Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலையிலிருந்து இளைப்பாறினால் பரிசாக கிடைப்பது நேரம் மட்டுமே.முப்பதைந்து  வருடங்களுக்கு மேலாக‌

முழுநேர பணியில் இருந்தவனுக்கு , தற்பொழுது முழுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பு கிடைத்து."சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகளின் வாசகம் ,எங்கயோ படித்த ஞாபகம் வரவே இது தானே சும்மா இருந்து சுகம் காணுதல் என நினைத்து இரண்டு நாள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான் .சும்மா இருந்தா சுகம் காணலாம் என சுவாமிகள் சொன்னார்,ஆனால் அவனுக்கு சும்மா இருந்தா சுகம் கிடைப்பது போல தெரியவில்லையே தொல்லை  தான் வருகிற‌தே இதற்கு என்ன தீர்வு என சிந்திக்க தொடங்கினான்.

சும்மா இருந்து சுகம் காணுதலின் அர்த்தம் என்ன என கூகிள் ஆண்டவனிடம் கேட்டான் .கேட்டதும் கொடுப்பவர் அவர் ஒருவரே..கூகிள் ஆண்டவர் கூறியதை இவனால் கடைப்பிடிக்க முடியாததும் மட்டுமல்ல அது புரியவுமில்லை.

என்ன செய்வது எனதெரியாமல் மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தான் அவனின் மென்டோர் கந்தரின் ஞாபகம் வரவே தொலைபேசியை எடுத்தான்.

போனை எடுத்து நம்பரை டச் பண்ண

"இஞ்சயப்பா யாருக்கப்பா போன் பண்ண போறீயல் "இளைப்பாறிய பின் 24/7 அவனை கமரா கண் கொண்டு அவதானிக்கும் அவனது மனைவி கேட்க,

"வேற யார் என்ட குரு கந்தருக்கு தான்"

"சும்மா எந்த நேரமும் அவருக்கு போன் பண்ணிகொண்டிருந்தா அவற்ற வீட்டில மனிசி என்ன நினைப்பா"

போனில் நம்பரை டச் பண்ணுவதை நிறுத்திய கந்தர்

"எல்லாரின்ட மனிசிமாரும் உம்மை மாதிரி இருக்க மாட்டினம்,அவரின்ட மனிசி தங்கம்"

"தங்கத்தோட எப்ப நீங்கள் கடைசியா கதைச்சனீங்கள்,ஆட்களை கண்டா கதைக்க மாட்டியள் ,சும்மா ஒர் வோமலிட்டிக்கு  சிரிப்பும் சிரிக்க மாட்டியல் வந்திட்டியல் அவரிட மனிசி தங்கம் எண்டு கொண்டு"

"ஆட்களை பார்த்தாலே தெரியுமப்பா நல்லவரோ கெட்டவரோ "

"நீங்கள் பெரிய உளவியல் நிபுனர் ,சாமியார் ,சாத்திரியார்,குறி சொல்பவர்"

மனிசி இப்படி உலகத்தில் உள்ள நிபுணர்களை துணைக்கு இழுத்து திட்ட அவனுக்கு புரிந்து விட்டது இதற்கு மேல கதைத்தால் வீடு ஜூலை கலவரமாக‌ மாறிவிடும் எண்டு..அமைதியாக இருந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டான்.கோபம் வந்தா இப்படிசெய்யுங்கள் என யூடியுப் டாக்டர்களின் ஆலோசனப்படி .அவன் மூச்சை உள் இழுத்து வெளியே விடுவதை அவதானித்தவள்  ,வயசு போன நேரத்தில்  இரத்த கொதிப்பை கொடுத்து மனுசனுக்கு என்னாவது நடந்திட்டா  என நினைத்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள்.

கலவரத்தை அமைதியாக இருந்து தடுத்து விட்டதாக நினைத்து ரிமோர்ட்டை எடுத்தவன் டி.வியை ஒன் செய்தான்.

"மொர்னிங் அப்பா"சொல்லி கொண்டே மூத்தவள் வேலைக்கு போக தயாராக வந்தாள் .

