Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!

08 Nov, 2025 | 02:08 PM

image

ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த தாதி, தனது பராமரிப்பில் இருந்த வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் இவ்வாறு கொலை செய்துள்ளார்.

இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்குத் தேவையற்ற அதிகப்படியான தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி அவர் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார்.

டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. விசாரணையில், அவர் 10 நோயாளிகளைக் கொலை செய்ததுடன், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றார் என்றும் தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்ட ஆண் தாதியின் பெயர் வெளியிடப்படாத நிலையில், வழக்கு விசாரணையின் இறுதியில், குற்றத்தை உறுதிசெய்த நீதிமன்றம், அந்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தாதியர்களால் அரங்கேற்றப்படும் தொடர் கொலைச் சம்பவங்கள் இது முதல் முறையல்ல. வடக்கு ஜேர்மனியில் 1999 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், நீல்ஸ் ஹோஜெல் (Niels Högel) என்ற ஆண் தாதி இரண்டு வைத்தியசாலைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது 2019 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் ஜேர்மனியின் நவீன வரலாற்றில் மிகவும் கொடூரமான தொடர் கொலைகாரராகக் கருதப்படுகிறார்.

தற்போது அதே பாணியில், இரவுப்பணி அழுத்தத்தைக் காரணம் காட்டி மற்றொரு தாதியர் நிகழ்த்திய கொடூரக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை, ஜேர்மன் சுகாதாரத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/229845

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தனது பராமரிப்பில் இருந்த வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் இவ்வாறு கொலை செய்துள்ளார்.

கருணைக் கொலை செய்தாரோ தெரியவில்லை. ஆனால்சட்டத்தை மீறுவதால் எற்படும் விளைவுகளை அவர் சிந்திதிருக்க வேண்டும். அல்லது கடுமையான மன அழுத்தத்ததினால் இப்படிச்செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணையாவது கருணை கொலையாது போட்டு தள்ளிவிட்டு நிம்மதியாக தான் இருக்க வேண்டும் என்ற கொள்கை தான் இந்த ஆண் தாதிக்கு இருந்திருக்கும். 10 பேரை தான் இவன் கொலை செய்யமுடிந்தது. ஆனால்

9 hours ago, ஏராளன் said:

மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றார்

இவன் வேறும் கொலைகள் செய்திருக்கலாமோ என்று பொலிஸ் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்களாம்

கொரோனா காலத்தில் யாழ்களத்தில் செய்தி படித்தனான் தடுப்பூசி போடுவதற்கு எதிரான கொள்கை கொண்ட யேர்மன் பெண் தாதி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்களுக்கு தடுப்பு மருந்தை குப்பை தொட்டிக்குள் எறிந்து விட்டு தண்ணீரை ஊசி மூலம் ஏற்றினாராம். அப்படி தண்ணீர் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் எத்தனை பேர் கொரோனாவுக்கு பலியானார்களோ 😟

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கருணையாவது கருணை கொலையாது போட்டு தள்ளிவிட்டு நிம்மதியாக தான் இருக்க வேண்டும் என்ற கொள்கை தான் இந்த ஆண் தாதிக்கு இருந்திருக்கும். 10 பேரை தான் இவன் கொலை செய்யமுடிந்தது. ஆனால்

இவன் வேறும் கொலைகள் செய்திருக்கலாமோ என்று பொலிஸ் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்களாம்

கொரோனா காலத்தில் யாழ்களத்தில் செய்தி படித்தனான் தடுப்பூசி போடுவதற்கு எதிரான கொள்கை கொண்ட யேர்மன் பெண் தாதி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்களுக்கு தடுப்பு மருந்தை குப்பை தொட்டிக்குள் எறிந்து விட்டு தண்ணீரை ஊசி மூலம் ஏற்றினாராம். அப்படி தண்ணீர் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் எத்தனை பேர் கொரோனாவுக்கு பலியானார்களோ 😟

Water for injection (WFI) வேறு மருந்துகளுடன் பாவிப்பதற்காக தயாரிக்கப்படுவது, இதனை தனியாக உடலில் செலுத்தினால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கருதுகிறேன்(சரியாக தெரியவில்லை).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, புலவர் said:

கருணைக் கொலை செய்தாரோ தெரியவில்லை. ஆனால்சட்டத்தை மீறுவதால் எற்படும் விளைவுகளை அவர் சிந்திதிருக்க வேண்டும். அல்லது கடுமையான மன அழுத்தத்ததினால் இப்படிச்செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

நான் தனிப்பட அறிந்த வரையில் சட்டவிரோதமான கருணைக்கொலைகள் ஜேர்மனியில் உண்டு.ஒரு தொகை பணம் கொடுக்க வேண்டும். இதை மருத்துவ தாதியர்களே செய்கின்றதாக சொல்கின்றார்கள். எனக்கு உண்மை பொய் தெரியாது.எல்லாம் கேள்விப்பட்டவையே.

ஜேர்மனிய அரசு கருணைக்கொலையை விவாதப்பொருளாக சிறிது காலம் வைத்திருந்தது.இப்போது என்னமாதிரி என தெரியவில்லை.சுவீஸ் மற்றும் நெதர்லாந்தில் கருணைக்கொலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.

எனது பார்வையில் நோய்களை மாற்ற முடியாமல் இருப்பவர்களுக்கு கருணைக்கொலை நல்ல திட்டம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

11 hours ago, ஏராளன் said:

அந்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் காரணம் இது .

இங்கே பல வயதான நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் இடமில்லாமல் சொந்த வீடுகளில் தங்க வைத்துப் பராமரிக்கப்படும் நிலையில் இவர் இப்படிக் கூறி மாட்டுப்பட்டுள்ளார். சரியான தண்டனையும் பெற்றுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புலவர் said:

கருணைக் கொலை செய்தாரோ தெரியவில்லை. ஆனால்சட்டத்தை மீறுவதால் எற்படும் விளைவுகளை அவர் சிந்திதிருக்க வேண்டும். அல்லது கடுமையான மன அழுத்தத்ததினால் இப்படிச்செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

ஒருவரது சுய விருப்பின்றி அல்லது அவர்களது குடும்பத்தினரின் விருப்பின்றி தனிப்பட்ட ஒரு தாதியர் கருணைக் கொலை செய்ய இயலாது..இரவு நேரப் பணியாளர்களுக்கு இருக்க கூடிய அதிக மன அழுத்தம் நோயாளிகள் தங்களை தொந்தரவு செய்யாமலிருக்க, சத்தமின்றி தூங்க வைப்பதற்கு தூக்க மருந்துகளை குடுத்திருக்க கூடிய வாய்ப்புக்களே அதிகம்.இங்கு கூட இரவு நேர பணிகளில் ஏற்படும் அழுத்தங்களினால் (அதுவும் பெண்கள்) போதைக்கு அடிமையாகி வேலையை விட்டுட்டு அலைபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Edited by யாயினி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.