Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் இன்றும் மோதல் - பல படையினர் பலி

Featured Replies

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வன்னிப் பகுதிக்குள் ஊடுருவுதற்கான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டுள்ள சிறிலங்கா படையினர், மன்னார் பகுதியிலுள்ள இலந்தைக்குளம் பகுதியில் இன்று காலை முதல் கடும் தாக்குதல்களை நடத்தி முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவல் அரண்கள் மீது படையினர் இன்று அதிகாலை 4.30 மணியவில் தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் ஆரம்பமாகியது.

இத்தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 12 படையினர் காயமடைந்துள்ளனர் என இராணுவத் தலைமையகம் இன்று மாலையளவில் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்தும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது என்று இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இன்றைய மோதல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

இதேவேளையில், மன்னாரில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடரும் கடும் மோதலில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 12 படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறிலங்காப் படைத் தலைமையகம் இன்று அறிவித்திருக்கின்றது. மன்னாரில் இலந்தைவான் என்ற இடத்திலேயே இம் மோதல் உக்கிரமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் அடம்பன், பாலமோட்டை ஆகிய பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணிமுதல் சில மணிநேரங்கள் மோதல் இடம்பெற்றதாக படைத் தலைமையகம் அறிவித்திருக்கின்றது. இம் மோதலில் நேற்றைய நாள் ஐந்து படையினர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம் இன்று அதிகாலை முதல் மீண்டும் இலந்தைவான் பகுதியில் மோதல் இடம்பெற்று வருகிறது. இன்று அதிகாலை 4:30 மணிமுதல் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது படையினர் தாக்குதல்களை நடத்தியதையடுத்தே இப்பகுதியில் கடுமையான மோதல்கள் ஆரம்பமாகின.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

மன்னார்ப் பகுதியில் நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்நாளும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம் முறியடிப்புத் தாக்குதல்களில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 105 படையினர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன, மன்னாரில் இராணுவத்துக்கு புதை குழி தோண்டப்படுகிறது. ஒரு நாளில் இவ்வளவு தொகை இராணுவம் இறந்தும் காயப்பட்டும் உள்ளனர். இப்படியே ஒவ்வொரு நாளும். ஜம்மு பேபி சொன்ன மாதிரி "முடியல்ல".

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இந்தியாவுக்குக் கடுப்பாகப் போகுது. சண்டையில் புலிகளின் கை ஓங்கக் கூடாது எண்டு விடாப்பிடியாக இருக்கிறார்கள்.

இனியாவது ஓர்மத்தோட சண்டை பிடிக்க வேண்டும் எண்டு சரத்திட்டச் சொல்ல வேணும். பாவம் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்தியாவும் இப்படிக் காசைக் கட்டிப்போட்டு இந்தக் குதிரை ஓடும் எண்டு கனவு காணுறது ?!!!!!!!

சபேசன் என்ன திடீர் எண்டு :lol:

சபேசன் என்ன திடீர் எண்டு :lol:

2 தடவை கப்பல் பாதுகப்பாக இறக்கிட்டு வந்துட்டுதாம் எல்லோ

நம்பிக்கை வரமலா?

புகை வருத்து எண்டா எங்கையோ நெருப்பு பிடிச்சு இருக்கு என்று தானே அர்த்தம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் களம் இராணுவத்துக்கு, ஆப்பிளுத்த குரங்கின் நிலைமையை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பில நெரிபட்டது குரங்கிட வாலில்லையாம் எண்டு சொல்லினம்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் கடந்த இருநாட்களில் ஏற்ப்பட்ட மோதல்களில் 40 படையினர் பலி! 105 படையினர் காயம்

மன்னாரில் கடந்த இரு நாட்களில் ஏற்ப்பட்ட மோதல்களில் 40 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 105 படையினருக்கு மேல் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை காலை 4 மணி முதல் மன்னார் இத்திக்கண்டல் பகுதியிருந்து அடம்பன் நோக்கிய முன்னேற்ற முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் 11 மணி நேரம் களமாடி படையிரை விரட்டியடித்துள்ளனர்.

நேற்றைய மோதலில் 20 படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 60 படையினருக்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேநேரம் நேற்று திங்கட்கிழமை பரப்பான்கண்டல் காத்தான்குளம் பகுதி ஊடாக மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கீரிசுட்டான் கரம்பைக்குளம் நோக்கி சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகளும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக போராளிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்து படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர்.

இதன்போது 20 படையினர் கொல்லப்பட்டும் மேலும் 45 படையினருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.