"மொர்னிங் மகள்"

"டூ டே வட்ஸ் யூ பிளான்,என்ன பிளான் இன்றைக்கு"

""பெரிய பிளான் ஒன்றுமில்லை சும்மா தான் இருப்பன், ஏன்"

"வோசிங்மெசினை ஒருக்கா போட்டு உடுப்புக்களை காய போட்டுவிடுறீங்களே"

"ம்ம்ம்...."என டி.வியை பார்த்த படி சொன்னான்.

"இஞ்சயப்பா மகள் சொன்னது கேட்டதே"

"ஒம் ஒம் சொன்னது கேட்டது ,ஆனால் எனக்கு மெசினை ஓன் பண்ண தெரியாது ,நீர் ஒருக்கா ஒன் பண்ணிவிடும் நான் எடுத்து காயப்போடுறேன்"

"இங்க வாங்கோ காட்டிதாரன் எப்படி ஒன் பண்ணுவது எண்டு"

"உதெல்லாம் பொம்பிளைகளின்ட, வேலை நான் ஏன் பழகவேணும்?"என புறுபுறுத்து கொண்டே லொன்றி அறைக்கு சென்றான்.

"அம்மா ,அப்பா என்னவாம்"

"மெசின் ஓன் பண்ணி உடுப்பு காயப்போடுறது பொம்பிளைகலின் வேலையாம்"

"‍ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன் மான்" என மகள் குரலை உயர்த்தி பேச,பயந்து போன அவன் மனையிடம்

"ஏன் இப்ப என்னை மாட்டி விடுகிறீர் ,மெசின் ஒன் பண்ண தெரியாது என்று தானே சொன்னனான்"

"எப்ப தான் நான் சொல்லுற‌ வேலைகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்திருக்கிறீயல்"

"ஏன் செய்ய வேணும் ,நான் பனங்காட்டு ஆண் சிங்கம், சொல்லு கேட்காது"

"பெரிய ஆண் சிங்கம் அதுவும் பனங்காட்டில, சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுறது, இதில வீராப்பு வேற,தள்ளுங்கோ நானே ஒன் பண்ணி காயப்போடுறேன்."

"

 

Edited by putthan
தலைப்பு மாற்றம்

  • putthan changed the title to ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தா

நானும் இளைப்பாறி 5 வருடமாகுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

வேலையிலிருந்து இளைப்பாறினால் பரிசாக கிடைப்பது நேரம் மட்டுமே.முப்பதைந்து  வருடங்களுக்கு மேலாக‌

முழுநேர பணியில் இருந்தவனுக்கு , தற்பொழுது முழுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பு கிடைத்து."சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகளின் வாசகம் ,எங்கயோ படித்த ஞாபகம் வரவே இது தானே சும்மா இருந்து சுகம் காணுதல் என நினைத்து இரண்டு நாள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான் .சும்மா இருந்தா சுகம் காணலாம் என சுவாமிகள் சொன்னார்,ஆனால் அவனுக்கு சும்மா இருந்தா சுகம் கிடைப்பது போல தெரியவில்லையே தொல்லை  தான் வருகிற‌தே இதற்கு என்ன தீர்வு என சிந்திக்க தொடங்கினான்.

சும்மா இருந்து சுகம் காணுதலின் அர்த்தம் என்ன என கூகிள் ஆண்டவனிடம் கேட்டான் .கேட்டதும் கொடுப்பவர் அவர் ஒருவரே..கூகிள் ஆண்டவர் கூறியதை இவனால் கடைப்பிடிக்க முடியாததும் மட்டுமல்ல அது புரியவுமில்லை.

என்ன செய்வது எனதெரியாமல் மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தான் அவனின் மென்டோர் கந்தரின் ஞாபகம் வரவே தொலைபேசியை எடுத்தான்.

போனை எடுத்து நம்பரை டச் பண்ண

"இஞ்சயப்பா யாருக்கப்பா போன் பண்ண போறீயல் "இளைப்பாறிய பின் 24/7 அவனை கமரா கண் கொண்டு அவதானிக்கும் அவனது மனைவி கேட்க,

"வேற யார் என்ட குரு கந்தருக்கு தான்"

"சும்மா எந்த நேரமும் அவருக்கு போன் பண்ணிகொண்டிருந்தா அவற்ற வீட்டில மனிசி என்ன நினைப்பா"

