Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ele_pass_(5).jpg

ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன்

ஆர்த்தெழுந்து தமிழ் தொடுத்துத் தாலாட்டுப் பாடிடவும்,

அனல் கொட்டும் வீரத்தின் மிடுக்கெடுத்து வனையவும்,

போக்கற்ற புரட்டனைத்தும் எழுத்தீயில் எரிக்கவும்,

எழுந்த என் எழுத்தாணி... இன்றுமட்டும்,

இலக்கு விட்டு.. ஏன் அழுது நிற்கிறது?

புறம் படைக்கும் தமிழ் மகளின் போர்க்குணத்தை மொழியவும்,

புனை கவியில் எழுகை எனும் பெருநடப்பை விதைக்கவும்,

இணையில்லா விடுதலையில் வனப்பெடுத்துப் புனையவும்

இலக்கெடுத்த என் பேனா இன்றேன் நலிகிறது?

ஒப்பாரிப் பாடல்களை எப்போதும் பாடாத

என் இதயம்

இப்போதேன் அழுதபடி ஒப்பாரி உரைக்கிறது?

அன்னை மண்ணிலே குருதியாறுகள்

காயவில்லையே, உறையவில்லையே...

இலக்கெடுத்த நம் தாயின் வேதனை

ஆறவில்லையே,.. அழியவில்லையே...

வழக்கெடுத்தவன் காலனா உன்னிடம்...

என்ன விளக்கக் குறைவோ..

இறைவா!.. உன் விசமத்திற்கு அளவிலையோ?

கந்தகம் சரிக்காத களவீரனை,

செந்தமிழ் ஈழத்தின் சமர் வேந்தனை,

எந்தநேரம் பார்த்து எமைவிட்டுப் பறித்தாய்?

சிங்களம் ஏவிடும் பேய்களின் கைகளில்

தங்கமண் தவித்திடும் தருணத்தில் அல்லவா!

பைந்தமிழ் ஈழத்தின் பிரசவக் குருதியில்

எங்களர் அனைவரும் நனையும் கணத்திலல்லவா!

இறைவா!... ஈழக்கருவறையைக்

காத்து வளர்த்தவனை காவெடுத்து விட்டாயே!

பார்த்தவன் கண்பனிக்க, கையெடுத்து முத்தமிட

சேர்க்க மனமின்றி இடைபிரித்த வஞ்சகன் நீ!

அண்ணனே!......

பால்ராஜ் எனும் அற்புத வீரனே!

அந்தகாரம் உனைச் சூழ்ந்ததெப்படி?

உன் உதிரப்பூ உறைந்தது எங்ஙனம்?

எதிரியைப் பொருதும் களங்களெல்லாம்

உன்பேர் உச்சரிக்குமே!

எதிரியை எச்சரிக்குமே!

வரும் பகை காலூடே வடிக்கின்ற நீர்த்துளிகள்

உன் தீரம் பெரிதுரைக்குமே!

திசையெங்கும் எதிரொலிக்குமே!

உன் உறுதி வாகை சூட,

அணங்குதமிழும்,

அன்னை நிலமும் மதர்ப்புடன் நிமிர்வரே!

மார்தட்டி தம் மகவின் மிளிர்வில் மகிழ்வரே!

இனி எப்போதய்யா?

இனி எப்போதய்யா?

உன் செல்லமொழி கேட்க அன்னை தமிழாளும்,

தவழ்ந்து தாவினும், தடுக்கி விழுந்தாலும் தாங்கும் நிலமகளும்,

ஆருக்கு ஆரென்று ஆறுதலைச் சொல்வரோ?

அணைத்து அருகமர்த்தி அன்புரைக்கும் அண்ணனும்,

அரவணைத்து நீ வளர்த்த தீரமிகு தம்பியரும்,

தனித்து போயினரே அய்யா!

தமிழீழ தேசமே தேற்றுவார் இன்றித் தேம்பிக் கிடக்கிறதே.

கந்தகத்தால் உனை காவு கொள்ள முடியாக் காலன்

உன் செங்குருதிப் பூமீது பாசக்கயிரெய்து,

மெய்விட்டு உயிர்ப்பூப் பறித்து

எம்மினத்தின் கை எடுத்துப் போனானோ? - அய்யா

எம்மினத்தின் நம்பிக்கை எடுத்துப்போனானோ?

இன்னும் முடிவெய்யவில்லையே....

தாயகத்தின் விலங்குடையவில்லையே...

ஆராரோ வந்து ஆயுதமும் கொடுத்து

எம் தாயின் பேச்சிறுக்கி,

மூச்சிறுக்கி...

ஆய்கினைகள் செய்திருக்க...

காக்க என்று பிறப்பெடுத்த காவல்வேளே!

காலனை இழுத்துக் கன்னத்தில் அறையாமல்

கைகோர்த்து அவனோடு கவலையின்றிச் சென்றனையோ?

ஆற்றுவார் இன்றி அரற்றுகிறோம் அண்ணலே!

தோற்றமாகாளிகூட தொய்ந்தழுது நிற்கின்றாள்.

கூற்றுவ கூத்தொன்று அரங்கேறி ஆடுதற்கு

வேற்றுவர் வன்னிமையின் வாசலிலே அலைகின்றர்.

