Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

உலக அரசியலில் ரஷ்யாவும் அமெரிக்காவும் நிறுத்தி நிதானித்து அமைதியாக செயற்படுகின்றார்கள். இடையில் இருப்பவர்கள் தான் பொங்கி எழுகின்றார்கள்.

எதிரியாக இருந்தாலும் சீன வளர்ச்சி விடயத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு.....

அமெரிக்க ஆகாயத்தில் பலூன் பறக்க விட்டு அழகு பார்த்தவன் சீனன். அவனுக்கு அமெரிக்க நடவடிக்கைகளை கண்காணிக்க தனி செய்மதி தேவையில்லை.😂

வெளியுறவுக்கொள்கை என்பது தனிப்பட ஒரு அதிபரால் தீர்மானிக்கப்படுவதில்லைதான், ஆனால் அவர்களது ஆளுமை நிச்சயமாக இருக்கும், ரோசவெல்ட் போல புதிய அமெரிக்காவினை கட்டமைத்து வரலாற்றில் இடம்பெறவேண்டும் என ட்ரம்ப் விரும்புகிறார் என கூறிய விடயத்தினில் இப்போதும் மாற்றமில்லை.

இப்போதுள்ள உலக ஒழுங்கு பல்துருவ உலக ஒழுஙிற்கான ஆரம்பம் என கூறுகிறார்கள், இன்னொரு தரப்பு புதிய பனிப்போர்கால உலக ஒழுங்கு என கூறுகிறார்கள்.

ஆனால் அமெரிக்கா கையிலெடுத்திருக்கும் மொன்ரோ கோட்பாடு அமெரிக்காவினை முன்னிலைப்படுத்திய கோட்பாடு, இதன் மூலம் தற்போது அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் தெரிகிறது, ஆனால் இந்த தடாலடி முயற்சி; உக்கிரேன் இரஸ்சிய கேர்ஸ்க் ஆக்கிரமிப்பு போன்றது என நினைக்கிறேன், இது அமெரிக்காவிற்கு உடனடி நலனை கொடுக்கும், ஆனால் அடிப்படை ரீதியான தோல்விக்கான ஆரம்பமாக உருவெடுக்கும் என நினைக்கிறேன்.

  • Replies 72
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போ

  • குமாரசாமி
    குமாரசாமி

    வெனிசுலா எந்த விதத்திலும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லாத நாடு. இருந்தும் அந்த நாடு மீது அமெரிக்கா ஆக்கிரமித்தது கண்டிக்க வேண்டிய செயல். கேவலம்.....அமெரிக்கர்கள் வீட்டுக்கு 5 வாகனங்கள் வைத்திருப்ப

  • உக்ரைனை நீ வச்சுக்கோ!தாய்வானை அவன்வச்சிருக்கட்டும்!!வெனிசுலாவை நான்வச்சிருக்கிறன். பட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேக்கரி டீல் ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா முன்னர் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் அல்லது அக்கிரமிப்புப் போர்களில் முவைத்த பொய்யான காரணங்களைப் போல் அல்லாமல் வெனிசுவேலா மீது தாம் மூன்று மணிநேர நடவடிக்கையினை நடத்தி மடூரோவைக் கைது செய்ததன் உண்மையான நோக்கம் வெனிசுவேலாவில் இருக்கும் எண்ணை வளத்தைத் தாம் கைய்யகப் படுத்தத்தான் என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். எண்ணெய்க் கிணறுகளை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அவற்றை மீளக் கட்டியெழுப்பி, முன்னர் அங்கு இயங்கிய அமெரிக்க எண்ணெய்க் கம்பெணிகள் கடந்த இரு வெனிசுவேலா நிர்வாகங்களினால் மூடப்பட்டபோது ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்டவீட்டை வளங்கப்போவதாகவும், பின்னர் எண்ணெயினை அகழ்ந்தெடுத்து, சுத்திகரித்து , ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் பணத்தை இக்கம்பெணிகள் எடுக்கும் என்றும், வெனிசுவேலா நாட்டினை அபிவிருத்தி செய்யவும் இந்நிதி பயன்படும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

ஆக, மடூரோ தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டதோ அல்லது அமெரிக்காவினுள் போதைவஸ்த்தை கொண்டு வருவதைத் தடுக்க ஆவண செய்யாமலிருப்பதோ அவர் கைதுசெய்யப்பட்டு இழுத்துவரப்படுவதற்குக் காரணமில்லை.

ட்ரம்ப்பிற்கும் புட்டினுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், ட்ரம்ப் வெனிசுவெலாவின் எண்ணெய் வளத்தை பலாத்காரமாகத் திருடப்போகிறார், புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

தைவான் தென்சீன கடலில் சீன பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிக முக்கிய அமைவிடம் அதனை அமெரிக்கா இலகுவாக கைவிடுமா?

டிரம்ப் அமெரிக்காவும், நாம் அறிந்த டிரம்ப் அல்லாத அமேரிக்காவும் ஒன்றல்ல. பழைய சூத்திரங்கள் (formula) டிரம்ப் அமெரிக்காவுக்கு பொருந்தாது என்பது என் கருத்து.

டிரம்ப் அமெரிக்காவுக்கு அமெரிக்காவின் பொருளாதார நலன் ஒரு பொருட்டல்ல. தேர்தலில் தோற்கும் அளவுக்கு பொருளாதாரம் அடி வாங்காதவரை.

கிரீன்லாந்தை எடுத்து கொள்ளுங்கள். அமெரிக்கா அதை கைப்பற்ற வேண்டிய அவசியமே இல்லை. யாருக்கும் சொல்லாமல் - டென்மார்க்கை திரைமறைவில் நெருக்கினாலே தேவையான சகல வளமும் சலுகை விலையில் கிடைக்கும்.

ஆனால் இப்படி டென்மார்க்கை, ஈயுவை அவமானப்படுத்தும் விதமாக பொதுவெளியில் அமேரிக்கா நடந்து கொள்வது - கிரீன்லாந்தை எடுப்பது என்பதை விட, ஏனைய நேட்டோ/ஈயூ நாடுகளை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கம் என்பதை காட்டுகிறது.

இதேதான் ஜப்பானுக்கும்.

ஏலவே கவனித்திருப்பீர்கள் - பெண்டகன் அண்மையில் வெளியிட்ட பல விபரங்கள் தாங்கள் செய்த அத்தனை war-gaming இலும் சீனாவிடம் அமெரிக்கா தோற்பதாக வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.

பொதுவாக இது உண்மை எனிலும் இதை எந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிடாது. ஆனால் இந்த பெண்டகன் செய்கிறது.

இது தைவானை கைவிடும் முடிவுக்கு அமெரிக்க மக்களை, உள்ளூர் ஆடியன்ஸை தயார் படுத்தும் முயற்சி என நான் காண்கிறேன்.

இதே ஒத்த அணுகுமுறைதான் ஜப்பான்- வடகொரியா, தென்சீன கடலில் சீனா-பிலிப்பைன்ஸ் விடயத்திலும் நடக்கும்.

மத்திய கிழக்கு தவிர உலகில் வேறெந்த பகுதியிலும், ஐரோப்பாவிலும் கூட, அமெரிக்கா வெறும் அறிக்கையோடு நிறுத்தி கொள்ளும் ஒரு நிலை விரைந்து ஏற்படும் என நான் எண்ணுகிறேன்.

அதேபோல் சம்பந்தமில்லாமல், தனது அயலில் சிவனே எண்டு இருந்த வெனிசுவேலா, கொலம்பியா, கியூபாவோடு இல்லாத விடயங்களை கூறி அமெரிக்கா பிரசனைப்பட்டு - அதில் அதன் நேரம், வலு செலவழியும்.