போனில் நம்பரை டச் பண்ணுவதை நிறுத்திய கந்தர்

"எல்லாரின்ட மனிசிமாரும் உம்மை மாதிரி இருக்க மாட்டினம்,அவரின்ட மனிசி தங்கம்"

"தங்கத்தோட எப்ப நீங்கள் கடைசியா கதைச்சனீங்கள்,ஆட்களை கண்டா கதைக்க மாட்டியள் ,சும்மா ஒர் வோமலிட்டிக்கு  சிரிப்பும் சிரிக்க மாட்டியல் வந்திட்டியல் அவரிட மனிசி தங்கம் எண்டு கொண்டு"

"ஆட்களை பார்த்தாலே தெரியுமப்பா நல்லவரோ கெட்டவரோ "

"நீங்கள் பெரிய உளவியல் நிபுனர் ,சாமியார் ,சாத்திரியார்,குறி சொல்பவர்"

மனிசி இப்படி உலகத்தில் உள்ள நிபுணர்களை துணைக்கு இழுத்து திட்ட அவனுக்கு புரிந்து விட்டது இதற்கு மேல கதைத்தால் வீடு ஜூலை கலவரமாக‌ மாறிவிடும் எண்டு..அமைதியாக இருந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டான்.கோபம் வந்தா இப்படிசெய்யுங்கள் என யூடியுப் டாக்டர்களின் ஆலோசனப்படி .அவன் மூச்சை உள் இழுத்து வெளியே விடுவதை அவதானித்தவள்  ,வயசு போன நேரத்தில்  இரத்த கொதிப்பை கொடுத்து மனுசனுக்கு என்னாவது நடந்திட்டா  என நினைத்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள்.

கலவரத்தை அமைதியாக இருந்து தடுத்து விட்டதாக நினைத்து ரிமோர்ட்டை எடுத்தவன் டி.வியை ஒன் செய்தான்.

"மொர்னிங் அப்பா"சொல்லி கொண்டே மூத்தவள் வேலைக்கு போக தயாராக வந்தாள் .

"மொர்னிங் மகள்"

"டூ டே வட்ஸ் யூ பிளான்,என்ன பிளான் இன்றைக்கு"

""பெரிய பிளான் ஒன்றுமில்லை சும்மா தான் இருப்பன், ஏன்"

"வோசிங்மெசினை ஒருக்கா போட்டு உடுப்புக்களை காய போட்டுவிடுறீங்களே"

"ம்ம்ம்...."என டி.வியை பார்த்த படி சொன்னான்.

"இஞ்சயப்பா மகள் சொன்னது கேட்டதே"

"ஒம் ஒம் சொன்னது கேட்டது ,ஆனால் எனக்கு மெசினை ஓன் பண்ண தெரியாது ,நீர் ஒருக்கா ஒன் பண்ணிவிடும் நான் எடுத்து காயப்போடுறேன்"

"இங்க வாங்கோ காட்டிதாரன் எப்படி ஒன் பண்ணுவது எண்டு"

"உதெல்லாம் பொம்பிளைகளின்ட, வேலை நான் ஏன் பழகவேணும்?"என புறுபுறுத்து கொண்டே லொன்றி அறைக்கு சென்றான்.

"அம்மா ,அப்பா என்னவாம்"

"மெசின் ஓன் பண்ணி உடுப்பு காயப்போடுறது பொம்பிளைகலின் வேலையாம்"

"‍ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன் மான்" என மகள் குரலை உயர்த்தி பேச,பயந்து போன அவன் மனையிடம்

"ஏன் இப்ப என்னை மாட்டி விடுகிறீர் ,மெசின் ஒன் பண்ண தெரியாது என்று தானே சொன்னனான்"

"எப்ப தான் நான் சொல்லுற‌ வேலைகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்திருக்கிறீயல்"

"ஏன் செய்ய வேணும் ,நான் பனங்காட்டு ஆண் சிங்கம், சொல்லு கேட்காது"

"பெரிய ஆண் சிங்கம் அதுவும் பனங்காட்டில, சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுறது, இதில வீராப்பு வேற,தள்ளுங்கோ நானே ஒன் பண்ணி காயப்போடுறேன்."

"

 

லங்கனுக்கு ..எதிகாலம் இப்படித்தான் ஆகுமோ......☹️

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, alvayan said:

லங்கனுக்கு ..எதிகாலம் இப்படித்தான் ஆகுமோ......☹️

ஆரம்பம் கொஞ்சம் கஸ்டம் தான்.

