Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கில் கண்ணிவெடி அகற்றும் பணியில் 'முரளி'

Featured Replies

நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் இயந்திர மனிதனை(ரோபோ) இலங்கை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருப்பதுடன் அதற்கு 'முரளி' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இதனை தினக்குரலுக்கு உறுதிப்படுத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைசசர் இக்கண்டுபிடிப்பு நாட்டுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் எனவும் வர்ணித்தார்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பாதிப்புகளுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பலர் தமது அவயங்களை இழந்துமுள்ளனர்.

வெளிநாட்டு அரசுகள் சில புதைக்கபட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஒத்துழைப்புகள் வழங்குகின்றன. உள்ளுர் அரச சார்பற்ற பிரதிநிதிகளும் இதில் பங்காற்றுகின்றனர்.

இந்நிலையில் இலங்கை விஞ்ஞர்ன மன்றத்தை சேர்ந்த இலங்கை விஞ்ஞானிகள் கண்ணிவெடியகற்றும் இயந்திர மனிதனான 'ரோபோ' வை கண்டுபிடித்துள்னர்.

இலங்கையில் வருடந்தம் நூற்றுக்கணக்கானவர்க்ள கண்ணி வெடித்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டள்ள ரோபோ கண்ணி வெடிகளை இலகுவில் கண்டுபிடிக்கவும் அவற்றை செயலிழக்கச் செய்யவும் முக்கிய பங்காற்றுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதே வேளை, இலங்கை விஞ்ஞானிகளின் முழுப்பங்களிப்புடன் உருவாகியிருக்கும் இந்த ரோபோவுக்கு சர்வதேச புகழ் பெற்ற சுழற் பந்துவீச்சாளர் முரளிதரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

'முரளி' என அழைக்கப்படும் இந்த ரோபோ மிக விரைவில் வடகிழக்கில் கண்ணி வெடி புதைக்கபட்டுள்ள பிரதேசங்களில் பணியிலிறக்கப்படவுள்ளது.

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை முரளி இல்லை தானே. அது வரை மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நடக்கிற காரியமில்லை. ஆய்வுக்கூடத்தில் மட்டும் உபயோகிக்கலாம்.. :huh:

இது போல வாகனங்களின் பெற்றோல் தாங்கியினுள் மறைத்து வைக்கப்படும் குண்டுகளை கண்டுபிடிக்க கூடிய ஒரு கருவியை மாத்தறையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்ததாகவும் அதை மகிந்தவும், கோத்தபாயவும் பார்யையிடுவதாகவும் கூறி பத்திரிகை மற்றும், தொலைக்காட்சியில் நேற்று பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

உண்மையில் அந்த கண்டுபிடிப்பு எனக்கூறப்படுவது யாதெனில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சில உபகரணங்களின் தொகுப்பு என்பதே சரியானது. இவர் ஜெர்மனிய தொழில்நுட்ப கல்லூரியில் ஒருவருட டிப்ளோமா (மட்டுறுத்தினர் இதனை தூய தமிழில் திருத்திவிடவும்) பயிற்சியை பூர்த்தி செய்துள்ளார். ஒரு CCD கமெரா (மட்டு... கவனிக்கவும்), ஒரு 12" LCD திரை என்பன ஒரு நீட்டக் கூடிய குழாயின் இரு முனைகளில் பொருத்தப்பட்டு ஒரு உலர் மின்கலம் மூலம் செயற்படுத்தப்படுகின்றது.

பல்வேறு பின்னடைவுகளை மூடி மறைத்து, சுய பொருளாதாரத்தினை நோக்கி முன்னேறும் நடவடிக்கையாக கூறி விரக்தியை நோக்கி செல்லும் சிங்கள மக்களை ஏமாற்றவே இந்த நடவடிக்கை.

இங்கே எழுப்பப்பட வேண்டிய கேள்விகளாவன:

1) அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் இவ்வாறான விலையுயர்ந்த துணை பொருட்களை கொண்ட ஒரு கருவியை தயாரிக்க எவ்வளவு செலவாகும்? இப்படி எத்தனை கருவிகள் தேவை? இதற்கு எந்த நாட்டிடம் கடனுதவி பெறுவது?

2) செய்முறையின் போதே மிகவும் சிரமமானதாக காணப்படும் இந்தக் கருவியின் நடைமுறை சாத்தியம் பரிசீலிக்கப்பட்டதா? அல்லது இந்திய ராடார்கள் போன்று, சம்பவத்தின் பின் இந்த கருவிகள் மீதே பழி சுமத்தப்படுமா?

பாண் மற்றும் எரிபொருளுக்கு கொழும்பிலும் வரிசைகளில் நிற்கவேண்டிய நிலமை ஏற்படப் போவது மட்டும் உறுதியாக தெரிகிறது!

Edited by சாணக்கியன்

1) அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் இவ்வாறான விலையுயர்ந்த துணை பொருட்களை கொண்ட ஒரு கருவியை தயாரிக்க எவ்வளவு செலவாகும்? இப்படி எத்தனை கருவிகள் தேவை? இதற்கு எந்த நாட்டிடம் கடனுதவி பெறுவது?