நேரடியாக வெல்லப்பட முடியாத ஒரு சக்தியை, எப்படி அதன் சக்திகளை ஒவ்வொன்றாக அகற்றி நீண்டகால நோக்கில் தோறகடிக்க முடியும் என்பதை காட்டும் ஒரு வேலைதிட்டத்தின் நடுப்பகுதியில் நாம் நிற்கிறோம்.

இதை முழுமையாக செய்து முடிக்க டிரம்ப் 3 ம் முறை ஜனாதிபதி ஆவது தேவைப்படும் என நினைக்கிறேன்.

Vance ஐ திடீரென டிரம்ப் ஓரம்கட்டுவதும் இதனால் என்றே எண்ணுகிறேன்.

அமேரிக்காவில் ஒரு ஆள்-அரசு இருப்பதாக பலர் சொல்கிறார்கள். இதை கணிசமாக கட்டுப்படுத்துவது யூதர்கள். ஆகவேதான் அமெரிக்காவின் இஸ்ரேல், மத்திய கிழக்கு கொள்கை வழமைபோல் இருக்கும் அல்லது மேலும் இஸ்ரேல்லுக்கு சாதமாகும்.

அங்கேயும் அமெரிக்காவின் வகிபாகத்தை குறைத்தால் - அது இஸ்ரேலை பாதிக்கும் - அப்போ ஆள் அரசு விழித்து, டிரம்பை அகற்ற பார்த்தால் - மொத்த திட்டமும் கெட்டு விடும்.

எனவேதான் மத்திய கிழக்கு மட்டும் வழமை போல் தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

திட்டத்தின் இலக்கு -

அமெரிக்காவை இப்போ இருப்பது போல ஒரு ஒற்றை உலக வல்லரசாக அல்லாமல், அமெரிக்க கண்டத்தில் மட்டும் ஆளுமை உல்ல பிராந்திய வல்லரசாக சுருக்குவது.

உலகை 3 ஆட்புலங்களாக spheres of influence ஆக்குவது.

அவையாவன

  1. அமெரிக்காவின் ஆள்புலம் - வட தென் அமெரிக்கா, மேற்கு பசுபிக், மத்திய கிழக்கு

  2. ரஸ்யா ஆட்புலம் - ஐரோப்பா, மத்திய ஆசியா

  3. சீனா -இந்து சமுதிரம் சார் பகுதிகள், கிழக்கு பசுபிக்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

டிரம்ப் அமெரிக்காவும், நாம் அறிந்த டிரம்ப் அல்லாத அமேரிக்காவும் ஒன்றல்ல. பழைய சூத்திரங்கள் (formula) டிரம்ப் அமெரிக்காவுக்கு பொருந்தாது என்பது என் கருத்து.

டிரம்ப் அமெரிக்காவுக்கு அமெரிக்காவின் பொருளாதார நலன் ஒரு பொருட்டல்ல. தேர்தலில் தோற்கும் அளவுக்கு பொருளாதாரம் அடி வாங்காதவரை.

கிரீன்லாந்தை எடுத்து கொள்ளுங்கள். அமெரிக்கா அதை கைப்பற்ற வேண்டிய அவசியமே இல்லை. யாருக்கும் சொல்லாமல் - டென்மார்க்கை திரைமறைவில் நெருக்கினாலே தேவையான சகல வளமும் சலுகை விலையில் கிடைக்கும்.

ஆனால் இப்படி டென்மார்க்கை, ஈயுவை அவமானப்படுத்தும் விதமாக பொதுவெளியில் அமேரிக்கா நடந்து கொள்வது - கிரீன்லாந்தை எடுப்பது என்பதை விட, ஏனைய நேட்டோ/ஈயூ நாடுகளை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கம் என்பதை காட்டுகிறது.

இதேதான் ஜப்பானுக்கும்.

ஏலவே கவனித்திருப்பீர்கள் - பெண்டகன் அண்மையில் வெளியிட்ட பல விபரங்கள் தாங்கள் செய்த அத்தனை war-gaming இலும் சீனாவிடம் அமெரிக்கா தோற்பதாக வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.

பொதுவாக இது உண்மை எனிலும் இதை எந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிடாது. ஆனால் இந்த பெண்டகன் செய்கிறது.

இது தைவானை கைவிடும் முடிவுக்கு அமெரிக்க மக்களை, உள்ளூர் ஆடியன்ஸை தயார் படுத்தும் முயற்சி என நான் காண்கிறேன்.

இதே ஒத்த அணுகுமுறைதான் ஜப்பான்- வடகொரியா, தென்சீன கடலில் சீனா-பிலிப்பைன்ஸ் விடயத்திலும் நடக்கும்.

மத்திய கிழக்கு தவிர உலகில் வேறெந்த பகுதியிலும், ஐரோப்பாவிலும் கூட, அமெரிக்கா வெறும் அறிக்கையோடு நிறுத்தி கொள்ளும் ஒரு நிலை விரைந்து ஏற்படும் என நான் எண்ணுகிறேன்.

அதேபோல் சம்பந்தமில்லாமல், தனது அயலில் சிவனே எண்டு இருந்த வெனிசுவேலா, கொலம்பியா, கியூபாவோடு இல்லாத விடயங்களை கூறி அமெரிக்கா பிரசனைப்பட்டு - அதில் அதன் நேரம், வலு செலவழியும்.

நேரடியாக வெல்லப்பட முடியாத ஒரு சக்தியை, எப்படி அதன் சக்திகளை ஒவ்வொன்றாக அகற்றி நீண்டகால நோக்கில் தோறகடிக்க முடியும் என்பதை காட்டும் ஒரு வேலைதிட்டத்தின் நடுப்பகுதியில் நாம் நிற்கிறோம்.

இதை முழுமையாக செய்து முடிக்க டிரம்ப் 3 ம் முறை ஜனாதிபதி ஆவது தேவைப்படும் என நினைக்கிறேன்.

Vance ஐ திடீரென டிரம்ப் ஓரம்கட்டுவதும் இதனால் என்றே எண்ணுகிறேன்.

அமேரிக்காவில் ஒரு ஆள்-அரசு இருப்பதாக பலர் சொல்கிறார்கள். இதை கணிசமாக கட்டுப்படுத்துவது யூதர்கள். ஆகவேதான் அமெரிக்காவின் இஸ்ரேல், மத்திய கிழக்கு கொள்கை வழமைபோல் இருக்கும் அல்லது மேலும் இஸ்ரேல்லுக்கு சாதமாகும்.

அங்கேயும் அமெரிக்காவின் வகிபாகத்தை குறைத்தால் - அது இஸ்ரேலை பாதிக்கும் - அப்போ ஆள் அரசு விழித்து, டிரம்பை அகற்ற பார்த்தால் - மொத்த திட்டமும் கெட்டு விடும்.

எனவேதான் மத்திய கிழக்கு மட்டும் வழமை போல் தொடர்கிறது.

34 minutes ago, goshan_che said:

திட்டத்தின் இலக்கு -

அமெரிக்காவை இப்போ இருப்பது போல ஒரு ஒற்றை உலக வல்லரசாக அல்லாமல், அமெரிக்க கண்டத்தில் மட்டும் ஆளுமை உல்ல பிராந்திய வல்லரசாக சுருக்குவது.

உலகை 3 ஆட்புலங்களாக spheres of influence ஆக்குவது.

அவையாவன

  1. அமெரிக்காவின் ஆள்புலம் - வட தென் அமெரிக்கா, மேற்கு பசுபிக், மத்திய கிழக்கு

  2. ரஸ்யா ஆட்புலம் - ஐரோப்பா, மத்திய ஆசியா

  3. சீனா -இந்து சமுதிரம் சார் பகுதிகள், கிழக்கு பசுபிக்.

