Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணக்காரர்களிடம் பணம் பிடுங்க.. தங்களைத் தொலைக்கும் பெண்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் ராஜகோபால், 2வது மனைவி கிருத்திகா பிரிந்தனர்.

சென்னை: ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபாலும், அவரது 2வது மனைவி கிருத்திகாவும், பரஸ்பரம் சுமூகமாக பிரிந்தனர். ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் தலையிட மாட்டோம் எனவும் போலீஸில் உறுதியளித்துள்ளனர்.

சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா. இவருக்கும், ராஜகோபாலுக்கும் சமீப காலமாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு ராஜகோபாலும், கிருத்திகாவும் தனித் தனியாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பரஸ்பரம் புகார் கொடுத்தனர்.

ராஜகோபாலுடன் சேர்ந்து வாழ முடியாது. அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக புகார் கூறினார் கிருத்திகா. ராஜேந்திரன் என்ற வக்கீலின் கட்டுப்பாட்டில் தனது மனைவி இருப்பதாகவும், அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு என் மீது பொய்யான புகாரை கொடுப்பதாகவும் ராஜகோபால் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்குமாறு துணை ஆணையர் லட்சுமிக்கு, ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். அதன்படி இருவரையும் அழைத்து துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தினார்.

அப்போது கிருத்திகா, ராஜகோபாலுடன் சேர்ந்து வாழ முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் ராஜகோபால் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று மீண்டும் இருவரையும் அழைத்து துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தினார்.

முதலில் இருவரையும் சேர்த்து அமர வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரின் வக்கீல்களையும் உடன் வைத்துக் கொண்டு விசாரிக்கப்பட்டது.

அப்போது கிருத்திகா, என்னால் சேர்ந்து வாழவே முடியாது. இருவரும் அவரவர் வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். எனக்கு அவராலோ அல்லது அவரது ஆட்களாலோ எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. இதற்கு அவர் உத்தரவாதம் தர வேண்டும்.

அவருடன் நான் 15 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளேன். எனவே எனது எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான உதவியையும் அவர் செய்ய வேண்டும் என்றார் கிருத்திகா.

கிருத்திகா தனியாக பிரிந்து செல்ல நான் சம்மதிக்கிறேன். அவருக்கு நான் எந்தவகையிலும் தொல்லை கொடுக்க மாட்டேன். அவர் கேட்டுள்ள உதவிகள் உள்ளிட்டவை குறித்து வக்கீல்களுடன் சேர்ந்து பேசி முடிவு சொல்கிறேன் என்றார். அதன் பின்னர் இருவரும் கிளம்பிச் சென்றனர்.

இந்த விவகாரம் குறித்து துணை ஆணையர் லட்சுமி கூறுகையில், இருவரும் பிரிந்து விட தீர்மானித்துள்ளனர். கிருத்திகா சில உதவிகளைக் கேட்டுள்ளார். அதுகுறித்து நாங்கள் தீர்மானிக்க முடியாது. சட்டரீதியாக அவர்களேதான் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் லட்சுமி.

தட்ஸ்ரமிழ்.கொம்.

------------

சரவணபவானுக்கு லண்டனிலும் கிளைகள் உண்டு..!

Edited by nedukkalapoovan

களமுனைப்பில இந்த தலைப்பை பார்த்ததும் நினைச்சேன்..இந்த செய்தியை இணைச்சது நீங்களாத்தான் இருக்குமுன்னு..நீங்களேதான் நெடுக்கண்ணா..எப்டி இபடி அசத்துறேள்..தேடித்தேடி..

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்லுறது தொழில்லதிபராக வேண்டும் என்று :rolleyes:

//சரவணபவன் ராஜகோபால், 2வது மனைவி கிருத்திகா பிரிந்தனர்.//

இதையே தலைப்பாய் வைத்திருக்கலாமே?!

