Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

2010 இல் இருந்து சீமான் தம்பிகளின் யூ ரியூப், சமூக வலைப் பதிவுகளில் தமிழ் மொழிப் பாவனை எப்படி இருக்கிறதென அவதானித்தீர்களா? சிறு குழந்தைகளைக் கூட மரியாதையோடு அழைக்கும் பாரம்பரியத்தில் வந்த ஈழத்தமிழர்களிடையே இருந்து வந்து சீமான் தம்பிகளாக மாறி நிற்கும் நபர்களிடம் இன்று என்ன மாதிரியான உரையாடல் பண்பு இருக்கிறது? "செருப்பால் அடித்தார்", "ஓட விட்டு அடித்தார்", "இருக்க வைத்து அடித்தார்" போன்ற சாக்கடை மட்டத்திற்கு தமிழைக் கொண்டு சென்ற போது உங்கள் தமிழுக்கு சீமான் "சேவையா" ஐயா செய்தார்😎

உண்மை!

இது அரைகுறைகளுக்கான காலம். 

சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர் 

1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களிடமோ இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு வைரஸ் தாக்குவது போல் இவர்களுக்கு சீமானின் தாக்கம் வந்து விடுகின்றது. 

2) மத வெறியர்கள் 

   இவர்களுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் என்றாலே ஆரம்பில் இருந்தே கசப்புத் தான். சரியான சமயம் வரும்வரை காத்து இருந்தார்கள், ஈழ யுத்தம் முடிய போரின் தோல்விக்கு திராவிட இயக்கம் மேல் பழியைப் போட்டு விட்டார்கள். போரின் பொழுது இவர்கள் பிரபாகரனுக்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். இவர்களுக்கு இப்பொழுதும் சீமான் மேல் எந்தக் காதலும் இல்லை, மாறாக சீமானைக் கொண்டு தமிழ் இனத்தில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதியையும் இந்துத்துவாவுக்குள் அடக்கப் பிரயசைப்படுகிறார்கள் 

 

 

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் பற்றி பத்திரிகையாளர் லட்மணன் அவர்களுடனான உரையாடல்.  கட்சி பேதமின்றி தமிழ் நாட்டில் எல்லா கட்சிகளையும் விமர்சிப்பதை வழமையாக கொண்டவர் பத்திரிகையாளர் லட்சுமணன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

உண்மை!

இது அரைகுறைகளுக்கான காலம். 

இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?

தன்னை தானே உயர்ந்தவன் என்று போற்றி மற்றவரை இகழும் இது நீங்கள் குறிப்பிடும் மதவெறி நோயை விட கொடுமையான கொடூரமான நோய். மற்றவரை நோக்கி விரல் நீட்டும் முன் இதிலிருந்து நீங்கள் சுகமடைந்து வெளியே வாருங்கள். டொட். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இந்த விடயம் பற்றி பத்திரிகையாளர் லட்மணன் அவர்களுடனான உரையாடல்.

காணொளி பார்த்தேன்
இதே பெரியாரை கட்சி ஆரம்பித்த போது தன் கட்சி கொள்கை வழிகாட்டியாக அறிவித்தவர் சீமான்.

2025ம் ஆண்டு பிறந்தவுடன்  பெரியாரையும் எதிர்ப்பது  தனது கொள்கை 🤣

சீமானை தங்கள் வழிகாட்டியாக வெளிநாட்டு ஈழதமிழர்கள் சிலர் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது போன்று இவரும் 2025 வரை 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2025 at 07:19, பகிடி said:

ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில்  பிரச்சனைகள் இருக்கிறது, ஆனால் அதற்காக அவர் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கவரும் அல்லர். அவராலும் சமூகத்துக்கு சில பல நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதால் அவரை சீண்டாமலும் அதே சமயம் அளவுக்கு மீறி துதி பாடாமலும் விடுவதே புத்திசாலித்தனம்

ரத்தினசுருக்கம்.

முன்பும் எழுதியதுதான்.

ஈழத்தில் தலைவரை, தமிழ்நாட்டில் பெரியாரை இகழ்ந்து விட்டு அரசியல் செய்ய முடியாது.