நீங்கள் கூறுவது விளங்குகிறது.

உலக பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம் என கருதுகிறேன், இந்த வெனிசுலா பிரச்சினை மற்றும் புதிய உலக ஒழுங்கின் போக்கு கோவிட் கால பாதிப்பு நீட்சியாக இருக்குமோ என கருதுகிறேன்.

கோவிட் காலத்தில் இருந்ததனை போல வழங்கல் சங்கிலியில் மிக பெரிய இடையுறு தற்போதுதான் உள்ளது, தற்பொதய முயற்சிகள் ஒரு தன்னிறைவு பிராந்திய பொருளாதாரத்தினை மையமாக மாற்றம் ஏற்படுவது போல உணருகிறேன்.

அமெரிக்க பொருளாதார நெருக்கடி; அமெரிக்க பாதுகாப்பு செலவீடுகளை மட்டுப்படுத்துகிறது, இது சேத கட்டுப்பாடு நடவடிக்கையாக இருக்குமா?

முன்னரை போல அமெரிக்க பாதுகாப்பிற்கு அமெரிக்காவினால் செலவிடமுடியாது என கருதுகிறேன்.

இது ஒரு தவிர்க்கமுடியாத கால மாற்றம், அதற்கு சில கடந்த கால கொள்கைகளும் காரணமாகிறது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் புவிசார் அரசியல் நிகழ்வுகளின் தாக்கம்

உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் ஒரு வெற்றிடத்தில் இயங்குவதில்லை. அவை அரசியல் முடிவுகள், வர்த்தகக் கொள்கைகள், மோதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஆழமாக பாதிக்கப்படுகின்றன. திடீர் கொள்கை மாற்றங்கள் மூலப்பொருட்களை சீர்குலைக்கும் போது, போக்குவரத்து வழிகள் பிராந்திய உறுதியற்ற தன்மை காரணமாக சாத்தியமற்றதாக மாறும்போது அல்லது முக்கியமான மூலப்பொருட்கள் தேசிய நலன்களால் கட்டுப்படுத்தப்படும்போது வணிகங்கள் போராடுவதை நான் கண்டிருக்கிறேன். புவிசார் அரசியல் நிகழ்வுகள் விநியோகச் சங்கிலி செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை எந்த நிறுவனமும் புறக்கணிக்க முடியாது என்பதே உண்மை. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறுவதற்கு எதிர்வினை நடவடிக்கைகளை விட அதிகமாக தேவைப்படுகிறது - இதற்கு மூலோபாய திட்டமிடல், மாற்று ஆதாரங்கள் மற்றும் உலகளாவிய அபாயங்களைப் பற்றிய புரிதல் தேவை. புவிசார் அரசியல் நிகழ்வுகள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை வடிவமைக்கும் முக்கிய வழிகளையும், இடையூறுகளைக் குறைக்க வணிகங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் கூர்ந்து கவனிப்போம்.

வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கட்டணங்கள் விநியோக வலையமைப்புகளை மறுவடிவமைக்கக்கூடும்

அரசாங்கங்கள் வரிகள் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, விநியோகச் சங்கிலிகள்  விரைவாக சரிசெய்யப்பட வேண்டும். மூலப்பொருட்கள் அல்லது முடிக்கப்பட்ட பொருட்களின் மீதான திடீர் வரி உயர்வுகள் காரணமாக ஒரே இரவில் தங்கள் மூலப்பொருட்கள் வாங்கும் உத்திகளை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிறுவனங்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்கும் போது, வணிகங்கள் கடினமான முடிவை எதிர்கொள்கின்றன: கூடுதல் செலவுகளை உள்வாங்குதல், அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் அல்லது வரி இல்லாத பகுதிகளில் புதிய சப்ளையர்களைக் கண்டறிதல்.

சில நிறுவனங்கள் சப்ளையர் தளங்களை பல்வகைப்படுத்துவதன் மூலம் இந்த அபாயங்களைக் குறைக்கின்றன, முக்கியமான பொருட்களுக்கு அவர்கள் ஒரு நாட்டை அதிகமாகச் சார்ந்திருக்கவில்லை என்பதை உறுதி செய்கின்றன. மற்றவை கட்டுப்பாடுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வர்த்தகத்திற்கு உகந்த பகுதிகளில் செயல்பாடுகளை நிறுவுகின்றன. வர்த்தகக் கொள்கைகள் எதிர்பாராத விதமாக மாறும்போது அதன் ஆதார உத்தியில் மிகவும் இறுக்கமாக இருக்கும் விநியோகச் சங்கிலி எப்போதும் போராடும்.

அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மோதல்கள் தளவாடங்களை சீர்குலைக்கின்றன

போர்கள், போராட்டங்கள் மற்றும் இராஜதந்திர பதட்டங்கள் விநியோகச் சங்கிலிகளில் உடனடி இடையூறுகளை உருவாக்குகின்றன. முக்கிய கப்பல் பாதைகளில் ஏற்படும் மோதல்கள் காரணமாக வணிகங்கள் பெரும் இடையூறுகளை சந்திப்பதை நான் கண்டிருக்கிறேன், இதனால் அவை மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு பிரதான உதாரணம் செங்கடல் நெருக்கடி, அங்கு வணிகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் நிறுவனங்கள் ஏற்றுமதிகளை மறுவழியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, இதனால் விநியோக காலக்கெடுவில் நாட்கள் அல்லது வாரங்கள் கூட சேர்க்கப்படுகின்றன.

அவசரகாலத் திட்டங்களை வைத்திருப்பது அவசியம். மாற்றுத் தளவாடத் திட்டங்கள் இல்லாமல் ஒற்றை வர்த்தக வழியை மட்டுமே நம்பியிருக்கும் வணிகங்கள்தான் நிலையற்ற தன்மை ஏற்படும்போது முதலில் பாதிக்கப்படும். முதன்மை போக்குவரத்து வழிகள் இனி சாத்தியமில்லாதபோது, பல தளவாட வழங்குநர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதும், பிராந்திய கிடங்குகளைப் பராமரிப்பதும் மிகவும் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும்.

பொருளாதாரத் தடைகள் சந்தை அணுகலையும் சப்ளையர் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகின்றன

தடைகள் ஒரே இரவில் முழு விநியோகச் சங்கிலிகளையும் துண்டிக்கக்கூடும். சர்வதேச தடைகள் காரணமாக நீண்ட கால சப்ளையர்களுடன் வணிகம் செய்ய முடியாமல் திணறிய நிறுவனங்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். எண்ணெய், குறைக்கடத்திகள் அல்லது முக்கிய மூலப்பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் எதுவாக இருந்தாலும், இந்த இடையூறுகளுக்குத் தயாராக இல்லாத வணிகங்கள் பெரும்பாலும் உற்பத்தி நிறுத்தங்களை எதிர்கொள்கின்றன.

உலகளவில் செயல்படும் நிறுவனங்கள், புவிசார் அரசியல் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதன் மூலம் சாத்தியமான தடைகளுக்கு முன்னால் இருக்க வேண்டும். தடைசெய்யப்படாத பிராந்தியங்களில் மாற்று சப்ளையர்களுடன் உறவுகளைப் பேணுபவர்கள், தடைகள் வர்த்தகத்தைப் பாதிக்கும்போது அவற்றைச் சரிசெய்ய எளிதாக நேரத்தைக் கொண்டுள்ளனர். தடைகளின் சாத்தியக்கூறுகளைப் புறக்கணிப்பது ஒரு விலையுயர்ந்த தவறு, இது வணிகங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளை புதிதாக மீண்டும் கட்டியெழுப்பத் துடிக்க வைக்கும்.

