Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு மதமாற்ற திரியில் கருத்து சொல்லப்போய் அடி எண்டா அடி, இம்மை மறுமை இல்லாத அடி.

என்னை மீட்டெடுத்தேன் என்று சொல்லும் கோசானுக்கு வாழ்த்துக்கள்! இங்கு யாரும் மதவெறி கொண்டு என்னை தாக்கவுமில்லை, நான் யாரையும் நம்பி கருத்தெழுதுவதுமில்லை, ஒரு விடயம் சம்பந்தமான திரியில் வேறொன்றை புகுத்துவதுமில்லை, எனக்குத்தெரிந்ததை தெரியப்படுத்துவேன். யாரும் இங்கு யாரையும் தாழ்வாக மதிப்பதுமில்லை, மிதிப்பதுமில்லை, அவரவர்க்கு தெரிந்ததை விவாதிக்கிறோம். இங்கு அடிபிடி இல்லை, அப்படி யாராவது இருந்தால் இனிவருங்காலத்தில் திருந்திக்கொள்வார்கள்.

அப்போ, நாம் கேட்கும் நிஞாயமெல்லாம்,  சிங்களவனும் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறானோ தெரியவில்லை? 

அதை தெளிவாக எழுதினால் எல்லோருக்கும் புரியும். சிலருக்கு ஜோசவ், ஜேசுநாதர் என்றால் யாரென்றே தெரியாது. சிலருக்கு அவர் நிஞாயவாதியாகவும் தெரியாது. தெரிந்தவற்றை கொண்டு தெரியாதவற்றை விளக்குவதே உவமை. தெரியாதவற்றை கொண்டு தெரியாததற்கு விளக்கம் கொடுக்கும் வாத்தியார். நன்றி விளக்கத்திற்கு.

7 hours ago, Justin said:

சிறுபான்மை மதங்களை நேரடியாகவே தாக்கிய திரிகளில் அல்லவா அவர் முன்னின்று எழுதியிருக்க வேண்டும்😂?

இதுதான் கோசானின் சிறப்பு. அதை நான் கேட்டதற்கே இவ்வளவு விளக்கமும்.

2 hours ago, goshan_che said:

உங்களை யேசுநாதர் என எழுதிய கோஷானை போட்டு பிளந்தேன் ஆண்டவரே என சொல்லி தப்பிக்கும் எண்ணம் போல் உள்ளது.

இங்கே எங்கே ஐயா மதநிந்தனை வந்தது? எதற்கு மீனவர் பிரச்சனையில் விஜய்க்காக ஜேசுநாதரை கூட்டிக்கொண்டு வருகிறீர்கள் என்றுதானே கேட்டேன்?

  • Replies 64
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்

  • ஏராளன்
    ஏராளன்

    மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதாகவும் மத்திய அரசும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி முறைகளை தடை செய்துள்ளதாம்! ஆனால் கடலுக்கு செல்லும் மீனவப்படகு அனுமதி முதல் பரிசோதனைகள் எல்லாம

  • goshan_che
    goshan_che

    கிரெடிபிலிட்டி காற்றில் போய்விட்டது என வேலிபாய்ந்தோடியவர்கள் யார் என்பது யாழ்களத்துக்கு வாசகருக்கு என்றும் நினைவில் இருக்கும்🤣. ஆகவே யாருக்கு, யார், யாரை இனங்காட்டுவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

👉 ஆகவே, மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம்குடுத்து, கடிதம் மட்டுமல்ல, மற்றும் பல்வேறு நிலைகளில் அரசியல், சட்டம், ஊடகம் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

👉மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றால், மாநில அரசு அதை வலியுறுத்த வேண்டும் என்பது ஒரு சட்டப்பூர்வமான நியாயமான கோரிக்கை…

இங்கே மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும்

எந்த நஷ்டமும் இல்லாதபோது என்ன நடவடிக்கையை யார் எடுப்பது

ஈழத்து தமிழன் இப்போது இழிவான நிலையில் இலங்கையில் வாழ்கின்றான்

நாங்கள் .........