அண்ணலே!.... நீ வளர்த்த வலியோரின் அகத்தில்

ஆணையிட்டு வழிநடத்த நீ வருவாய்;! நீ வருவாய்!

இலக்கொன்று பாதியென்று இலங்கும் நிலை உடைக்க

கட்டாயம் புரியாத வடிவிலே களத்திலே நீ வருவாய்!

இது தாய் மீட்கும் போர் வெளி....

அண்ணனைத் தனித்துவிட எண்ணாத உன் ஆவி

நிட்சயம் காக்கும்.

தாய் மண்ணை மீட்கும்.

எழுத்தாணி உரைத்தவரி வலிகளடி.இனி

எழுதும் கவி பாடுமடி புதுப் பரணி...

விழுந்ததல்ல விதைந்ததிந்த ஆலமரம்..

வேரரறுவதல்ல பரவி நிற்கும் பார் முழுதும்..

புகழழியாப் பேர் வீரக் கோமானை..பாடடி..

நன்றி..

சோகத்தை சுமை பரப்பி வைத்ததற்கு

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணலே!.... நீ வளர்த்த வலியோரின் அகத்தில்

ஆணையிட்டு வழிநடத்த நீ வருவாய்;! நீ வருவாய்!

இலக்கொன்று பாதியென்று இலங்கும் நிலை உடைக்க

கட்டாயம் புரியாத வடிவிலே களத்திலே நீ வருவாய்!

இது தாய் மீட்கும் போர் வெளி....

அண்ணனைத் தனித்துவிட எண்ணாத உன் ஆவி

நிட்சயம் காக்கும்.

தாய் மண்ணை மீட்கும்.

என் விருப்பமும் கூட .

அழகான கவிதை, சகாரா.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுமட்டுமல்ல என்றுமே உன் பேனா ஒப்பாரி பாடி நான் ஒருபோதும் கேட்கவில்லை ஈழக் கருவறை சிதைகையிலே அப்பப்போ நலியும் உன் பேனா வீறுகொண்டு பிரசவிக்கும் வீரக் குழந்தைகள் உன்கவி வரிகள்.உன் உணர்வுகளை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் மறைந்த மாவீரனுக்கு என் வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

:huh: அற்புதமான கவி வரிகள் சகாரா ! எம் அனைவரினதும் மனக்கிடக்கையை அப்படியே வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அந்த மாவீரனுக்கு மீண்டும் எனது வீரவணக்கம் !!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாரா,

மிகவும் அருமையான வரிகள். மீண்டும் எமது பாலராஜ் அண்ணாவுக்கு வீரவணக்கங்கள்.

அழகிய கவிதை சகீரா..

எழுத்தாணி உரைத்தவரி வலிகளடி.இனி

எழுதும் கவி பாடுமடி புதுப் பரணி...

விழுந்ததல்ல விதைந்ததிந்த ஆலமரம்..

வேரரறுவதல்ல பரவி நிற்கும் பார் முழுதும்..

புகழழியாப் பேர் வீரக் கோமானை..பாடடி..

அழகிய வரிகள் கவிஞர்

ஆராரோ வந்து ஆயுதமும் கொடுத்து

எம் தாயின் பேச்சிறுக்கி,

மூச்சிறுக்கி...

ஆய்கினைகள் செய்திருக்க...

காக்க என்று பிறப்பெடுத்த காவல்வேளே!

காலனை இழுத்துக் கன்னத்தில் அறையாமல்

கைகோர்த்து அவனோடு கவலையின்றிச் சென்றனையோ?

அருமையான வரிகள் சகாரா...இன்னும் வேண்டும் ஆயிரமாயிரம் உண்மை வீரர்கள். .... கவிதைக்குள் முத்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தகம் சரிக்காத களவீரனை,

செந்தமிழ் ஈழத்தின் சமர் வேந்தனை,

எந்தநேரம் பார்த்து எமைவிட்டுப் பறித்தாய்?

சிங்களம் ஏவிடும் பேய்களின் கைகளில்

தங்கமண் தவித்திடும் தருணத்தில் அல்லவா!

பைந்தமிழ் ஈழத்தின் பிரசவக் குருதியில்

எங்களர் அனைவரும் நனையும் கணத்திலல்லவா!<<<

பால்ராஜ் அண்ணாவை நினைத்தாலே வீரம் தெறிக்குமே....இன்று எம்மை அழவைத்துச் சென்றாரே?!!...சகாரா உங்கள் வரிகளின் உணர்வலைகளால் எம்மை இன்னும் அழவைத்துவிட்டீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி, காவலூர் கண்மணி, நுணாவிலான், வல்வைமைந்தன், ரகுநாதன், சுந்தரி, முரளி, எல்லாளன், தமிழ்த்தங்கை ஆகியோருக்கும் இக்கண்ணீர்த்துளிகளை வாசித்து மனங்கனிந்தோருக்கும் நன்றி உரைப்பது அழகல்ல... அண்ணன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பாதையில் புலம் பெயர்ந்து இருக்கக்கூடியவர்களான நாங்கள் செய்யக்கூடிய தாயகமீட்பிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க உரிமையோடு அழைத்து நட்புரைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.