வள தேசியவாதம் முக்கியமான பொருட்களை அணுகுவதை கட்டுப்படுத்துகிறது

இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகள் சில சமயங்களில் பொருளாதார ஆதாயத்தைப் பெறுவதற்காக ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துகின்றன. நாடுகள் அரிய மண் தாதுக்கள், லித்தியம் மற்றும் எரிசக்தி வளங்களுக்கு வரம்புகளை விதிப்பதை நான் கண்டிருக்கிறேன், இதனால் அவற்றை நம்பியுள்ள தொழில்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது இந்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது, ஏனெனில் நாடுகள் முக்கியமான கனிமங்களின் மூலோபாய முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றன.

இந்தப் பொருட்களைச் சார்ந்திருக்கும் வணிகங்கள், பற்றாக்குறை ஒரு நெருக்கடியாக மாறுவதற்கு முன்பு, நீண்டகால விநியோக ஒப்பந்தங்களைப் பெற்று, மாற்று ஆதாரங்களை ஆராய வேண்டும். சில நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு செய்கின்றன அல்லது அரசியல் ரீதியாக நிலையான பிராந்தியங்களில் கூட்டாண்மைகளை உருவாக்குகின்றன, இதனால் ஒற்றை சப்ளையர் நாட்டைச் சார்ந்திருப்பதைக் குறைக்கின்றன. தயாராக இல்லாத நிறுவனங்கள் பெரும்பாலும் வளக் கொள்கைகளை மாற்ற வேண்டியிருக்கும்.

தொழில்நுட்பப் போட்டிகள் விநியோகச் சங்கிலி சார்புகளை மறுவடிவமைக்கின்றன.

தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலிகள் ஒரு தனித்துவமான சவாலை எதிர்கொள்கின்றன: அறிவுசார் சொத்து, குறைக்கடத்தி உற்பத்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்கள் மீதான புவிசார் அரசியல் போட்டி. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் நிறுவனங்கள் தங்கள் சப்ளையர்கள் மற்றும் கூட்டாளர்களை மறுபரிசீலனை செய்ய நிர்பந்தித்ததை நான் கண்டிருக்கிறேன். உலகளாவிய சக்திகளிடையே குறைக்கடத்தி தன்னிறைவுக்கான தொடர்ச்சியான உந்துதல் தொழில்நுட்ப போட்டிகள் விநியோகச் சங்கிலிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு.

குறிப்பிட்ட தொழில்நுட்ப சப்ளையர்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள், புவிசார் அரசியல் மாற்றங்களின் அபாயங்களை மதிப்பிட வேண்டும். ஏற்றுமதி தடைகள் அல்லது கட்டுப்பாடுகளால் ஏற்படும் விநியோகச் சங்கிலி இடையூறுகளைத் தவிர்க்க பல வணிகங்கள் பிராந்திய உற்பத்தி வசதிகளில் முதலீடு செய்கின்றன. இந்தப் போக்குகளைப் புறக்கணிப்பவர்கள், கொள்கைகள் மாறும்போது முக்கியமான விநியோகச் சங்கிலிகளிலிருந்து தங்களை வெளியேற்றிக் கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

சுற்றுச்சூழல் கொள்கைகள் விநியோகச் சங்கிலி சரிசெய்தல்களை இயக்குகின்றன

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடுமையாக்குகின்றன, இதனால் வணிகங்கள் தங்கள் விநியோகச் சங்கிலி உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. புதிய கார்பன் உமிழ்வு கொள்கைகளுக்கு இணங்க, தங்கள் தளவாடங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை மாற்றியமைக்க வேண்டிய நிறுவனங்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். இந்த விதிமுறைகள் போக்குவரத்து மற்றும் தாக்க ஆதாரங்கள், பேக்கேஜிங் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை பாதிக்கின்றன.

தொலைநோக்குப் பார்வை கொண்ட வணிகங்கள், விதிமுறைகள் தங்கள் கையை வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தக் காத்திருப்பதற்குப் பதிலாக, நிலையான விநியோகச் சங்கிலிகளில் இப்போது முதலீடு செய்கின்றன. தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும், போக்குவரத்தில் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங்கிற்கு மாறும் நிறுவனங்கள், எதிர்கால ஒழுங்குமுறை மாற்றங்களுக்கு முன்னதாகவே தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன. இந்த மாற்றங்களைத் தாமதப்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிக செலவுகளையும் பின்னர் விநியோகச் சங்கிலி இடையூறுகளையும் எதிர்கொள்கின்றனர்.

உலகளாவிய சுகாதார நெருக்கடிகள் விநியோகச் சங்கிலி பாதிப்புகளை வெளிப்படுத்துகின்றன

சுகாதார நெருக்கடிகள் பாரம்பரிய புவிசார் அரசியல் நிகழ்வுகளாக இல்லாவிட்டாலும் , அவற்றுக்கான அரசாங்க நடவடிக்கைகள் பெரிய விநியோகச் சங்கிலி தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எல்லை மூடல்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பது பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். சுகாதார அவசரநிலைகளின் போது அரசாங்கங்கள் திடீரென மருந்துகள், மருத்துவப் பொருட்கள் அல்லது அத்தியாவசிய மூலப்பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும்போது வணிகங்கள் போராடுவதை நான் கண்டிருக்கிறேன்.

இந்த இடையூறுகளைச் சிறப்பாகச் சமாளிக்கும் நிறுவனங்கள், பன்முகப்படுத்தப்பட்ட சப்ளையர் நெட்வொர்க்குகளைப் பராமரித்து, நிகழ்நேர விநியோகச் சங்கிலி கண்காணிப்பில் முதலீடு செய்கின்றன. முக்கியமான பொருட்களின் மூலோபாய இருப்புக்களை வைத்திருப்பது மற்றும் மாற்று உற்பத்தி ஆதாரங்களை அணுகுவதை உறுதி செய்வது, உலகளாவிய நெருக்கடிகளின் போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

புவிசார் அரசியல் நிகழ்வுகள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை எவ்வாறு பாதிக்கின்றன?

  • வர்த்தகக் கொள்கைகள்: கட்டணங்களும் கட்டுப்பாடுகளும் செலவுகளை அதிகரிக்கின்றன.

  • அரசியல் உறுதியற்ற தன்மை: மோதல்கள் போக்குவரத்து மற்றும் உற்பத்தியை சீர்குலைக்கின்றன.

  • தடைகள்: சந்தைகள் மற்றும் சப்ளையர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்.

  • வளக் கட்டுப்பாடு: ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பற்றாக்குறையை உருவாக்குகின்றன.

  • தொழில்நுட்பப் போட்டிகள்: விநியோகச் சங்கிலி சார்புகளை மாற்றுதல்.

  • சுற்றுச்சூழல் விதிமுறைகள்: மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் உற்பத்தியில் கட்டாய மாற்றங்களை ஏற்படுத்துதல்.

  • சுகாதார நெருக்கடிகள்: பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலி தாமதங்களை ஏற்படுத்துகின்றன.

முடிவில்

புவிசார் அரசியல் அபாயங்கள் நீங்கவில்லை, அவற்றைப் புறக்கணிக்கும் வணிகங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. வர்த்தக மோதல்கள், பிராந்திய மோதல்கள், தடைகள் மற்றும் வளக் கட்டுப்பாடுகள் ஆகியவை உலகளாவிய தளவாடங்களை மறுவடிவமைக்கும். உலகளாவிய முன்னேற்றங்களைக் கண்காணிக்கும், சப்ளையர்களைப் பன்முகப்படுத்தும், மாற்று தளவாட வழிகளைப் பாதுகாக்கும் மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்களுக்கு முன்னால் இருக்கும் நிறுவனங்கள் எப்போதும் வலுவான நிலையில் இருக்கும். புவிசார் அரசியல் அபாயங்களை ஒரு பின்னோக்கிச் சிந்திப்பவர்கள், நெருக்கடிகளுக்கு முன்னால் இருப்பதற்குப் பதிலாக தொடர்ந்து எதிர்வினையாற்றுவதைக் காண்பார்கள். நன்கு தயாரிக்கப்பட்ட விநியோகச் சங்கிலி என்பது எதிர்பாராதவற்றுக்குத் திட்டமிடும் ஒன்றாகும் - ஏனெனில் இன்றைய உலகப் பொருளாதாரத்தில், நிச்சயமற்ற தன்மை மட்டுமே உறுதியானது.

