Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுவும் ஒரு காதல்

Featured Replies

இதுவும் ஒரு காதல்

moonph3.jpg

நானும் அவனும்

சஞ்சரிக்கும் பொழுதுகளே

கால நீட்சியாய்

தொடர்கிறது.

பிரம்மனே காணமுடியாத

முடி அவன்

அடி நான்

ஈர்ப்பு என்பதை

அறிமுகம் செய்தது

நாங்கள் தான்

நானும் அவனும்

சஞ்சரிக்கும் பொழுதுகள்

மணித்துளிகளாய் தொடங்கி

மணிக்கணக்காய் மாறி

யுகங்களாய் தொடர்கிறது.

ஒரு மாலைப் பொழுது..

அவனைப்பார்த்தபடி நானும்

என்னைப் பார்த்தபடி அவனும்

பொழுது இரவை அழைக்க

காற்று குளிரை நிறைக்க

மரங்கள் இலைகளை உதிர்க்க

அவன் என்னை

நெருங்கி வருவதாய்

உணர்ந்தேன்

நெற்றி வியர்த்திட

சத்தமிட்டுப் பல

முத்தங்கள் பொழிந்தான்

என் நிலவு காய்ந்த முற்றத்தில்.

குளிர்ந்து போய்

நானும் ஒரு

குட்டி நிலவாய் ஆனேன்.

Edited by வெண்ணிலா

நிலா எப்படி சுகம்..

வாழ்த்துகள்..

பிரம்மனே காணமுடியாத

அடி நான்

முடி அவன்

அடிமுடி யார் தேடினவை...

அடி தேடினது.. விஷ்ணு எண்டு நினைச்சேன

அட..எங்கன்ட நிலா அக்காவின்ட கவிதை.."இதுவும் ஒரு காதல்"..மெல்லிய காதலின் தென்றல். வீசி செல்கிறது வெண்ணிலவின் இதமான காதலையும். வாழ்த்துக்கள் அக்கா.. :D

ஈர்ப்பு என்பதை

அறிமுகம் செய்தது

நாங்கள் தான்

இந்த இதமான தென்றலில்..(என்னை மிகவும் வருடி சென்ற தென்றல்)..இந்த தென்றல் வரிகள்... :lol:

குட்டி நிலாவான

பின் வீசும்

தென்றலே

வருடுகிறது

என்றால்... :lol:

முழு

நிலவாகியவுடன்...

இது

தான்

காதல்..

என்பதா... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இது தான் நீங்கள் நிலா ஆகிய கதையோ :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெற்றி வியர்த்திட

சத்தமிட்டுப் பல

முத்தங்கள் பொழிந்தான்

என் நிலவு காய்ந்த முற்றத்தில்

மீண்டும் ஒரு முத்தக்காட்சி...

அப்படியே காதல் என்ற குடைக்குள் மறைந்திருக்கும், காமம் என்று சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வெண்ணிலா!

கவிஞரே! காதலில் குழப்பம் சகஜம்தானே! கண்டுக்காதீங்க!!

வெண்ணிலா,

சில சந்தேகங்கள்...

//பிரம்மனே காணமுடியாத

அடி நான்

முடி அவன் //

விகடகவி சொன்னது போல அடி முடி தேடினது யார் என்று எனக்கும் சந்தேகம்...

//ஈர்ப்பு என்பதை

அறிமுகம் செய்தது

நாங்கள் தான்//

நியூட்டனுக்கு இது தெரியுமா? அல்லது உங்கள் காதலர் நீயூற்றனா? (அட பாவி.... )

இப்படி கவிதை முழுக்க நிறைய சந்தேகங்கள்...

காதலில் குழப்பம் சகஜம் தான்.... குழப்பமே காதலானால்... (சந்தர்ப்பம் கிடைத்தால் வாராமல் விட்டால் எப்படி?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா ஏன் நிலவாகிப்போனா என்ற ரகசியம் அறிந்தேன். வாழ்த்துக்கள் நிலா கவிதை அழகாயிருக்கு :rolleyes:

கள உறவுகளே அடி முடி தேடினது பிரம்மாவும், விஷ்ணுவும்

  • தொடங்கியவர்

நிலா எப்படி சுகம்..