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

சிலருக்கு ஜோசவ், ஜேசுநாதர் என்றால் யாரென்றே தெரியாது. சிலருக்கு அவர் நிஞாயவாதியாகவும் தெரியாது. தெரிந்தவற்றை கொண்டு தெரியாதவற்றை விளக்குவதே உவமை. தெரியாதவற்றை கொண்டு தெரியாததற்கு விளக்கம் கொடுக்கும் வாத்தியார். நன்றி விளக்கத்திற்கு.

🤣 எல்லோர்ரையும் எம்மை போல நினைப்பது உயர் பண்பு என்பதற்காக இப்படியா செய்வது🤣.

யாழில் ஜோசேப், யேசுநாதரை தெரியாத பபாக்கள் யாரும் இருப்பதாக நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

இங்கே மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும்

எந்த நஷ்டமும் இல்லாதபோது என்ன நடவடிக்கையை யார் எடுப்பது

ஈழத்து தமிழன் இப்போது இழிவான நிலையில் இலங்கையில் வாழ்கின்றான்

நாங்கள் .........

பிடிபடுவதும் முழுக்க இலங்கை கடல் எல்லைக்குள் பல மைல் உள்ளே.

போகாதே என்பதை தவிர வேறு எந்த ஆலோசனையும் சொல்ல முடியாது.

சும்மா வாய்க்கு வந்தமாரி சட்ட ஆலோசனை கொடுக்கலாம், சர்வதேச நீதிமன்றம் போகலாம் என எழுதலாம்.

ஆனால் போவதென்றால் டெல்லி மூலம்தான் போக முடியும்.

டெல்லி போகாது - பிழை இந்தியா மீது என்பதால்.

இதில் தமிழக மீனவர்கள் மீது தாக்குவது, கொலை செய்வது இவை இரெண்டும்தான் இலங்கை விடும் பிழைகள்.

இதை செய்ய வேண்டாம் என்பது மட்டும்தான் அவர்கள் பக்கத்தில் இருந்து வரகூடிய ஒரே ஒரு நியாயமான கோரிக்கை.

அதை இலங்கை அரசுக்கு - இந்திய மத்திய அரசுதான் வைக்க முடியும். தமிழக அரசு அல்ல. தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் மட்டுமே வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

டெல்லி போகாது - பிழை இந்தியா மீது என்பதால்.

உண்மையில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இந்த கடல் எல்லை பிரச்சனை தெரிய வாய்ப்புக் குறைவாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன்

கிடைக்கும் இடம் எல்லாம் மீன்களை அள்ளினால் அவர்களுக்கு எஜமானர்களிடம் இருந்து சம்பளம் அதிகமாக கிடைக்கும்

பல எஜமானர்கள் அரசியலில் பெரும் புள்ளிகளாக இருப்பதால்

இது அரசியல் பிரச்சனையாக வர வாய்ப்புக்கள் குறைகின்றன

இப்போ விஜய் போய் தன்னுடைய மூக்கைத் தானே

உடைக்கப் போகின்றாரா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

உண்மையில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இந்த கடல் எல்லை பிரச்சனை தெரிய வாய்ப்புக் குறைவாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன்

கிடைக்கும் இடம் எல்லாம் மீன்களை அள்ளினால் அவர்களுக்கு எஜமானர்களிடம் இருந்து சம்பளம் அதிகமாக கிடைக்கும்

பல எஜமானர்கள் அரசியலில் பெரும் புள்ளிகளாக இருப்பதால்

இது அரசியல் பிரச்சனையாக வர வாய்ப்புக்கள் குறைகின்றன

இப்போ விஜய் போய் தன்னுடைய மூக்கைத் தானே

உடைக்கப் போகின்றாரா ?

நான் அறிந்தவரை இப்படி எல்லை தெரியாமல் வர வாய்புகள் இல்லையாம். அநேகமாக டிரோலர்கள் அனைத்தும் எல்லையை காட்டும் செய்மதி கருவிகள் உள்ளனதானாம்.

