Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு

கும்பகோணம்: சாமி சிலை முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த நடிகை குஷ்பு இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தியதாக கூறி, கும்பகோணம் கோர்ட்டில் இந்து முன்னணி சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பெண் டைரக்டர் மதுமிதா இயக்கும் 'வல்லமை தாராயோ' படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது. துவக்க விழாவில் கதாநாயகன் பார்த்திபன், கதாநாயகி சாயாசிங், எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், டாக்டர் கமலா செல்வராஜ், நடிகை குஷ்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜையின்போது லட்சுமி, சரஸ்வதி, சக்தி ஆகிய முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தின் முன்பு குஷ்பு செருப்பு அணிந்தபடி, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். இது பற்றிய செய்திகள் டிவி மற்றும் பத்திரிகைகளில் வெளி வந்தன. இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் குஷ்பு நடந்து கொண்டதாகக் கூறி கும்பகோணம் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நகர இந்து முன்னணி செயலாளர் குருமூர்த்தி இன்று அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பாக வக்கீல்கள் ரவிக்குமார், பாலமுருகன்,, துரை ஆகியோர் வழக்கை தாக்கல் செய்தனர். வழக்கை இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் பாபுலால் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.

http://www.kumudam.com/

  • Replies 52
  • Views 12.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
pm02xg3.jpg

எனக்கு என்னவோ அடுத்த புரட்ச்சித்தைவி உவதான் போலகிடக்கு... முன்னம் கோயில் கட்டுறதும் பிறகு கோயிலுக்கு மரியாதை தரயில்லை எண்டு குளர்றதும்.... என்ன விளையாட்டிது.....

நீங்கள் கோயில்கட்டினா அவவும் சாமிதானே... பிறகு ஏன் வழக்கு போடுவான்.....

Edited by Sooravali

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு வும் கடவுள் தானே அதுதானாக்கும் கால்மேல் கால் போட்டு கொண்டிருக்கிறாவாக்கும்.

குஷ்புவுக்கு கோயில் கட்டிய பக்தர் கூட்டமாச்சே

இன்றைக்கு வழக்கபோட்டுவிட்டு நாளைக்கு அவாவை முதலமைச்சர் ஆக்கினாலும் ஆக்குவாங்க :rolleyes: சோ நான் ஒன்றுமே சொல்ல விரும்பவில்லை...... :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"அரசியலில இது எல்லாம் சகஜமப்பா" :wub:

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு வும் கடவுள் தானே அதுதானாக்கும் கால்மேல் கால் போட்டு கொண்டிருக்கிறாவாக்கும்.

குஷ்புவுக்கு கோயில் கட்டிய பக்தர் கூட்டமாச்சே

தெரியாமல் தான் கேட்கின்றேன். குஸ்புக்கு கோவில் கட்டினவர்களுக்கும், இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்???

எதற்காக முடிச்சுப் போடுகின்றீர்கள்??

(அதற்காக ரோட்டில் பேப்பர் கிடந்து மிதிச்சால் தொட்டுக் கும்பிடுவது எல்லாம், பக்தி எனச் சொல்லுவீர்கள் போலிருக்கின்றதே??)

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பு கால்மேல் கால் போட்டதை ஆபாசமாக குருமூர்த்தி அவர்கள் பார்த்ததால் குருமூர்த்தி மீது ஆபாச வழக்கு தொடர வேண்டுகிறேன். :wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் தான் கேட்கின்றேன். குஸ்புக்கு கோவில் கட்டினவர்களுக்கும், இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்???

எதற்காக முடிச்சுப் போடுகின்றீர்கள்??

(அதற்காக ரோட்டில் பேப்பர் கிடந்து மிதிச்சால் தொட்டுக் கும்பிடுவது எல்லாம், பக்தி எனச் சொல்லுவீர்கள் போலிருக்கின்றதே??)

கோயிலுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?

அடுத்தவர் மதம் என்றாலும் மரியாதை தருவதே முறை...

பார்க்கும்போது நெஞ்சுக்கு உறுத்தலாக இருக்கிறது....

சினிமா சாக்கடைக்குள்.. சிலவிடயங்களை பார்க்ககூடாதென்றாலும்...

