Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா படை முகாம் மீது புலிகள் அதிரடித்தாக்குதல்

Featured Replies

அம்பாறையில் புலிகள் தாக்குதல்: அதிரடிப்படையைச் சேர்ந்தவர் பலி

[செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2008, 08:40 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அம்பாறையின் எல்லைப்பகுதியான குமுக்கன் ஓயாப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:20 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த படையினரையும் கொல்லப்பட்டவரினது உடலத்தையும் படையினர் உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்றுள்ளனர்

அறுகம்ப பாலத்தினை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைக்க உள்ள நிலையில் இத்தாக்குதல் அம்பாறையின் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்டுளளது.

புதினம்

என்ன அம்பாறையில வெகு விரைவிலை முழுக் கட்டுப்பாட்டில கொண்டு வரப்போறம் எண்டு ஓரு ஆய்வு எழுதச் சொல்லவோ !!!

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் கூடுகிறது என்பதை இத்தைகைய தாக்குதல்கள் காட்டி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் இதுதான் நடக்கப்போகின்றன , கிழக்கு எங்கள் கையில் என்று மார்தட்டிய மகிந்தவும் அவர்தம் பரிவாரங்களுக்கும் இது பெரிய தலையிடியை கொடுக்கப்போகின்றன என்பதுதான் உண்மை.

அம்பாந்தோட்டை கும்புக்கன்ஓயா சிறிலங்காப் படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அம்பாந்தோட்டை கும்புக்கன்ஓயாப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:20 மணியளவில் சிறிலங்காப் படையினரின் முகாமில் ஒன்றுகூடல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் அதிரடித்தாக்குதலை நடத்தினர். படையினர் மீதான அதிரடித்தாக்குதலில் படையினர் நிலைகுலைந்தனர். இத்தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டனர். பல படையினர் காயமடைந்தனர். மேலும் இரண்டு உலங்குவானூர்திகள் அப்பகுதிக்கு வந்து அவசர அவசரமாக படையினரை ஏற்றிச்சென்றன. சிறிலங்காப் படையினரின் கோட்டைக்குள் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு எந்தவித சேதங்களுமின்றி விடுதலைப் புலிகளின் அணி தளம் திரும்பியது.

நன்றி புதினம் இணையம்

"நாம் அரசியல்வாதிகளல்லர். நாம் புரட்சிவாதிகள் " என்று எமது தேசியத்தலைவர் கூறி இருக்கிறார். எங்கள் விடுதலைப் புலிகள் என்றுமே சிங்களத்தைப் போல் இந்தா அந்தா என்று கூறவில்லை அத்துடன் இப்படியான மிகவும் இறுக்கம் வாய்ந்த தருணங்களில் அவர்களின் நீண்ட மௌனமே எப்பொழுதும் பதிலாக இருந்தது.

இன்று அம்பாந்தோட்டையில் ஆப்புவைக்க முடிந்த எம்சேனையால் எம்மண்ணில் அகலக்கால் வைக்கும் எதிரியினை துவம்சம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் எங்கள் தலைவர் கூறியது போன்று " எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுர பலங்கொண்ட 'கோலியாத்'தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான். " ஆனால் தங்களது குறுகிய இலாபங்களுக்காக மொத்த நாட்டையே கூறு போட்டு விற்றாலும் தமிழரை அழிக்க கங்கணம் கட்டி நிற்கும் சிங்களத் தலைமையும் அது சார்ந்த ஊது குழல்களும் பலவீனங்களையே அதிகமாகக் கொண்டிருக்கின்றனர். அவையனையத்தும் எம்சேனையின் வியூகத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் நாள் வரும். இன்றுகூட மாங்குளம் பகுதியில் சிங்களத்தின் 8 க்கும் அதிகமான விமானங்கள் குண்டுகளை வீசியதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்தி ஆனால் சேத விபரம் தெரியவில்லை இவ்வளவு துயரிலும் வாழும் எம்மக்கள் ஒரு நம்பிக்கையுடன் ஒரு இலட்சிய உறுதியுடன் வாழுகிறார்கள் ஏனென்றால் எங்கள் தேசியத்தலைவர் இந்நிலையினை மாற்றுவார் என்று, இறுதியாக எங்கள் தேசியத்தலைவரின் சிந்தனையுடன் இச்சிறிய பதிவினை நிறைவு செய்கிறேன்.

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்."

நன்றி

Edited by thamizhanpan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை இராணுவம் செத்தது ? ஓன்றுகூடலில் வைத்து அடித்திருக்கிறதால கனக்க பேர் போயிருப்பாங்களே களமாடிய வீரப்புலிகளுக்கு வாழ்த்துக்கள் .

களமாடிய வேங்கைகளிற்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடிப்படையினரின் முகாம் மீது புலிகள் தாக்குதல்.

அம்பாந்தோட்டை குமுக்கன் ஓயாப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் விசேட அதிரடிப்படையைச்

சேர்ந்த பலர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த படையினரையும் கொல்லப்பட்டவரின் சடலத்தையும் படையினர் உலங்குவானூர்தி மூலம் ஏற்றிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- சங்கதி

களமாடிய வீரப்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

இப்ப சந்தோசப்படுறிங்க....ஒரு இடத்தை விட்டு விலகினால் கத்துறிங்க...நம்பிக்கை வேணும்....இழப்புகள் தவிர்க்கமுடியாதவை என் என்டால் அங்கு சண்டை நடக்கு விளையாட்டல்ல.....தேவை இல்லா இழப்புக்களை தவிர்க்கனும் அவங்க...

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காப் படையினரின் கோட்டைக்குள் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு எந்தவித சேதங்களுமின்றி விடுதலைப் புலிகளின் அணி தளம் திரும்பியது.

வீரவேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் புலிகள் தாக்குதல்: அதிரடிப்படையைச் சேர்ந்தவர் பலி

அம்பாந்தோட்டை குமுக்கன் ஓயாப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் விசேட அதிரடிப்படையைச்

அம்பாந்தோட்டையிலா அல்லது அம்பாறையிலா தாக்குதல் நடத்தப்பட்டது.

அம்பாந்தோட்டையோ? அம்பாறையோ?

ஏதோ அந்தப்பக்கம் தான் எண்டு மட்டும் தெரியுது.

ஏதோ ஓரு அம்பா ....விலை நடக்குது. விடுங்களேன். நடக்கட்டும். . . இங்கை எங்கடை ஆக்களிற்கு நடந்தால்தான் பிடிக்கும். பாவம் எவ்வளவு கஸ்டப்படுறாங்கள் அவங்கள் என்று கொஞ்சம் கூட கவலை இல்லை. . . ஏன் அடிபடுறாங்கள் இல்லை ஏன் சும்மா இருக்கிறாங்கள் என்று எப்ப பார்த்தாலும் கரிச்சுச்கொட்டின படிதான். . .

களமாடிய போராளிகளுக்கு வாழ்த்துக்கள்..

விடுதலைப்புலிகள் இன்னும் போர் நிறுத்தத்தில் இருந்து விலகவில்லை என்பதால்தான் இப்படியான சிறுதாக்குதல்கள், அதுவே விலகியிருந்தால் கதைவேறு,,,,

அடுத்து விரைவில் யாழ்களம் அதிரப்போகிறது ..... நான் சொன்னது இந்த யாழ் இல்ல....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.