Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் சிவாஜிலிங்கத்தின் வீட்டின் முன் கிளைமோர் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டினருகே வெடிகுண்டு மீட்பு

வீரகேசரி இணையம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் அவர்களின் கெப்பிட்டிபொல பகுதியிலுள்ள வீட்டு வளாகத்திலிருந்து வெடிகுண்டொன்றை படையினர் இன்று காலை மீட்டனர். இந்த வெடிகுண்டு தொடர்பில் இராணுவ தலைமையகததிற்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து கெப்பிட்டிபொலயிலுள்ள 44ஆம் இலக்க வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது, இந்த கண்டு மீட்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சுமார் ஒன்றைரை கிலோ கிராம் எடையுடையது எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயககார மேலும் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களே வைச்சு தாங்களே தகவல் கொடுத்து தாங்களே எடுத்து தாங்களே அறிக்கைவிட்டு.. சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டியதுதான்..! :):unsure::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே வீதியில் தான் பொய்யர் ஆனந்த சங்கர தேரரும் இருக்கிறார். சங்கரி தமிழர்கள் கைது சரி எனச் சொல்வாரா இல்லை இதுவும் புனை கதை என்பாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே ரி ராஜசிங்கம் தாங்கள் வைத்த குண்டின் நிறையை சரியாக 1.24 கிலோ என கூறியிருகின்றார். கண்டுபிடித்த வாமானப்படையினர் 1.5 என பொய் சொல்லுகிறார்களாம்.

அதே வீதியில் தான் பொய்யர் ஆனந்த சங்கர தேரரும் இருக்கிறார். சங்கரி தமிழர்கள் கைது சரி எனச் சொல்வாரா இல்லை இதுவும் புனை கதை என்பாரா?

அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்றும் சொல்லக்கூடியவர்.

வேண்டுமென்றே சிவாஜிலிங்கத்தின் மீது பழிபோடும் நோக்குடன்தான் இந்த குண்டு வைக்கப்பட்டுள்ளது.

சிவாஜி லிங்கமே குண்டை கொண்டு மறைத்து வைத்திருந்துவிட்டு கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய தேடுதல்களிற்குப் பயந்து வீதியோரத்தில் குண்டினை வைத்துவிட்டார் என்று சாரப்பட பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 03-12-2007 15:22 மணி தமிழீழம் [மயூரன்]

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் குண்டு என்றால்! யாருக்கு பாதுகாப்பு இருக்கிறது - ரணில்

அதியுயர் பாதுகாப்பு வலயத்திலும் குண்டு என்றால் யாருக்குப் பாதுகாப்பு இருக்கிறது என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீட்டருகில் மீட்கப்பட்ட கிளைமோர் குண்டை அடுத்தே ரணில் இன்று பாராளுமன்றில் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

இந்த குண்டு விமானபடை தளபதி ரொகான் குணத்திலகவை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று தற்போது பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டுமென்றே சிவாஜிலிங்கத்தின் மீது பழிபோடும் நோக்குடன்தான் இந்த குண்டு வைக்கப்பட்டுள்ளது.

சிவாஜி லிங்கமே குண்டை கொண்டு மறைத்து வைத்திருந்துவிட்டு கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய தேடுதல்களிற்குப் பயந்து வீதியோரத்தில் குண்டினை வைத்துவிட்டார் என்று சாரப்பட பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான மந்திரவித்தை கதைகள் தொடர்ந்து வருமாயின் தொலைக்காட்சித்தொடர்கள் பார்க்க தேவையில்லை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் காரசாரமான வாக்குவாதம் ஜே.வி.பியினருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் இடையில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

கதையும் சரியில்ல்லை நடிகர்களும் சரியில்லை.... எல்லாம் கோமாளிகளாகக்கிடக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமிட் தொடர்மாடிக்கு முன்பாக குண்டு மீட்பு

வீரகேசரி நாளேடு

அதியுயர் பாதுகாப்பு வலயமான கொழும்பு 05, கெப்பத்திபொல மாவத்தையில் நேற்றுக்காலை 8.40 மணியளவில் அதிசக்தி வாய்ந்த குண்டு ஒன்று விமானப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.இராணுவத் தலைமையகத்திற்கு பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குண்டு மீட்கப்பட்டதாகவும் 1.5 கிலேõகிராம் எடையுள்ள இக்குண்டு சி4 ரக வெடிபொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்தனர்.

