Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

அருமையான் தூறல்கள் விகடகவி!!

அன்புடன் வாழ்த்துவது இனியவள் :(

நன்றி நன்றி :(

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தூறல் நாள் 75

பிறவிப்பயன்

உன்னைக் கண்டது

என்று நினைத்தேன்....

உன் இதயமறிந்ததும்

புரிந்து கொண்டேன்...அது

முற்பிறவி தீவிiளென்று!

அன்பே

உன் வாய்வரை

வந்த காதலை..

வார்த்தையாக்கி என்

காதுகளில் துப்பாமல்

தப்பித்துக்கொண்டிருக்கிறாய

  • தொடங்கியவர்

தூறல் நாள் 76

இரவில் விழித்து

பகலில் தூங்குவதால்தான்

நிலவு சூரியனிடம்

கடனாளியாகியதோ

ஒளி வாங்கி...

காரணம் சொல்லத்தெரியாத

கண்களே...நீ

ஏன் கோபத்தைக் கக்குகிறாய்..

அங்கே..கவிதையை நாடும் நான்

நல்ல காதலை மட்டும் தேடுகிறேன்..

காயம் செய்யும் கூரிய ஈட்டிகளையல்ல

பேச இதழ் இருந்தாலும்

விழிகளை மட்டும் உபயோகிக்கும்

பேரழகுப் பெண்களே..

உங்கள் கண்களின் பரிபாஷை

பல இளைஞர்களை..

குழப்பத்துள் நுழைத்து

பித்தர்களாவும்..

சித்தர்களாகவுமாக்கிவிடுகிற

  • தொடங்கியவர்

தூறல் நாள் 77

வா வா வா வந்து விளையாடு

வானவிலேறி பந்து விளையாடு

பழமையோடென்ன தகராறு..

இளமை இருக்கிறதே நம்மோடு...

இளமை இருக்கிறதே நம்மோடு...

மோது..மோது எரிமலையோடு...

முட்டிப்பாரெதிரில் எதுவும் இருக்காது..

வா வா வா வந்து விளையாடு

வானவிலேறி பந்து விளையாடு

பழமையோடென்ன தகராறு..

இளமை இருக்கிறதே நம்மோடு...

இளமை இருக்கிறதே நம்மோடு...

காலைக்கட்டி குதிரையை

வைத்தால் கனவுகள் என்னாகும்..

குண்டுச்சட்டிக்குள் ஓடென்று

சொன்னால் பாவம் அது பாவம்..

ஆகாயம் விரிந்திருக்கிறதே

அது மேல பறந்திட வா

அதிகாலை விடிந்திருக்கிறதே

கடல்நீரில் குளிப்போம் வா

இளமைக்காய் வேண்டாம் வாய்க்காலே

காட்டாறைத் தடுத்திட முடியாதே

இளமைக்காய் வேண்டாம் வாய்க்காலே

காட்டாறைத் தடுத்திட முடியாதே

வா வா வா வந்து விளையாடு

வானவிலேறி பந்து விளையாடு

பழமையோடென்ன தகராறு..

இளமை இருக்கிறதே நம்மோடு...

இளமை இருக்கிறதே நம்மோடு...

பூக்களை இலைகளில் மூடிவைத்தால்

வண்டுகள் பசி கொள்ளும்..

பசித்திடும்போது பனித்துளி தா

தேன்துளிக்கது ஏங்கும்.

வாழ்வில் தேன்மழை பொழிகிறது

சந்தோசத்தில் நனைந்திடலாம்..

வன்முறையென்பது வலிமையல்ல

அன்பால் ஆண்டிடலாம்..

மலையைப் போர்த்திட முடியாது

மனதுக்கு சிறையா அட அது ஏது?..

மலையைப் போர்த்திட முடியாது

மனதுக்கு சிறையா அட அது ஏது?..

வா வா வா வந்து விளையாடு

வானவிலேறி பந்து விளையாடு

பழமையோடென்ன தகராறு..

இளமை இருக்கிறதே நம்மோடு...

இளமை இருக்கிறதே நம்மோடு...

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

தூறல் நாள் 78

இந்த அன்புக்கு

அர்த்தம் தெரியவில்லை..

தோழமையால் தோன்றியதா..

