர்களில் ஒரு பிரிவினர் தான் இவர் சார்ந்த ஜேவிபி யினர்.

சாத்தான் தேவை ஏற்படின் வேதமும் ஓதும். இப்போ அதைத் தான் இவர்கள் செய்கின்றனர்.

இந்தியா எங்கள் தந்தை நாடு, தமிழ்நாடு எங்கள் தொப்புள்கொடி உறவு என்று நாம் எங்களைக் கூறி எங்களை இந்தியர்களாகக் கொள்ளும்வரை  சிங்களவனுக்கு நாம் எதிரிகள்தான். 

இதே தவறைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்போமானால் இன்னும் பல முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும். 

தலையைப் பாவிக்க வேண்டிய நேரம் இது. 

Edited by Kapithan

22 minutes ago, Kapithan said:

இந்தியா எங்கள் தந்தை நாடு, தமிழ்நாடு எங்கள் தொப்புள்கொடி உறவு என்று நாம் எங்களைக் கூறி எங்களை இந்தியர்களாகக் கொள்ளும்வரை  சிங்களவனுக்கு நாம் எதிரிகள்தான். 

இதே தவறைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்போமானால் இன்னும் பல முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும். 

தலையைப் பாவிக்க வேண்டிய நேரம் இது. 

ஈழத்தமிழர்களும் புலிகளும், அவர்களுக்கு முன் அரசியல் செய்த தமிழ் கட்சிகளும் ஒரு போதும் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்தவில்லை. ஈழத்தமிழினம் தம்மை ஒரு தனித்த தேசிய இனமாக, சுயநிர்ணய உரிமை உள்ள இனமாகவே அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கு.

அதே நேரம் இந்தியாவை பகைத்துக் கொள்வதன் மூலம் அரசியல் தற்கொலையை மீண்டும் செய்யவும் விரும்பவில்லை.

சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் தான் காரணம் என்று சிங்களத்துக்கு சாமரம் வீசுகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஈழத்தமிழர்களும் புலிகளும், அவர்களுக்கு முன் அரசியல் செய்த தமிழ் கட்சிகளும் ஒரு போதும் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்தவில்லை. ஈழத்தமிழினம் தம்மை ஒரு தனித்த தேசிய இனமாக, சுயநிர்ணய உரிமை உள்ள இனமாகவே அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கு.

அதே நேரம் இந்தியாவை பகைத்துக் கொள்வதன் மூலம் அரசியல் தற்கொலையை மீண்டும் செய்யவும் விரும்பவில்லை.

சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் தான் காரணம் என்று சிங்களத்துக்கு சாமரம் வீசுகின்றீர்கள். 

இது வெளிப்பூச்சுக்கு அல்லது எம்மை நாமே திருப்திப்படுத்த சொல்லும் வசனம். நடைமுறையில் எமது அரசியல் கட்சிகள் எல்லாமே இந்தியாவின் எடுபிடிகளாக இருப்பது நாம் காணும் உண்மை. 

2009 க்குப் பின்னர் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்தியாவிற்கு  எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் அன்றும் இன்றும்  எப்போதும்  கொழுத்த ஆடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவே இருக்கின்றனர். இவர்களை இணைப்பது மதமும் சாதியும் கிறீஸ்தவ எதிர்ப்பும். 

விபுக்கள் மட்டுமே இதில் விதிவிலக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

சாத்தான் தேவை ஏற்படின் வேதமும் ஓதும்.

large.IMG_7959.jpeg.af7a695bd3612316dce2

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, RishiK said:

முதலில் ஒரு sample நடவடிக்கை எடுத்து காட்டுங்கள். 

மட்டகளப்பில் புத்தர் சிலை விகாரையாக பெருப்பிக்கப்பட்ளது.

இது சாம்பிள் போதாதா?

தையிட்டி விகாரையை கட்டி முடித்து காட்டினால் ஏற்பீர்களா?

7 hours ago, புலவர் said:

இது தமிழர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய பூமி தமிழர்கள பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடக்கக்கூடாது.தமிழர்கள் ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறார்கள். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று யாராவது கதைத்தால் அவர்களுக்டகு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருள் கொள்க.

அதே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.