 

"நன்கு தயாரிக்கப்பட்ட விநியோகச் சங்கிலி என்பது எதிர்பாராதவற்றுக்குத் திட்டமிடும் ஒன்றாகும் - ஏனெனில் இன்றைய உலகப் பொருளாதாரத்தில், நிச்சயமற்ற தன்மை மட்டுமே உறுதியானது. Quora இல் என்னுடன் இணைவதன் மூலம் புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நுண்ணறிவுகளுக்கு முன்னால் இருங்கள்."

https://bengordonpalmbeach.com/2025/03/the-impact-of-geopolitical-events-on-global-supply-chains/#:~:text=Global%20supply%20chains%20don't,an%20understanding%20of%20global%20risks.

மேலே கூறிய எனது கருத்துடன் நேரடியாக இந்த கட்டுரை சம்பந்தப்படவில்லை ஆனாலும் இதில் கூறப்பட்ட விடயங்கள் தற்போதய பிரச்சினைகள ஓரளவு பிரதிபலிப்பது போல உணருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-12.jpg?resize=750%2C375&ssl=

வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 32 கியூபர்கள்!

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்காக வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தனது குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஹவானா குறிப்பிட்டுள்ளது.

கியூப அரசாங்க அறிக்கை சில விவரங்களை மட்டுமே அளித்தது.

ஆனால் இறந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அது கூறியது.

மதுரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து கியூபா அவருக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. 

63 வயதான மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சனிக்கிழமை வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மதுரோ நியூயோர்க் தடுப்பு மையத்தில் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காத்துள்ளனர்.

https://athavannews.com/2026/1458356

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

நீங்கள் கூறுவது விளங்குகிறது.

உலக பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம் என கருதுகிறேன், இந்த வெனிசுலா பிரச்சினை மற்றும் புதிய உலக ஒழுங்கின் போக்கு கோவிட் கால பாதிப்பு நீட்சியாக இருக்குமோ என கருதுகிறேன்.

கோவிட் காலத்தில் இருந்ததனை போல வழங்கல் சங்கிலியில் மிக பெரிய இடையுறு தற்போதுதான் உள்ளது, தற்பொதய முயற்சிகள் ஒரு தன்னிறைவு பிராந்திய பொருளாதாரத்தினை மையமாக மாற்றம் ஏற்படுவது போல உணருகிறேன்.

அமெரிக்க பொருளாதார நெருக்கடி; அமெரிக்க பாதுகாப்பு செலவீடுகளை மட்டுப்படுத்துகிறது, இது சேத கட்டுப்பாடு நடவடிக்கையாக இருக்குமா?

முன்னரை போல அமெரிக்க பாதுகாப்பிற்கு அமெரிக்காவினால் செலவிடமுடியாது என கருதுகிறேன்.

இது ஒரு தவிர்க்கமுடியாத கால மாற்றம், அதற்கு சில கடந்த கால கொள்கைகளும் காரணமாகிறது என கருதுகிறேன்.

நான் மேலே கூறியவை யாவும் எடுகோள்களே.

செய்திக்கு அப்பால் சென்று, என்ன நடக்கிறது என்பதை உய்துணர முயலும் முயற்சி மட்டுமே.

இப்படித்தான் நடக்கிறது என்றால்…

இந்த சங்கியிலின் ஓரங்கமாகவே நான் டிரம்பின் முதலாவது தேர்தல், பிரெக்சிற், கொவிட் உருவாக்கம், டிரம்பின் 2ம் தேர்வு ஆகியவற்றை காண்கிறேன்.

பிகு

இவை 100% சதிகோட்பாட்டு என புறம்தள்ள தக்க கருத்துக்கள் என்பதை முழுதாக ஏற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

608423318_1551588966365325_3170084520305

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெனிசுலாவில் அரங்கேறி வரும் அமெரிக்காவின் அதே "கடத்தல்" தந்திரம், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் ஒரு மண்ணில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. அந்த வரலாற்றுப் பாடத்தின் பெயர்: 'Mogadishu War' (1993).

1993-ல் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்கா, அங்கிருந்த முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டது. இதற்காக உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவாகக் கருதப்படும் Delta Force மற்றும் Rangers களமிறக்கப்பட்டனர். 

நவீன ஆயுதங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் என ஒரு சினிமா பாணியில் அந்தத் தாக்குதல் தொடங்கியது.

அமெரிக்காவின் கர்வத்தை உடைக்கும் விதமாக, சோமாலிய வீரர்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் பெருமைமிகு இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தினர். 

வானில் பறந்த அந்த இரும்புப் பறவைகள் மண்ணில் சரிந்தபோது, அமெரிக்காவின் திட்டமும் சுக்குநூறானது.

ஒரு சில மணிநேரங்களில் முடியும் என்று நினைத்த அந்த நடவடிக்கை, 15 மணிநேரக் கொடூரப் போராக மாறியது.

அடி என்றால் அப்படி ஒரு அடி…கனவிலும் கூட அப்படி ஒரு அடிவிழும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்… அந்த எதிர்த்தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 73-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மிக முக்கியமாக, உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொக்டிஷோ நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டன.

உலகமே தொலைக்காட்சியில் பார்த்த அந்த காட்சிகள், அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரியானது. 

ஒரு வல்லரசின் அராஜகம், வீரமும் விசுவாசமும் நிறைந்த ஒரு எளிய தேசத்தின் முன்னால் எப்படிப் பாழாகிப் போகும் என்பதற்கு இதுவே சாட்சி.

இந்த வரலாற்று அவமானத்திற்குப் பிறகு, சோமாலியா பக்கம் எட்டிப் பார்க்கவே அமெரிக்கா நீண்ட காலம் அஞ்சியது. 

இன்று வெனிசுலாவில் நடக்கும் அதிகார ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் அதே போன்ற ஒரு 'வெற்றி' கிடைக்கும் என அமெரிக்கா கணக்குப் போடலாம். 

ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது."

(குறிப்பு: இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் புகழ்பெற்ற 'Black Hawk Down' திரைப்படம் எடுக்கப்பட்டது)

  • email

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது."

இவ்வாறு மண்ணின் மைந்தர்கள் வீரம் எப்போதும் வெல்லும் என சொல்ல முடியாது. நியாயம், வீரம் எல்லாமும் இருந்தும் தோற்ற மண்ணின் மைந்தர்களை நாமே அறிவோம்.

அது மட்டும் அல்ல, இதே போல் சோமாலியாவுக்கு முன்பே பானாமாவில் இறங்கி அந்த நாட்டின் அதிபரை வெற்றிகரமாக அமெரிக்கா கடத்தியும் உள்ளது.

பனாமா போல் வெனிசுலாவிலும் நடக்கும் என முன்னாள் அதிபர் சாவேஸ் முன்பே கூறி இருந்தார்.

இருந்தும் வெனிசுலாவில் மண்ணின் மைந்தர்கள் மட்டும் அல்ல, 50+ கியூபன் கொமாண்டோக்களும் அழிந்து, அதிபரை அமெரிக்கா ஒரு கிரிமினல் போல் நியூ யோர்க் வீதிகளில் உலா கொண்டு போகிறது.