மோதலினால் முளைவிட்டதா

காதலினால் கருவுற்றதா

இரத்தவுறவால் தொற்றிக்கொண்டதா..

உன்முத்த இரவால் பற்றிக்கொண்டதா

உன் அழகால் அலைபாய்கிறதா...

உன் சிரிப்பால் சிந்தை சேர்ந்ததா..

உன் அருகாமையால் அணைஉடைந்ததா..

உன் தொடுகையால் தோற்றம் பெற்றதா..

உன் நினைவால் பரவிக்கொண்டதா..

உன் நிழலாய் ஒட்டிக்கொண்டதா...

பிறர் கேட்டே உருவானதா..

சிலர் தடுத்தே பெரிதானதா...

ஆனால் பெண்ணே...

எங்கோ தவறு இருக்கிறதென்று

மனது சொல்ல நினைக்கிறது..

ஆனாலும்

மறக்கமுடியாமல் மனம் தவிக்கிறது..

உன்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டேன்

நினைப்பதை தவிர்க்கமுடியவில்லை

உன்னோடு பேசுவதை நிறுத்திக்கொண்டேன்

உன் பெயரை உதடுகள் உச்சரிப்பதனை நிறுத்தமுடியவில்லை

நான் நிம்மதியில்லாமல் இருக்கிறேன்

உன் நினைவை அழித்து நிம்மதி தர

மாத்திரை வேண்டும்..அமைதியான நித்திரை வேண்டும்

யாரிடம் வாங்கலாம்?..எங்கே வாங்கலாம்..?

விரலிடுக்கில் மாட்டிக்கொண்ட

பேனாவுக்கு விடுதலை வேண்டும்..

கைகளுக்குள் கசங்கும்

காகிதத்துக்கு மறுவாழ்வு வேண்டும்

இவனிடம் கவிதை என்ற பெயரில்

மூச்சுத்திணறும் தாய்தமிழ்

காப்பாற்றப்படவேண்டும்..

பெண்ணே தயவு செய்து

இதற்காகவாவது இவனைக்

காதலித்துவிடு!..

பெண் பார்க்க வந்தபோது

என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய்

அழகாய் இருக்கிறேனோ

என்று பெருமையாய் இருந்தது..

முதலிரவில்தான் சொன்னாய்..

குறை ஏதாவது தென்படுகிறதா என்று

தேடிக்கொண்டிருந்ததாய்..

பெண்கள்.. விசயகாரர்கள்..

நேரச்சுழலுக்குள்

நான்

சிக்கித்தவித்தாலும்..

என் தாய்ப்பற்றும்

தமிழ்ப்பற்றும்

தூரம் போகாது

பிறந்தது தாயால் என்றால்

வளர்ந்தது தமிழால்..

மூச்சாலும் பேச்சாலும்..

செயலாலும் சிந்தையாலும்..

என்னை மாற்றிக்கொள்ளமாட்டேன்

அழகான பெண்ணுக்கு அலங்காரம் தேவையில்லை

அறிவுள்ள ஆணுக்கு அடியாள் தேவையில்லை

மின்சார அடுப்புக்கு தீப்பெட்டி தேவையில்லை

சம்சார வழக்கிற்கு மத்தியஸ்தம் தேவையில்லை

காதலர் கண் பேசும்போது மொழிகள் தேவையில்லை

காளையராய் ஆனபின்பு அச்சங்கள் தேவையில்லை

குழந்தை குளிக்க குற்றாளம் தேவையில்லை

கூதல் குறைய கொடைக்கானல் தேவையில்லை

சூரிய வெளிச்சத்தில் விளக்கொளி தேவையில்லை

சுட்டெரிக்கும் வெயில் குறைக்க கம்பளி தேவையில்லை

ஆற்றில் குளிக்க வெந்நீர் தேவையில்லை

ஆடல் களிக்க ஆடத்தேவையில்லை

காலம் கடந்தபின் கவலையுறத்தேவையில்லை

யாவும் இழந்தபின் அழுதிருக்கத்தேவையில்லை

விதை போடாமல்

முளைவிடும்...

நீரூற்றாமல்

கிளைவிடும்...

விண் பார்க்காமல்

விருட்சமாகும்

வேரின்றியே வளர்ந்துவிடும்..