வாழ்த்துகள்..

அடிமுடி யார் தேடினவை...

அடி தேடினது.. விஷ்ணு எண்டு நினைச்சேன

:lol: நிலா நல்ல சுகம் விகடகவி. நீங்க எபப்டி?

உங்கள் குழப்பம் தெளிவடைய கவிதை :rolleyes: திருத்தப்படிருக்கு :(

அட..எங்கன்ட நிலா அக்காவின்ட கவிதை.."இதுவும் ஒரு காதல்"..மெல்லிய காதலின் தென்றல். வீசி செல்கிறது வெண்ணிலவின் இதமான காதலையும். வாழ்த்துக்கள் அக்கா..

இந்த இதமான தென்றலில்..(என்னை மிகவும் வருடி சென்ற தென்றல்)..இந்த தென்றல் வரிகள்...

குட்டி நிலாவான

பின் வீசும்

தென்றலே

வருடுகிறது

என்றால்...

முழு

நிலவாகியவுடன்...

இது

தான்

காதல்..

என்பதா... :

அப்ப நான் வரட்டா!!

:) ஒரு அக்காவின் மெல்லிய காதலுக்கு இதமாக வாழ்த்து சொல்லிச் சென்ற தம்பிக்கு நன்றிகள் :D

:unsure: நல்லகாலம் இதுக்கு பெயர் தான் காதலோ என கேட்காமல் விட்டிட்டியள் :)

இது வானுக்கும் பூமிக்கும் உள்ள காதல் பா

  • தொடங்கியவர்

ஓகோ இது தான் நீங்கள் நிலா ஆகிய கதையோ :D

:Dஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க :)

வெண்ணிலா எப்படி உருவாகினாள் என்று அறிய இவ்வளவு ஆவலோ? அதை பிறகு சொல்லிக்கிறேனே :rolleyes:

மீண்டும் ஒரு முத்தக்காட்சி...

அப்படியே காதல் என்ற குடைக்குள் மறைந்திருக்கும், காமம் என்று சொல்லுங்கள்.

அச்சோ இதே வேலையாகி விட்டதுவா? வெண்ணிலாவின் கவிதைக்குள் முத்தத்தை தேடுவதுதான் உங்கள் வேலையோ ................ :unsure:

கிளம்பிட்டாங்க காதலுக்கும் காமத்துக்கும் தொடர்பை ஏற்படுத்த............ :lol:

நல்ல கவிதை வெண்ணிலா!

கவிஞரே! காதலில் குழப்பம் சகஜம்தானே! கண்டுக்காதீங்க!!

:)வணக்கம் சுவி பெரியப்பா.

காதலில் குழப்பமோ கவிதையில் குழப்பமோ ஆக மொத்தத்தில் இக்கவிதையின் உட்பொருள் தெரியாமல் என்னை குழப்பிட்டாங்கப்பா :(

  • தொடங்கியவர்

வெண்ணிலா,

சில சந்தேகங்கள்...

//பிரம்மனே காணமுடியாத

அடி நான்

முடி அவன் //

விகடகவி சொன்னது போல அடி முடி தேடினது யார் என்று எனக்கும் சந்தேகம்...

//ஈர்ப்பு என்பதை

அறிமுகம் செய்தது

நாங்கள் தான்//

நியூட்டனுக்கு இது தெரியுமா? அல்லது உங்கள் காதலர் நீயூற்றனா? (அட பாவி.... )

இப்படி கவிதை முழுக்க நிறைய சந்தேகங்கள்...

காதலில் குழப்பம் சகஜம் தான்.... குழப்பமே காதலானால்... (சந்தர்ப்பம் கிடைத்தால் வாராமல் விட்டால் எப்படி?)

:lol: கஜந்தி அக்கா கஜந்தி அக்கா வாங்கோ. கண்டுகனகாலம். எப்படி சுகம்?

