Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன அரசின் உதவி தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல - சீன தூதுவர்.

Featured Replies

சீன அரசு இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல. இலங்கையர் அனைவரையும் நாம் எமது நண்பர்களாகக் கருதகின்றோம். இலங்கையர் என்றால் அது சிங்களவா, தமிழர், முஸ்லிம்கள் என நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட இனத்தையும், அரசியல் கட்சியையும் திருப்திப்படுத்தும் விதத்தில் நாம் இலங்கை அரசிற்கு உதவிகள் வழங்கவில்லை. இலங்கைக்கு பாரிய இராணுவச உதவிகளை சீனா வழங்குகின்றது என்பது தவறான தகவலாகும். தயவு செய்து மக்களிடம் இதை எடுத்துக் கூறுங்கள் என்று இலங்கைக்கான சீன தூதுவர் தபோயோ, மே.ம.முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பியிடம் தெரிவித்தார்.

நேற்று மாலை சீனத் தூதரகத்தில் மனோ எம்.பியுடன் கலந்துரையாடிய சீனத் தூதுதர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது. அதனால் யுத்தம் நடைபெறுகின்றது. எனவே இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கும் பொழுது நாம் மிக எச்சரிக்கையாக இருக்கின்றோம். பெருந்தொகை ஆயுதங்களையும், உயர் திறன் கொண்ட ஆயுதங்களையும் நாம் வழங்குவதில்லை. இலங்கை மக்கள் அனைவரும் சமத்துவமாகவும், யுத்தமின்றியும் வாழ்வதையே நாம் விரும்புகின்றோம். சீனாவில் ஹன் இனம் பெரும்பான்மை இனமாகும். ஆனால், ஹன் ஆதிக்கத்தை நாம் திணிக்கவில்லை. எமது நாட்டில் 55 இனக்குழுக்கள் இருக்கின்றன.

திபெத் உட்பட அநேக இனங்களுக்கு உள்ளக சுயட்சி வழங்கபட்டுள்ளது. அவர்களது பிராந்தியத்தில் அவர்களது மொழியயே பயன்படுத்துகின்றார்கள். திபெத்திய பிரச்சினைக்கும், இலங்iயில் தமிழர் பிரச்சினைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. இதை நாம் புரிந்து கொண்டுள்ளேர்.. எனவே எமது நாட்டுப் பிரச்சினையும் இலங்கையின் இனப்பிரச்சினையையும் நாம் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டோம். சீனாவில் பிரிவினைவாதத்தை சர்வதேச ஏகதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்குகின்றது. ஆனால், இலங்கையில் தமிழர் போராட்டத்திற்கு சர்வதேச ஏகாதிபத்தியத்தின் பின்னணி இருப்பதாக சிலர் சொன்னாலும், அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதே வேளையில் இலங்கைக்கு நாம் சிறு தொகை சாதாரண ஆயுதங்களை வழங்குகின்றோம். கனரக ஆயுதங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக இலங்கையில்; உள்ள தமிழ் ஊடகங்களை மிக விரைவில் சந்திக்க விரும்புகின்றேன். அதே வேளையில் உங்கள் கருத்துக்களை எனது அரசிற்கு நிச்சயம் தெரிவிப்பேன்.

நன்றி வீரகேசரி.

இப்போது எதற்காக இந்த சமாளிப்பு??

  • கருத்துக்கள உறவுகள்

தீபேத்தையும், தாய்வானையும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் ஒரு ஆக்கிரமிப்பு வல்லரசா எம்மைப் பற்றிக் கதைப்பது ?

இன்று உலகிலுள்ள ஆக்கிரமிப்பு, இனக்கொலை நடத்தும் நாடுகள் எல்லாவற்றிற்கும் தனது ராணுவ உபகரணங்களை மலிவு விலையில் விற்கும் சீனா கதைக்கிறது ??!!!

இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது என்ன சமாதானத்துக்கா ? தமிழருக்கு எதிராக போர் நடக்கவில்லை என்றால் யாருக்கு எதிராக போர் நடக்கிறது ? இந்தியாவுக்கெதிராகவா ?

இலங்கைக்கு அழிவுதரும் ஆயுதங்கள் எதையும் கொடுக்கவில்லை என்றால் இப்போது கொடுக்கு ஆயுதங்கள் எல்லாம் என்னாத்துக்கு ? எலி புடிக்கவா ??????