காதல் புயல் இன்றியே

முறிந்தும் விடும்...

பெண்ணின் சிறப்புக்கு

சான்று சீதனம் வழங்காமை..

ஆணின் சிறப்புக்கு

சான்று சீதனம் கேளாமை

பெற்றோரின் சிறப்புக்கு

சான்று அத்தகைய பிள்ளைகளை

வளர்த்தமை...

  • தொடங்கியவர்

கறுப்புநாள்

ஈழத்தமிழனை

கலங்கடித்த நாள்...

வன்முறையின் உச்சத்தை

வெறிநாய்கள் அப்பாவித்தமிழன் மேல்

கட்டவிழ்த்துவிட்ட நாள்...

சுடுதாரில் தமிழன் உயிருடன்

உருட்டப்பட்ட நாள்...

டயர் போட்டு தமிழினினப்

பச்சைக்குழந்தை கூட எரியூட்டப்பட்ட நாள்...

மனிதநேயம் சிங்களவரில் மனிதரை தேடத்தொடங்கிய நாள்...

ஓடி ஒளித்த தமிழனையும்...

தேடி வெட்டிக்கொன்ற திகிலான நாள்...

விடுதலையின் தேவையை

இளைஞரின் நெஞ்சில் விதைத்த அந்த நாள்..

ஆண்டுகள் போனாலென்ன..

ஆட்சிகள் மாறியென்ன

வடுக்களைக்கூட காயவிடாமல் தொடரும்..

கொடுங்கோலாட்சியில்

தமிழன் குமுறத்தொடங்கிய நாள்...

இந்தக் கறுப்பு நாள்..

அழுவதற்கல்ல...

குமுறுவதற்கு

இந்தக் கறுப்பு நாள்..

தேம்புவதற்கல்ல

வீம்பு கொள்வதற்கு

இந்தக் கறுப்பு நாள்..

முடங்'கித்தூங்குவதற்கல்ல

எதிர்த்தவன் தலை வாங்குவதற்கு...

எம்மண்ணை தொட்டவனையும்...

எம் பெண்ணைத் தொட்டவனையும்..

தலைவன் பார்த்துக்கொள்வான்..

நாம் அவரோடு கை சேர்த்துக்கொள்வோம்..

இந்தக் கறுப்பு நாள்..

கவலைகளின் நாட்குறிப்பல்ல

விடியலின் தேவைக்கான அலாரம்..

புரிவோம்..முயல்வோம்..செயலாற்ற

கறுப்புநாள் கவிதை நன்று.

ஓடி ஒளித்த தமிழனையும்...

ஒழித்த... ? ஒளித்த? :wub:

  • தொடங்கியவர்

நன்றி வெண்ணிலா...

ஒளிப்பது = மறைவது

ஒழிப்பது = இல்லாது அழிப்பது

http://www.google.co.uk/search?source=ig&a...earch&meta=

பெண்ணின் சிறப்புக்கு

சான்று சீதனம் வழங்காமை..

ஆணின் சிறப்புக்கு

சான்று சீதனம் கேளாமை

பெற்றோரின் சிறப்புக்கு

சான்று அத்தகைய பிள்ளைகளை

வளர்த்தமை...

விகடகவி...உங்க தினசரி தூறலின் தினசரி வாசகி நான்.

யாழ் கொஞ்ச காலம் வரவில்லை என்றாலும். வாசகியாக கன காலமாக இருக்கிறேன்.

ரொம்ப அழகான கவிதைகள்.

அதுவும் எல்லா விடயங்களும் கவிதையாக தூறுறீங்க.

சில கவிதைகளை 2 தடவை வாசித்து தான் புரிந்து கொள்வேன்.

நிஜம்மாவே அருமை. சொல்ல வார்த்தைகள் இல்ல.

தொடருங்கள்.................. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தூறல் நாள் 78

விரலிடுக்கில் மாட்டிக்கொண்ட

பேனாவுக்கு விடுதலை வேண்டும்..

கைகளுக்குள் கசங்கும்

காகிதத்துக்கு மறுவாழ்வு வேண்டும்

இவனிடம் கவிதை என்ற பெயரில்

மூச்சுத்திணறும் தாய்தமிழ்

காப்பாற்றப்படவேண்டும்..