சில நடைமுறைகளுக்கு... கண்டனங்கள் அவசியமாகிறது...

உங்கள் பகுத்தறிவு.. குஸ்புவை காப்பாற்றலாம்...

எங்கள் மதத்தை பராம்பரியத்தை தூய்மையை அப்படியே கைவிட்டுவிடலாமா?.

குஸ்பு இந்துக் கோயிலுக்கு சென்ற இந்துக் கடவுள்களை அவமதிக்கவில்லை. ஒரு சினிமா விழா நடக்கின்ற மேடையில், மற்ற அனைத்து நடிகர்களைப் போன்று அவரும் பாதணியோடு அமர்ந்திருந்தார். அதிலே கடவுள் சிலையை வைத்ததற்கு அவர் என்ன செய்வார்?

கடவுள் சிலை இருப்பதனால் மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பாதணிகளை களற்றிவிட்டு அமர்ந்திருக்க, குஸ்பு மட்டும் பாதணியோடு அமர்ந்திருந்தால் அதை அவமதிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

குஸ்பு முஸ்லீம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்து வெறியர்கள் வழக்குப் போட்டுள்ளனர்.

குஸ்பு இந்துக் கோயிலுக்கு சென்ற இந்துக் கடவுள்களை அவமதிக்கவில்லை. ஒரு சினிமா விழா நடக்கின்ற மேடையில், மற்ற அனைத்து நடிகர்களைப் போன்று அவரும் பாதணியோடு அமர்ந்திருந்தார். அதிலே கடவுள் சிலையை வைத்ததற்கு அவர் என்ன செய்வார்?

கடவுள் சிலை இருப்பதனால் மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பாதணிகளை களற்றிவிட்டு அமர்ந்திருக்க, குஸ்பு மட்டும் பாதணியோடு அமர்ந்திருந்தால் அதை அவமதிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

குஸ்பு முஸ்லீம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்து வெறியர்கள் வழக்குப் போட்டுள்ளனர்.

விழாவுக்கும் பூஜைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் இருந்து வரும் விளக்கங்கள் இப்படி கிறுக்குத்தனமாக இருக்காமல் வேறு எப்படி இருக்கும்?!!!

கரடி பொம்மைக்கு முகமது என்று பெயர் வைத்ததற்காக கொலை செய்யத் துடித்தால், அதற்கு பெயர் வெறி!மதசம்பிரதாயங்களை அவமதித்ததாக கூறி நீதிமன்றம் போனால், அதற்கு பெயர் எதிர்நடவடிக்கை.

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல், எதற்கெடுத்தாலும் இந்துமத துவேசம் என்னும் கண்ணாடி அணிந்து கொண்டே சம்பவங்களை விமர்சனம் செய்பவர்களுக்கு, பகுத்தறிவாவது, நடுநிலையாவது, மண்ணாங்கட்டியாவது...

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?

கறுப்பி

உங்களுக்கு ஒன்று தெரியுமா? தேவாலயம், அல்லது சேர்ச் என்பது கிறிஸ்தவ ஆலயங்களை மட்டும் தான். அவ்வாறே பள்ளிவாசல் என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமே உரியது.

அவ்வாறே கோவில் என்றால் இந்துக்களுக்கு, முக்கியமாக சைவர்களுக்கு மட்டுமே உரியது.

எனவே நீங்கள் சாடியிருப்பது சைவர்களை.

குஸ்பு முஸ்லீம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்து வெறியர்கள் வழக்குப் போட்டுள்ளனர்.

"நடுநிலமை" எழுவான் எங்கே போய்விட்டார். இப்படி இந்துக்களைப் பேசுகின்ற ம*நோய் பிடித்தவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுமில்லை. கண்டு கொள்ளப்படுவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"நடுநிலமை" எழுவான் எங்கே போய்விட்டார். இப்படி இந்துக்களைப் பேசுகின்ற ம*நோய் பிடித்தவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுமில்லை. கண்டு கொள்ளப்படுவதுமில்லை.