அல்லது நாட்டை குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் பொதுவாக பெண்களிடம் குடியுரிமையையும் பணத்தையும் வீட்டையும் பிடுங்க ஆண்கள் தான் தங்களை தொலைக்கின்றார்கள்.

[ஆண் வெளிநாடு வந்து, பெண்ணை ஊரில் மணந்து வரும் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது தாங்கள் அறியாததா என்ன]

பழுது இருபாலரிலும் உண்டு. பல நாட்கள் உங்களுடன் களத்தில் இருக்கும் சக உறுப்பினர் எனும் முறையில் கேட்டு கொள்கிறேன். எதற்கு பெண்களை மட்டம் தட்டும் வகையில் உங்கள் விவாதங்களும், தலைப்புகளும் அமைகின்றன? விவாதம் என்பது கொஞ்சம் பரவாயில்லை..ஆனால் தலைப்பு பலரும் பார்க்கிறார்கள். இப்படி போடுவதால் ஏற்படும் விளைவுகளை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே. மனிதனின் மனோதத்துவம் பற்றி என்னை விட நீங்கள் அதிகம் அறிந்தவஎ. நீங்கள் நாலும் தெரிந்தவர், கொஞ்சம் இது பற்றி மனதில் உள்வாங்கி கொள்வீர்கள் என நினைக்கின்றேன். நன்றி

Edited by தூயா

  • கருத்துக்கள உறவுகள்

முதல் மனைவியை ஆட்கள் வைத்து கொலை செய்ததாகவும் பணபலத்தால் சட்டத்தில் இருந்து சரவணபவன் உரிமையாளர் தப்பியதாகவும் தமிழ் நாட்டு நண்பர் கூறினார். "பாம்பின் கால் பாம்பறியும் "என்பது போல கிருத்திகா விலகி கொள்கிறார் போலும்.

சரவணபவான் ராஜகோபால் தனிமனிதரல்ல...

கிருவானந்த வாரியாரையும் முருகனையும் வைத்து வியாபாரம் செய்து பிழைத்து வந்தவன்... பல பெண்களுடன் லீலை புரிந்தவர்... இதுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் அதன் காவல் துறையும் காவல் புரிந்தது... தனது மனைவியையே தனது காரியத்துக்காக கூட்டிகுடுக்க நினைத்தவர்தன் அவர்.

இது ஒரு சமூகப்பிரச்சனை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//சரவணபவன் ராஜகோபால், 2வது மனைவி கிருத்திகா பிரிந்தனர்.//

இதையே தலைப்பாய் வைத்திருக்கலாமே?!

அல்லது நாட்டை குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் பொதுவாக பெண்களிடம் குடியுரிமையையும் பணத்தையும் வீட்டையும் பிடுங்க ஆண்கள் தான் தங்களை தொலைக்கின்றார்கள்.

[ஆண் வெளிநாடு வந்து, பெண்ணை ஊரில் மணந்து வரும் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது தாங்கள் அறியாததா என்ன]

பழுது இருபாலரிலும் உண்டு. பல நாட்கள் உங்களுடன் களத்தில் இருக்கும் சக உறுப்பினர் எனும் முறையில் கேட்டு கொள்கிறேன். எதற்கு பெண்களை மட்டம் தட்டும் வகையில் உங்கள் விவாதங்களும், தலைப்புகளும் அமைகின்றன? விவாதம் என்பது கொஞ்சம் பரவாயில்லை..ஆனால் தலைப்பு பலரும் பார்க்கிறார்கள். இப்படி போடுவதால் ஏற்படும் விளைவுகளை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே. மனிதனின் மனோதத்துவம் பற்றி என்னை விட நீங்கள் அதிகம் அறிந்தவர். நீங்கள் நாலும் தெரிந்தவர், கொஞ்சம் இது பற்றி மனதில் உள்வாங்கி கொள்வீர்கள் என நினைக்கின்றேன். நன்றி