சவேசிடம் பிடல் ஒருமுறை கூறினாராம், சதாம் போல நாம் போய் வளையில் ஒழிந்து அவமானப்படக்கூடாது, நெஞ்சுரத்தோடு போராடி மடியவேண்டும் என.

மண்ணின் மைந்தர்கள் வெல்வதும், வீழ்வதும் இரெண்டும் வரலாற்றில் சமனாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மண்ணின் மைந்தர்கள்

வெனிசுலாவில் மண்ணின் மைந்தர் என்று தமிழில் சொல்லபடுகின்ற கம்யூனிஸ சோஷலிச சித்தாந்தத்தின் படி செயல்படுகின்ற சர்வாதிகாரி நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் மண்ணின் மைந்தர்களை நம்பாமல் ஆடம்பரமாக கியூபா நாட்டில் இருந்து பாதுகாப்புப் படைகளை கொண்டுவந்து தனது பாதுகாப்பிற்காக நிறுத்தி இருக்கிறார். வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலில் கியூபா பாதுகாப்புப் படைகளை சேர்ந்த முப்பத்திரண்டு பேர் தங்கள் உயிர்களை இழந்தனர் என்று கியூபா ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

@ரதன் அமெரிக்கா மனிதன் ஒருவன் நிலவில் கால் பதித்தது என்பதை ரதனும் நம்பவில்லை 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, ரஞ்சித் said:

ட்ரம்ப்பிற்கும் புட்டினுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், ட்ரம்ப் வெனிசுவெலாவின் எண்ணெய் வளத்தை பலாத்காரமாகத் திருடப்போகிறார், புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து வருகிறார்.

பாதுகாப்பிற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் திருடுவதற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் சேர்த்து சாம்பார் ஆக்கியுள்ளீர்கள்.

மற்றும் படி....

கற்காலம் தொடக்கம் இன்றைய கணணிக்காலம் வரைக்கும் பலம் வாய்ந்தவன் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டு தான் இருக்கின்றான். என்ன ஒன்று.....ஆக்கிரமிப்பிற்கான காரணங்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றது.அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/1/2026 at 04:10, goshan_che said:

பிழை திருத்தி உள்ளேன் அண்ணை.

யாழ்களத்தில் கருத்து எழுதும் எனக்கு.......அநேகமான செய்திகளில் கருத்து எழுவது என் சுய கருத்துக்கள். அது சரியா பிழையா என்பது இரண்டாம் பட்சம்.

மற்றவர்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை நான் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை என நினைக்கின்றேன். எனக்கு ரஷ்யாவின் ஒரு சில செயற்பாடுகள் சரியாக தெரிகின்றது. அது சார்பாக நான் கருத்து எழுதுகின்றேன். நீங்களோ மற்றவர்களோ விரும்பும் ஆதரிக்கும் விடயத்திற்கு சார்பாக நான் கருத்து எழுத வேண்டும் என்றால்.....

உங்களுக்கும் ரஷ்ய-அமெரிக்க கொள்கைவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? உங்கள் பாதை எப்படி உங்களுக்கு சரியோ அதே போல் தான் அமெரிக்க ரஷ்ய கொள்கைவாதிகளும் சரியான பாதையில் போகின்றனர்.

தற்போதைய ஐரோப்பிய ஒன்றியம் போல் நடுத்தெருவில் நிற்பது போல் நீங்களும் நிற்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.🤣

இது தனிமனித தாக்குதல் அல்ல.🎉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பாதுகாப்பிற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் திருடுவதற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் சேர்த்து சாம்பார் ஆக்கியுள்ளீர்கள்.

மற்றும் படி....

கற்காலம் தொடக்கம் இன்றைய கணணிக்காலம் வரைக்கும் பலம் வாய்ந்தவன் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டு தான் இருக்கின்றான். என்ன ஒன்று.....ஆக்கிரமிப்பிற்கான காரணங்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றது.அவ்வளவுதான்.

ஆயுதபலம், செல்வம் அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

எங்கள் சரிதத்தை பார்த்தால் அங்கும் ஆயுதபலமே தீர்ப்பு எழுதியுள்ளது.

வெனிசுவெலா அதிபர் எப்படிப்பட்ட அயோக்கியன் என எமக்கு தெரியாது. அதே சமயம் டிரம்ப் அவர்கள் யோக்கியன் என கூறுவதற்கு இல்லை.

எவருக்கும் ஒரு பக்கம் ஆதரவும், ஒரு பக்கம் எதிர்ப்பும் காணப்படும்.

உங்களைப்போலவே நானும் எனது சொந்த கருத்துக்களை, புரிதலை வெளிப்படுத்துகின்றேன்.

நடைமுறை உலகை பார்த்தால் வெனிசுவெலா அதிபரின் கடத்தலின் பின் பங்கு சந்தையில் அமெரிக்க நிலவரம் உயர்ந்துள்ளது.

அமெரிக்க யுத்த கப்பல்கள், போர் விமானங்கள், படைகள் வெனிசுவெலாவை கண்காணிப்பதாக கூறப்படுகின்றது. அதாவது வெனிசுவெலா அமெரிக்காவின் முற்றுகைக்குள் உள்ளது. தமக்கு தேவையான நேரத்தில் வெனிசுவெலா மீது தாக்குதல் நடாத்துவது, ஆட்களை தொடர்ந்து கடத்துவது, கொல்வது அமெரிக்க படைகளுக்கு இலகுவான ஒரு விடயம். அமெரிக்காவின் அனுமதி/அனுசரனை இல்லாமல் வெனிசுவெலா அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என சொல்லப்படுகின்றது. அதாவது ஆயுதபலம் மூலம் அமெரிக்கா வெனிசுவெலாவை முடக்கியுள்ளது.

சீனா, ரஷ்யா போன்றவற்றை பொருத்தமட்டில் ஐயோ வடை போச்சே எனும் நிலமைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

யாழ்களத்தில் கருத்து எழுதும் எனக்கு.......அநேகமான செய்திகளில் கருத்து எழுவது என் சுய கருத்துக்கள். அது சரியா பிழையா என்பது இரண்டாம் பட்சம்.

மற்றவர்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை நான் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை என நினைக்கின்றேன். எனக்கு ரஷ்யாவின் ஒரு சில செயற்பாடுகள் சரியாக தெரிகின்றது. அது சார்பாக நான் கருத்து எழுதுகின்றேன். நீங்களோ மற்றவர்களோ விரும்பும் ஆதரிக்கும் விடயத்திற்கு சார்பாக நான் கருத்து எழுத வேண்டும் என்றால்.....

உங்களுக்கும் ரஷ்ய-அமெரிக்க கொள்கைவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? உங்கள் பாதை எப்படி உங்களுக்கு சரியோ அதே போல் தான் அமெரிக்க ரஷ்ய கொள்கைவாதிகளும் சரியான பாதையில் போகின்றனர்.

தற்போதைய ஐரோப்பிய ஒன்றியம் போல் நடுத்தெருவில் நிற்பது போல் நீங்களும் நிற்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.🤣

இது தனிமனித தாக்குதல் அல்ல.🎉

நான் எப்போதும் நடுத்தெருவில்தானே அண்ணை.

நீங்களும் உங்கள் சகாக்களும் கூட அடி கடி நடுநிலை ந**கி என புகழ்வீர்களே ? மறந்து போச்சா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பாதுகாப்பிற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் திருடுவதற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் சேர்த்து சாம்பார் ஆக்கியுள்ளீர்கள்.

மற்றும் படி....

கற்காலம் தொடக்கம் இன்றைய கணணிக்காலம் வரைக்கும் பலம் வாய்ந்தவன் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டு தான் இருக்கின்றான். என்ன ஒன்று.....ஆக்கிரமிப்பிற்கான காரணங்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றது.அவ்வளவுதான்.