இருவரும் சில தவறுகளை (வேறு வேறான) விட்டுள்ளனர். ஆனால் அவர்கள் செய்த நல்லதுகள் அதன் பல மடங்கு. அவர்கள் இதயசுத்தி மீது மக்கள் இன்றும் வைத்துள்ள நம்பிக்கை மிக பெரிது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2025 at 08:30, கிருபன் said:

பெரியார் குறித்து அவதூறு பேச்சு

large.IMG_8002.jpeg.17c9b217ab2196f48ea5

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் பெரியார்: அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்

 

logo.png

95159.jpg  

சென்னை: தந்தைப் பெரியாரை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை கொள்கைரீதியாக விமர்சிக்கலாம்; மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தைப் பெரியாரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், அவரைப் பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். பெரியாரை போற்றுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகர் மகாத்மா காந்தி என்றால், தமிழ்நாட்டின் சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் தந்தைப் பெரியார் அவர்கள் தான். தமிழ்நாட்டில் செண்பகம் துரைராஜன் வழக்கில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட போது, சமூகநீதியைக் காப்பதற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர் தந்தைப் பெரியார் தான். சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கலைஞர் அரசு மறுத்த போது, அதைக் கண்டித்ததுடன், அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீடு 31% ஆக உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் தந்தைப் பெரியார். அதனால் தான் அவரை கொள்கை வழிகாட்டியாக பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றிருக்கிறது.

தமது கொள்கையில் உறுதியாக இருந்தாலும் தம்மைத் தேடி வந்தவர்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் மதித்தவர். தமது வீட்டுக்கு வந்த திருவிகவின் நம்பிக்கையை மதித்து, அவர் இட்டுக் கொள்வதற்காக திருநீறு சம்படத்தை ஏந்தி வந்தவர் அவர். 1927ஆம் ஆண்டு குடி அரசு இதழைத் தொடங்கிய போது முதல் இதழிலேயே வள்ளலாரின் வரிகளை பயன்படுத்தியவர் அவர். 

வள்ளலார் சத்திய ஞானசபைக்கு சென்ற போது, அங்கு ‘‘கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’’ என எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் ‘‘நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’’ என மறுத்தவர் பெரியார். அவரது வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது.

தந்தைப் பெரியாரை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை கொள்கைரீதியாக விமர்சிக்கலாம்; மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது. இந்த அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொண்டு அனைவரும் அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்
 

https://www.kamadenu.in/news/tamilnadu/95159-periyar-the-protagonist-of-the-social-liberation-struggle-anbumani-ramadoss-1.html

 

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா?

சீமான், பெரியார்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பெரியார் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பெரியார் அப்படிச் சொன்னாரா?

கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

 

சீமான் என்ன பேசினார்?

அந்தச் செய்தியாளர் சந்திப்பில், "தமிழ் மொழியையே காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? கம்பன் உங்களுக்கு எதிரி, இளங்கோவடிகள் ஒரு எதிரி, திருவள்ளுவர் எதிரி - பிறகென்ன சமூக சீர்திருத்தம்? அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி?'' என சீமான் பேசினார்.

மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை குறித்து பேசிய சீமான், பெரியார் சொன்னதாக கூறி ஒரு கருத்தை குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரியாரிய அமைப்புகள் பெரும் கண்டனம் தெரிவித்தன. அப்படிப் பெரியார் பேசிய அல்லது எழுதிய ஆதாரங்களை வெளியிடும்படி கோரினர்.

இதற்கடுத்து புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, "எல்லா ஆதாரங்களையும் நீங்கள் முடக்கிவைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? இவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன். வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கிவைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?" என்று பதிலளித்தார்.

இதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெரியார் குறித்த சீமானின் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறியது. மேலும் அவர் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஜனவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

பெரியார் அப்படிப் பேசியது உண்மையா?

இதுபோல பெரியார் பேசியதாக கூறப்படுவது முதல் முறையல்ல.

2017-ஆம் ஆண்டுவாக்கில்தான் முதன்முதலில் பெரியார் இப்படிச் சொன்னதாக செய்தி பரவ ஆரம்பித்தது. சில இயக்கங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டன. இந்தச் செய்தி 1953-ஆம் ஆண்டு மே மாதம் திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான விடுதலையில் வெளிவந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு, அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தக் கருத்து பரப்பப்பட்டு வந்தது.

இதனை அந்தத் தருணத்திலேயே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்தனர். 2020ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு செய்தியைப் பதிவுசெய்த, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர். அவரைக் காவல்துறை கைதும் செய்தது.

இந்த நிலையில்தான் மீண்டும் சீமான் இதே கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இது தொடர்பான சமூக வலைதள பதிவுகளில் இந்தச் செய்தி விடுதலை இதழில் 1953-ஆம் ஆண்டின் மே 11ஆம் தேதி வெளியாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீமான், பெரியார்
படக்குறிப்பு, தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன.
சீமான், பெரியார்
படக்குறிப்பு, குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது
சீமான், பெரியார்
சீமான், பெரியார்

இது தொடர்பாக பிபிசி ஆராய்ந்த போது, அப்படி எந்தச் செய்தியும் அன்றைய தினம் வெளியான விடுதலை இதழில் இடம்பெறவில்லை.

குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நான்கு பக்கங்களிலும் இதுபோன்ற ஒரு செய்தி எங்கேயும் இடம்பெறவில்லை.

தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா?

சீமான், பெரியார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பெரியார் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பெரியார் அப்படிச் சொன்னாரா?

கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

 

சீமான் என்ன பேசினார்?

அந்தச் செய்தியாளர் சந்திப்பில், "தமிழ் மொழியையே காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? கம்பன் உங்களுக்கு எதிரி, இளங்கோவடிகள் ஒரு எதிரி, திருவள்ளுவர் எதிரி - பிறகென்ன சமூக சீர்திருத்தம்? அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி?'' என சீமான் பேசினார்.

மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை குறித்து பேசிய சீமான், பெரியார் சொன்னதாக கூறி ஒரு கருத்தை குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரியாரிய அமைப்புகள் பெரும் கண்டனம் தெரிவித்தன. அப்படிப் பெரியார் பேசிய அல்லது எழுதிய ஆதாரங்களை வெளியிடும்படி கோரினர்.

இதற்கடுத்து புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, "எல்லா ஆதாரங்களையும் நீங்கள் முடக்கிவைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? இவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன். வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கிவைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?" என்று பதிலளித்தார்.

இதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெரியார் குறித்த சீமானின் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறியது. மேலும் அவர் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஜனவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

பெரியார் அப்படிப் பேசியது உண்மையா?

இதுபோல பெரியார் பேசியதாக கூறப்படுவது முதல் முறையல்ல.

2017-ஆம் ஆண்டுவாக்கில்தான் முதன்முதலில் பெரியார் இப்படிச் சொன்னதாக செய்தி பரவ ஆரம்பித்தது. சில இயக்கங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டன. இந்தச் செய்தி 1953-ஆம் ஆண்டு மே மாதம் திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான விடுதலையில் வெளிவந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு, அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தக் கருத்து பரப்பப்பட்டு வந்தது.

இதனை அந்தத் தருணத்திலேயே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்தனர். 2020ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு செய்தியைப் பதிவுசெய்த, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர். அவரைக் காவல்துறை கைதும் செய்தது.

இந்த நிலையில்தான் மீண்டும் சீமான் இதே கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இது தொடர்பான சமூக வலைதள பதிவுகளில் இந்தச் செய்தி விடுதலை இதழில் 1953-ஆம் ஆண்டின் மே 11ஆம் தேதி வெளியாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீமான், பெரியார்

படக்குறிப்பு, தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன.

சீமான், பெரியார்

படக்குறிப்பு, குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது

சீமான், பெரியார்
சீமான், பெரியார்

இது தொடர்பாக பிபிசி ஆராய்ந்த போது, அப்படி எந்தச் செய்தியும் அன்றைய தினம் வெளியான விடுதலை இதழில் இடம்பெறவில்லை.

குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நான்கு பக்கங்களிலும் இதுபோன்ற ஒரு செய்தி எங்கேயும் இடம்பெறவில்லை.

தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

இணைப்புக்கு நன்றி ஏராளன். 

சீமான் கூறியது பொய் என்பது ஏற்கனவே பொதுவாக அறிவுடன் சிந்திக்கக்கூட மக்களுக்கு ஏற்கனவே  தெரிந்த விடயமே. வழமையாக தனது ஒவ்வொரு கூட்டங்களிலும் பொய்களை கூறிவரும. சீமானோ ஆர்எஸ்எஸ் உருவாக்கிய போலியான விடுதலை ஏட்டை நகலெடுத்து அதனை இணையத்தளங்களில் ஒட்டிய தற்குறிகளோ இதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை. 

பெரியாரில் சீமானுக்கு உள்ள கோபம் என்ன வென்றால், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று பெரியார் கூறியது தான்.  அது எப்படி எனக்கு இல்லாததை  பெரியார் கூறலாம் என்ற ஆதங்கத்தில் தான் சீமான் இவ்வாறு தொடர்ந்து அவதூறுகளை கொட்டி வருகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

எனது ஒரு சில அல்லது பல கலாய்ப்புகளை தனிமனித தாக்குதல்களாகவும்,சீண்டல்களாகவும் உருவமைத்துள்ளீர்கள். 👈

இதை ஊரில் விளங்காத்தனம் என்று கூறுவர். இப்படியான பிரச்சனைதான் வல்வை சகாறாவிற்கும் ஏற்பட்டது.அவர் சக தோழர்களை கலாய்ப்பதிலும் பதிலடி கொடுப்பதிலும் வல்லவர்.
கலாய்ப்புகளினால் வந்த  சீண்டல்களினால் தான் அமைதியாக இருக்கின்றாரோ தெரியவில்லை.☹️

 

நான் மேலே எழுதிய “மொந்தையும்” கலாய்ப்புத்தான். 

