Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மக்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் - வைகோ

Featured Replies

வீரகேசரி இணையம் - உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வது வேதனை அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது.

இந்நிலை மாறி ஈழத் தமிழர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும். அந்நாள் மிக விரைவில் வந்தே தீரும். ம.தி.மு.க. தொடங்கப்பட்டு இதுவரை எத்தனையோ தடைகள், சோதனைகளை கடந்து வந்துள்ளது.

இலட்சிய உணர்வுள்ள தொண்டர்கள் இருப்பதால், இந்த இயக்கம் கட்டுப்பாட்டுடன் திகழ்கிறது. இனி, வரும் காலம் ம.தி.மு.க.வுக்கு வசந்த காலம். வெற்றிக்கான இலக்கை அடையும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவா? யார் அவர்? ஒஒஒ மதிமக என்நெறாருகட்சி இருக்கில்ல அதனோட தலைவரா?

வசந்தகாலம் வரும் வரும்னு சொல்லிட்டே இருக்கவேண்டியதுதான் அம்மையார் புலிகள பற்றிp பேசும்போது புயல் கரையை கடந்திடுமாக்கும் :D:D:D

இஞ்சை சுண்டல் அண்ணா!

எதுக்கு எங்களுக்கு உந்த அயல்நாட்டு அரசியல்? வைகோ ஆண்ணா எங்களுக்கா உண்மையா பேசுபவர்... அவரை வையிறது சரியெண்டு படேல்ல?

வேணுமெண்டா புரட்சித்தலைவியை பத்தி நல்லா கதையுங்கோ.... அவாவின்ர அண்மைய புரட்சியை பத்தி உலகநடப்பில கூட ஒரு காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்குது...

நீங்களும் உங்கள் பங்களிப்பை செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதான் அவா தெளிவா சொல்லிட்டாவே

கடைசி வரைக்கும் என்னோட கஸ்டத்தில கூட இருந்தனி நீ சோ உண்னை ஒரு தங்கா மாதிரி நினைச்சுகொண்டு மாலை போடுறதுல தப்பில்லனு....

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வருட ஆரம்பத்தில் வந்த நிலவரம் நிகழ்ச்சியினைப் பார்த்திருந்தால் , தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் ' நாங்கள் தமிழ் நாட்டு அரசியல் பற்றி விமர்சிக்கத் தேவையில்லை. அது அவர்களுடைய அரசியல். அவர்கள் எவ்வணியில் இருந்தாலும் எங்களுக்காகக் குரல் கொடுப்பவர்களை விமர்சிக்கக் கூடாது' என்ற பொருளில் கருத்துச் சொல்லி இருந்தார். திரு. வை.கோ , நெடுமாறன் அய்யா, திரு.திருமாவளவன் ஆகியோர் தொடர்ந்து எங்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள். அவர்களை விமர்சிப்பதைத் தவிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வை .கோ எக்கட்சியில் இருந்தாலும் ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.there.gif

கந்தப்பு நீங்கள்வேறை

***

அக படையினரின் தாக்குதல்களிற்கு மத்தியிலை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழீழம் வந்தது என்ன பெரிய தியாகமா? தனது நாட்டுச் சட்டம் தன்னைத் தண்டிக்குமெனத் தெரிந்து ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுத்து ஆண்டுக் கணக்கில் சிறையில் இருந்ததும் என்ன பெரிய தியாகமா?

சிலர் இதுக்குமேல தியாகங்கள் அர்ப்பணிப்புக்களைச் செய்து போராட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு தமிழ்நாட்டு ஆதரவை எப்படிப் பெருக்கிறதெண்டதெல்லாம் தெரியும். ஜெயலலிதாவோடை கூட்டுச்சேராமல் தனியே அரசியல் பலமில்லாமல் நிக்கிற ஆக்கள்தான் எங்களது போராட்டத்திற்கு தமிழகத்தில் ஆதரவை உருவாக்குவார்கள். அம்மாவிற்கு ஆலவட்டம் பிடிக்கிற வைக்கோவின் ஆதரவெல்லாம் நமக்குத் தேவையில்லை.