உண்மையில் கணவனின் செயல் பிடிக்கவில்லை என்று பிரிபவர்.. எனக்கு சொத்துத் தா என்று கேட்டுப் பிரியமாட்டார். அதுமட்டுமன்றி மிகவும் வயதானவர்கள் என்று தெரிந்தும் திருமணம் செய்துவிட்டு.. அவர்களின் பணத்தைப் பிடுங்கும் வேடதாரிப் பெண்களை சமூகத்துக்கு இனங்காட்டுவதில் என்ன தவறு என்று சொல்லுங்கள்.

இப்படி சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல.. மேற்குலக நாடுகளிலும் பெரும் பணக்கார ஆண்களைச் சுற்றி நடக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் ஒரு பெரும் புள்ளியை ஒரு விபச்சாரிப் பெண் மடக்க அவரின் பதவியும் பணமும் பறிபோனது. அப்படி பெரிய தலைகளுக்கே நடக்கேக்க.. சின்னனுகள்..??!

பெண்கள் அடிமட்டத்தனமா சிந்திக்கும் போது அதை தோலுருச்சிக் காட்டிறது தவறா. அதை மறைச்சு பூசி மொழுகிறதுதான் தவறு. இப்படி வேடதாரிப் பெண்களை இனங்காட்டத் தவறுவது.. அவர்களின் பெருக்கத்துக்கு எம்மை நாமே அனுமதிக்கிறம்.. என்றெல்லவா ஆகிறது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

நீங்கள் சொல்வதையும் தான் நானும் நினைக்கின்றேன். ஆனால் உங்கள் தலைப்புகள் அனைத்து பெண்களையும் சாடுவது போல் அமைகின்றது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. பலர் உங்களிடம் முன்னாடியே குறிப்பிட்டுள்ளனர். சாடையாக பேசுகின்றனர். நீங்கள் என் சக கள உறுப்பினர், என்னுடைய கருத்தை உள்வாங்குவீர்கள் எனும் நம்பிக்கையிலேயே சொன்னேன். உறவுகளுக்கு மரியாதை குறைந்து வரும் காலத்தில் ஒரு பாலாரை சாடும் கருத்துகள் எப்படியெல்லாம் ஒரு மனிதனின் மனதை, பார்வையை [பெஸப்ஸன்] மாற்றும் என்பது உங்களுக்கே தெரிந்தது தானே.!

யாழை எத்தனை பேர் வாசிப்பார்கள். யாழ் தலைப்பில் இப்படியான ஒரு செய்தி தலைப்பை பார்க்கும் போது...பாதிப்பு அதிகமாக இருக்குமோ என்ற கவலை தான் எனக்கு. வீணாக யாழை ஒரு மூன்றாம் தர இணைய தளம் ஆக்கிட கூடாதே. என்னைவிட யாழை நேசிப்பவர் நீங்கள், அதை நான் மதிக்கிறேன்..அதனால் தான் உங்களிடமே நேரிடையாக பேசுகின்றேன்.

என்னுடைய நோக்கம், நீங்கள் இப்படியான வேடதாரிகளை தோலுரித்து காட்டுவதை எதிர்ப்பதல்ல. நானும் சகோதர்களுடன் பிறந்தவள், நண்பர்கள் உள்ளனர்...அவர்களில் ஒருவர் இப்படியான ஒரு வேடதாரியிடம் சிக்குவதை விரும்பமாட்டேன். செய்தியும், வாதமும் சரி..ஆனால் தலைப்பு சரியாக இல்லை என்பதே என் கருத்து... மனதில் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன்..

:rolleyes:

நெடுக்கண்ணா.அம்மா...அக்கா...தங்

இந்த கிருத்திகா எபவர் அவரது ஓட்டலில் வேலை செய்ய வந்தவரின் மனைவி தானே?