உனக்கு வந்தா கலாய்ப்பு, எனக்கு வந்தா தனிமனித தாக்குதல் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா?

சீமான், பெரியார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பெரியார் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பெரியார் அப்படிச் சொன்னாரா?

கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

 

சீமான் என்ன பேசினார்?

அந்தச் செய்தியாளர் சந்திப்பில், "தமிழ் மொழியையே காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? கம்பன் உங்களுக்கு எதிரி, இளங்கோவடிகள் ஒரு எதிரி, திருவள்ளுவர் எதிரி - பிறகென்ன சமூக சீர்திருத்தம்? அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி?'' என சீமான் பேசினார்.

மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை குறித்து பேசிய சீமான், பெரியார் சொன்னதாக கூறி ஒரு கருத்தை குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரியாரிய அமைப்புகள் பெரும் கண்டனம் தெரிவித்தன. அப்படிப் பெரியார் பேசிய அல்லது எழுதிய ஆதாரங்களை வெளியிடும்படி கோரினர்.

இதற்கடுத்து புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, "எல்லா ஆதாரங்களையும் நீங்கள் முடக்கிவைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? இவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன். வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கிவைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?" என்று பதிலளித்தார்.

இதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெரியார் குறித்த சீமானின் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறியது. மேலும் அவர் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஜனவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

பெரியார் அப்படிப் பேசியது உண்மையா?

இதுபோல பெரியார் பேசியதாக கூறப்படுவது முதல் முறையல்ல.

2017-ஆம் ஆண்டுவாக்கில்தான் முதன்முதலில் பெரியார் இப்படிச் சொன்னதாக செய்தி பரவ ஆரம்பித்தது. சில இயக்கங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டன. இந்தச் செய்தி 1953-ஆம் ஆண்டு மே மாதம் திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான விடுதலையில் வெளிவந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு, அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தக் கருத்து பரப்பப்பட்டு வந்தது.

இதனை அந்தத் தருணத்திலேயே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்தனர். 2020ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு செய்தியைப் பதிவுசெய்த, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர். அவரைக் காவல்துறை கைதும் செய்தது.

இந்த நிலையில்தான் மீண்டும் சீமான் இதே கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இது தொடர்பான சமூக வலைதள பதிவுகளில் இந்தச் செய்தி விடுதலை இதழில் 1953-ஆம் ஆண்டின் மே 11ஆம் தேதி வெளியாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீமான், பெரியார்

படக்குறிப்பு, தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன.

சீமான், பெரியார்

படக்குறிப்பு, குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது

சீமான், பெரியார்
சீமான், பெரியார்

இது தொடர்பாக பிபிசி ஆராய்ந்த போது, அப்படி எந்தச் செய்தியும் அன்றைய தினம் வெளியான விடுதலை இதழில் இடம்பெறவில்லை.

குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நான்கு பக்கங்களிலும் இதுபோன்ற ஒரு செய்தி எங்கேயும் இடம்பெறவில்லை.

தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பிபிசியும் படம் காட்டுறன் படம் பார் சீன் போடுது.உப்பிடி படம் காட்ட இந்த தொழில் நுட்பகாலத்திலை எல்லாராலையும் ஏலும் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, goshan_che said:

நான் மேலே எழுதிய “மொந்தையும்” கலாய்ப்புத்தான். 

உனக்கு வந்தா கலாய்ப்பு, எனக்கு வந்தா தனிமனித தாக்குதல் 🤣

நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். இந்த(நான்) மரமண்டைக்குதான் ஒரு கோதாரியும் புரியல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

large.IMG_8002.jpeg.17c9b217ab2196f48ea5

பெரியார்  சாதித்தது எதுவென கேட்டால் சகலரும் ஹொலிடேக்கு போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, பகிடி said:

உண்மை!

இது அரைகுறைகளுக்கான காலம். 

சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர் 

1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களிடமோ இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு வைரஸ் தாக்குவது போல் இவர்களுக்கு சீமானின் தாக்கம் வந்து விடுகின்றது. 