பெண்ணே தயவு செய்து

இதற்காகவாவது இவனைக்

காதலித்துவிடு!..

நான்கு வரிகளுக்குள் அடக்கப்பட்ட அழகான காதல் யாசகம்.

நன்றாக இருக்கிறது விகடகவி. உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுமா?

  • தொடங்கியவர்

நன்றி பிரியசகி....

ஏன் இப்ப காணஏலாம கிடக்கு...வீட்ல விசேசமோ :o

நன்றி சஹாரா :huh:

விரலிடுக்கில் மாட்டிக்கொண்ட

பேனாவுக்கு விடுதலை வேண்டும்..

கைகளுக்குள் கசங்கும்

காகிதத்துக்கு மறுவாழ்வு வேண்டும்

இவனிடம் கவிதை என்ற பெயரில்

மூச்சுத்திணறும் தாய்தமிழ்

காப்பாற்றப்படவேண்டும்..

பெண்ணே தயவு செய்து

இதற்காகவாவது இவனைக்

காதலித்துவிடு

உண்மையில்

என் பேனாவுக்கு விடுதலை

வாங்கிக் கொடுத்தால்

காகிதங்களுக்கு

புது வாழ்வு கிடைக்க

உதவி செய்தால்

நிஐமாகவே

என்னால் மூச்சுத்திணறிய தமிழை

காப்பாற்றினால்

எப்படித் தெரியுமா...

என்கவியவள் என்னைக்

காதல் செய்து கரம்பிடித்து

என் துணைவியானதால்

விகட கவி உங்கள் தினசரி தூறலின்

வாசகனில் நானுமொருவன்

உங்கள் கவியத்தனையும் மிகயழகு

தொடருங்கள் உங்களிடமிருந்து

இன்னும் கவிதைகளை எதிர்பார்கிறேன்

  • தொடங்கியவர்

நன்றி யாழ்அகத்தியன்...

உங்கள் கருத்துக்கும் கவிக்கும்

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிச்சயம் எழுதுவேன்.. :icon_idea:

  • தொடங்கியவர்

தூறல் நாள் 79

காதல் சுயநலமில்லாதது

என்பதனை உன்னை

உன் புதுவாழ்விற்கு வழியனுப்பி

வைத்துவிட்டபிறகும்...

என்னிதயம்

உணர்த்திக்கொண்டிருக்கிறது..

நாடு விட்டு

நாடு நகரந்த அகதி

நான்...

என் முற்றத்து மல்லிகை

வாசத்தை மறந்து

பதினான்கு ஆண்டுகளாகிறது...

மீண்டும் அந்த

சுவாசத்தை சுகமானதாக்கும்..

நறுவாசத்தை நுகர

பாழாய்ப்போன மனது

ஏங்கிக்கொண்டிருக்கிறது!!

நான் உன்னை

முதன்முதலாய் பாரத்தபோது

இல்லாத ஆனந்தம்...

உன்மீது எனக்குண்டான

காதல் தராத ஆனந்தம்...

என் காதலை நீ

ஏற்றுக்கொண்ட கணம்

வராத ஆனந்தம்..

முதல்முத்தம்...

எங்கள் திருமணநாள்...

முதல்இரவு..

எதுவுமே தராத ஒரு

பேரானந்தம்...

எங்கள் குழந்தையை

நான் முதன்முதலாய்

கையேந்தியபோது

உள்ளம் உணர்த்தியது!!

பெண்களுக்கு இதயம்

இருக்கிறதென்பதனை

நிரூபிக்க கேட்டால்...

அன்னை தெரசா புகைப்படத்தை

தேடுகிறார்கள் பெண்கள்!!

எழுகின்ற கதிரவனின்

கதிர்க்கைகளை முடக்கமுடியாமல்

முகிலை முறைக்கின்ற

கடலைப்போல்

பெண்மையின் தன்மையைப்

பேணமுடியாத பெண்பிள்ளைகளை

முறைக்கும் பெற்றோர்...

பொங்கி அடங்குவார்..

கடலின் பேரலைகள் போல்!!

அம்மா என்ற சொல்

மொழிக்குள் அடங்கிப்போனாலும்...