நல்ல சந்தேகம் தான் பாருங்கோ. வெண்னிலாவின் கவிதையில் அடி முடி தேட வந்ததையிட்டு ரொம்ப மகிழ்ச்சி அக்கா.

அடிமுடி........ம்ம்ம்ம்ம் பிரமா விஸ்ணு அடிமுடி தேடப்பட்ட கஸ்டம் எனக்கும் வந்திடிச்சு அதை எடுத்துக்காட்டி திருத்த வைச்சமைக்கு உங்களுக்கும் கவிக்கும் நன்றிகள்.

அச்சோ ஈர்ப்பிலும் குழப்பமா?

என் காதலன் நியூட்டனும் இல்லை எடிசனும் இல்லைப்பா....

இக்கவிதையானது ஒரு வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான காதலை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கு.

இதில் ஈர்ப்பு என்பதில் என்ன முரண்படுது.....

ஒரு கவிஞர் சொல்லுறார்

"உன்னைக் காணாதுவிடில் இவ் உலகமே சுற்ற மறுக்கின்றது....."

இதில் இருந்து என்னத்தை உணர்கிறீங்கோ அக்கா :unsure: ஒருத்தன் தன் காதலியை காணாட்ட உலகமே சுத்தாமல் இருக்கிறதா என்ன?

ஆனால் கவி வரியில் சொன்னது

//ஈர்ப்பு என்பதை

அறிமுகம் செய்தது

நாங்கள் தான்//

வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான காதலில்

வானம் இபப்டி சொல்லுதுப்பா. அதுக்க்காக இது நியூட்டனுக்கு தெரியுமோ என்று கேட்பது கொஞ்சம் ஓவராக இருக்குங்கோ :D

என்னாது கவிதை முழுக்க நிறைய சந்தேகங்களோ?

அச்சோ அக்கா நீங்கள் தெளிவாகத்தானே இருக்கிறீங்க... இல்லை எனக்கு அதில் சந்தேகம் பாருங்கோ அதுதான்.

கவிதை வானுக்கும் பூமிக்கும் காதல்......

இனி வாசியுங்கோ புரியும் என நம்புறேன்.

நிலா ஏன் நிலவாகிப்போனா என்ற ரகசியம் அறிந்தேன். வாழ்த்துக்கள் நிலா கவிதை அழகாயிருக்கு :)

கள உறவுகளே அடி முடி தேடினது பிரம்மாவும், விஷ்ணுவும்

ஓ உங்களுக்கு தெரிஞ்சிடிச்சோ. அப்படியெனில் அது ரகசியம் இல்லை என :)

கவிதை நல்லா இருக்கோ உது நிலாவை வைச்சு சீ கவிதையை வைச்சு காமெடி பண்னல்லை தானே :rolleyes: நன்றிகள் இன்னிசை

Edited by வெண்ணிலா

கொமோன்கள் விடும் சின்ன சின்ன சேட்டை எல்லாம்

கற்பனை குதிரையில் ஏறி கவிதை ஆகிவிட்டதோ வெண்ணிலா...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வயசுக் கோளாறு பொன்னி

Edited by putthan

எல்லாம் வயசுக் கோளாறு பொன்னி

நமக்கு வயசு போன கோளாறு...

  • கருத்துக்கள உறவுகள்

ஈர்ப்பு என்பதை

அறிமுகம் செய்தது

நாங்கள் தான்

உங்கள் கவிதை அழகு வெண்ணிலா.

கவிதைக்கும் பொய்யும் அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சோ இதே வேலையாகி விட்டதுவா? வெண்ணிலாவின் கவிதைக்குள் முத்தத்தை தேடுவதுதான் உங்கள் வேலையோ ................ :rolleyes:

கிளம்பிட்டாங்க காதலுக்கும் காமத்துக்கும் தொடர்பை ஏற்படுத்த............ :unsure:

வெண்ணிலாவின் கவிதைக்குள் முத்தமில்லாத கவிதை ஏதாவது இருக்கின்றதோ என நானும் தான் தேடிப்பார்க்கின்றேன்.... எல்லாமே.....