2) மத வெறியர்கள் 

   இவர்களுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் என்றாலே ஆரம்பில் இருந்தே கசப்புத் தான். சரியான சமயம் வரும்வரை காத்து இருந்தார்கள், ஈழ யுத்தம் முடிய போரின் தோல்விக்கு திராவிட இயக்கம் மேல் பழியைப் போட்டு விட்டார்கள். போரின் பொழுது இவர்கள் பிரபாகரனுக்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். இவர்களுக்கு இப்பொழுதும் சீமான் மேல் எந்தக் காதலும் இல்லை, மாறாக சீமானைக் கொண்டு தமிழ் இனத்தில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதியையும் இந்துத்துவாவுக்குள் அடக்கப் பிரயசைப்படுகிறார்கள் 

 

 

அதிக தூரமோ,தமிழர் வரலாறுகளோ தேவையில்லை.
 2009க்கு பின்னர் நீங்கள் சார்ந்தோர் இலங்கையின் அரசியலில் சாதித்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அதிக தூரமோ,தமிழர் வரலாறுகளோ தேவையில்லை.
 2009க்கு பின்னர் நீங்கள் சார்ந்தோர் இலங்கையின் அரசியலில் சாதித்தது என்ன?

நீங்கள் இதே கேள்வியை இங்கு பல முறை உங்கள் சக கருத்தாளர்களிடம் கேட்டுவிட்டீர்கள்.  பலமுறை பதிலும் வழங்கியாற்று.

இருப்பினும் மீண்டும்

பதில்; ஈழத்தமிழர்களாகிய தாம் 2009 க்கு பின்பு மட்டுமல்ல அதற்கு முற்பட்ட காலத்திலும் அரசியல் ரீதியாக எதையும் சாதிக்க வில்லை. தொடர்சசியாக பின்னடைவுகளை மட்டுமே சந்தித்து வந்துள்ளோம். ஆயுத போராட்ட  காலத்திலும் சரி அதற்கு முற்பட்ட பிற்பட்ட காலங்களிலும் சரி  அரசியல் ரீதியாக எமது நடவடிக்கைகள் பின்னோக்கி சென்றதாகவே இருந்தது.   இப்போதும் அரசியல் முன்னேற்றத்திற்கான எந்த  சிறிய அறிகுறி கூட  இல்லை. அந்தளவுக்கு நாம் எமது அரசியலை கடந்த 75 ஆண்டுகளில் சிதைத்துள்ளோம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

large.IMG_8002.jpeg.17c9b217ab2196f48ea5

பெரியார்  சாதித்தது எதுவென கேட்டால் சகலரும் ஹொலிடேக்கு போய் விடுவார்கள்.

பெரியாரின் பல தசாப்த சமூக போராட்டங்களை ஒரு வரியில் கூறிவிட முடியாது. நீங்கள் இன்று தொலை பேசியில் எழுதும் யூனிகோட் முறை தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை 1934 ல் ஆண்டிலேயே தனது பத்திரிகையில் பாவித்து அதை தொடர்ந்து வலியுறுத்தி அதன்தாக்கமே 1978 ல் எம்ஜியார் அரசு அதனை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வைத்தது. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முதன் முதலாக திருத்தி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தியது பெரியாரின் தொடர் போராட்டங்கள் தான். 

இதே திரியில் இணைக்கப்பட்ட காணொளியில் நாம் தமிழர் கட்சி ஸதாபிக்கப்பட்ட போது அதில் உறுப்பினராக இணைந்த  தமிழ் தேசியவாதியான இன்றும் தமிழ் தேசியத்தை வலியுற்றும்  திரு.  அய்யநாதன் கூறுவதை கேளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kavi arunasalam said:

large.IMG_8002.jpeg.17c9b217ab2196f48ea5

கவி ஐயா இதை எனது யாழ்கள அவதாராக வைக்க விரும்புகிறேன்.

அனுமதி கிடைக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, island said:

நீங்கள் இதே கேள்வியை இங்கு பல முறை உங்கள் சக கருத்தாளர்களிடம் கேட்டுவிட்டீர்கள்.  பலமுறை பதிலும் வழங்கியாற்று.

யதார்த்தமான,நேர்மையான பதில்கள் வரும் வரைக்கும் கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இதை எனது யாழ்கள அவதாராக வைக்க விரும்புகிறேன்.

அனுமதி கிடைக்குமா?

தாரளமாக.  இந்தப் படத்தை அவதாராக சின்னதாக்கிப் பார்க்க நானும் ஆவலுடன் இருக்கின்றேன்

7 hours ago, குமாரசாமி said:

பெரியார்  சாதித்தது எதுவென கேட்டால் சகலரும் ஹொலிடேக்கு போய் விடுவார்கள்.