அண்ணாச்சி கிருத்திகா 2 அவ்து என்றால் கிருத்திகாக்கும் அண்ணாச்சி 2 வது தானே?

சரவண பவன் ஹோட்டலில் முறுக்கு போட வந்த ஊழியரின் மனைவி தான் கிருத்திகா என்பது குறிப்பிடத்தக்கது. அவரை மிரட்டி விரட்டுவிட்டு கிருத்திகாவை அண்ணாச்சி மடக்கினார் என்பது பழைய கதை.

http://thatstamil.oneindia.in/news/2008/03...-rajagopal.html

பணத்தின் திமிரால் பெண்களை அடையும் ஆண்கள் என்று தலைப்பை மாற்றுவதுதான் சரி. இந்த அண்ணாச்சிக்கு, இப்பிடி எத்தனையோ இருக்குது. இவரது கடைகளில் வேலை செய்யும் அழகிய பெண்கள் இவர் கண்ணிலிருந்து தப்பியதில்லை என்பது தமிழ்நாட்டைப் பற்றி அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறான விவகாரங்கள் தமிழ்நாட்டில் மலிந்து போயுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல.. மேற்குலக நாடுகளிலும் பெரும் பணக்கார ஆண்களைச் சுற்றி நடக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் ஒரு பெரும் புள்ளியை ஒரு விபச்சாரிப் பெண் மடக்க அவரின் பதவியும் பணமும் பறிபோனது. அப்படி பெரிய தலைகளுக்கே நடக்கேக்க.. சின்னனுகள்..??!

நெடுக்கர், நியூ யோர்க் ஆளுனர் ஸ்பிட்சரைத் தான் சொல்லுறீங்களோ? பாட்டுப் பாட வந்த ஒரு இளம்பெண் வருமானத்துக்காக பணக்காரருக்குச் சேவை செய்யும் விபச்சார நிலையமொன்றில் வேலைக்குச் சேர்ந்தது. எல்லாருக்கும் ரூள்ஸ் காட்டின ஸ்பிட்சரை அவள் மடக்கியதாக ஸ்பிட்சரே சொல்லேல்ல, உங்களுக்கு மட்டும் எப்படித் தட்டுப் பட்டது அப்பிடி? கொஞ்சம் உங்கட "கலரடிச்ச" கண்ணாடியக் கழட்டிப் போட்டு தெளிவோட செய்தியள வாசிக்கலாமே நெடுக்கர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், நியூ யோர்க் ஆளுனர் ஸ்பிட்சரைத் தான் சொல்லுறீங்களோ? பாட்டுப் பாட வந்த ஒரு இளம்பெண் வருமானத்துக்காக பணக்காரருக்குச் சேவை செய்யும் விபச்சார நிலையமொன்றில் வேலைக்குச் சேர்ந்தது. எல்லாருக்கும் ரூள்ஸ் காட்டின ஸ்பிட்சரை அவள் மடக்கியதாக ஸ்பிட்சரே சொல்லேல்ல, உங்களுக்கு மட்டும் எப்படித் தட்டுப் பட்டது அப்பிடி? கொஞ்சம் உங்கட "கலரடிச்ச" கண்ணாடியக் கழட்டிப் போட்டு தெளிவோட செய்தியள வாசிக்கலாமே நெடுக்கர்?

விபச்சாரிப் பெண்ணிடம் சிக்கி பணத்தை பதவியைப் பறிகொடுத்தது உலகறிந்த விடயம். நீங்கள் எனிப் பூசி மொழுகத் தேவையில்லை என்று நினைக்கிறேன்..!