அதன் அரத்தம் உலகத்தை

அடக்கிவைத்திருத்தல்..

ஆச்சர்யமில்லாத

அழகான அற்புதம்!!

கண்ணாடி பாத்திரத்தில்

ஊற்றப்பட்ட

வண்ணத்திரவம் போல

உன் பளிங்கு முகத்தில் தெறிக்கும்

சின்னச் சின்ன உணர்வுகள் போதும்

என் மூன்று வேளை உணவாக

என் செல்லக்குழந்தையே..

வாய்மை ஊமையாய்

இருப்பது கூட

ஒரு வகைப் பொய்யுரைப்புதானே...

அப்படியென்றால்..

அடிப் பெண்ணே..

என் மீதான காதலை

சொல்லாமல் வைத்திருந்து

நீயும் பொய்காரியாகப் போகின்றாயா...

  • தொடங்கியவர்

தூறல் நாள் 80

ஆயிரமாயிரம்

வன்முறைகளுக்கிடையில் சுட

வேதனையாக அமைதிப்புன்னகை

செய்துவிட்டுப்போகின்ற

வெள்ளைப் புறா அவள்..

உலகம் முன்னேறிவிட்டதாம்..

மூடநம்பிக்கைகள் மூட்டைக்குள்ளாம்..

முற்போக்குசிந்தனை பெருகிவிட்டதாம்...

இளம்விதவைப்பெண்ணை

மட்டும் வாழவிடாத

இந்த வரட்டு வனாந்தரத்தில்

ஏன் உள்ளுக்குள் அழுதுகொண்டு

வெளியில் சிரித்துகொண்டு

நாடக வாழ்வு உனக்குப் பெண்ணே...

உன் விடுதலைக்கான சாவி..

உன்னிடம்தான் இருக்கிறது...

உணர்வுகள் புரியாத உறவுகள்..

வேண்டாமடி வேண்டாம்..

வாழ்ந்து பார்க்கலாம்...புறப்படு

அன்பு உலகமொழி

கண்கள் அதற்கு வழி

ஈரம் நிரம்பி

இதயம் ததும்பி

இனிமை பொங்க

மனிதனை மனிதன் நேசித்து

ஒற்றுமையாய் வாழும்

ஒரு நாள் வருமோ?...

எழுதி எழுதி

தள்ளிக்கொண்டிருக்கும்

என் பேனா கூடத் தளரவில்லை

என்றுமே உனக்கு

என்பால் இருக்கும்

அன்பால்..

உன்

அரணைப்பால்..

நீ

ஆற்றித் தரும் பாலால்...

புத்துணர்வும் சத்துணவும் பெறும்

என் இதயமா அன்பே களைத்துவிடும்..

உன் பெயரெழுதி?

பிறப்பு முன்னுரை...

இறப்பு முடிவுரை..

பெரிய நாவல் ஒன்றின்

முதல் பதிப்பாய்...

மானுடவாழ்க்கை!..

கோடிமுறை சந்தித்துக்கொண்டு

இருந்த நம்மிரு

ஜோடிக்கண்கள்..

அப்படி என்னதான்

பேசிக்கொண்டிருந்தனவோ...

தெரியவில்லை..ஆனால்..

நீ போகும்போது

போட்டுவிட்டுப்போன

புன்னகை முத்துக்களை மட்டும்..

எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டது..

நினைவுப்பேழையில்.

இசையோடு சங்கமித்த

மனித வாழ்வில்

ஸ்வரத்தை பறிப்பதுபோல்

ஏன் தனிமனித சுதந்திரத்தைப

பறிக்கிறீர்கள்..பேராசைக்காரர

்களே..

ஏறுபோல் நட

எண்ணுவதைப் பேசு

உனக்கு உண்மையாயிரு

அன்பில் வாழ்ந்துவிடு..

ஏழ்மைக்கு இரங்கு

எளியோர்க்கு உதவு..

குழந்தையிடம் குழந்தையாயிரு..

தீயவர்க்கு தீயிடு

தூய்மையுடன் வாழ்..

உனக்கே உன்னைப் பிடிக்கும்

  • தொடங்கியவர்

தூறல் நாள் 81

மண் போல் தாங்கிக்கொண்டு...