காதலுக்கும், காமத்தும் தொடர்பே இல்லை என்றால் சுத்த ஏமாற்றுத்தனம் தானே? யாராவது காமம் இல்லாமல் காதலிச்சு வாழ்ந்து காட்டுங்களேன்...

வெண்ணிலாவின் கவிதைக்குள் முத்தமில்லாத கவிதை ஏதாவது இருக்கின்றதோ என நானும் தான் தேடிப்பார்க்கின்றேன்.... எல்லாமே.....

காதலுக்கும், காமத்தும் தொடர்பே இல்லை என்றால் சுத்த ஏமாற்றுத்தனம் தானே? யாராவது காமம் இல்லாமல் காதலிச்சு வாழ்ந்து காட்டுங்களேன்...

உண்மைதான் பொன்னையா அண்ணே.

சரி, கல்யாணம் முடிஞ்ச பிறகும் தொடர்ந்து காதலிச்சுக்கொண்டே இருக்கவேண்டியது தானே.. மற்றதெல்லாம் எதற்கு?? [ நான் சொல்லுறது நல்ல பிள்ளையளைப்பற்றித்தான் - கெட்ட பிள்ளையள் - கல்யாணத்துக்கு முதலே கசமுசா செய்யிற ஆக்கள்- ஆங்கால போங்கோ]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒதுங்கி உங்களின் வீட்டில் செய்ய வேண்டியது தானே. பகிரங்கமாகச் செய்தால் காறித்தானே துப்ப வேண்டும்

  • தொடங்கியவர்

கொமோன்கள் விடும் சின்ன சின்ன சேட்டை எல்லாம்

கற்பனை குதிரையில் ஏறி கவிதை ஆகிவிட்டதோ வெண்ணிலா...

:( பொன்னிக்கு விளங்கிடிச்சு கற்பனைக் குதிரை என. நன்றிகள் பொன்னி :(

உங்கள் கவிதை அழகு வெண்ணிலா.

கவிதைக்கும் பொய்யும் அழகு

நன்றிகள் கறுப்பி அக்கா.

வெண்ணிலாவின் கவிதைக்குள் முத்தமில்லாத கவிதை ஏதாவது இருக்கின்றதோ என நானும் தான் தேடிப்பார்க்கின்றேன்.... எல்லாமே.....

காதலுக்கும், காமத்தும் தொடர்பே இல்லை என்றால் சுத்த ஏமாற்றுத்தனம் தானே? யாராவது காமம் இல்லாமல் காதலிச்சு வாழ்ந்து காட்டுங்களேன்...

எதுக்காக முத்தத்தை தேடுறியளோ என எனக்கு தெரியலை. என்ன எல்லாமே............ எல்லாத்தையும் வாசித்திருப்பின் முத்தம் இருக்கோ இல்லையோ என தெரியும். ஆனால் நீங்கள் முத்ததை மட்டுமே தேடுறியள் அவ்வளவுதான்.

:)

  • தொடங்கியவர்

ஒதுங்கி உங்களின் வீட்டில் செய்ய வேண்டியது தானே. பகிரங்கமாகச் செய்தால் காறித்தானே துப்ப வேண்டும்

உங்களுக்கு பிடிக்காததை ஏனாம் பார்க்கிறியள். நீங்கள் ஒதுங்கிப் போக வேண்டியது தானே

உங்கள் காறித்துப்பல் என்ற வார்த்தையை விட முத்தம் ஒன்று அருவருப்பானது அல்ல. முதலில் பப்ளிக்(Public) இல் கதைப்பதை சீராக கதையுங்கள்.

உங்கள் அகத்தில் அருவருப்பை வைத்துக்கொண்டு என் கவிதையிலோ முத்தத்திலோ குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை சரியா, விமர்சியுங்கள் அதற்கு உங்கள் வார்த்தையில் கவனமெடுக்கவும். :)

உங்களுக்கு மட்டும் தான் கதைக்க தெரியும் என நினைக்காதீங்கோ நானும் நல்லா கதைப்பேன் சரியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.