அதெல்லாம் நெடுக்காலபோவன் போன்ற நிர்வாகிகளின் சுயகெளரவத்தை கணக்கில் எடுத்து கருத்து எழுதாத நாகரியம் தெரியா விளங்காப் பசங்களுக்குத்தான்..! என்னமா உலகை ஏமாற்றிறாங்கப்பா..! :icon_idea::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

கரடிப் பொம்மைக்கு முகமது என்று பெயரிட அனுமதித்த ஆசிரியரை கொல்ல வேண்டும் என்று சொல்பவர்களும் மதவெறியர்கள்தான்.

அதே போன்று சினிமா பூசை விழாவில் எல்லோரையும் போல் மேடையில் அமர்ந்திருந்த ஒரு நடிகையை தண்டிக்க வேண்டும் என்று சொல்பவர்களும் மதவெறியர்கள்தான்.

மதவெறி எந்த மதத்தில் இருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டும்.

குஸ்பு இம்முறை தைரியமாக நிற்கின்றார். அது பாராட்டத்தக்கது.

சென்ற முறை போன்று இம் முறை அவர் மன்னிப்புக் கேட்கமாட்டார். அவர் இருப்பது தமிழ்நாட்டில். குஜராத்தில் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் செயல் தம்மை புண்படுத்துது என்று சட்டரீதியான அணுகுமுறைகளின் கீழ் அதற்கு தீர்வு தேடுவது வெறியே அன்று. அப்படி ஒரு வெறியென்றால் நீதிமன்றங்கள் இவ்வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமல் உடனடியாகவே தள்ளுபடி செய்துவிடும். யாழ் களத்தில் மட்டும் அதை வெறி வெறி என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதற்கு ஏற்ப யாழ் களம் நிர்வகிக்கப்படுவதால். ஏதோ நோக்கோடு எழுதியதற்கும் மதத்துவேசம் கண்டவர்கள் இந்து மதத்தினரை மத வெறியர்கள் என்று குற்றம்சாட்டி தங்களின் சுய காழ்ப்புணர்ச்சிக்கு ஏற்ப மதத்துவேச எண்ணத்தைக் கொட்ட மட்டும் அனுமதிக்கிறார்கள். காரணம் அது மத விமர்சனமாம்...???! போலி மனிதர்களிடம் நீதியேது நேர்மையேது..! :icon_idea::icon_mrgreen::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு

முப்பெரும் தேவியர் சிலைகளை அவமதித்ததாக கூறி கும்பகோணம் நீதிமன்றத்தில் குஷ்பு மீது வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரத்திலும் ஒரு வழக்கு தாக்கலாகியுள்ளது.

சென்னையில் நடந்த வல்லமை தாராயோ பட பூஜையின்போது கலந்து கொண்ட குஷ்பு, செருப்புக் காலோடு, கால் மேல் கால் போட்டபடி முப்பெரும் தேவியர் சிலைக்கு அருகே அமர்ந்திருந்தது சர்ச்சையாகியுள்ளது.

இந்துக்களின் உணர்வுகளை குஷ்பு புண்படுத்தி விட்டார், கடவுள் சிலையை அவமதித்து விட்டார் என்று கூறி அவர் மீது கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையிலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்திலும் ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதி இந்து முன்னணி தலைவர் கண்ணன் சிவா என்பவர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட குஷ்பு மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 295, 295-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சம்பத்குமார், டிசம்பர் 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

தட்ஸ்தமிழ்.கொம்

குஸ்பு அனைவரும் சென்று வணங்குகின்ற ஒரு ஆலயத்திற்குள் வேண்டுமென்றே செருப்புடன் சென்றிருந்தால், அது மதநிந்தனைதான். அதற்கு வழக்குப் போட்டால் அது மதவெறி அல்ல.

ஆனால் சினிமா படப்பிடிப்பிற்கான பூசை ஒன்றில், மேடையில் தன்பாட்டிற்கு உட்கார்ந்திருந்தவர் மீது வழக்குப் போடுவதன் காரணம் என்ன?

உண்மையிலேயே குஸ்பு மேடையில் அந்தச் சிலையை அவமதிக்கும் நோக்கத்தோடு அமர்ந்திருந்தார் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

குஸ்பு இருந்த இடத்தில் வேறொரு நடிகர் இருந்திருந்தால் வழக்குப் போட்டிருப்பார்களா?