சும்மா லொள்ளுப்பண்ணிக்கொண்டு !!!!!!!!!!!

இந்த ஜொள்ளர்களின் உதவியும், உள்நாட்டுத் தயாரிப்புக் கிட்டேயும் நிற்கமுடியவில்லை. அங்கே செய்கின்ற உதவியில் ஒரு வீதம் எங்களுக்கும் கசிந்தால் போதும் மாயாஜாலமே நிகழும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை முன்பே எங்கேயோ கேட்டமாதிரி இருக்கு...........

வேறு ஒரு நாட்டு தூதுவரின் சத்தியத்தின் தர்ம வார்த்தைகளை அப்படியே கொப்பி பேஸ்ற் பண்ணினமாதிரி இருக்கு.

தமிழ் மக்கள் மீது என்ன அக்கறை....... வாசிக்கும் போது தேகமே குளிருது!

வல்லரசுகளின் ஆதிக்கபோட்டிக்குள் தெரிந்தோ தெரியாமலோ தமிழினம் சிக்கிக்கொண்டு விட்டது என்பது மட்டும் தான் உண்மை. எல்லா தூதுவர்களும் குணச்சித்திர நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.... நம் தலைவிதியை நாமே தீர்மானிப்போம்.

ஏன் இவர் இப்ப இப்பிடி போடுறார்...?! :D:D:o

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசுகளின் ஆதிக்கபோட்டிக்குள் தெரிந்தோ தெரியாமலோ தமிழினம் சிக்கிக்கொண்டு விட்டது என்பது மட்டும் தான் உண்மை. எல்லா தூதுவர்களும் குணச்சித்திர நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.... நம் தலைவிதியை நாமே தீர்மானிப்போம்.

உலகமயமாதலின்பின் தெரிந்தோ தெரியாமலோ சிக்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் இனங்கள் தனித்துமில்லை தனிதன்மையுடனும் இல்லை. உலகமயமாவதில் எங்கள் பலம் உலகத் தமிழரரின் அகங்கம் என்கிற வகையிலும் புலம் பெயர் சமூகப் பின்னணியாலும் நாம் வரிதுள்ள பல்தேசிய தன்மைதான் எங்கள் அடிப்படைப் பலமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனை உணராமல் நாம் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. சீன தூதுவர் பேசியது உண்மையில் இலங்கைத் தமிழர்களை மட்டும் மனசில் வைத்தல்ல. அவர் உலகத் தமிழர்களையும் கருதில் கொண்டே பேசுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சீனாவின் உதவியோடு சிங்களவர்கள் வெற்றி பெறும்போது தமிழர்கள் இந்திய ஆதரவாளர்களாக மாறிவிடக்கூடாது என்பதுமட்டுமே அவரது தற்போதையக கவலை.

விடுதலைப் புலிகள் இந்திய உறவுகளுக்குச் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபோன்ற புதிய அக்கறைகள் பலப்பட்டு வருகிற சந்தர்பதில் புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும் தருணத்தில் அதனைக் குளப்ப சீனா விரும்புவது இயல்பானதே.

எல்லாம் அரசியல்..! பகடை காயக இலங்கை, பலியாடாக அப்பாவி மூவின மக்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

சீன உதவிகள் ஒருபோதும் தமிழ்மக்களுக்கு எதிரானவையல்ல -மனோ எம்.பி.யிடம் சீனத் தூதர் உறுதி

20.03.2008 / நிருபர் வானதி

சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல. இலங்கையர் அனைவரையும் நாம்

எமது நண்பர்களாகக் கருதுகின்றோம். இலங்கையர் என்றால் அது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட இனத்தையும் அரசியல் கட்சியையும் திருப்திப்படுத்தும் விதத்தில் நாம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகள் வழங்கவில்லை. இலங்கைக்கு பாரிய இராணுவ உதவிகளை சீனா வழங்குகின்றது என்பது தவறான தகவலாகும். தயவு செய்து தமிழ்மக்களிடம் இதை எடுத்துக் கூறுங்கள் என, இலங்கைக்கான சீன தூதுவர் 'தபோயே' மேலக மக்கள் முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பி.யிடம் தெரிவித்தார்.