தாய் போல் தந்துகொண்டு..

மரம் போல் வளர்ந்த பின்னே..

வளர்த்த காதலியே.. வேரோடு

புடுங்கி எறியும் கொடுமை காதலில்

தொன்றுதொட்ட வழமை..

விட்டில் பூச்சிகளின்

வீண்மரணத்துக்கு..காரணம் மட்டும்

இருந்திருந்தால்.. அவை கூட

வீரமரணமாகி இருக்கும்..

உன் பார்வைக்கும்

பேச்சுக்கும்.. உள்ள

வேறுபாடு..

உன் அம்மா பேசுவதற்கும்..

உன் அப்பா பேசுவதற்கும்

உள்ள வேறுபாடு..

உன் பார்வை போல்

உன் அம்மா பேசிக்கொண்டே இருப்பார்..

உன் பார்வைபோல்

உன் அப்பா மெனளமாகவே இருப்பார்..உன் பேச்சுபோல்

உன் அப்பாவிற்கு தைரியம் வருமா என காத்திருக்கிறேன்..

கணணிக்கருகே காலையில் குந்தி

மின்வலையில் மான் பிடித்து

யாரின் அழைப்புக்கும்

காது கொடுக்காமல்..

பெற்றவரின் திட்டையெல்லாம்

பொட்டலங்களாக்கி...அருகே..

போட்டுவிட்டு

அலட்சியமாய்.. இருந்தால்

இலட்சியத்தை இழந்தால்..

உனக்கு உணவும் பானமும்

ஊட்டி விடுமோ உன்

கணணிக்காதலி..

பசிப்பது போல் தோன்றியும்..

உண்ணமுடியவில்லை...

நடுநிசி தாண்டியும்

தூக்கம் வரவில்லை

சுற்றிநிற்போர் திட்டுகள்

காதில் விழவில்லை

இது காதல் கோளாறல்ல

இது பரீட்சைமதிப்பெண் குறைபாடு

இந்த வாழ்க்கையின்

நூலில்

வனாந்தர வாசங்களும் உண்டு

சிலர் அதில் கூட

வாழ்ந்தி காட்டி அசத்திவிடுவார்...

சிலர் அதில்

நொந்து காட்டி பயமுறுத்திவிடுவார்..

எதிரே தெரியும்..சுமை

மலையென்று நினைத்தால்

சுமக்க கஸ்ரப்படுவாய்..

மலரென்று நினைத்தால்

சுமக்க இஸ்ரப்படுவாய்..

நேரிய எண்ணங்களால்..

எதிர்நீச்சல் போட்டு

நிஜத்தை வென்றுவிடு நண்பா

உன் கனவுக்குள்..

உன் நினைவுக்குள்

வராததால் நான்

துரதிரஸ்டசாலி என

ஏங்கிக்கொண்டிருந்தேன்..சில

பெண்கள் பார்வையற்றவர்கள் என்பதனை

புரிந்துகொள்ளும்வரை

Edited by vikadakavi

சும்மா சொல்லக்கூடாது காதல் தத்துவங்கள் என்னமா... கொட்டுப்படுது...... :lol:

  • தொடங்கியவர்

நான் என்ன பண்ண ஆதி

அதுவா வருது... :lol:

  • தொடங்கியவர்

தூறல் நாள் 82

தமிழன் என்பவன்

அடிமைத்தனத்தின்

அகராதியின்..

பக்கங்களில்

தெரியப்போபவனல்ல..

விடுதலையின் விளக்கத்தை

விளாவரியாக சொல்லப்போபவன்

களத்தில் தீக்

குளித்துக்கொண்டிருக்கும்..

புலிச் சகோதரியே...

தாலி தூங்க வேண்டிய

கழுத்தில் நஞ்சைத்

தொங்கவிட்டிருக்கிறாளே என்றழுத

உன் தாய் கூட உன்னை நினைத்து

மார் தட்டிக் கொள்கிறார்கள்

தமிழச்சியின் பிறப்பின்

அர்த்தத்தை எடுத்துரைத்தவளே...

விடுதலை ஓர்மத்தை

ஓங்கி விழித்தவளே...

கலிகாலன் அண்ணாவின்

அசைவுகளையெல்லாம் அங்கீகரித்வளே..