குஸ்பு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் மதத் துவேசத்தோடு இந்த வழக்குப் போடப்பட்டிருக்கிறது. அவர்களிடம் உள்ள மதவெறிதான் இந்த வழக்கைப் போட அவர்களை தூண்டியிருக்கிறது.

இந்து முன்னணி ஒரு மதவெறி மிக்க அமைப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து முன்னணி ஒரு மதவெறி மிக்க அமைப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கள விதிக்கமைய அடிப்படை ஆதாரங்களற்று நீங்கள் நினைப்பது போல குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. இந்து முன்னணி ஒரு மதவெறி அமைப்பென்றால் அது தடைசெய்யப்பட்டிருக்கும். இந்து முன்னணி மதவெறி அமைப்பென்று காட்ட ஏதாவது நீதிமன்றத் தீர்ப்புக்கள்.. அரசாணைகள்.. அப்படின்னு ஏதாவது இருக்கா..??!

குஸ்பு மீதான வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதானது அவரின் செயல் வழக்கு ஒன்றுக்கான Credibility கொண்டிருப்பத்தைக் காட்டுகின்ற போது நீங்கள் உங்களின் சுய காழ்ப்புணர்ச்சிக்கு அமைய மதவெறி... மதத்துவேசம் என்பதெல்லாம் மோசமான யாழ் கள விதிமீறல்கள்..! ஆனால் நீங்கள் அதை மீறலாம். உங்களுக்கு அதற்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. காரணம் நீங்கள் ஒரு மதவிமர்சகர் என்ற அடையாளம் இடப்பட்ட ஒருவர்...??! :icon_mrgreen::icon_idea:

Edited by nedukkalapoovan

குஸ்பு அனைவரும் சென்று வணங்குகின்ற ஒரு ஆலயத்திற்குள் வேண்டுமென்றே செருப்புடன் சென்றிருந்தால், அது மதநிந்தனைதான். அதற்கு வழக்குப் போட்டால் அது மதவெறி அல்ல.

ஆனால் சினிமா படப்பிடிப்பிற்கான பூசை ஒன்றில், மேடையில் தன்பாட்டிற்கு உட்கார்ந்திருந்தவர் மீது வழக்குப் போடுவதன் காரணம் என்ன?

உண்மையிலேயே குஸ்பு மேடையில் அந்தச் சிலையை அவமதிக்கும் நோக்கத்தோடு அமர்ந்திருந்தார் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

குஸ்பு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் மதத் துவேசத்தோடு இந்த வழக்குப் போடப்பட்டிருக்கிறது. அவர்களிடம் உள்ள மதவெறிதான் இந்த வழக்கைப் போட அவர்களை தூண்டியிருக்கிறது.

இந்து முன்னணி ஒரு மதவெறி மிக்க அமைப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆலயம் என்பதற்கு தரப்படும் மரியாதைக்கு காரணம் அங்கு நடைபெறும் பூசை, இறைவழிபாடு போன்ற அம்சங்களே ஒழிய ஆலயங்களில் உள்ள செங்கல்களோ அழகான வண்ண பூச்சுக்களோ அல்ல.

ஆகவே இந்துக்களின் பூசை, இறைவழிபாடு நடக்கும் இடங்களில் ஆலயங்களை போலவே செருப்பு அணியாமல் இருத்தல் போன்ற சம்பிரதாயங்களை கடைபிடிப்பதே மரபு. இந்துக்களின் வீடுகளில் உள்ள பூசை அறைகளில் கூட எவரும் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதை தாங்கள் தெரியாதது போல் நடிப்பது ஏமாற்றுவித்தை.

குஸ்பு அனைவரும் சென்று வணங்குகின்ற ஒரு ஆலயத்திற்குள் வேண்டுமென்றே செருப்புடன் சென்றிருந்தால், அது மதநிந்தனைதான். அதற்கு வழக்குப் போட்டால் அது மதவெறி அல்ல.