போகப்போக பழகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

வேலையிலிருந்து இளைப்பாறினால் பரிசாக கிடைப்பது நேரம் மட்டுமே.முப்பதைந்து  வருடங்களுக்கு மேலாக‌

முழுநேர பணியில் இருந்தவனுக்கு , தற்பொழுது முழுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பு கிடைத்து."சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகளின் வாசகம் ,எங்கயோ படித்த ஞாபகம் வரவே இது தானே சும்மா இருந்து சுகம் காணுதல் என நினைத்து இரண்டு நாள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான் .சும்மா இருந்தா சுகம் காணலாம் என சுவாமிகள் சொன்னார்,ஆனால் அவனுக்கு சும்மா இருந்தா சுகம் கிடைப்பது போல தெரியவில்லையே தொல்லை  தான் வருகிற‌தே இதற்கு என்ன தீர்வு என சிந்திக்க தொடங்கினான்.

சும்மா இருந்து சுகம் காணுதலின் அர்த்தம் என்ன என கூகிள் ஆண்டவனிடம் கேட்டான் .கேட்டதும் கொடுப்பவர் அவர் ஒருவரே..கூகிள் ஆண்டவர் கூறியதை இவனால் கடைப்பிடிக்க முடியாததும் மட்டுமல்ல அது புரியவுமில்லை.

என்ன செய்வது எனதெரியாமல் மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தான் அவனின் மென்டோர் கந்தரின் ஞாபகம் வரவே தொலைபேசியை எடுத்தான்.

போனை எடுத்து நம்பரை டச் பண்ண

"இஞ்சயப்பா யாருக்கப்பா போன் பண்ண போறீயல் "இளைப்பாறிய பின் 24/7 அவனை கமரா கண் கொண்டு அவதானிக்கும் அவனது மனைவி கேட்க,

"வேற யார் என்ட குரு கந்தருக்கு தான்"

"சும்மா எந்த நேரமும் அவருக்கு போன் பண்ணிகொண்டிருந்தா அவற்ற வீட்டில மனிசி என்ன நினைப்பா"

போனில் நம்பரை டச் பண்ணுவதை நிறுத்திய கந்தர்

"எல்லாரின்ட மனிசிமாரும் உம்மை மாதிரி இருக்க மாட்டினம்,அவரின்ட மனிசி தங்கம்"

"தங்கத்தோட எப்ப நீங்கள் கடைசியா கதைச்சனீங்கள்,ஆட்களை கண்டா கதைக்க மாட்டியள் ,சும்மா ஒர் வோமலிட்டிக்கு  சிரிப்பும் சிரிக்க மாட்டியல் வந்திட்டியல் அவரிட மனிசி தங்கம் எண்டு கொண்டு"

"ஆட்களை பார்த்தாலே தெரியுமப்பா நல்லவரோ கெட்டவரோ "

"நீங்கள் பெரிய உளவியல் நிபுனர் ,சாமியார் ,சாத்திரியார்,குறி சொல்பவர்"

மனிசி இப்படி உலகத்தில் உள்ள நிபுணர்களை துணைக்கு இழுத்து திட்ட அவனுக்கு புரிந்து விட்டது இதற்கு மேல கதைத்தால் வீடு ஜூலை கலவரமாக‌ மாறிவிடும் எண்டு..அமைதியாக இருந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டான்.கோபம் வந்தா இப்படிசெய்யுங்கள் என யூடியுப் டாக்டர்களின் ஆலோசனப்படி .அவன் மூச்சை உள் இழுத்து வெளியே விடுவதை அவதானித்தவள்  ,வயசு போன நேரத்தில்  இரத்த கொதிப்பை கொடுத்து மனுசனுக்கு என்னாவது நடந்திட்டா  என நினைத்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள்.

கலவரத்தை அமைதியாக இருந்து தடுத்து விட்டதாக நினைத்து ரிமோர்ட்டை எடுத்தவன் டி.வியை ஒன் செய்தான்.

"மொர்னிங் அப்பா"சொல்லி கொண்டே மூத்தவள் வேலைக்கு போக தயாராக வந்தாள் .

