Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்க மாட்டார்: இராஜதந்திர வட்டாரங்கள்

Featured Replies

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு மன்மோகன் சிங்கு மறுப்பு தெரிவித்தார்.

ராஜிவ் காந்தியின் நாட்களில் அவருக்கு நடந்தவைகளை எண்ணி இலங்கையில் அணிவகுப்பு மரியாதை எதிலும் கலந்து கொள்வதற்கும் கண்டிப்பாக மறுத்துவிட்டார். எனவே இலங்கையின் சுதந்திரதின விழாவில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு இலங்கையரசால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு பதில் அனுப்புவது பற்றி ஆழமாக சிந்தித்து முடிவெடுக்கவேண்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியப்பிரதமர் வேலைப்பளு காரணமாக இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்க இயலாது என தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயசான காலத்திலை அங்கை போய் சிங்களவனிட்டை துவக்குப்பிடியாலை எதுக்கு அடிவாங்குவான் எண்டு யோசிச்சிருப்பார். :D:D

தீர்வு பொதி எண்ட எதாவது அழுக்கு பொதியை தலையிலை கட்டி போடுவாங்கள் எண்ட பீதியிலைதான் வரமாட்டன் எண்டு அடம்பிடிச்சு இருப்பார்...

தமிழ் மக்கள் விரும்பாத(( தீவிரமாக வெறுக்கும்)) ஒரு பொதியை முக்கிய பிரமுகராய் போய் பரிசாக வாங்கப்போய் ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாம, தேவையா இந்த நிலமை...???

தீர்வு திட்டம் ஒண்டு தயாரிக்க பட்டு இங்க இருந்து ஒருவர் அங்க கொண்டுபோய் காட்டி, திருத்தம் எல்லாம்( தங்கட வசதிக்கு போல) செய்த பின்னர் , அதிகார பூர்வகாம வாங்கி கொள்ள இந்திய பிரதமர் கட்டாயம் வருவார்.... கவலைப்பட வேண்டாம்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது"எண்டது உண்மை போலைதான் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களின் கூற்றுக்களை இந்தியா கவனத்தில் கொள்ளப்போவதில்லை இதற்கு உதாரணமாக பிரதமரின் விஜயம் ரத்து என்கிறது கூட்டமைப்பு

[sunday January 06 2008 03:23:14 PM GMT] [யாழ் வாணன்]

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சில தமிழ்த் தலைவர்களின் கண்மூடித்தனமான கூற்றுக்களை இந்தியா ஒருபோதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்போவல்லை. இதற்கு சிறந்த உதாரணமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயம் கைவிடப்பட்டமையைக் கொள்ளலாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாத அரசியலுக்கு மேற்படி, தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் முண்டு கொடுப்பது மட்டுமல்லாமல் கைக்கூலிகளாகவும் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளெட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் சில தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது இப்படியே தொடர்ந்தால் இந்தியாவிலும் ஒரு குட்டி யாழ்ப்பாணம் உருவாகிவிடும். எனவே இதனை இந்தியா உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே ஜெயானந்த மூர்த்தி எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளமையானது போரை முன்னெடுக்கும் அறிகுறியாக உள்ளதுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரான ஓர் சூழ்ச்சிகரமான திட்டமாகவே அமைந்துள்ளது.

படை நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்துவரும் வடக்கு கிழக்கு உட்பட்ட தமிழ் மக்கள் இனச் சுத்திகரிப்பு, ஆட்கடத்தல், கப்பம், கொலை மிரட்டல் போன்ற இன்னோரன்ன அவலங்களையும் எதிர்நோக்கிய வண்ணமே உள்ளனர். இப்படியான துன்பங்களை அனுபவித்து வரும் எமது மக்களின் விடுதலைக்காக தமிழகத் தலைவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள ஒரு சில தமிழ்த் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே இந்தியாவிலும் இக்கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர்.

tamilwin.com

போற போக்கைப் பார்த்தால் சுதந்திர தினம் நடக்குமா என்பதே சந்தேகம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.