ஒரு மனிதன் தேர்தலில் போட்டியிடாமல்  ஒரு இயக்கம் நடத்தி ஒரு நூற்றாண்டைக் கடந்தும் பேசப்படுகின்றார் என்றால் ஏதோ இருக்கத்தானே வேண்டும். தேடுங்கள் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

யதார்த்தமான,நேர்மையான பதில்கள் வரும் வரைக்கும் கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

நான. கூறியது ஜதார்ததமான பதில் தானே!  ஈழத்தமிழர் போராட்டத்தை மூன்று காலப்குதியாக  பிரித்தால், ஒவ்வொரு காலப்பகுதி இறுதியிலும் நாம் முன்பிருந்ததை விட அரசியல் ரீதியில் பின்னடைவில் இருந்தது வெளிப்படையான உண்மை.

முதலாவது,  ஆயுத போராடத்திற்கு முன்பிருந்த காலப்பகுதி. அதன் இறுதிக்காலம் ஆரம்பகாலதில் இருந்த நிலையை  விட  பின்தங்கியது.  சிங்கள இனவாத அரசியல்வாதிகளை முறியடித்து அரசியல் ரீதியில் எமது போராட்டதை பலம் பெற தக்க நிலை இருந்தும்  அதை செய்யாமல் பதவி சுகத்தை அனுபவிக்க  மக்களை உசுப்பேற்றும் வாக்கு அரசியலையே அன்று செய்து அதன் பலனாக  இறுதியில்  பின்னடைவை கண்டனர். 

அதன் பின்னர் ஆயுதப்போரளிகள் மற்றயவர்களை  முற்றாக தமது  இராணுவ பலத்தை உபயோகித்து  தடை  செய்து போராட்டத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்ததார்கள். அதன் இறுதியில் முன்னயதை விட மிக மோசமான பலவீனமான அரசியல் நிலையை அடைந்தோம். இராணுவதோல்வியை விடுங்கள். அரசியல் ரீதியில் அக்காலப்பகுதியில் ஶ்ரீலங்கா அரசிடம் படு தோல்வியடைந்தோம். ஶ்ரீலங்கா அரசின் பிரச்சாரங்களை முறியடிக்கும் வல்லமை இருந்தும் அதை செய்யாமல் அவர்களின் பிரச்சாரங்களுக்கு வலு சேர்ககும் வேலைகளையே தொடர்சசியாக செய்து வந்தார்கள்.  இறுதியில் அரசியல் ரீதியில் zero அல்ல மைனஸ் நிலையை தமிழர் அரசியல் அடைந்தது. 

அடுத்தது ஆயுத போராட்டத்திற்கு பின்னரான காலப்பகுதி இப்போதும் தாயகத்தில் சரி புலம்பெயர் நாடுகளில் சரி  தொடர்சியாக கோமாளிகளாகவே அரசியல் கட்சிகளும், புலம் பெயர் அமைப்புகளும் அரசியல் செய்கிறார்கள்.     

அதாவது ஒட்டு மொத்தமாக  கடந்த 75 வருடங்களாக தமிழர் அரசியல்  பின்னடைவை கண்டு வருவது  ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த வெள்ளிடை மலையாக இருக்கும் போது இப்படியான அபத்தமான கேள்விகளால் எந்த பலனும் இல்லை.  

இந்த பின்னடைவுகளை உங்களாலோ என்னாலோ இந்த கள உறுப்பினர்களாலோ மீட்க முடியாது. அந்தளவுக்கு பழைய அரசியல் குட்டைக்குள் ஊறிய மட்டைகளாக நாம் உள்ளோம். 

 இனி எதிர்காலத்திலாவது அறிவு பூர்வமான அரசியலாளர்கள் பலர் உருவானால் அது நடக்கலாம்.   ஆனால், நிச்சயமாக எனக்கோ உங்களுக்கோ அது பார்ககும் பாக்கியம் கிடைக்காது என்பது கவலை தான்.  எனவே நாம் இருவரும் செய்ய வேண்டியது  enjoy the life you have till the end. 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, island said:

பதில்; ஈழத்தமிழர்களாகிய தாம் 2009 க்கு பின்பு மட்டுமல்ல அதற்கு முற்பட்ட காலத்திலும் அரசியல் ரீதியாக எதையும் சாதிக்க வில்லை. தொடர்சசியாக பின்னடைவுகளை மட்டுமே சந்தித்து வந்துள்ளோம். ஆயுத போராட்ட  காலத்திலும் சரி அதற்கு முற்பட்ட பிற்பட்ட காலங்களிலும் சரி  அரசியல் ரீதியாக எமது நடவடிக்கைகள் பின்னோக்கி சென்றதாகவே இருந்தது.   இப்போதும் அரசியல் முன்னேற்றத்திற்கான எந்த  சிறிய அறிகுறி கூட  இல்லை. அந்தளவுக்கு நாம் எமது அரசியலை கடந்த 75 ஆண்டுகளில் சிதைத்துள்ளோம். 