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ் நாட:;டு அரசியல பற்றி நாங்க கண்டுக்க கூடாதா? தாய் நாடு எங்கள் தமிழ் நாடுதான் அப்படினு அடிக்கடி அறி;க்கை விடுறிங்க அப்படிபட்ட தாய்மண்ணில நடக்கிற அரசியல் மாற்றங்கள ஏன் நாங்க பேசக்கூடாது?

வெகோவ பற்றி பேச என்க்கு உரிமை இல்லைனா ஜெயலலிதாவ பற்றி கருணாணிதிய பற்றி பேச உங்களுக்கும் உரிமை இல்ல:?

திருமாவளவன் தனிமனிதனாக நின்று ஜெயலிதாவிற்க்க எதிப்பு காட:டமபோது எங்கபோனார் வைகோ?

சட்டசபையில் விடுதலை;பபுலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்யும் படி ஜெ வற்புறுத்தியபோது எங்கே போனார் வைகோ?

ஆக அவ்வப்போது அரசியல் நடத்தமட:டம் வைகோவிற்கு ஈழத்தமிழன் தேவைப்படுகின்றாhன்

iகோ உண்மையான பற்றுள்ளவனாக இருந்திருந்தாள் ஜெக்கு எதிராக ஒரே ஒரு அறிக்கை விட்டிருக்வேண்டாமா?

பிரச்சனைகள் வரும்போது பதுங்கி இருப்பதும் இது குறையும் போது பாய்வதும் வைகோவின் வழமையாக போய்விட்டது இப்படியே இருந்தாள் வைகோவின் கூடாரம் காலியாகி தனிமனித அரசியல் நடத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை

எங்கே சுண்டல் அண்ணாவிற்கு எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ... :unsure: (எப்படி சுண்டல் அண்ணா இப்படி எல்லாம் என்னால முடியல :lol: )...யாரோ எழுதி கொடுத்ததை ஸ்பீச் பண்ணிண மாதிரி இருந்தது :huh: ...(வட் அ லவ்லி ஸ்பீஸ்.. :unsure: )....ஆனா ஒரு இலவும் விளங்கவில்லை அதுக்கு தான் கையை தட்ட சொன்னனான் பாருங்கோ :) ..(சுண்டல் அண்ணாவிற்கு ஒரு கோக் கொடுங்கோ ரொம்ப களைத்து போயிட்டார் ஸ்பீச் பண்ணி :lol: )..எப்படின்னா இப்படி எல்லாம் உங்களாள முடியுது என்னால இந்த கொடுமை எல்லாம் கேட்க முடியல...!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் மிகச்சிலரில் வைக்கோவும் ஒருவர். அவர் தமிழ்நாட்டில் அரசியல் நோக்கங்களுக்காக ஜயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதை நாம் விமர்சிக்க முடியாது. அவருக்கு கருணானிதியை எதிர்க்க வேறு வழியில்லை. தமிழ்நாட்டுக் கூட்டணிகள் ஈழம் தொடர்பான கருத்துக்களால் ஒன்றுசேர்ந்தவையல்ல, அவை தமிழ்நாட்டு அரசியல் தொடர்பாக அணி சேர்பவை. இதை வைத்துக்கொண்டு வைக்கோவை விமர்சிக்க முடியாது.

எமக்கு வைக்கோவின் பெறுமதி தெரியாவிட்டாலும் தெரிய வேண்டியவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். ஆகவே தயவு செய்து வைக்கோ போன்ற தமிழ் அபிமாணிகளுக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துங்கள்.

சுண்டல் அண்ணா!

அயல் நாட்டு அரசில்செய்தியால உணர்ச்சி வசப்படாதேங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு நீங்கள்வேறை

***

அக படையினரின் தாக்குதல்களிற்கு மத்தியிலை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழீழம் வந்தது என்ன பெரிய தியாகமா? தனது நாட்டுச் சட்டம் தன்னைத் தண்டிக்குமெனத் தெரிந்து ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுத்து ஆண்டுக் கணக்கில் சிறையில் இருந்ததும் என்ன பெரிய தியாகமா?