நேற்று மாலை சீன தூதரகத்தில் மனோ எம்.பி.யுடன் கலந்துரையாடிய சீன தூதுவர் மேலும் தெரிவித்ததாவது;

"இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது. அதனால், யுத்தம் நடைபெறுகின்றது. எனவே, இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கும் பொழுது நாம் மிக எச்சரிக்கையாக இருக்கின்றோம். பெருந்தொகை ஆயுதங்களையும் உயர் திறன் கொண்ட ஆயுதங்களையும் நாம் வழங்குவதில்லை.

இலங்கை மக்கள் அனைவரும் சமத்துவமாகவும் யுத்தமின்றியும் வாழ்வதையே நாம் விரும்புகின்றோம். சீனாவில் ஹன் இனம் பெரும்பான்மை இனமாகும். ஆனால், ஹன் ஆதிக்கத்தை நாம் திணிக்கவில்லை. எமது நாட்டில் 55 இனக்குழுக்கள் இருக்கின்றன. திபேத் உட்பட அநேக இனங்களுக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்களது பிராந்தியத்தில், அவர்கள் அவர்களது மொழியையே பயன்படுத்துகிறார்கள்.

திபேத்திய பிரச்சினைக்கும் இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. இதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். எனவே, எமது நாட்டு பிரச்சினையையும் இலங்கையின் இனப் பிரச்சினையையும் நாம் போட்டு குழப்பிக் கொள்ள மாட்டோம். சீனாவில் பிரிவினைவாதத்தை சர்வதேச ஏகாதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்குகின்றது. ஆனால், இலங்கையில் தமிழர் போராட்டத்திற்கு சர்வதேச ஏகாதிபத்தியத்தின் பின்னணி இருப்பதாக சிலர் சொன்னாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கைக்கு நாம் சிறுதொகை சாதாரண ஆயுதங்களை வழங்குகின்றோம். கனரக ஆயுதங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்களை மிக விரைவில் சந்திக்கவிரும்புகின்றேன்.

இதேவேளை, உங்களது கருத்துகளை எனது அரசாங்கத்திற்கு நிச்சயமாகத் தெரிவிப்பேன். அவை இலங்கை தொடர்பிலான எனது அரசாங்கத்தின் கொள்கையை இன்னமும் நெறிப்படுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக சீன தூதுவரிடம் மனோ எம்.பி. கூறுகையில்;

இலங்கையில் பேரினவாத பின்னணியே தமிழ் தீவிரவாதத்தை உருவாக்கியது. இதுவே இன்றைய யுத்தத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாகியுள்ளது. சீனா தொடர்பிலான தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான மரியாதையையும் நம்பிக்கையையும் களங்கப்படுத்திவிடும் விதத்தில் சீனா செயற்படக் கூடாது. இதை உங்கள் அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் செய்தியாக கூறிவைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சங்கதி.கொம்

--------------------------

எங்கட தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் றோவின் தயவில் சிறீலங்கா அரசின் ஆதரவோடு இயங்கும் பிள்ளையான் குழுவோட மல்லுக்கட்ட நிற்கிறதோட மிணக்கடுகினம் போல. மனோ கணேசன் போல சில விடயங்களை உருப்படியாச் செய்யவும் விளையலாமே..! :wub::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா, இனி இந்த வயது போன நேரத்தில் தனது பதவியை வருங்கால இளையர்களிடம் கொடுத்து விடலாமே? சேடம் இழுக்கு மட்டும் பதவியிலே இருக்க வேண்டுமென அடம் பிடிக்கிறார்கள். :unsure::wub:

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு அமெரிக்காவால் புதிய தலையிடிகள் கூடியுள்ள நிலையில் சிறீலங்கா இப்போ தெளிவான ஒரு நிலைப்பாட்டை சீனாவுக்கு சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. சீனா சிறீலங்காவின் நீண்ட கால நண்பன். ஆனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இந்தியா போன்றவற்றுக்கு எழுந்துள்ள பிராந்தியத்தில் இலங்கையில் கால்பதித்தல் என்ற தேவை அவை வலிந்து சிறீலங்காவுக்கு உதவுதல் என்பன சீனாவுக்கு ஒன்றும் விருப்புக்குரிய அம்சங்கள் அல்ல.

