Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை

3/15/2008 12:02:29 AM

வீரகேசரி இணையம் - இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் இவ்வாரம் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, அமெரிக்க இராஜங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் நாட்டின் சமகால நிலைமைகளை பிரதிப்பலிப்பதாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இராஜங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு உரிய விளங்கங்களுடன் விரிவான பதில் அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளார். இதேவேளை, வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்ததாக தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக், நாடுகள் மனித உரிமைகளின் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அமெரிக்க நாடுகளில் மனித உரிமைகளின் நிலை குறித்து வருடாந்த அறிக்கை வெளியிடுவதாக கூறியுள்ளார்.

அத்தோடு, இராஜங்க திணைக்களத்தின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் வெளியிடவுள்ள பதில் அறிக்கையை தாம் வரவேற்பதாக கூறியுள்ள அமெரிக்க தூதுவர் இவ்விடயம் குறித்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிசீனாவிட்ட ஆயதம் வாங்கிற விடயத்தில கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்பட்டிருக்குது. அதுதான் கொஞ்சம் கடுமையான அறிக்கையை விட்டிருக்குது ராஜாங்கத் திணைக்களம்.

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

US reaction

A statment issued by the Embassy in Colombo said that the U.S. Government stands by the report.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...080314_fm.shtml

சிறிலங்காவின் மனித உரிமைகளின் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்திருந்த விமர்சனங்களுக்கு சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரை நேரில் அழைத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்

[15 - March - 2008]

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக அண்மையில் அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாகவும் மனித உரிமைகளைப் பேணிக் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் தொடர்பான அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தத

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை, ரோகித போகொல்லாகமவுடன் சேர்ந்து ஒட்டுகுழு பிள்ளையானும் கண்டிச்சிருக்கு .இன்னும் சங்கரி , டக்ளஸ் கண்டிக்கவில்லை.

இலங்கை ஒரு விபச்சாரி மாதிரி தொட்டவங்கள் பாத்தவங்கள் உதவினவங்கள் எல்லாரை சேர்த்து இளுத்துக்கொண்டு தன்னை மாதிரி ஆக்கிபோடுவாங்கள்...

இலங்கையோட சேராத நாடு கெடாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.