"மொர்னிங் மகள்"

"டூ டே வட்ஸ் யூ பிளான்,என்ன பிளான் இன்றைக்கு"

""பெரிய பிளான் ஒன்றுமில்லை சும்மா தான் இருப்பன், ஏன்"

"வோசிங்மெசினை ஒருக்கா போட்டு உடுப்புக்களை காய போட்டுவிடுறீங்களே"

"ம்ம்ம்...."என டி.வியை பார்த்த படி சொன்னான்.

"இஞ்சயப்பா மகள் சொன்னது கேட்டதே"

"ஒம் ஒம் சொன்னது கேட்டது ,ஆனால் எனக்கு மெசினை ஓன் பண்ண தெரியாது ,நீர் ஒருக்கா ஒன் பண்ணிவிடும் நான் எடுத்து காயப்போடுறேன்"

"இங்க வாங்கோ காட்டிதாரன் எப்படி ஒன் பண்ணுவது எண்டு"

"உதெல்லாம் பொம்பிளைகளின்ட, வேலை நான் ஏன் பழகவேணும்?"என புறுபுறுத்து கொண்டே லொன்றி அறைக்கு சென்றான்.

"அம்மா ,அப்பா என்னவாம்"

"மெசின் ஓன் பண்ணி உடுப்பு காயப்போடுறது பொம்பிளைகலின் வேலையாம்"

"‍ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன் மான்" என மகள் குரலை உயர்த்தி பேச,பயந்து போன அவன் மனையிடம்

"ஏன் இப்ப என்னை மாட்டி விடுகிறீர் ,மெசின் ஒன் பண்ண தெரியாது என்று தானே சொன்னனான்"

"எப்ப தான் நான் சொல்லுற‌ வேலைகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்திருக்கிறீயல்"

"ஏன் செய்ய வேணும் ,நான் பனங்காட்டு ஆண் சிங்கம், சொல்லு கேட்காது"

"பெரிய ஆண் சிங்கம் அதுவும் பனங்காட்டில, சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுறது, இதில வீராப்பு வேற,தள்ளுங்கோ நானே ஒன் பண்ணி காயப்போடுறேன்."

"

 

ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையை சொன்ன கதைக்கு பாராட்டுக்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் நீங்கள் ஏழு கடல் , ஏழு மலை தாண்டி மரப்பொந்துக்குள் போய் ஒழிந்தாலும் தொல்லை உங்களைத் தொடர்ந்து வரும் . ....... இதுதானே ஆரம்பம் . ....... தனித்திருக்கையில் ஏண்டா வயசுக்கு வந்தோம், வயசுக்கு வராமலே இருந்திருக்கலாம் என்று நினைப்பீர்கள் ...... இனித்தான் வேலைகள் எடுபிடியாகத்தான் இருக்கும் ஆனால் ஏராளமாய் இருக்கும் ........நாங்களும் உங்களின் பணிச்சுமை நீங்க அப்பப்ப நாலு ஆறுதல் வார்த்தைகள் கூறலாம் ........ வேறு என்ன தெரிவு என்று எனக்கும் தெரியவில்லை . ......! 🥲

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில நான் என்னத்த சொல்ல? அந்த டிப்பிக்கள் சிறிலங்கனுக்கு கலிகாலம் தொடங்கீட்டுது.

வெள்ளைக்காரன் பெஞ்சன் எடுத்தால் வேற லெவல்.

ஆனால் சிறிலங்கன் பெஞ்சன் எடுத்தால் வோசிங் மிசின்,நேசறி அது இது எண்டு அலைய வேண்டி இருக்கும்.

நீங்கள் சும்மாதானே இருக்கிறியளப்பா எண்ட பீலிங் மனிசி பிள்ளையளுக்கு வாறது இயல்பு கண்டியளோ..

காய் புத்தர் புதுக்கதையோட மீண்டும் கண்டதில் சந்தோசம். 🟢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2025 at 09:58, ஈழப்பிரியன் said:

புத்தா

நானும் இளைப்பாறி 5 வருடமாகுது.