விஜையும் ஏனையோரை போல நோக்கம் ஏதுமற்ற ஒரு வெற்று போராடத்தைதான் செய்யபோகிறார்.

ஆனால் ஆக்ரோசமாக செய்து மத்திய மாநில அரசுகளை சாடினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும்.

மேற்குநாடுகள் போல் “நீங்கள் பிரேரிக்கும் தீர்வு என்ன?” என யாரும் தமிழ் நாட்டு பத்திரிகையாளர்கள் கேட்கமாட்டார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நான் அறிந்தவரை இப்படி எல்லை தெரியாமல் வர வாய்புகள் இல்லையாம். அநேகமாக டிரோலர்கள் அனைத்தும் எல்லையை காட்டும் செய்மதி கருவிகள் உள்ளனதானாம்

சரி அப்படி என்றால்

எல்லா ட்றோலரிலும் இருக்கும் கருவிகள்

சரியான செயற்திறன் உள்ளனவா எனப் பரிசோதிக்க வேண்டும்.

ஏன் எனில் அப்பாவி மீனவர்களை ஏமாற்ற பல உத்திகளையும் அந்த எஜமானர்கள் கையாள்வார்கள்.

அப்பாவி மீனவர்களை ஏமாற்ற என்பதை

எஜமானர்கள் பணம் சம்பாதிக்க என்று வாசியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

சரி அப்படி என்றால்

எல்லா ட்றோலரிலும் இருக்கும் கருவிகள்

சரியான செயற்திறன் உள்ளனவா எனப் பரிசோதிக்க வேண்டும்.

ஏன் எனில் அப்பாவி மீனவர்களை ஏமாற்ற பல உத்திகளையும் அந்த எஜமானர்கள் கையாள்வார்கள்.

அப்பாவி மீனவர்களை ஏமாற்ற என்பதை

எஜமானர்கள் பணம் சம்பாதிக்க என்று வாசியுங்கள்

ஆட்சி அதிகாரம் தரும் வலுவான பாதுகாப்பு இருக்கும் வரை இந்த கொள்ளையை எவராலும் ஏன் மத்திய அரசால் கூட ஒன்றும் செய்துவிட முடியாது.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டின் மீதான கவனத்தைக் கலைத்து, மாட்டைக் கொண்டு போய் மரத்தில் கட்டி, மரத்தைப் பற்றி மட்டும் பேச வைப்பதற்காக, என்ன வகை கற்பனையெல்லாம் செய்ய வேண்டியிருக்கு😂?

நான் அறிந்த வரை, ஒரு ஜிபிஎஸ் திசைகாட்டி காட்டும் இடத்தை அதற்கென உருவாக்கப் பட்ட மென்பொருட்களை வைத்து தவறாக மாற்றலாம். எல்லை மீறும் மீனவரின் (மாடு) முதலாளிகள் (மரம்) வேலை மெனக்கெட்டு ஒவ்வொரு திசைகாட்டியையும் இப்படி மாற்றி வேண்டுமென்றே அனுப்பி வைக்கிறார்கள். இது வரை மீனவர்களுக்கும் இப்படி நடக்கிறதெனப் புரியவில்லை😎!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

ஆட்சி அதிகாரம்

கடலில் முழு ஆட்சியும் அதிகாரமும் மத்திய அரசிடம்தான்.

கரையில் இருந்து போகும் படகை இலங்கை எல்லையை தாண்டுமா இல்லையா என தமிழக அரசு மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

திரும்பி வரும் போது படகில் இலங்கை மணக்கிறதா என சோதிக்கவும் முடியாது.

படகில் ஜிபிஎஸ் பூட்டி, எல்லை தாண்டும் முதல் எச்சரிக்கலாம். தாண்டினால் தண்டிக்கலாம்.

ஆனால் இதை கடலில் ஆட்சி அதிகாரம் உள்ள மத்திய கடலோரகாவல் படைதான் செய்ய முடியும்.

