Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தை வரம் கேட்டு வந்தவரிடம் செக்ஸ் தொல்லை

Featured Replies

சுருட்டு சாமியாரின் காம லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. குழந்தை வரம் கேட்டு சென்ற போலீஸ்காரரின் மனைவியை சுருட்டு சாமியார் `செக்ஸ்’ தொல்லை கொடுத்து நாசப்படுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாமியாரிடம் மோசம் போன பெண்களின் பட்டியலை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள். ஜெயிலில் சுருட்டு சாமியார் சென்னை, வேளச்சேரி துர்கா அறக்கட்டளை ஆசிரமத்தை நடத்தி வந்த சுருட்டு சாமியார் பழனிச்சாமி, 2 மனைவிகள் இருக்கும் போது, 3-வதாக பெண் டாக்டர் திவ்யாவை ரகசிய திருமணம் செய்ததால் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுருட்டு சாமியார் மதுரைவீரன் சாமியை வைத்து, சாமி ஆடி குறி சொல்லி புகழ் பெற்று விட்டார். அவரிடம் குறி கேட்டு வந்த பெண் டாக்டர் திவ்யாவை தனக்கு 3-வது மனைவி ஆக்கிக்கொண்டார். இதனால், இப்போது போலீஸ் வழக்கில் சிக்கியுள்ளார். சுருட்டு சாமியார் செய்த லீலைகள் பற்றி தொடர்ந்து தோண்ட தோண்ட வரும் புதையல் போல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

பெண்கள் பட்டியல்

குறி கேட்டு வந்த பெண்களை ஆசிரமத்தில் வைத்து கற்பை சாமியார் சூறையாடியதாக, அவரது முதல் மனைவி சந்திரா கொடுத்த புகாரின் பேரில், மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாமியாரிடம் `செக்ஸ்’ மோசம் போன பெண்களின் பட்டியலை சேகரித்து, அவர்களிடம் புகார் வாங்கி சாமியார் மீது மேலும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கினை, சென்னை பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜ் தலைமையில், உதவி கமிஷனர் ஜெகபர்சாலி, இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், வைரவன், சப்-இன்ஸ்பெக்டர் குமரய்யா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

போலீஸ்காரரின் மனைவி

இதில், போலீஸ்காரரின் மனைவியிடமே சுருட்டு சாமியார் காமகளியாட்டம் ஆடியது தெரிய வந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்த போலீஸ்காரர் ஒருவர் தனது மனைவியை சுருட்டு சாமியாரிடம் அழைத்து சென்று குறி கேட்டுள்ளார். அப்போது விசேஷ பூஜை செய்யவேண்டும் என்று சொல்லி, போலீஸ்காரரின் மனைவியிடம், சாமியார் செக்ஸ் கொடுமை புரிந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீஸ்காரர் தனது மனைவியோடு ரகசியமாக வந்து புகார் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதைபோல, சாமியாரிடம் மோசம் போன பெண்கள் துணிச்சலாக வந்து புகார் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், துணை கமிஷனர் வரதராஜ் தெரிவித்துள்ளார்.

சிறுவன் நரபலியா?

சாமியாரின் ஆசிரமத்தில் வேலைபார்த்த 16 வயது சிறுவன் ராகுல், பாம்பு கடித்து இறந்து போனதாக சாமியார் கூறினார். ஆனால், அந்த சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சாமியார் பழனிச்சாமி துர்கா அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார். அதில் அரசு அதிகாரிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் உள்பட 150 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சாமியார் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

அறக்கட்டளை பணம் மோசடியா?

அறக்கட்டளை மூலம் சாமியார் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அறக்கட்டளையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே சாமியார் அதிக அளவில் சேர்த்துள்ளார். அறக்கட்டளை தலைவராக சாமியாரே பொறுப்பேற்றுள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களிடம் நடத்தும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் சாமியாரை பற்றி கிடைக்கலாம் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.

சாமியாரை போலீஸ் காவலில் எடுக்கும்போது, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சாமியாரை பற்றிய தகவல்களை வேகமாக போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

paraparappu.com

குழந்தை வரம் கேட்டு வந்தவரிடம் செக்ஸ் வைக்க முனைவதை எப்படி தொல்லை என்று சொல்ல முடியும்?

குழந்தை பிறக்காது விட்டால், அது சம்பந்தமான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

அதை விட்டுவிட்டு யாரோ ஒரு ஆசாமியிடம் குழந்தை பிறப்பதற்கு வழி கேட்டால், அவர் அதற்கான வழிமுறையை செய்யத்தானே முயல்வார்.

இதிலே அவரிடம் போன பெண்கள் மீதுதான் தவறு (அட, நானும் நெடுக்காலபோவான் மாதிரி எழுதுகிறேனே! :) )

பாலியல் உறவிற்கு தூண்டினார்கள்" என்று பெண்கள் மீதுதான் வழக்குப் போட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தை வரம் கேட்டு வந்தவரிடம் செக்ஸ் வைக்க முனைவதை எப்படி தொல்லை என்று சொல்ல முடியும்?