முதலாம் உலகப்போரின் போது இங்கிலாந்து மக்கள் ராணியிடம் முறையிட்டார்களாம். சாப்பிடுவதுக்கு ரொட்டி கூட கிடைப்பது இல்லை எண்று...

அதுக்கு ராணி சொன்னார்களாம் ரொட்டி இல்லாவிட்டால் என்ன கேக் சாப்பிடுங்கள் எண்று... ( கேக் என்பதுக்கும் தமிழ் சொல்லை மட்டுறுத்துறவை மாத்தி விடுங்கோ)

Edited by தயா

கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சானுகள் அதனால எங்கட மட்டுறுத்தினருக்குத்தான் வேலைகூடிப்போச்சு... :D:D:D

முதலாம் உலகப்போரின் போது இங்கிலாந்து மக்கள் ராணியிடம் முறையிட்டார்களாம். சாப்பிடுவதுக்கு ரொட்டி கூட கிடைப்பது இல்லை எண்று...

அதுக்கு ராணி சொன்னார்களாம் ரொட்டி இல்லாவிட்டால் என்ன கேக் சாப்பிடுங்கள் எண்று... ( கேக் என்பதுக்கும் தமிழ் சொல்லை மட்டுறுத்துறவை மாத்தி விடுங்கோ)

கேக்குக்கு தமிழ் பெயர் குதப்பி

கேக்குக்கு தமிழ் பெயர் குதப்பி

பாணுக்கு வெதுப்பியாம்...! கேட்ட உடனையே சாப்பிட வேணும் போல இருக்குது இல்லை...!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாகக் கண்டு பிடிக்கும் இயந்திர மனிதனுக்கு 'மகிந்தா' என்று பெயர் வைச்சாலும் வைப்பாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கேட்ட உடனையே சாப்பிட வேணும் போல இருக்குது இல்லை...!

எனக்கும் தான் தயா... :D

நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் இயந்திர மனிதனை(ரோபோ) இலங்கை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருப்பதுடன்

........

உருவாக்கியுள்ளார்கள் ????

கண்டுபிடித்துள்ளார்கள் ????

ஒருவருட டிப்ளோமா (மட்டுறுத்தினர் இதனை தூய தமிழில் திருத்திவிடவும்)

கேக் சாப்பிடுங்கள் என்று... ( கேக் என்பதுக்கும் தமிழ் சொல்லை மட்டுறுத்துறவை மாத்தி விடுங்கோ)

டிப்ளோமா - பட்டப் பரிட்சைச் சான்றிதழ் அல்லது பெருஞ்சான்றிதழ் என்பதே பொருத்தமான தூய தமிழ் கருத்துடைய சொல்லாகும்

கேக் - இனிமம் அல்லது பண்ணியம் என்பதே தூயதமிழ் கருத்தாகும்

பாண் என்பது வெதுப்பி என்பதும்

பட்டர் பாண் ( முந்திரிகை வத்தல் போட்டிருப்பார்கள்) - இனிப்பு வெதுப்பி

பணிஸ் (சீனியப்பம் - இப்படித்தான் எமது முன்னைய பெரியோர்கள் அழைப்பார்கள்) என்பதையே குதப்பி என்றழைப்பது வழமை

நன்றி

அப்பாடா...நான் தலைப்பை பார்த்து பயந்தே போயிட்டன் :lol: ..(என்ன கொடுமை என்டு)..உங்க வந்து பார்த்தா பிறகு தான் விளங்கிச்சு..நம்ம குருவாவது கன்னி வெடி அகற்ற போறதாவது.. :D

அட இலங்கையில விஞ்ஞானிகள் வேற இருக்கீனமோ..(நிசமா நேக்கு இன்னைக்கு தான் தெரியும் :D )..சரி சரி அத விடுவோம் பாருங்கோ..அட அண்ணாமர்கள் எல்லாம் சொல்லிச்சீனம் விளையாட்டு வேற அரசியல் வேற என்டு யாரின்ட பெயரை வைச்சீருக்கினம் பாருங்கோ அண்ணாமர்களே..!! :D

எனியாவது தங்களுக்கு விளங்குமோ??... :D

அப்ப நான் வரட்டா!!

மனுசருக்கு பாண் தின்ன மன்னிக்கவும் (வெதுப்பி) தின்ன வளியக்கானம்.. முரளி செய்து வன்னிக்கனுப்ப போறங்களாக்கௌம்?

மகிந்தமாமே... பாங்காலாய் ருபியால் விசிபாய்..

அடுத்ததாகக் கண்டு பிடிக்கும் இயந்திர மனிதனுக்கு 'மகிந்தா' என்று பெயர் வைச்சாலும் வைப்பாங்கள்

கேள்வி கேக்காமல் வேலை செய்யுறது அது அதால அதுக்கு பிள்ளையான் அல்லது டக்கிளஸ் எண்டுதான் வைப்பார்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.