ஈழத்தமிழர்களால் தனித்து அரச இறைமையுடன் சகல நிர்வாக கட்டுப்பாட்டு முறைகளுடனும் வாழ முடியும் என நிரூபித்து  காட்டியவர் தலைவர் பிரபாகரன்.

என்ன பத்து வருடங்களில் எல்லாம் மரத்து/மறந்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் உங்கள் தலைவர் சீமான் போற்றி புகழும் மபொசி போன்ற பல பச்சை தமிழர்கள் புலிகளை முற்றாக எதிர்கக,  பெரியார் வழி வந்த இயக்கத்தினர் பலர் தன்னிச்சையாக புலிகளுக்கு சட்ட விரோதமாக கூட  பல  உதவிகள்  செய்து பல வருட சிறை வாசம் அனுபவித்தது ஏன்?

 1982 ல் பிரபா- உமா சென்னையில் கைது செய்யப்பட்டபோது அவர்களை தம்மிடம் ஒப்படைக்க ஜே. ஆர் கேட்ட போது அதை கடுமையாக பெரியாரிஸ்டுகள் எதிர்தது போராடியது ஏன்? 

சீமான் போற்றும் பச்சை தமிழர்  மபொசி சென்னை வந்த இந்திய இராணுவத்தை வரவேற்றது ஏன்?   

ராஜீவ் கொலையின் பின்னர் பெரியார் திடல் சோதனையிடப்பட்டது  ஏன்?  பெரியாரிஸ்டான பேரறிவாளன் தனது வாழ்ககை முழுவதையும் சிறையில் கழித்தது ஏன்? 

பிரபாகரனை கொண்டு வந்து இந்தியாவில்  தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று சீமான் கொண்டியது ஏன்?  

அதை அன்று சபாநயகராக இருந்து நிறைவேற்றி தீர்மானத்தில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய சீமானின் மாமனார் காளிமுத்துவை சீமான் கண்டிக்காதது ஏன்? கண்டித்தால்  வீட்டில் சோறு கிடைக்காது என்பதாலா? 

தான் ஈழம் சென்ற போது  தன்னிடம் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை பார்தது தான் தனக்கும் போராடும் உத்வேகம் ஏற்பட்டதாக பிரபகரன்  கூறியதாக சீமான் கூறியது ஏன்?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

அன்று வேறு விடயம். 
இன்று தேர்தல் அரசியலுக்காக மட்டுமே பெரியார் பேசப்படுகின்றார்.
சாதி கட்சிகளும்.சாதிக்கொலை க்
கொலைகளும் நிறைந்த தமிழ்நாட்டில் சொரியார் கொள்கை காணாமல் போய் விட்டது.
தமிழ்நாட்டிற்கு அருகிலுள்ள மாநிலங்களை கவனித்து பாருங்கள்.அங்கு கரியாரும் இல்லை பரியாரும் இல்லை.நலமாகத்தான் வாழ்கின்றார்கள்.😎

பெரியாரை அவதூறு செய்பவர்களைப் பார்த்தால் எனக்கும் அனுதாபம்தான் வருகின்றது.

 

பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை கண்டால்… வீடியோ வெளியிட்டு சத்யராஜ் கண்டனம்!

christopherJan 12, 2025 11:41AM
7ZDbx3qr-image-1-1.jpg

ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று பெரியார் மீது அவதூறு பேசுபவர்களை பார்த்தால் கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்கிறது என சத்யராஜ் விமர்சித்துள்ளார்.

சமீப காலமாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. 

இதனையடுத்து திமுக, விசிக, காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் மற்றும் பெரியாரிய அமைப்புகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

சீமான் மீது தமிழகம் முழுவதும் 70க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சீமானின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், ”தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூகநீதி கோட்பாட்டை பொது மேடைகளில் விளக்கி சொல்லி, அதன் உண்மையான விளக்கத்தை கூறி, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. 

ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று புதிதாக பேசுபவர்களை பார்த்து கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்குது. 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசுகிறார்கள். ஒரே ஆள் பேச முடியாது என்பதால் புது முகங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த முது முகங்களை பார்த்து பரிதாபம் தானே பட முடியும்? 

சமூகநீதி கோட்பாட்டையும், திராவிட கருத்தியலையும் நாட்டின் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்டுவிட்டன. காங்கிரஸ், கம்யூனிட்ஸ்ட் போன்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலேயே பெரியாரின் கருத்தியலை பேசி இருக்கிறார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வைக்கம் வீரர் பெரியாருக்கு மிகப்பெரிய விழாவை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி இருக்கிறார். 