உன் சிரமங்கள..;

உன் வலிகள்..

உன் குருதித்துளிகள்..

எங்களைத் துடிக்க வைக்கிறது...

ஆனால் உன் இலட்சியம்

உன் உறுதிப்பாடு..

உன் நேர்மை..

உன் அர்ப்பணிப்புகள்..

உன் உழைப்பு..

எங்களை தலை

நிமிரவைக்கிறது தாயே...

உனக்கு தலை வணங்குகிறோம்

மும்முனை வழியில்

அடி மேல் அடி

அடித்து எதிரி வருவான்

முன்னெதிர் எழுந்து

அவன் மூச்சை நிறுத்தி

புலி வீரன் நிமிர்வான்

எமது மண்ணில் காலை

வைத்தாய் அதிலும் எகத்தாளம்...

எம் தாய்மண் மீதிலே

தான்நின்று குதிக்கிறாய்..அகந்தையின் வெறிக்கோலம்....

நிம்மதி பறித்தாய்..

நித்திரை பறித்தாய்..

நிலத்தைப் பறித்தாய்..

உணவைப் பறித்தாய்..

உறவைப் பறித்தாய்..

உயிரைப் பறித்தாய்..

கனவினைப் பறித்தாய்..

கல்வியைப் பறித்தாய்..

காலத்தைப் பறித்தாய்..

இழந்ததெல்லாம் எண்ணியழும்

எம் கண்ணீரில்

கரையப்போகிறாய் நீ

எம் கோபத்தில் சாம்பலாவாய் நீ

எம் வீரத்தில் வீழந்து போவாய் நீ

குட்டிக்குட்டி

குனிய வைக்கப்பட்ட

தமிழ்க்குடிகளில்..

நெஞ்சுநிமிர்த்தி..களம் குதித்த

கரிகாலன்..தடியெடுத்த

தண்டல்காரனல்ல

சகல தகுதிகளுமுள்ள

தமிழினத்தலைவன்..

கண்ணியம் இவன் கண்கள்..

நேர்மை இவன் நெஞ்சம்..

வீரம் இவன் உரம்..

மதிநுட்பம் இவன் திட்டம்

தமிழீழம் இவன் இலட்சியம்

மொத்தத்தில் தமிழனுக்காய்

தோன்றிய யுகபுருஷன் இவன்

களத்தில் தீக்

குளித்துக்கொண்டிருக்கும்..

புலிச் சகோதரியே...

தாலி தூங்க வேண்டிய

கழுத்தில் நஞ்சைத்

தொங்கவிட்டிருக்கிறாளே என்றழுத

உன் தாய் கூட உன்னை நினைத்து

மார் தட்டிக் கொள்கிறார்கள்

தமிழச்சியின் பிறப்பின்

அர்த்தத்தை எடுத்துரைத்தவளே...

விடுதலை ஓர்மத்தை

ஓங்கி விழித்தவளே...

கலிகாலன் அண்ணாவின்

அசைவுகளையெல்லாம் அங்கீகரித்வளே..

உன் சிரமங்கள..;

உன் வலிகள்..

உன் குருதித்துளிகள்..

எங்களைத் துடிக்க வைக்கிறது...

ஆனால் உன் இலட்சியம்

உன் உறுதிப்பாடு..

உன் நேர்மை..

உன் அர்ப்பணிப்புகள்..

உன் உழைப்பு..

எங்களை தலை

நிமிரவைக்கிறது தாயே...

உனக்கு தலை வணங்குகிறோம்

அற்புதம்

  • தொடங்கியவர்

அற்புதம்

நன்றி வெண்ணிலா...

  • தொடங்கியவர்

தூறல் நாள் 83

எனக்கான வரலாற்றுக்கடமைகளை

நான் மறப்பதில்லை..

காலை..மதியம்..மாலை என்று

மூன்று வேளைகளிலும்

மூக்குமுட்டச் செய்துகொண்டிருந்தாலும்..

என் தந்தை மட்டுமே

என்னை பொறுப்பில்லாதவன் என்று

எளிமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்..