44 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள சமிட் தொடர்மாடி வீட்டுத் தொகுதிக்கு முன்பாக, வலது பக்கத்தில் கிடந்த பொதி ஒன்றிலிருந்தே குண்டு மீட்கப்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்பு கம்பத்திற்கு அருகில் சூசகமான முறையில் இக்குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்ததா

கொழும்பு, ஜாவத்தை , கெப்பிட்டிபொல மாவத்தைப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உத்தியோகபூர்வ இல் லத்திற்கு முன்பாக நேற்று சக்திவாய்ந்த குண்டு ஒன்றைப் படையினர் மீட்டிருக்கின் றனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித் திருக்கிறது.

நேற்றுக் காலை 8.40 மணியளவில் "சம்மிற்' தொடர் இல்லங்களுக்கு மத்தி யில் அமைந்துள்ள சிவாஜிலிங்கம் எம்.பி யின் வீட்டுக்கு முன்பாகவுள்ள தொலை பேசிக் கம்பத்தின் கீழ் மர்மப் பொதி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாகப் பொதுமக்கள் இருவர் பொஸிஸாருக்குத் தக வல் கொடுத்தனர் என்று கூறப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸாரும் விமானப்படைக் குண்டு செயலிழக்க வைக்கும் படைப்பிரிவினரும் பொதி கிடக்கும் இடத் திற்கு விரைந்தனர்.

அதன் பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் பொதியில் வைக்கப்பட்டிருந்த குண்டினை செயலிழக்க வைத் தனர்.

செயலிழக்க வைக்கப்பட்ட இக்குண்டு அதிசக்தி வாய்ந்த "சி 4' ரக வெடிமருந் தினால் தயாரிக்கப்பட்டு ஒன்றரை கிலோ எடையுடையதாக இருந்தது என்றும்

அது தன்னியக்கக் கருவி மூலம் வெடிக்க வைக்கக் கூடியது என்றும் படையினர் தெரிவித்தனர்.

அதி உயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள இப்பகுதிக்குள் குண்டு எப்படி எடுத்து வரப்பட்டது என்பது குறித்து விசாரணை களை முடுக்கிவிட்டிருக்கும் புலனாய்வா ளர்கள், கொழும்பிலும் புறநகர்ப் பகுதி யிலும் தேடுதல் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பத

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களின் வீடுகளுக்கு அருகே கிளைமோர்க் குண்டுகளை ஒளித்துவைத்து அவர்களைக் கொலை செய்ய அல்லது கைதுசெய்ய அரசு திட்டம் தீட்டியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியான சிவாஜிலிங்கம் நேற்று நாடாளு மன்றில் கூறினார்.

நேற்று நாடாளுமன்றில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு கூறியவை வருமாறு:

இன்று(அதாவது நேற்று திங்கட்கிழமை) காலை நான் கொழும்பு 05, கெப்பிட்டிபொல மாவத்தையில் அமைந்துள்ள எனது வீட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வரத் தயாரானபோது இராணுவத்தினரும், விமானப்படையினரும் என்னைச் சூழ்ந்துகொண்டு என்னை வெளியேறவிடாமல் தடுத்தனர்.

இப்பகுதியில் கிளைமோர் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கின்றது என்றும் எனது வீட்டை சோதனையிடவேண்டும் என் றும் அவர்கள் கூறினர்.

நான் நாடாளுமன்றிற்குச் செல்லவேண்டும் என்றும், எனது வாகனத்தை யும் எனது மெய்ப்பாதுகாவலர்களையும் சோதனை செய்துவிட்டு எங்களை அனுப்புங்கள் என்றும் நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன்.

அவர்கள் 15 நிமிடங்கள் தாம தித்தே என்னை அனுப்பினர். ஆனால், இங்கு வந்தபிறகு எனது வீட்டுக் கருகே கிளைமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.