இதுதான் (புட்டின் காதலால்) ஏற்பட்டுள்ள பச்சை இரெட்டைதன்மை.

அமெரிக்கா உக்ரேன் ஒப்பந்தத்தின் போது நீங்கள்தான் உக்ரேனில் வளமுள்ளது அதை அமெரிக்கா சுரண்டுகிறது என எழுதினீர்கள்.

ஆனால் அதையே ரஸ்யா செய்தால் - அது வளக்கொள்கை அல்ல, பாதுகாப்பு 😂.

இதையேதான் டிரம்பும் சொல்கிறார். எண்ணை என்பது அமெரிக்காவின் பொருளாதார-பாதுகாப்பு சம்பந்தபட்டது என்று.

இங்கே உக்ரேனை ஆதரித்த எவரும், வெனிசுவேலா மேலான அமெரிக்க தாக்குதலை ஆதரிக்கவில்லை. மாறாக கடுமையாக கண்டித்துள்ளனர்.

ஆனால் நீங்கள் ? புட்டினுக்கு ஆலவட்டம் பிடிப்பதற்க்காக…

இலங்கையில் இந்தியா நடந்து கொண்டவிதம் சரி என எழுதும் அளவுக்கு போனவர்.

யார் நடு ரோட்டில் நிற்கிறார்கள்…

யார் சொந்த இனத்தின் போராட்டத்தை கூட புட்டினுக்காக கொச்சை படுத்தி விட்டு நடுரோட்டில் மகாராஜாவின் உடையோடு பவனி வருகிறார்கள் என்பதை களம் அறியும்.

இதுவும் தனிமனித தாக்குதல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

நான் மேலே கூறியவை யாவும் எடுகோள்களே.

செய்திக்கு அப்பால் சென்று, என்ன நடக்கிறது என்பதை உய்துணர முயலும் முயற்சி மட்டுமே.

இப்படித்தான் நடக்கிறது என்றால்…

இந்த சங்கியிலின் ஓரங்கமாகவே நான் டிரம்பின் முதலாவது தேர்தல், பிரெக்சிற், கொவிட் உருவாக்கம், டிரம்பின் 2ம் தேர்வு ஆகியவற்றை காண்கிறேன்.

பிகு

இவை 100% சதிகோட்பாட்டு என புறம்தள்ள தக்க கருத்துக்கள் என்பதை முழுதாக ஏற்கிறேன்.

இந்த காணொளியினை முன்பு வேறு ஒரு திரியில் இணைத்துள்ளேன்.

இவரது கட்சி இரஸ்சியாவில் 3ஆவது பெரிய கட்சி என குறிப்பிடுகிறார்கள், இந்த சதிக்கோட்பாடு பற்றி ட்ரம்பின் மீது இரஸ்சியாவின் ஆதிக்கம் பற்றிய சதிக்கோட்பாடு பற்றியது, இதில் வெனிசுலா பற்றியும் கூறியுள்ளார்.

குறித்த நபர் இறந்து விட்டார் 2022 என நினைக்கிறேன்.

இந்த காணொளியினை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன், இது பற்றிய உங்கள் கருத்து என்ன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையில் இந்தியா நடந்து கொண்டவிதம் சரி என எழுதும் அளவுக்கு போனவர்.

இதுகுறித்த எனது அவதானிப்பை இங்கே பதிகிறேன்.

உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை எதிர்த்து நான் எழுதிய கருத்துக்களுக்கு குமாரசாமி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார். அவ்வாறான வாதத்தில் ரஸ்ஸியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உக்ரேனை ஆக்கிரமிப்பது நியாயமானதுதான் என்று எழுதினார். பின்னர் ஒருபடி மேலே சென்று இந்தியா தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களின் போராட்டத்தினை அழித்ததையும் தன்னால் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறி உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் பலவந்த ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்துவதற்கான உசாத்துணையாகப் பாவித்திருந்தார். இதற்காக நான் அவரைக் கடிந்துகொண்டபோதும் இன்றுவரை அவர் இக்கருத்தினை மீளப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தான் சேர்ந்த இனமான தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது நியாயமானதுதான் என்று கருதும் ஒருவர், எம்முடன் சம்பந்தப்படாத உக்ரேன் எனும் நாட்டின் இருப்பைத் தியாகம் செய்து, தான் போஷிக்கும் சோசலிஸ ரஸ்ஸியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று விரும்புவதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2026 at 02:38, ஏராளன் said:

வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார்.

முன்பு ஈராக்கிலும் அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி அந்த நாட்டை சூறையாடி, நிர்வாகத்தை குலைத்து, மக்களை அகதியாகிவிட்டார்கள். ஆனால் அப்படி ஒரு அணு ஆயுத களஞ்சியத்தையோ, ஆய்வு கூடத்தையோ யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாடுகள் மேல் குற்றம் சுமத்தி, தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, அந்த நாட்டிலுள்ள வளங்களை சூறையாடுவதும் அந்நாட்டின் நிர்வாகங்களை குழப்புவதுந்தான் அமெரிக்காவின் பிழைப்பு. இவர் மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிப்பாரானால் அமெரிக்காவே முதல் அழிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

611605413_1486330176195888_1309199570618

609108923_1001054259747626_6013138724787

  • கருத்துக்கள உறவுகள்

"நாங்கள் ஒரு வல்லரசு": டிரம்பின் கீழ் அமெரிக்க நடவடிக்கைகளை வெள்ளை மாளிகை விளக்குகிறது

Krystyna Bondarieva , Iryna Balachuk — 6 ஜனவரி, 07:55

நாங்கள் ஒரு வல்லரசு: டிரம்பின் கீழ் அமெரிக்க நடவடிக்கைகளை வெள்ளை மாளிகை விளக்குகிறது

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸ்டீபன் மில்லர். புகைப்படம்: X இல் மில்லர் (ட்விட்டர்)

18373 ஆம் ஆண்டு

உண்மையான உலகம் அதிகாரத்தால் ஆளப்படுகிறது, அமெரிக்கா ஒரு வல்லரசு, எனவே அது அவ்வாறே செயல்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான ஸ்டீபன் மில்லர், வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைப்பற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.

மூலம்: ஐரோப்பிய பிராவ்தா, CNN ஐ மேற்கோள் காட்டி

விவரங்கள்: சர்வதேச நுணுக்கங்களைப் பற்றி மக்கள் விரும்பும் அளவுக்குப் பேசலாம் என்று மில்லர் கூறினார், "ஆனால் நாம் ஒரு உலகில், உண்மையான உலகில் வாழ்கிறோம் ... அது வலிமையால் ஆளப்படுகிறது, அது பலத்தால் ஆளப்படுகிறது, அது அதிகாரத்தால் ஆளப்படுகிறது. "

இதை அவர் "உலகின் இரும்புச் சட்டங்கள்" என்று விவரித்தார் .

டிரம்ப் கோட்பாட்டின் கீழ், அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா தனது இராணுவத்தை தயக்கமின்றிப் பயன்படுத்தும் என்று மில்லர் வலியுறுத்தினார், இது ஒரு சுதந்திர உலகின் எதிர்காலத்திற்கு ஒத்ததாக இருக்கும் என்று அவர் கூறினார்.

"நாங்கள் ஒரு வல்லரசு. ஜனாதிபதி டிரம்பின் கீழ், நாங்கள் ஒரு வல்லரசாக நடந்து கொள்ளப் போகிறோம்," என்று மில்லர் கூறினார்.