இலங்கை கடலில் நடப்பதை தங்கச்சிமடம் சப் இன்ஸ்பெக்டர் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முடியாது என தெரிந்தும், குறை சொல்ல வேண்டும் என்பதால் வைக்கப்படும் கோரிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

கடலில் முழு ஆட்சியும் அதிகாரமும் மத்திய அரசிடம்தான்.

கரையில் இருந்து போகும் படகை இலங்கை எல்லையை தாண்டுமா இல்லையா என தமிழக அரசு மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

திரும்பி வரும் போது படகில் இலங்கை மணக்கிறதா என சோதிக்கவும் முடியாது.

படகில் ஜிபிஎஸ் பூட்டி, எல்லை தாண்டும் முதல் எச்சரிக்கலாம். தாண்டினால் தண்டிக்கலாம்.

ஆனால் இதை கடலில் ஆட்சி அதிகாரம் உள்ள மத்திய கடலோரகாவல் படைதான் செய்ய முடியும்.

இலங்கை கடலில் நடப்பதை தங்கச்சிமடம் சப் இன்ஸ்பெக்டர் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முடியாது என தெரிந்தும், குறை சொல்ல வேண்டும் என்பதால் வைக்கப்படும் கோரிக்கை.

நான் சொன்னது பணம் லஞ்சம் பெரிய கோடீஸ்வர முதலாளிகளுக்கு பக்க பலமாக மற்றும் அவர்களே செய்யும் களவாடித்தனம் இது. பணம் பாதாளம் வரை மத்திய அரசு எந்த மட்டில்...?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாத்தியார் said:

உண்மையில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இந்த கடல் எல்லை பிரச்சனை தெரிய வாய்ப்புக் குறைவாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன்

கடற்கரையில் இருந்து பார்க்கும் போது இந்த ரோலிங் வள்ளம்களில்ஆட்கள் நடமாட்டம் தெரியும் அளவுக்கு மிக கரையை நெருங்கி வருகிறார்கள் அப்படி பார்க்கும்போது கடல் எல்லை பிரச்சனை அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதை நம்புவது கஷ்ட்டமாக உள்ளது வாத்தியார் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நான் சொன்னது பணம் லஞ்சம் பெரிய கோடீஸ்வர முதலாளிகளுக்கு பக்க பலமாக மற்றும் அவர்களே செய்யும் களவாடித்தனம் இது. பணம் பாதாளம் வரை மத்திய அரசு எந்த மட்டில்...?

இது ஏற்புடையதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வாத்தியார் said:

உண்மையில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இந்த கடல் எல்லை பிரச்சனை தெரிய வாய்ப்புக் குறைவாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன்

மற்றைய இடங்களில் உள்ள எல்லைகள் தெரியுது.

இலங்கை எல்லை மட்டும் தெரியவில்லை.

சரி தடை செய்யப்பட்ட வலைகளை வீசுவது யார்?

வீசும்போதே இது கற்பப்பையையும் கொண்டுவரப் போகுது என்று தெரியும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2025 at 09:08, வாத்தியார் said:

சரி அப்படி என்றால்

எல்லா ட்றோலரிலும் இருக்கும் கருவிகள்

சரியான செயற்திறன் உள்ளனவா எனப் பரிசோதிக்க வேண்டும்.

ஏன் எனில் அப்பாவி மீனவர்களை ஏமாற்ற பல உத்திகளையும் அந்த எஜமானர்கள் கையாள்வார்கள்.

அப்பாவி மீனவர்களை ஏமாற்ற என்பதை

எஜமானர்கள் பணம் சம்பாதிக்க என்று வாசியுங்கள்

ஏன் வாத்தியார்?

நெடுந்தீவுக் கரையில நிண்டால், இவையின்ர ரோலர் சத்தம் கேக்கும்.

இதுக்கு ஏன் கருவி தேவை?

சாதாரண கண்கள் கூடப் போதுமே?

தெரிந்து தான் செய்கிறார்கள்…!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.