திராவிடம் என்ற பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்திருப்பவர்கள் நிச்சயம் பெரியாரை ஆதரிப்பார்கள். திக, திமுக, மதிமுக, தபெதிக, திராவிட விடுதலை கழகம், திஇதபே, அதிமுக, தேமுதிக என்று இத்தனை கட்சிகளின் பெயர்களிலேயே திராவிடம் உள்ளது. 

இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் கொள்கை வழிகாட்டி பெரியார் என்று கூறியிருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையும் சூப்பர். அந்த அற்புதமான அறிக்கையை பொதுக்கூட்ட மேடையில் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். அன்புத்தம்பி விஜய் தவெகவின் கொள்கை தலைவராக பெரியாரை பிரகடனபடுத்தி இருக்கிறார். திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என தெரிவித்துள்ளார். 

இவ்வளவு பேர் பெரியாரை ஏற்ற பின் திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசுபவர்களை பார்த்தால், அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. பெரியாரின் கருத்தியல் மீது விமர்சனம் வைக்காமல், தனிமனித விமர்சனம் மட்டுமே வைக்கப்படுகிறது. பெரியார் குறித்து புலம்பும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று சத்யராஜ் விமர்சித்துள்ளார்.

 

https://minnambalam.com/political-news/defamation-against-periyar-sathyaraj-condemns-by-releasing-video/

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களால் தனித்து அரச இறைமையுடன் சகல நிர்வாக கட்டுப்பாட்டு முறைகளுடனும் வாழ முடியும் என நிரூபித்து  காட்டியவர் தலைவர் பிரபாகரன்.

என்ன பத்து வருடங்களில் எல்லாம் மரத்து/மறந்து விட்டதா?

நான. கூறியது ஒட்டு மொத்தமான ஒரு இனத்தை பிரதிநிதித்துவம் செய்த அரசியல் தலைமைகள் எல்லாம்  அரசியல் ரீதியில் மக்களை பலம் பெற செய்யும் அரசியல் நடவடிக்கைகளை செய்யாமல்  தொடர்சசியாக  பின்னடைவை கண்டு அரசியல் பலவீனமான இனமாக தமிழரை மாற்றிய கண்ணெதிரே நடந்த நிகழ்வுகளை பற்றியதே. 

 நீங்கள் கூறுவது   இராணுவ பலத்துடன் மட்டும்  செய்யப்பட்ட தற்காலிக    சாதனைகளை மட்டுமே . சர்வதேச அரசியலில்  பலம் பெறாமல் எதை செய்தாலும் அது இறுதியில் பொல பொல என்று உதிர்ந்துவிடும் என்பதே இன்றைய உலக ஜதார்ததம்.  மக்களுக்கு நிரந்தரமாக எந்த பலனும் இல்லை.  அதை புரிந்து கொள்ளாமல் விட்டால் அழிவுகளும் அவலங்களும் மட்டுமே எமக்கு  மிஞ்சி நிற்கும்.  அது தான் எமக்கு நடந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2025 at 07:09, பகிடி said:

இது அரைகுறைகளுக்கான காலம். 

சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர் 

1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களிடமோ இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு வைரஸ் தாக்குவது போல் இவர்களுக்கு சீமானின் தாக்கம் வந்து விடுகின்றது. 

2) மத வெறியர்கள் 

   இவர்களுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் என்றாலே ஆரம்பில் இருந்தே கசப்புத் தான். சரியான சமயம் வரும்வரை காத்து இருந்தார்கள், ஈழ யுத்தம் முடிய போரின் தோல்விக்கு திராவிட இயக்கம் மேல் பழியைப் போட்டு விட்டார்கள். போரின் பொழுது இவர்கள் பிரபாகரனுக்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். இவர்களுக்கு இப்பொழுதும் சீமான் மேல் எந்தக் காதலும் இல்லை, மாறாக சீமானைக் கொண்டு தமிழ் இனத்தில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதியையும் இந்துத்துவாவுக்குள் அடக்கப் பிரயசைப்படுகிறார்கள் 

பெரிய கண்டு பிடிப்புத்தான்.இதற்கு உங்களுக்கு நோபல் பரிசுக்கு திமுக சிபாரிசு செய்தாலும் செய்வார்கள். நாங்கள் வாத்து மடையர்களாகவே இவநுந்து விட்டுப் போகிறோம். அதனால் பெரும மேதாவிகளான உங்களுக்கு எந்த நட்டமும் வந்து விடப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான்சீமானை ஆதரிப்பது தற்போதுள்ள தலைவர்களில்தமிழ்த்தேசியத்தை உறுதியாக முன்னெடுத்துவரும் காரணத்தினால் மட்டுமே. அதிலிருந்து அவர் விலகினால் அவரை ஆதரிப்பதை நிறுத்தி விடுவேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.