குழந்தை பிறக்காது விட்டால், அது சம்பந்தமான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

அதை விட்டுவிட்டு யாரோ ஒரு ஆசாமியிடம் குழந்தை பிறப்பதற்கு வழி கேட்டால், அவர் அதற்கான வழிமுறையை செய்யத்தானே முயல்வார்.

இதிலே அவரிடம் போன பெண்கள் மீதுதான் தவறு (அட, நானும் நெடுக்காலபோவான் மாதிரி எழுதுகிறேனே! :huh: )

பாலியல் உறவிற்கு தூண்டினார்கள்" என்று பெண்கள் மீதுதான் வழக்குப் போட வேண்டும்.

நானும் இதை ஆமோதிக்கின்றேன். வைத்தியர் என்றால் அவர் மருத்துவம் மூலம் குழந்தைக்கு உதவமுடியும். அது அவருக்கு தெரிந்த வழி. ஆசாமிகள் தமக்கு தெரிந்த வழிமூலம் முயற்சி செய்தார். அது அவர் தவறல்ல.

இந்த பெண்ணை ஈவ்டீசிங் வழக்கில் கைது செய்ய வேண்டும். :D:D:D:D

ஆண்கள் செய்வதைத்தான் ஈவ்ரீசிங் (eve teasing) என்று சொல்வார்கள். ஈவ் அதாவது "ஏவாள்" (பெண்கள்) மீது செய்யப்படும் "ரீசிங்" என்று பொருள்படும்

பெண்கள் செய்தால் அது "ஆதாம்ரீசிங்" (adam teasing)

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் சொல்வதிலும் நிறைய உண்மை இருக்கிறது.

பல ஆண்களுக்கு இந்தப் போக்கரித்தனத்தின் பாரதூரம் என்னவென்பது சரியாக புரியாததால்தான் இதை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் என நான் நினைக்கிறேன். "Eve Teasing" என்ற பெயரில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் அழைக்கப்படும் இதை மேலை நாடுகளில் வெளிப்படையாகவே "Sexual Harassment" என்று அழைக்கப்படுவதால் இதன் சட்டவிரோதத் தன்மை வெளிப்படையாகவே அனைவருக்கும் புலப்படுகிறது.

அது ஏன் ஈவ் ரீசிங் என்பது ஈவ் மீது ரீசிங் செய்வது என்று பொருள்படுது ஈவ் செய்யும் ரீசிங் என்று பொருள்படாது? பேர்ட் வாச்சிங் மாதிரியோ?

இல்லாட்டி பெண்கள் காரணமாக இருந்தாலும் ஆண்களில் குற்றம் சாட்டும் இன்றய அநீதியான உலக ஒழுங்கு காரணமோ? (அட நானும்... :huh: )

நிர்வாகமும் எத்தின பேருக்குத்தான் குளிசை வேண்டிக் குடுக்க முடியும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில், போலீஸ்காரரின் மனைவியிடமே சுருட்டு சாமியார் காமகளியாட்டம் ஆடியது தெரிய வந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்த போலீஸ்காரர் ஒருவர் தனது மனைவியை சுருட்டு சாமியாரிடம் அழைத்து சென்று குறி கேட்டுள்ளார். அப்போது விசேஷ பூஜை செய்யவேண்டும் என்று சொல்லி, போலீஸ்காரரின் மனைவியிடம், சாமியார் செக்ஸ் கொடுமை புரிந்ததாக கூறப்படுகிறது.

குழந்தவேணும் ஆனா செக்ஸ் வேணாம் என்னாங்கடா இது சுத்த பட்டிக்காட்டுத்தனமா இருக்கு :huh:

ஏன்...., குழந்தை வரம் கேட்டு புலம் பெயர் நாடுகளில சாமிமாரை தேடி எங்கட சனம் திரியேலையோ..?

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மா போங்கப்பா.படித்த பெண் டாக்டரே சாமியாரைத்தேடிப்போகும் பாமரப்பெண்கள் எம்மாத்திரம் :huh:

புலமனெயர்ந்த நாடுகளிலும் குழந்தை வரம் கேட்டு சாமியாரைத் தேடுகின்றார்களா? என்ன கொடுமை ஐயா இது. இதில் சாமியார்களின் தப்பு எதுவுமில்லை. கணவர்கள்தான் தப்புச் செய்கிறார்கள். எல்லாக் காலங்களிலும் ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்திய ஊடகங்கள் இந்த சாமியார் சங்கதிகளை அவ்வப்போது பரபரப்பாக வெளியிட்ட போதும் அதையுணர்வார்களில்லை. படி;த்த ஆண் பெண்கள் இதற்குள் அடக்கமென்றால் சாமியார்களுக்கு கொண்டாட்டம்தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.