Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!

1554407283.jpg

யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பானமை இனத்தை சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அக்குத்தகையையும் அமைச்சரவை பத்திரம் ஊடக  இரத்து செய்யவுள்ளதாகவும், பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கு இடம் பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு உரையாற்றி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன்  தெரிவித்தார்.

திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரைடால் திக்கம் வடிசாலையில், பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணியின் தலைவர் தலமையில் நேற்றையதினம் (18) இடம்பெற்றது.

இதில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,  பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், யாழப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் பதிவாளருமான திரு.திருலிங்கநாதன், யாழ். மாவட்டத்தில் உள்ள ப.தெ.வ.அ.கூ.சங்கங்களின் சமாச தலைவர்கள்,  பொதுமுகாமையாளர், பிரதிநிதிகள், வலிகாமம்,  வடமராட்சி தென்மராட்சி ஆகிய கொத்தணிகளின்  தலைவர்வர்கள், பொதுமுகாமையாளர்கள்,  நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து பனை தென்னை கூட்டுறவு  சங்களினது தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், திக்கம் வரணி வடிசாலை தலைவர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

https://newuthayan.com/article/திக்கம்_வடிசாலை_தைப்பூசத்தன்று_இயங்க_ஆரம்பிக்கும்_-_அமைச்சர்_மற்றும்_தலைவர்கள்_உறுதி!

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும்

இந்த வடிசாலையில் சாராயம் தான் பிரதான உற்பத்தியா? இல்ல சும்மா தகவல் அறிய கேட்கின்றேன் 
அப்படியாயின் அதை ஏன் தை பூசத்தில் திறக்க வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

இதில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,  பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், யாழப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் பதிவாளருமான திரு.திருலிங்கநாதன், யாழ். மாவட்டத்தில் உள்ள ப.தெ.வ.அ.கூ.சங்கங்களின் சமாச தலைவர்கள்,  பொதுமுகாமையாளர், பிரதிநிதிகள், வலிகாமம்,  வடமராட்சி தென்மராட்சி ஆகிய கொத்தணிகளின்  தலைவர்வர்கள், பொதுமுகாமையாளர்கள்,  நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து பனை தென்னை கூட்டுறவு  சங்களினது தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், திக்கம் வரணி வடிசாலை தலைவர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எங்க முக்கியமான பார்போற்றும் பாராளுமன்ற உறுப்பினரைக் காணேல்லை?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

எங்க முக்கியமான பார்போற்றும் பாராளுமன்ற உறுப்பினரைக் காணேல்லை?

ஆதாயம் இல்லாத இடத்தில் மினைக்கெடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

😀

12 hours ago, வாலி said:

எங்க முக்கியமான பார்போற்றும் பாராளுமன்ற உறுப்பினரைக் காணேல்லை?

தை பூசத்தன்று பார் சப்பளைக்கான உற்பத்திகளை தற்பொழுது உள்ள அமைச்சர்கள் முன்னெடுக்கினம் அது கண்ணுக்கு தெரியவில்ல நம்ம எம்.பி பொருளாதார வளர்சசிக்கு செய்த விடயம் பெரிதாகதெரிகிறது😀

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

😀

தை பூசத்தன்று பார் சப்பளைக்கான உற்பத்திகளை தற்பொழுது உள்ள அமைச்சர்கள் முன்னெடுக்கினம் அது கண்ணுக்கு தெரியவில்ல நம்ம எம்.பி பொருளாதார வளர்சசிக்கு செய்த விடயம் பெரிதாகதெரிகிறது😀

பாரில்லையேல்...அங்கு தேர்தலில் வெற்றியில்லை...அவ்வளவுக்கு குடி முத்திப்போய் விட்டது..ஊர்போனேன் அவதானத்தில் ஊர் ரோட்டு வழிய பொறுக்காமல் கிடப்பது...பனங்கொட்டைகளும் ...பார் போத்தலுகளும்தான்

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, putthan said:

அப்படியாயின் அதை ஏன் தை பூசத்தில் திறக்க வேணும்..

தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

இதனால், தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்....🤣

அப்பிடி நல்ல குணம் குறியளோட வாழ்ந்த நாங்கள்.....இப்ப  அந்த நல்லநாள் பெருநாள்ள  சாராய தொழிற்சாலை திறக்கிறதிலை வந்து நிக்கிறம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

இதனால், தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்....🤣

அப்பிடி நல்ல குணம் குறியளோட வாழ்ந்த நாங்கள்.....இப்ப  அந்த நல்லநாள் பெருநாள்ள  சாராய தொழிற்சாலை திறக்கிறதிலை வந்து நிக்கிறம்.😎

முன்னேறி விட்டோம் என சொல்லுறீயல்😀

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

இதனால், தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்....🤣

அப்பிடி நல்ல குணம் குறியளோட வாழ்ந்த நாங்கள்.....இப்ப  அந்த நல்லநாள் பெருநாள்ள  சாராய தொழிற்சாலை திறக்கிறதிலை வந்து நிக்கிறம்.😎

 

தைப்பூசம் பெளர்ணமியில் தானே வருகின்றது. பெளர்ணமி என்றால் போயா. பெளத்தர்களின் புனித நாள். போயாவில் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என இலங்கையில் ஏதோ சட்டம் உள்ளது அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நியாயம் said:

 

தைப்பூசம் பெளர்ணமியில் தானே வருகின்றது. பெளர்ணமி என்றால் போயா. பெளத்தர்களின் புனித நாள். போயாவில் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என இலங்கையில் ஏதோ சட்டம் உள்ளது அல்லவா?

தமிழர் பகுதிகளுக்கு சிங்களவர்களுக்குரிய சட்டங்கள் தேவையில்லை என நினைக்கின்றார்கள் போலும்....😂 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2025 at 03:23, putthan said:

இந்த வடிசாலையில் சாராயம் தான் பிரதான உற்பத்தியா? இல்ல சும்மா தகவல் அறிய கேட்கின்றேன் 
அப்படியாயின் அதை ஏன் தை பூசத்தில் திறக்க வேணும்..

பூசத்தில் திறப்பது என்பதை ஒரு விடயமாக செய்தியிட்ட உதயன்தான் பிரச்சனையே  ,..😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.