பணக்காரருக்காக சேவை செய்யும் விபச்சார நிலையம் எதற்கு உடற்தேவையைப் பூர்த்தி செய்து பணம் பறிக்கத்தானே. இப்படி ஒரு பிழைப்பு பெண்களுக்கு அவசியம் தானா...??! :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணத்திற்காக ஆடைக்குறைப்பு மற்றும் பல வேலைகளை செய்யவே பல பெண்கள் தயாரகவே இருக்கின்றார்கள்...சினிமாவில

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணத்தின் திமிரால் பெண்களை அடையும் ஆண்கள் என்று தலைப்பை மாற்றுவதுதான் சரி. இந்த அண்ணாச்சிக்கு, இப்பிடி எத்தனையோ இருக்குது. இவரது கடைகளில் வேலை செய்யும் அழகிய பெண்கள் இவர் கண்ணிலிருந்து தப்பியதில்லை என்பது தமிழ்நாட்டைப் பற்றி அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறான விவகாரங்கள் தமிழ்நாட்டில் மலிந்து போயுள்ளன.

பணத்தின் திமிரால் பெண்களை ஆண்கள் அடைய முயற்சிப்பதிலை.... பணம் இர்கின்ற ஆணும் சரி இல்லாத ஆணும் சரி பெண்களை அடைய முயற்சிப்பதுண்டு....(அனைவரும் அல்ல) ஆனால் பெண்கள் தங்களுடய ஆசை மற்றும் பணத்தின் மீது கொண்ட மோகத்தாலும் பணம் உள்ள ஆண்களிடம் பல்லைக்காட்டி விட்டு எல்லாம் முடிந்தவுடன், ஆசைப்பட்டது இல்லாமல் போய் விட்டதால் (பணம்) அதன் திமிரால் ஆண்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவார்கள்..... மிதி வண்டியில் போகின்றவன் பார்த்து சிரித்தால் வாயில் "அட சீ பொறுக்கி"...காரில் போகின்றவன் சிரித்தால் வாயில் "தொலைபேசி இலக்கம்"

Edited by chumma....

பணத்திற்காக ஆடைக்குறைப்பு மற்றும் பல வேலைகளை செய்யவே பல பெண்கள் தயாரகவே இருக்கின்றார்கள்...சினிமாவில
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகு இல்லாத பெண்களை நீங்கள் திருமணம் செய்ய தயாரா?

ஆண்களின் பணத்திற்கு ஈடாக பெண்களிடம் இருப்பது அழகு என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கின்றீகளா? அழகைக் காட்டி பணத்தை பெறலாமா அப்போ? அல்லது பணத்தைக்காட்டி அழகைப்பெறலாமா? பெறலாம்....

என்னிடம் பணம் இருந்தால் அழகான பெண்ணை ஏன் ஜஸ்வர்யா ராயையே விவாகரத்து பண்ண வைத்து திருமணம் செய்வேன்.... பணம் இல்லாவிட்டால் ஒரு அழகற்ற தேவதையை தான் திருமணம் செய்ய வேண்டும்....என்னிடம் பணம் இல்லாவிட்டால்...யாராவது அழகி என்னை திருமணம் செய்வாரா?

நிஜ அழகுள்ள(மன அழகு) பெண்களை உலகில் காண்பது அரிது அதே போல நிஜ அழகுள்ள ஆண்களையும் காண்பது அரிது....

Edited by chumma....

:lol::lol::D

சும்மா சும்மா சொல்ல கூடாது பெண்களை வெறுப்பு ஏற்றி அவர்களை உங்களிடம் பேச வைக்க பல முயற்சி என்ன செய்ய உங்களை விட பெண்கள் புத்தி சாலியாக இங்கு இருகிறார்கள் அதனால் உங்கள் பிலெய் போய் விளையாட்டு எல்லாம் தமிழ் பெண்களுடன் சரிவராது ஹி ஹி

அர்ஞ்சுனான் கண்ணுக்கு தெரிவது எல்லாம் புறா மட்டும் தான் ஆனால் பிளேபோய்க்கு எல்லாம் தான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol::D:D

சும்மா சும்மா சொல்ல கூடாது பெண்களை வெறுப்பு ஏற்றி அவர்களை உங்களிடம் பேச வைக்க பல முயற்சி என்ன செய்ய உங்களை விட பெண்கள் புத்தி சாலியாக இங்கு இருகிறார்கள் அதனால் உங்கள் பிலெய் போய் விளையாட்டு எல்லாம் தமிழ் பெண்களுடன் சரிவராது ஹி ஹி..