பின்னணி:

  • ஜனவரி 4 ஆம் தேதி மற்ற நாடுகளுக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்தன. குறிப்பாக, கொலம்பியாவை அச்சுறுத்திய அவர், மெக்சிகோ "அவர்களின் நடவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும்" என்று கூறினார் .

  • கூடுதலாக, ஈரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் "மிகவும் கடுமையாகத் தாக்கப்படும்" என்று டிரம்ப் சமீபத்தில் உறுதியளித்தார்.

  • கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான தனது அச்சுறுத்தல்களையும் அவர் புதுப்பித்தார்.

  • டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்கள், தீவு தொடர்பான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு டிரம்பிடம் அழைப்பு விடுத்தனர்.

  • பால்டிக் நாடுகளைப் போலவே, பின்லாந்து ஜனாதிபதியும் ஸ்வீடிஷ் பிரதமரும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

https://www.pravda.com.ua/eng/news/2026/01/06/8014828/

வெனிசுலாவில் ரஷ்ய வான் பாதுகாப்பை பென்டகன் தலைவர் ஹெக்ஸெத் கேலி செய்கிறார்: அது அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.

இவான் டியாகோனோவ் - 6 ஜனவரி, 00:35

வெனிசுலாவில் ரஷ்ய வான் பாதுகாப்பை பென்டகன் தலைவர் ஹெக்ஸெத் கேலி செய்கிறார்: அது அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.

பீட் ஹெக்செத். புகைப்படம்: கெட்டி இமேஜஸ்

19659

வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்ற அமெரிக்க சிறப்பு நடவடிக்கையின் போது ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஒரு முரண்பாடான கருத்தை வெளியிட்டுள்ளார்.

மூலம்: ஆர்சனல் ஆஃப் ஃப்ரீடம் சுற்றுப்பயணத்தின் போது ஹெக்செத்தின் உரை .

மேற்கோள்: "வெனிசுலாவின் கராகஸ் நகர மையத்தில் மூன்று இரவுகளுக்கு முன்பு, நமது தலைசிறந்த அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 200 பேர் கராகஸில் உள்ள நகர மையத்திற்குச் சென்றதைப் பார்த்தோம். அந்த ரஷ்ய வான் பாதுகாப்பு அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை போலும், இல்லையா? கராகஸ் நகர மையத்தில், அமெரிக்க நீதியால் தேடப்படும் ஒரு குற்றஞ்சாட்டப்பட்ட நபரைப் பிடித்து, ஒரு அமெரிக்கர் கூட கொல்லப்படாமல், சட்ட அமலாக்கத்திற்கு ஆதரவாக, தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் நிறுவினார்."

விவரங்கள்: அமெரிக்கா பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியின் புதிய சகாப்தத்தில் நுழைகிறது என்று ஹெக்செத் வலியுறுத்தினார். இந்தத் துறை, வலிமை மூலம் அமைதியைப் பாதுகாப்பதும், தேவைப்பட்டால் ஒரு போரை "தீர்க்கமாக வெல்ல" தயாராக இருப்பதும் குறிக்கோளாகக் கொண்ட போர்த் துறை என்ற கருத்துக்குத் திரும்புகிறது.

பின்னணி:

  • ஜனவரி 3 ஆம் தேதி, அமெரிக்க இராணுவத்தின் டெல்டா படை, ஒரு உயரடுக்கு சிறப்புப் படைப் பிரிவு, வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றி நாட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றது.

  • ஜனவரி 5 ஆம் தேதி, மதுரோவும் அவரது மனைவியும் நியூயார்க்கில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் , போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் ஒத்துழைத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.

  • வெனிசுலாவில் தெளிவான மற்றும் பாதுகாப்பான அதிகாரப் பரிமாற்றம் நடைபெறும் வரை அமெரிக்கா அங்கு ஆட்சி செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார் .

Ukrainska Pravda
No image preview

Pentagon chief Hegseth mocks Russian air defence in Venez...

US Secretary of Defense Pete Hegseth has made an ironic comment on the performance of Russian air defence systems during an American special operation to capture Venezuelan leader Nicolás Maduro.

இந்த இரண்டு செய்திகளும் மேலே இணைத்த நிராஜ் டேவிட் அவர்களின் காணொளியின் சாராம்சமாக உள்ளது.

கிரீன்லாந்தை இராணுவம் கையகப்படுத்துவதை நிராகரிக்க டிரம்ப் அதிகாரி மறுக்கிறார்

இவான் டியாகோனோவ் - 6 ஜனவரி, 03:18

கிரீன்லாந்தை இராணுவம் கையகப்படுத்துவதை நிராகரிக்க டிரம்ப் அதிகாரி மறுக்கிறார்

ஸ்டீபன் மில்லர். புகைப்படம்: கெட்டி இமேஜஸ்

51613 - अनुक्षिती समान्ती स्ती स्त

அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்துவதாகவும், தீவை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரிக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைமைத் தளபதி ஸ்டீபன் மில்லர் கூறியுள்ளார்.

மூலம்: CNN உடனான நேர்காணலில் மில்லர்

மில்லரின் மேற்கோள்: "அமெரிக்கா நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தின் ஒரு பகுதியாக கிரீன்லாந்தை வைத்திருக்கும் நாடாக இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி பல மாதங்களாக தெளிவாக இருக்கிறார்."

"இந்த நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்தே, வெளிப்படையாகச் சொன்னால், முந்தைய டிரம்ப் நிர்வாகத்தில் இருந்தே, கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசாங்கத்தின் முறையான நிலைப்பாடாக இருந்து வருகிறது. ஜனாதிபதி அதைப் பற்றி மிகவும் தெளிவாக இருக்கிறார். அதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் முறையான நிலைப்பாடு."

விவரங்கள்: CNN செய்தித் தொகுப்பாளர் ஜேக் டேப்பர், அமெரிக்கா கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சிக்கும் ஒரு சூழ்நிலையை நிராகரிக்க முடியுமா என்று மில்லரிடம் பலமுறை கேட்டார். மில்லர் நேரடி பதிலைத் தவிர்த்து, தீவின் மீதான டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் நியாயத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கினார்.

மில்லரின் மேற்கோள்கள்: "உண்மையான கேள்வி என்னவென்றால், கிரீன்லாந்தின் மீது டென்மார்க் எந்த உரிமையின் மூலம் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது? அவர்களின் பிராந்திய உரிமைகோரலின் அடிப்படை என்ன? கிரீன்லாந்தை டென்மார்க்கின் காலனியாகக் கொண்டிருப்பதற்கான அடிப்படை என்ன?"

"அமெரிக்கா நேட்டோவின் சக்தி. அமெரிக்கா ஆர்க்டிக் பகுதியைப் பாதுகாக்க, நேட்டோ மற்றும் நேட்டோ நலன்களைப் பாதுகாக்க, கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது."

"நாங்கள் ஒரு வல்லரசு. ஜனாதிபதி டிரம்பின் கீழ், நாங்கள் ஒரு வல்லரசாக நடந்து கொள்ளப் போகிறோம்."

பின்னணி:

  • முன்னதாக, மில்லரின் மனைவி கேட்டி மில்லர், கிரீன்லாந்து அமெரிக்கக் கொடியால் மூடப்பட்டிருப்பதைக் காட்டும் வரைபடத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தீவின் மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார் .

  • இதற்கு பதிலளிக்கும் விதமாக, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், அமெரிக்கா மற்றொரு நேட்டோ நாட்டைத் தாக்கினால், அது கூட்டணிக்கும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பாதுகாப்பு அமைப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எச்சரித்தார்.

Ukrainska Pravda
No image preview

Trump official refuses to rule out military takeover of G...

White House Deputy Chief of Staff Stephen Miller has stated that Washington insists Greenland should become part of the US as part of the American security framework, and has not ruled out the possibi

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.