Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணை மனு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lonely20birdbz1.jpg

கண்ணின் மணியாய்

கனிந்தவளே

கனக்குதடி இதயம்

காணத்துடிக்குதடி உன்னை..

கண்ணோடு கண் கொண்டு

கதைகள் பேசி

கணங்கள் மறந்து

களித்திருந்த நினைவுகள்..!

கனவுகள் கூட

கணமும் காட்டுதடி உன்னை

கனக்கும் பிரிவுக்குள்

கண்கள் சிவக்குதடி தினமும்.

கண்ணீரின் நிறையது

கடல் தாண்டிப் போனதடி

கனக்கும் சோகம்

கட்டிலில் நோயோடு

கட்டியதடி என்னை.

கனவாகிப் போனதுவே

காளையிவன் களிப்பு..!

கணமும் ஏங்குதடி

கண்ணில் உன் விம்பம் நாடி.

கதறுகிறேன் இன்று தனிமையில்..

கனிந்த உன் நினைவுகள்

கனக்குதடி மனசெங்கும்..

கழுத்தில் ஒரு சுருக்கு

களிப்புடன் தா

கனவில் உன்னைக் கண்டபடி

கழற்றி விட என் உயிரை

கழன்று விடுகிறேன் உலகை விட்டே

கண்களால் நீ என்றும் என்னைக்

காணாதிருக்க.

காத்திருந்த பொழுதுகள்

காட்சிகளாய் விரியுதடி

கண்கள் முன் ஓடி

கள்ளி நீ

கண்ணாமூஞ்சி ஆடுகிறாய்.

கரங்கள் தொட்ட நினைவுகள்

காய மறுக்கின்றன

காயப்பட்ட நினைவுகளால்

கறுக்குதடி என் இதயம்.

காட்டினாய் வீராப்பு

கனிந்தது சோகம்

கணமும் உன்னை

காண ஏங்குது என் நினைவு

கனவில் தானும்

கண்டிலையோ என் சோகம்..?!

கனவிலும் எனை வெறுத்தனையோ..??!

கன்றிழந்த தாயாகி

கண்ணீர் தான் மிஞ்சுகிறது

கவியின் வரிகள் கூட

கண்ணீரால் குளிக்கிறது.

காட்டிய கோபம் போதும்

கன்னியே தணிந்து வாராயோ..??!

களித்திருக்க

கருணை தான் காட்டாயோ..??!

கற்பனையில்..

கரங்கள் தன்னை பற்றி

சரணடைகிறேன் உன்னை

கருணை மனு சமர்பித்தே.

தனிமையே கதியென்று தனித்து விடப்பட்ட அந்தக் குருவியின் சோகத்துக்காய்.. இந்தக் குருவிகளின்.. குரல்.. சோகம் என்றால் எங்கும் ஒன்றுதானே.. மனிதனென்ன குருவியென்ன..!

- குருவிகள்.

சுட்ட இடம்: http://kuruvikal.wordpress.com/

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் ..அண்ணா ...

கருணை மனுவை சுவைத்து ......சுட்டு போட்ட..தங்களுக்கு நன்றிகள் பாராட்டுகள்

. சோகம் ..சுகமானது . கதாநாயகனுக்கு ...இந்த பாடல் ...பிடிக்குமா?

காதல் சிறகை காறினில்.... விரித்து வானவீதியில்... பறக்கவா...

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது.... அழுதால் கொஞ்சம் நிம்மதி ...

அன்புடன் நிலாமதி ...

Edited by nillamathy

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் பிரிவு தாங்கமுடியாதது என்று நீங்கள் சுட்ட கவிதையின் மூலம் புரிந்து கொண்டேன் நெடுக்ஸ் ,

பாவம் அந்த குருவி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவியின் (படத்தில் உள்ளது) கருணை மனுவை வாசித்து சுவைத்து கருத்துரைத்த உறவுகளுக்கு நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

சோகம் குருவியோடு போயிட்டுது. நல்லவேளை மனுஷாளின் சோகம் வரவில்லை.

உங்க க.......கவிதை அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோகம் குருவியோடு போயிட்டுது. நல்லவேளை மனுஷாளின் சோகம் வரவில்லை.

உங்க க.......கவிதை அழகு

பிரிவுச் சோகத்தை குருவி மட்டுமல்ல.. மனிதர்களும் அனுபவிக்கின்றனர் என்பதை வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே.

நன்றி கறுப்பி நான் சுட்ட கவிக்கு கருத்துரைத்ததற்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

"க" வில் கவிதையை வரைந்த கவிஞருக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"க" வில் கவிதையை வரைந்த கவிஞருக்கு பாராட்டுக்கள்.

குருவிக்கு கருணை காட்டக் "க" வில வேண்டி இருக்கிறார் போல.. கவி புனைஞ்சவர். :)

நன்றி நுணாவிலான் நான் சுட்டதை நீங்களும் ரசித்ததற்கு. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவுச் சோகத்தை குருவி மட்டுமல்ல.. மனிதர்களும் அனுபவிக்கின்றனர் என்பதை வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே.

நன்றி கறுப்பி நான் சுட்ட கவிக்கு கருத்துரைத்ததற்கு. :wub:

ஆஆஆஆ.......இது உங்க கவிதை இல்லையா

ஒற்றைக்குருவி சோகத்தால் புலம்புதே.

அதுதான் நான் நினைச்சன் உங்க கவிதை எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கு கருணை காட்டக் "க" வில வேண்டி இருக்கிறார் போல.. கவி புனைஞ்சவர். :lol:நன்றி நுணாவிலான் நான் சுட்டதை நீங்களும் ரசித்ததற்கு. :D

ஆனாலும் என்னசெய்ய மலர்தான் மலர(மாட்ட) மாட்டன் எண்டிட்டுதே.. :wub::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் என்னசெய்ய மலர்தான் மலர(மாட்ட) மாட்டன் எண்டிட்டுதே.. :wub::wub:

குருவி துணையப் பிரிந்த சோகத்தில பாடுது என்ற நாங்க இருக்கிறம்.. நீங்க புதிசா மலர் என்று சொல்லுறீங்க.. எல்லாம் பெரும் புதிரா இருக்குது. மலர் வண்டுகளுக்குத்தானே மலரும்.. ???! :D:lol:

ஆஆஆஆ.......இது உங்க கவிதை இல்லையா

ஒற்றைக்குருவி சோகத்தால் புலம்புதே.

அதுதான் நான் நினைச்சன் உங்க கவிதை எண்டு.

நான் "சப்போஸ்" தனிய இருந்தாலும் புலம்பமாட்டன்..! சந்தோசப்படுவன்..! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.