அர்ஞ்சுனான் கண்ணுக்கு தெரிவது எல்லாம் புறா மட்டும் தான் ஆனால் பிளேபோய்க்கு எல்லாம் தான் :D

அண்ணன் இதில கில்லாடியாக்கும்.. அம்பிகாவையே மடக்கினவராச்சே..! அம்பிகா மடங்கினது அண்ணனின் அழகில அல்ல. அண்ணனின் லகரங்களில்..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் இதில கில்லாடியாக்கும்.. அம்பிகாவையே மடக்கினவராச்சே..! அம்பிகா மடங்கினது அண்ணனின் அழகில அல்ல. அண்ணனின் லகரங்களில்..! :D:lol:

அது யாருங்க அம்பிகா :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது யாருங்க அம்பிகா :lol:

அதுதாங்க மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் கலக்கிய முப்பெரும் தேவிகளில் ஒருவர்.

அம்பிகா.. நதியா.. ரேவதி கேள்விப்பட்டிருக்கிறீங்களா..??! அதில வாற அம்பிகா..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D:D

சும்மா சும்மா சொல்ல கூடாது பெண்களை வெறுப்பு ஏற்றி அவர்களை உங்களிடம் பேச வைக்க பல முயற்சி என்ன செய்ய உங்களை விட பெண்கள் புத்தி சாலியாக இங்கு இருகிறார்கள் அதனால் உங்கள் பிலெய் போய் விளையாட்டு எல்லாம் தமிழ் பெண்களுடன் சரிவராது ஹி ஹி

அர்ஞ்சுனான் கண்ணுக்கு தெரிவது எல்லாம் புறா மட்டும் தான் ஆனால் பிளேபோய்க்கு எல்லாம் தான் :D

எனக்கு ஒரு பெண் நண்பி இருத்தார்... யாழ்ப்பாணத்தில் பிறந்து இலண்டனில் ஒரு சட்ட மாணவி... ஒரு வருட கால பழக்கம்.... நேரில் சந்தித்து தான் பழக்கம்.. என்ன செய்கின்றா என்று பார்ப்பதற்காக ஒரு நாள் கூப்பிட்டு சொன்னேன்..எனக்கு சில பிரச்சனைகள்.. பணப்பிரச்சனை...(insolvency) என்று கூறினேன்.... அதன் பின்னர் மூன்று நாட்கள் கதைத்தா..... பின்னர்.. கதைக்க வில்லை... அதன் பின்னர் ஒரு சில மாதங்களின் பின்னர் நான் சொன்னது பொய் என்று தெரிந்தவுடன் கூபிபிட்டு ஏதோ பெரிய உரிமை உள்ளவர் போல எப்படி எனக்கு பொய் சொல்லலாம் என்றா.... போடி என்று கூறி விட்டேன்....

உண்மையை சொல்லப்போனால்... பிளே போய் விளையாட்டு தமிழ் பெண்களுடன் (ஆசியா) தான் இலகு... அவர்களுக்கு சொல்லவேண்டியதெல்லாம் " நான் உன்னை விரும்பிகின்றேன்.... திருமணம் செய்து கொள்ள விரும்புகின்ரேன்"(அப்படியே நல்ல பணம் உள்ளவர் போல காட்ட வேண்டும்).. ஆனால் மேற்கத்திய பெண்கள் என்றால்.. வேலை முடிய முதல் சொத்தில் பாதி தொலைந்து விடும்...

வடிவேலு.. அனுபவம் பத்தாது உங்களுக்கு.... :lol:

Edited by chumma....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.