இட்லி..தோசை..இடியப்பம்..பிட்டு

என்று பலவகை சாப்பாட்டு

அட்டவணைகளை பராமரிக்கும்

என்னை அவர்

தண்டச்சோறு என்று

பெருமையாக அழைபபதை

பெரும் கௌரவமாகவே

எடுத்துக்கொள்கிறேன்..

சிலவேளைகளில்..

சுரணையற்ற எருமை என்று

என்னையழைத்து எனக்காக

தன்னிலையை தாழ்த்தி..

தன்னைக்கூட கால்நடையாக்கிக்கொள்ளும்..

என் தியாக தந்தைக்கு

அந்த அரும்பெரும் மனிதருக்கு

இவ்வரிகள் சந்தோசம் தரட்டும்!

விடுமுறையில்

வந்து போகும்

குட்டி மழைத்துளிகளால்

பூங்காவனமாகத் துடிக்கும்

ஏழைப் பாலைவனம் போல் நான்!

அழகாக இருப்பவை

எல்லாம் உன்னை

நினைவுப்படுத்துவதால்..

அந்த இனியசுகம் வேண்டி

என் அறை முழுவதையும்

கண்ணாடிகளால்

நிரப்பி வைத்திருக்கிறேன் !

உண்மையிலேயே

உனக்கும் என் போல்

வைர நெஞ்சம்தான் நண்பா

வைரத்தை வைரத்தால்தான்

அறுக்கமுடியுமாம்..உன்

எண்ணங்களால் என்னை

இப்படி அறுக்கிறாயே..

என்கிறார் என் நண்பர்

விழிகள்

ஈரம் துளிர்த்து

எதையும் வென்றதில்லை

ஆண் பெண்ணைப்போல்

அழகாக இருப்பவை

எல்லாம் உன்னை

நினைவுப்படுத்துவதால்..

அந்த இனியசுகம் வேண்டி

என் அறை முழுவதையும்

கண்ணாடிகளால்

நிரப்பி வைத்திருக்கிறேன் !

:lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

:lol::lol::lol::lol:

:lol:

  • தொடங்கியவர்

போர் போர் போர் என்று

முழக்கமிடும் எதிரி..முற்றத்தில்

பதுங்கியிருக்கிறது புலியென

பார்வையாளரில் ஒரு கூட்டம்..

முடங்கிப்போனது புலியென

முட்டுவோரில் நகையாட்டம்

மக்கள்புரட்சிக்கான மதியுக

நடைநுட்பம் என அரசியல் விமர்சனம்...

மக்களின் துன்பம்

மனதில் வாட்டம்

ஏனிது என சிலர் விசனம்

திக்கெல்லாம் வழி திறக்கும்

திகைப்பார் எதிரி என்று அபிமானிகள் கூட்டம்

நம்பிக்கை சிறு ஊட்டம்

நடப்பதில் ஏமாற்றம்..

எதிரியின் எறிகணை கூரையில் வீழும்

தூரத்தில் வந்துவிட்டான்..

அவன் கூக்குரல் காதில்

கேட்கும்போது என்ன செய்வோம்...

எங்கே போவோம்..

நம் மண்ணுக்குள்ளேயே...நாப்பது முறை

இடப்பெயர்ந்தோம்..

இனி நாதியுமில்லை

திராணியுமில்லை...

வன்னிவிட்டு வாழ இடம்

ஏதும் காணோம்...

பணம் படைத்தோர்..புலம் பெயர்ந்தார்..

அங்குமிங்கும் அகதியாய் அல்லல்பட்டார்..

இந்தியா..இந்தியா என்றோடி அங்கும்

இன்னல்பட்டார் அவமானப்பட்டார்..

தமிழன் வாழ வழி செய்வார் யார்..

தமிழ்க்குழந்தை அழுகை

துடைக்கபோகும் கடவுள் யார்?..

ஒளி பிறக்குமா?...இருள் விலகுமா?..

இன்னல் மறையுமா?..

சந்தோசம் என்ற சங்கீதம்...

தமிழ்க்குடிமனைகளிலும் கேட்கும் நாள் வருமா?.

யாரிடம் யார் கேட்பது?...

பதில் சொல்லும் தகைமை யாருக்கு உள்ளது?..

சூரியத்தேவா...பதில் சொல்லு..தலைவா...

பகைமைக்கும் சேர்த்து

பதில் சொல்லு தலைவா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.