சீனா கனகர ஆயுதங்களை பாகிஸ்தானூடாக வழங்குகிறது. அமெரிக்கா நேரடியாகவும் பாகிஸ்தானூடும் இஸ்ரேலூடும் வழங்குகிறது. இந்தியா நேரடியாக வழங்குகிறது. ரஷ்சியா நேரடியாக வழங்குகிறது. ஈரான் நேரடியாக வழங்குகிறது. இப்படி எல்லாரையும் தன்னை ஒரு பக்கச் சார்பில்லாதவன் தோறணையில் சிறீலங்கா ஏய்த்து வருகிறது. ஆனால் உலக ஒழுங்கு மாற்றம் என்பது சிறீலங்கா ஏதாவது ஒரு குழுவுக்கு அதாவது அமெரிக்கா சார்புக் கூட்டணிக்கு அல்லது அதன் எதிர்க்கட்சியான சீன சார்ப்புக் கூட்டணிக்கு தனது பகிரங்க ஆதரவை செய்ய வேண்டிய வேளையை நெருங்கச் செய்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கக் கூட்டணி பலமான பொருளாதாரக் கூட்டணியாக மட்டுமன்றி செல்வாக்குள்ளதாக இருப்பதுடன் சிறீலங்காவை நெருக்கடிக்குள் தள்ளி பணிய வைக்கக் கூடிய நிலைக்குள் வைத்திருக்க விரும்புகின்றன. இது சீனாவுக்கு விருப்புடைய ஒன்றல்ல. ஒன்றில் சிறீலங்கா சீனச் சார்புக்குழுவுக்குள் அடங்க வேண்டும். இன்றேல் அமெரிக்க சார்புக்குழுவுக்குள் அடங்க வேண்டும்.

இதற்கான இறுதித் தீர்மானம் சிறீலங்கா தரப்பில் இருந்து எழுகின்ற வேளையில் தமிழர் தரப்பு தமக்கு சாதகமான தரப்பு ஒன்றை தாம் அணுகிட வேண்டும். அதற்கேற்ப இராஜதந்திர நகர்வுகள் அவசியம்.

சும்மா பிள்ளையானையும்.. ரோவையும் கண்டு பயந்து கொண்டிருக்காமல்.. அவற்றையும் சமாளிச்சுக் கொண்டு.. சர்வதேச ஆதிக்க சக்திகளின் போட்டா போட்டியை நமக்குச் சாதமாக்கக் கூடிய நிலைகள் நோக்கி நாமும் நகர வேண்டும். கைகட்டி வேடிக்கை பார்த்திட்டு இருந்தா தமிழனை காக்க தந்தை செல்வா சொன்னது போல கடவுள் தான் வரணும்..! :unsure::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போது மில்லாத புதுப்போதாய் சீனா தமிழ் மக்கள்மீது தனது அக்கறையைக் காட்டியிருப்பது தெற்காசியப் பிராந்தியத்தில் தமிழ்த்தேசியம் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளதென்பதையே குறிக்கின்றது. தமிழ்த் தேசியம் தனது ராஜதந்திர வழிமுறைகளால் சீனாபோன்ற வல்லரசுகளை எம்பால் ஈர்த்து புதிய பரிமாணங்களில் உறவுகளை மேம்படுத்த இத்தகைய சூழ்நிலைகளைப் பயன்படுத்தவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டணியினர் மற்றும் தேசியத் தலைவர் தலைமையிலான எமது போராளிகள் அனைவரும் ராஜதந்திர உறவுகளை ஸ்தாபன ரீதியாக வெளிப்படையாகவோ அன்றேல் மறைமுகமாகவோ சீனாவுடன் ஏற்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குச் சீனாவின் இத்தகைய சமிக்ஞைகள் கால்கோளிட்டு வழியமைத்துக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாம் நாம் எவ்வாறு எமது நண்பர்களை உருவாக்கிக்கொள்கிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது. சிறீ லங்காவுக்கும் சீனாவுக்கும் அல்லது பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு தூர விலகியிருக்காமல் எம்மீது காட்டப்படும் கரிசனையையும், நீட்டப்படும் கைகளையும் நல்ல முறையில் பயன்படுத்தியும் பற்றியும் கொள்வோமாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.