சிலர் இதுக்குமேல தியாகங்கள் அர்ப்பணிப்புக்களைச் செய்து போராட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு தமிழ்நாட்டு ஆதரவை எப்படிப் பெருக்கிறதெண்டதெல்லாம் தெரியும். ஜெயலலிதாவோடை கூட்டுச்சேராமல் தனியே அரசியல் பலமில்லாமல் நிக்கிற ஆக்கள்தான் எங்களது போராட்டத்திற்கு தமிழகத்தில் ஆதரவை உருவாக்குவார்கள். அம்மாவிற்கு ஆலவட்டம் பிடிக்கிற வைக்கோவின் ஆதரவெல்லாம் நமக்குத் தேவையில்லை.

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

சுண்டல் என்ற நண்பரின் தியாகத்தையும், போராட்டத்திற்காக உழைக்கும் பங்கையும் சொன்ன விதம் புல்லரிக்க வைக்கின்றது. இப்படி ஒரு தியாகிக்கு வைகோ பற்றிக் கதைப்பதற்கு முழு உரிமை இருக்கின்றது.

கருணாநிதி ஐயா காங்கிரஸ் கூட வைத்திருக்கின்ற நட்புப் பிழையில்லை. வைகோ வைத்தால் தான் பிழையா என்று வசந்தனின் வலைப்பூவில் படித்தது, சுண்டல் விடயத்தில் எடுபடாது. ஏனென்றால் அவர் தான் தாயகவிடுதலைக்காக கஸ்டப்படுகின்ற ஒரு ஆள் ஆச்சே!

சுண்டல் தமிழீழ மண்ணில் இருந்து, சாவைத் துச்சமென மதித்துப் போராடுகின்ற போராளியா? எப்படி அங்கிருந்து இணையத்திற்கு வருகின்றார்??

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் பொன்ஸ் ஹவ் ஆர் யு? தாங்ஸ் என்ன றொம்ப புகழ்றதுக்கு எனக்கும கையும் ஒடுதில்ல காலும் ஒடுதில்ல எனிவே

எல்லாரும் தமிழீத்தில இருந்து கொண்டு தான் விடுதலையை பற்றி பேசவேணும் என்டா யாழ்ழ வாற எல்லாரும் ழூடிட்டுதான் போகனும்... :unsure::unsure::huh:

ஏன் தமிழ் நாட:;டு அரசியல பற்றி நாங்க கண்டுக்க கூடாதா? தாய் நாடு எங்கள் தமிழ் நாடுதான் அப்படினு அடிக்கடி அறி;க்கை விடுறிங்க அப்படிபட்ட தாய்மண்ணில நடக்கிற அரசியல் மாற்றங்கள ஏன் நாங்க பேசக்கூடாது?

வெகோவ பற்றி பேச என்க்கு உரிமை இல்லைனா ஜெயலலிதாவ பற்றி கருணாணிதிய பற்றி பேச உங்களுக்கும் உரிமை இல்ல:?

திருமாவளவன் தனிமனிதனாக நின்று ஜெயலிதாவிற்க்க எதிப்பு காட:டமபோது எங்கபோனார் வைகோ?

சட்டசபையில் விடுதலை;பபுலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்யும் படி ஜெ வற்புறுத்தியபோது எங்கே போனார் வைகோ?

ஆக அவ்வப்போது அரசியல் நடத்தமட:டம் வைகோவிற்கு ஈழத்தமிழன் தேவைப்படுகின்றான்

iகோ உண்மையான பற்றுள்ளவனாக இருந்திருந்தாள் ஜெக்கு எதிராக ஒரே ஒரு அறிக்கை விட்டிருக்வேண்டாமா?

பிரச்சனைகள் வரும்போது பதுங்கி இருப்பதும் இது குறையும் போது பாய்வதும் வைகோவின் வழமையாக போய்விட்டது இப்படியே இருந்தாள் வைகோவின் கூடாரம் காலியாகி தனிமனித அரசியல் நடத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை

அண்ணா தமிழ்நாடு உங்கடை தாய் நாடெண்டா தமிழ் நாட்டு அரசியலை மட்டும் பேசுங்கோ. ஈழத்தமிழரின் போராட்டத்தையும் அதனையும் ஒன்றோடுஒன்று கலக்க வேண்டாம். உங்களிற்கு வில்லியாகத் தெரியும், ஈழவிடுதலைக்கு எதிரான போக்கைக் கொண்ட ஜெயலலிதாவை கதாநாயகியாக்கி இரு தடவைகள் ஆட்சிக் கதிரையில் உட்கார வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். இதிலிருந்து ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள் ஈழத்தமிழர் ஆதரவு என்பது தமிழக அரசியலில் பெரியளவில் செல்வாக்குச் செலுத்த வில்லை. அதவாது வாக்கு வங்கியை நிரப்புவதற்கு உதவாத விடயம்.