அம்மா வீட்டில் இருக்கும் போது மட்டும் தான் அம்மா! பாதையில் செல்லும் போது அடுத்த வீட்டுப்பெண், அதனால் வாடி போடி என்று அழைக்கலாம் தப்பில்லை என்று சொல்வது போல் தான் இருக்கிறது, நீங்கள் மேலே சொல்வது :icon_mrgreen:

இந்து முன்னணி ஒரு மதவெறி மிக்க அமைப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

உங்கள் மனதில் ஏற்கனவே உள்ள எண்ணத்தின் அடிப்படையில் சம்பவங்களின் பின்னணியையும் விளைவுகளையும் சீர்துக்கி பார்க்காது நடுநிலை தவறி நீங்கள் வைக்கும் கருத்துக்களை ஆங்கிலத்தில் Prejudice என்று அழைப்பார்கள்

குஸ்பு இம்முறை தைரியமாக நிற்கின்றார். அது பாராட்டத்தக்கது.

சென்ற முறை போன்று இம் முறை அவர் மன்னிப்புக் கேட்கமாட்டார். அவர் இருப்பது தமிழ்நாட்டில். குஜராத்தில் அல்ல.

ஆமாம் செல்வி.ஜெயலலிதாவை லேடி பெரியார் என்று வாழ்த்திய திரு.வீரமணி போன்றவர்கள் வாழ்கின்ற இடமல்லவா!. அடேயப்பா அந்த 500 கோடியை காப்பாற்றிக் கொள்ள சென்ற ஆட்சிக்காலத்தில் அம்மாவிற்கு பிடித்த ஆலவட்டம் தான் எத்தனை. நல்ல பகுத்தறிவு தான் போங்கள்

குஷ்புவுக்கு நிறைய தைரியம் வந்து விடும். அடுத்த லேடி பெரியார் குஷ்பு என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.

Edited by vettri-vel

நெடுக்காலபோவான்!

ஜாதிக ஹெல உறுமய ஒரு இனவெறி அமைப்பு. அதற்கு எதிராகவும் எந்த நீதிமன்றத் தீர்ப்பும் இல்லை.

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

vt1.jpg

vt2.jpg

வெற்றிவேல்!

அம்மா எங்கேயும் அம்மாதான். அதில் மாற்றமில்லை.

ஆனால் இந்துக் கடவுள் சிலைகள் ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு அர்த்தங்களோடு இருக்கும்.

ஒரு சிலை கோயிலுக்கு உள்ளே இருக்கும். இன்னொரு சிலை கோயிலுக்கு வருவதற்கு அனுமதியின்றி இருக்கும்.

ஒரு சிலை மாமிசம் சாப்பிடாது. இன்னொரு சிலை ஆடு, கோழி பலி கேட்கும்.

ஒரு சிலையை ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லோரும் போட்டு உடைத்து கடலில் கரைப்பார்கள். மற்றைய நாட்களில் அப்படிச் செய்தால், வழக்குப் போடுவார்கள்.

இப்படி இந்தச் சிலைகளுக்கு நிறைய வேறுபாடு உண்டு.

சினிமா விழா மேடையில் இருந்த சிலை ஒரு சம்பிராதயத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. அதை கடவுள் என்று யாராவது மதிப்புக் கொடுத்திருந்தால், அனைவருமே செருப்பைக் களற்றி விட்டு அமர்ந்திருப்பார்கள். ஆனால் யாருமே அப்படிச் செய்யவில்லை.

எல்லோரும் செருப்போடுதான் அமர்ந்திருந்தார்கள். சிலையில் இரு பக்கத்திலும் அமர்ந்திருந்தார்கள். குஸ்பு இருந்த அதே அளவு தூரத்தில், மறு பக்கத்திலும் ஒரு பெண் செருப்போடு அமர்ந்திருந்தார்.

ஆனால் குஸ்பு முஸ்லீம் என்பதால் மதவெறியர்கள் குஸ்பு மீது மட்டும் வழக்குப் போட்டுள்ளனர்.

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

vt1.jpg

vt2.jpg

முதல் படம் எந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. அதுவும் படத்தில் உள்ளவர்கள் பூச்செண்டு(Flower Bouquets)களுடன் தான் இருக்கிறார்கள். பூசைக்கு எவரும் பூச்செண்டுகளுடன் செல்வதில்லை..

