Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக  கேள்வியெழுப்பிய போது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரத்தில் யாழ். நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கின்றோம். இரண்டு சம்பவங்களையும் குறித்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலதிக சாட்சிகளை எடுத்து மிகுதியான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளோம். இதற்குரிய ஆலோசனைகள் என்னால் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம்.

இனிவரும் காலங்களில் குறித்த நபர்கள் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக கட்டுக்கோப்பான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆணையை பெற்று வருகின்றோம். 

குறித்த நபர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து குறித்த குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற ஆணையில் குற்றவியல் சட்டக்கோவையின் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து வருகின்றோம் என தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=198321

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மக்கள்... வாள்வெட்டு கோஷ்டி, கிறீஸ் பூதம், வெள்ளைவான் எல்லாத்தையும் 
பார்த்த ஆட்கள். இதற்கு பயப்பிடுவார்கள் என நினைக்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்.மக்கள்... வாள்வெட்டு கோஷ்டி, கிறீஸ் பூதம், வெள்ளைவான் எல்லாத்தையும் 
பார்த்த ஆட்கள். இதற்கு பயப்பிடுவார்கள் என நினைக்கவில்லை.  

தாங்களே உருவாக்குவார்களாம் 

பயப்படாதே 

என்றும் அறிக்கை விடுவார்களாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.

இதுவரை யாழ் பொதுமக்களைக் காப்பாற்ற தயாராக இருக்கவில்லை என்று சொல்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

வாள் எடுத்துப் போர் புரிந்த காலத்தில் இரு தரப்பும் தயார்நிலையில் இருந்து சண்டையிட்டு மாண்டனர். ஆனால் ஆயுதம் ஏதுமில்லாதவரை வாளால் வெட்டுவது!!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

வாள் எடுத்துப் போர் புரிந்த காலத்தில் இரு தரப்பும் தயார்நிலையில் இருந்து சண்டையிட்டு மாண்டனர். ஆனால் ஆயுதம் ஏதுமில்லாதவரை வாளால் வெட்டுவது!!

யாழப்பாணத்தாணுக்கு "கிலி கொள்ள வேண்டாம்" என சொல்லியின்ம....சிறிலங்கனுக்கு கிளீன் சிறிலங்கா என சொல்லுயினம்..
அரசியல்வாதிகள் மண்/கல் கடத்துகின்றனர் என சீன் போடுகின்றனர் ...அறிக்கை விடுகின்றனர்..
பொலிசார் பயப்பட வேண்டாம் என அறிக்கை விடுகின்றனர் ...
1974 ஆம் ஆண்டு தமிழாராட்சி மாநாடு தொடக்கம் இன்றுவரை பயப்படாமல் வாழ்கின்ற்னர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

யாழப்பாணத்தாணுக்கு "கிலி கொள்ள வேண்டாம்" என சொல்லியின்ம....சிறிலங்கனுக்கு கிளீன் சிறிலங்கா என சொல்லுயினம்..
அரசியல்வாதிகள் மண்/கல் கடத்துகின்றனர் என சீன் போடுகின்றனர் ...அறிக்கை விடுகின்றனர்..
பொலிசார் பயப்பட வேண்டாம் என அறிக்கை விடுகின்றனர் ...
1974 ஆம் ஆண்டு தமிழாராட்சி மாநாடு தொடக்கம் இன்றுவரை பயப்படாமல் வாழ்கின்ற்னர்

இன்றைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இலங்கை கறுப்புச் சந்தையில் பகிரங்கமாகவே மாற்றுகிறார்கள்.

வெளிநாட்டு பணத்துக்காக தவம் கிடக்கும் அரசு இன்னும் ஏன் இந்தப் பெரிய ஓட்டையை விட்டு வைத்திருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் nothing இன்னும் பெருசாய் செய்யப்போறம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இலங்கை கறுப்புச் சந்தையில் பகிரங்கமாகவே மாற்றுகிறார்கள்.

வெளிநாட்டு பணத்துக்காக தவம் கிடக்கும் அரசு இன்னும் ஏன் இந்தப் பெரிய ஓட்டையை விட்டு வைத்திருக்கிறது?

இளங்குமரன் எம்.பி.க்கு சொல்லுங்கோ அதிரடி நடவடிக்கை எடுப்பார் ...
சிவப்பு தொப்பியும் ,சிவப்பு கோவணமும் ,சிவப்பு நட்சத்திரம் போட்டு கொண்டு கட்சி நடத்துற விடயம் இல்லை ...அதை இலகுவாக செய்துவிடலாம் ..
ஒரு நாட்டை நடத்துவது கடினமான விடயம்...

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

தாங்களே உருவாக்குவார்களாம் 

பயப்படாதே 

என்றும் அறிக்கை விடுவார்களாம் 

அது வடக்கு  வாள்வெட்டு கோஷ்ட்டிகளுக்கு மட்டும்தான் 
தற்போது கிழக்கிலங்கையில் களவு ,கொள்ளை சகட்டுமேனிக்கு அதிகரித்துள்ளது.
மலையக இளைஞர்கள் மூவர் போனகிழமை பட்டாவுடன் கொள்ளையடிக்க இறங்கி கையும் மெய்யுமாக மாட்டியுள்ளனர். ஆளரவமற்ற வீடுகளுக்குள் லொடுக்கு பாண்டி போல நுழைந்து ஓட்டுமொத்தமாக துடைத்து அள்ளிக்கொண்டு பட்டாவில் ஓடுவது இவர்களது modus operandi .
ஊர்மக்கள் விழிப்புடன் இருந்ததால் மாட்டியவுடன்  நையப்புடைக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.   

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இலங்கை கறுப்புச் சந்தையில் பகிரங்கமாகவே மாற்றுகிறார்கள்.

வெளிநாட்டு பணத்துக்காக தவம் கிடக்கும் அரசு இன்னும் ஏன் இந்தப் பெரிய ஓட்டையை விட்டு வைத்திருக்கிறது?

இது சர்வதேச அளவில் நடக்கும் ஒரு பிரச்சனை, குறைக்கலாம் ஆனால் முற்றாக ஒழிக்க முடியாது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.