ஈழத்தமிழருக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவர்கள் எல்லாம் உணர்வின் அடிப்படையில், திருமாவளவனோ ராமதாஸோ மற்றையவர்களோ ஆதரவுக்குரல் கொடுக்கிறார்கள்.

மதிமுக கட்சியைத் தொடங்கி ஈழத்தமிழ் ஆதரவை வெளிப்படையாக முழங்கி இரண்டு தேர்தல்களைச் சந்தித்தபோது மதிமுக சார்பில் எத்தனைபேரை தமிழக மக்கள் சட்டமன்றிற்கு அனுப்பினார்கள்? இப்போது தமிழக சட்டமன்றத்தில் மதிமுகவிற்கு ஐந்தாறு இடம் கிடைத்ததென்றால் அது எப்படி ஈழத்தமிழர் ஆதரவுக்குரல் கொடுப்பாலா? இல்லையே. மாறாக அதிமுகவுடனான கூட்டாலேதான்.

திருமாவளவன் தனித்து போராடும்போது வைக்கோ எங்கே போனாரா? தாய் நாட்டு அரசியல் பேச ஆசைப்படும் உங்களிற்கு தாய் நாட்டு அரசியலைக் கொஞ்சம் படித்துவிட்டு பிறகு பேசுங்கோ?

வைக்கோவும் திருமாவளவனும் இருப்பது எதிரெதிர் அணிகளில். என்னதான் ஒத்த கருத்தை கொண்டிருந்தாலும் எதிர்க்கூட்டணியில் இருப்பவர்களுடன் கைகுலுக்க முடியாது. அதுதான் தமிழக அரசியல். தமிழ் பாதுகாப்பு இயக்கம் எண்ட ஒன்றை ராமதாஸ் அவர்களும் திருமாவளவன் அவர்களும் இணைந்து நடத்தி திரைப்படங்களிற்கு தமிழ் பெயர் வைத்தல் உட்பட விடயங்களிற்காக போராடினார்கள். ஆனால் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது இருவரும் எதிர் எதிர் அணிகளில் இருந்தனர். (திருமாவளவன் அம்மா கட்சியோடு கூட்டணி). இருவரும் எதிர்எதிர் கூட்டணிக்குச் சென்றபின்னர் ஒருமுறை கூட சந்திக்கவில்லை. ஏனென்றால் அதுதான் தமிழக அரசியல்.

ஆக அவ்வப்போது அரசியல் நடத்தமட:டம் வைகோவிற்கு ஈழத்தமிழன் தேவைப்படுகின்றாhன்

ஓமோம் ஈழத்தமிழனை அரசியலுக்குப் பயன்படுத்தி இரண்டு தடவைகள் ஆட்சிக் கதிரையிலை வைக்கோ இருந்துவிட்டார். திருப்பி இருக்கிறத்திற்காக இடையிடையே அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் பாருங்கோ. அரசியல் ஆதாயத்திற்காக ஈழத்தமிழனைப் பயன்படுத்தி கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலை பெற்றார் பாருங்கோ பெரிய ஆதாயம் என்ன தெரியுமா? அதுதான் கிட்டத்தட்ட இரண்டு வருசம் களிசாப்பிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் என்னமும் மாறவே இல்லையா?:D

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் மின்னல் 2 வருஷம் களி சாப்பிட்டு கடசியா போய் அம்மா வீட்ட தானே விருந்து சாப்பிட்டவர்?

இன்னது வைகோவும் திருமாவும் எதிர் எதிர் அணியில இருக்கினம் அதனால தமிழன் என்று வரும் போது ஒன்றாக முடியாதா?