இரண்டாவது படத்தில் இருக்கும் பெண் பூசை நடக்கும் சமயத்தில் மேடையில் இருந்தது போல் தெரியவில்லை. அத்தோடு காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு அம்பாள் சிலைக்கு அருகில் குஷ்பு அமர்ந்திருக்கும் தோரணையை பார்த்த போது ஏற்பட்ட அருவருப்பு, நீங்கள் இணைத்த படத்தை பார்க்கும் போது ஏற்படவில்லை. மற்றும்படி தவறுகள் எவர் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவை தான்

அத்தோடு மேடையில் குழுவாக புகைப்படங்கள் எடுக்கும் போது அவசரத்தில் செருப்பு அணிந்ததை கவனிக்காமலேயே மேடைக்கு ஏறிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் அகங்காரத்தின் உச்சத்தில் செருப்புக்காலுடன் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு குஷ்பு அமர்ந்திருக்கும் தோரணை ஏதோ ஞாபகமறதியில் தவறுதலாக செய்ததாக உங்களுக்கு தோன்றினால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

Edited by vettri-vel

வெற்றிவேல்!

சினிமா விழா மேடையில் இருந்த சிலை ஒரு சம்பிராதயத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. அதை கடவுள் என்று யாராவது மதிப்புக் கொடுத்திருந்தால், அனைவருமே செருப்பைக் களற்றி விட்டு அமர்ந்திருப்பார்கள். ஆனால் யாருமே அப்படிச் செய்யவில்லை.

எல்லோரும் செருப்போடுதான் அமர்ந்திருந்தார்கள். சிலையில் இரு பக்கத்திலும் அமர்ந்திருந்தார்கள். குஸ்பு இருந்த அதே அளவு தூரத்தில், மறு பக்கத்திலும் ஒரு பெண் செருப்போடு அமர்ந்திருந்தார்.

ஆனால் குஸ்பு முஸ்லீம் என்பதால் மதவெறியர்கள் குஸ்பு மீது மட்டும் வழக்குப் போட்டுள்ளனர்.

மற்றவர்கள் எல்லோரும் செருப்புடன் அமர்ந்திருப்பதை எந்த ஞானதிருஷ்டி கொண்டு கண்டு பிடித்தீர்களோ? அப்படியென்றால் அந்த படங்களையும் இணைத்து விடுங்களேன்

ஒரு சிலையை ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லோரும் போட்டு உடைத்து கடலில் கரைப்பார்கள். மற்றைய நாட்களில் அப்படிச் செய்தால், வழக்குப் போடுவார்கள்.

போகி பண்டிகை அன்று உங்கள் வீட்டு பொருள்களை நீங்களே போட்டு எரிப்பதற்கும், பக்கத்து வீட்டுக்காரன் அத்துமீறீ வீட்டுக்குள் வந்து உங்கள் பொருட்களை எரிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.

Edited by vettri-vel

நானும் அத்துமீறுவதைத்தான் எதிர்க்கின்றேன்.

சினிமாக்காரர்கள் தங்களுடைய மேடையில் ஒரு சிலையை வைத்து படத் தொடக்க விழாவை நடத்திய விடயத்தில் மதஅமைப்புக்கள் அத்துமீறி நுழைவது கண்டிக்கத்தக்கது.

கமரா கோணத்தில் குஸ்பு மிக அருகில் இருப்பது போன்று வந்துள்ளது. ஆனால் அப்படி அல்ல.

மற்றவர்களும் செருப்போடு இருந்தார்கள் என்றுதான் தமிழ்நாட்டு ஊடகங்கள் தகவல் தருகின்றன. அவர்களும் அதை மறுக்கவில்லை.

குஸ்பு கால் மீது கால் போட்டுக் கொண்டிருந்தபடியால், அவருடைய செருப்பு நன்றாகத் தெரிகிறது. மற்றவர்களின் செருப்பு புடைவுக்குள் மறைந்திருக்கிறது. ஆனால் மற்றைய படங்களில் சிலருடைய செருப்பு தெரிகிறது.

ஆகவே அனைவரும் செருப்போடு அமர்ந்திருந்த ஒரு மேடையில், குஸ்பு மீது மட்டும் குறி வைத்து வழக்குப் போடப்பட்டதன் காரணம், அவர் ஒரு இஸ்லாமியர் என்பதுதான்.

இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் மதவெறி பிடித்த இந்து முன்னணி ஒரு இஸ்லாமியப் பெண் மீது வழக்கப் போட்டிருக்கும் காரணத்தை புரிந்து கொள்வது கடினம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.