நீங்கள் சீனியர் என்று சொல்லுறீயல்...நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ..🤚

On 1/8/2025 at 10:02, alvayan said:

லங்கனுக்கு ..எதிகாலம் இப்படித்தான் ஆகுமோ......☹️

பயப்பட வேண்டிய அவசியம் இல்லை இரண்டு நாள் போக நாங்களே விரும்பி செய்வோம் ...நேரம் போக வேணுமல்லோ ..வருகைஇக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி

On 1/8/2025 at 10:54, ஈழப்பிரியன் said:

ஆரம்பம் கொஞ்சம் கஸ்டம் தான்.

போகப்போக பழகிவிடும்.

உண்மை .....😂பிறகு யாரும் உத்தரவு போடமுதல் நாங்களே செய்து போடுவோம் ...எள் என சொல்லும் முன் எண்ணையாக நிற்போம்...

On 2/8/2025 at 00:46, தமிழ் சிறி said:

ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையை சொன்ன கதைக்கு பாராட்டுக்கள். 🙂

நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2025 at 07:03, குமாரசாமி said:

இதில நான் என்னத்த சொல்ல? அந்த டிப்பிக்கள் சிறிலங்கனுக்கு கலிகாலம் தொடங்கீட்டுது.

வெள்ளைக்காரன் பெஞ்சன் எடுத்தால் வேற லெவல்.

ஆனால் சிறிலங்கன் பெஞ்சன் எடுத்தால் வோசிங் மிசின்,நேசறி அது இது எண்டு அலைய வேண்டி இருக்கும்.

நீங்கள் சும்மாதானே இருக்கிறியளப்பா எண்ட பீலிங் மனிசி பிள்ளையளுக்கு வாறது இயல்பு கண்டியளோ..

காய் புத்தர் புதுக்கதையோட மீண்டும் கண்டதில் சந்தோசம். 🟢

வேலையில் இருக்கும் பொழுது ஒரு பொஸ் ,ஆனால் இளைப்பாறினால் பக்கத்து வீட்டுக்காரியும் பொஸ்...சும்மா தானே நிற்பியள் எங்கன்ட நாய்குட்டியை வோக்கிங் கூட்டிக் கொண்டு போறீயளே என்று கேட்கினம்....நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

On 2/8/2025 at 01:04, suvy said:

புத்தர் நீங்கள் ஏழு கடல் , ஏழு மலை தாண்டி மரப்பொந்துக்குள் போய் ஒழிந்தாலும் தொல்லை உங்களைத் தொடர்ந்து வரும் . ....... இதுதானே ஆரம்பம் . ....... தனித்திருக்கையில் ஏண்டா வயசுக்கு வந்தோம், வயசுக்கு வராமலே இருந்திருக்கலாம் என்று நினைப்பீர்கள் ...... இனித்தான் வேலைகள் எடுபிடியாகத்தான் இருக்கும் ஆனால் ஏராளமாய் இருக்கும் ........நாங்களும் உங்களின் பணிச்சுமை நீங்க அப்பப்ப நாலு ஆறுதல் வார்த்தைகள் கூறலாம் ........ வேறு என்ன தெரிவு என்று எனக்கும் தெரியவில்லை . ......! 🥲

இதுவும் கடந்து போகும் என தெய்வீக பாசையில் கூறி நிம்மதி அடையலாம் வேற வழி...எடுபிடி வேலை செய்வது எவ்வளவு கஸ்டம் என இப்ப தான் தெரியுது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2025 at 09:04, putthan said:

நான் பனங்காட்டு ஆண் சிங்கம்

புதுசா இருக்கு. பனங்காட்டுக்கை சிங்கம் எப்ப போனது? 😁
நல்ல அனுபவப் பகிர்வு. நினைச்சுப் பாக்க இப்பவே கிர் எண்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, villavan said:

புதுசா இருக்கு. பனங்காட்டுக்கை சிங்கம் எப்ப போனது? 😁
நல்ல அனுபவப் பகிர்வு. நினைச்சுப் பாக்க இப்பவே கிர் எண்டுது.

எல்லாம் ஒரு புருடா தான் இறந்த தலைவன் இருக்கிறார் என்ற மாதிரி,நரி பரி ஆக மாறியது போல பனங்காட்டு நரி சிங்கமாக மாறிவிட்டது இதுவும் ஒரு கருத்து ...உலகமே பொய் கருத்துகளின் உறைவிடமாக மாறி வெற்றி நடை போடுகிறது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.