கர்நாடகா காரன பாத்து பழகுகப்பா எப்படி அரசியல் பன்னிறதுன்னு தமிழன்னா ஆளும் கட்சி என்ன எதிர்கட்சி என்ன ஒன்றா சேர்ந்து எதிப்பாங்க ஏன் அங்க மட்டும் அவங்களுக்கு அரசியல் பன்ன தெரியாதா என்ன?

இப்ப விஜயகாந் என்ற புயல்ல வைகோ கானாமல் போய் றொம்ப நாளாச்சுங்கோhhhhhhhhhhhh :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்,

வைக்கோவின் தனிப்பட்ட விருப்புத்தான் தமிழரின் விடுதலை என்பது. ஆனால் அரசியலிலும் அவர் அதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. புலிகளைக் கூண்டோடு அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு நிக்கும் சோனியாவின் காங்கிரசோடு கருனாநிதி ஆட்சி அமைக்கவில்லையா ? அதுபோலத்தான் தமிழ்நாட்டில் பலமான கருனாநிதியை எதிர்ப்பதற்காக ஜயலலிதாவுடன் வைக்கோ கூட்டுச் சேர்ந்திருக்கிறார். ஜேயுக்கு எதிராக அவரது கூட்டணியிலிருக்கும்போதே வைக்கோவால் கருத்துச் சொல்ல முடியாது. அப்படிச் செய்தால் வருகிற தேர்தலில் அது இவர்களின் கூட்டணி வெற்றியை வெகுவாகப் பாதிக்கும். ஆனால் இக்கூட்டணியில் இல்லாத திருமா போன்றவர்கள் தமது கருத்துக்களை தங்கு தடையின்றி சொல்லலாம். ஆனாலும் திருமா போன்றவர்கள் ஜேயுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன பேசுவார்கள் என்று எம்மால் இப்போது சொல்ல முடியாது.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத் தமிழர்களுக்காக அரசியல் நடத்தவில்லை. அவர்களது அரசியல் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சம்பந்தப்பட்டது. அவர்கள் எமக்காகக் குரல் கொடுப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. எமக்காக அவர்கள் தமது அரசியல் லாபங்களைத் தூக்கி எறிந்துவிட்டு கருத்துச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் அது முட்டாள்த்தனம்.

தமிழினத்துக்கு எதிரான ஆட்சியொன்று மத்தியில் இருக்கும்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதே பெரிய விடயம்.இதை விட பெரிதாக எதிர்பார்ப்பதற்கு எமக்கு அருகதை கிடையாது.

நடிகர் விஜயகாந்தும் தமிழீழ ஆதரவாளர்தான், ஆனால் அவரும் அரசியலுக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டு அரசியலை விட வேறு எதையுமே கதைப்பதில்லை. அவர் அண்மையில் ஈழம் சார்பாகக் கூறிய கருத்தொன்றை உங்களால் கூற முடியுமா ? அதற்காக அவருக்கு தமிழின உணர்வில்லை என்று எம்மால் கூறிவிட முடியுமா ?

வைக்கோ, ராமதாசு, விஜயகாந், நெடுமாறன் , திருமா போன்ற எல்லோருமே தமிழருக்கு விடிவு வரவேண்டும் என்று மனதார விரும்புபவர்கள். அவர்கள் இப்போது இருக்கும் அரசியல் சூல்நிலைகள் அவர்களை சுதந்திரமாக இதைச் சொல்ல விடுவதில்லை. "புலிகளுக்கு எனது ஆதரவில்லை, ஈழப் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவையும் நான் எதிர்க்கப்போவதில்லை, அதற்கு எனது முழு ஆதரவும் உண்டு " என்று கூறிய கருனாநிதியை விட இவர்கள் பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ரகு அண்ணா விளக்கத்திற்கு

என்னுடைய ஆதங்கம் ஒன்றே ஒன்று தான் ஜெ சட்ட சபையில் அப்படி பேசிய பின்பும்ஒரு ஆதரவு கருத்தையாவது உடணடியாக தெரிவிக்கவில்லை என்பதே...

கருநாணிதி தமிழ்செல்வன்அவர்களுடைய மறையிட்டு கவிதை பகிரங்கமாக வெளியிட்டதையும் நாம் மற்க்க கூடாது.. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

:D சுண்டல்,

அது உண்மைதான்,நானும் மறுக்கவில்லை.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.