Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனையிறவை நோக்கிய நடவடிக்கை களநிலைமையின்படி மேற்கொள்ளப்படும்: யாழ். கட்டளைத் தளபதி

Featured Replies

ஆனையிறவை நோக்கிய நடவடிக்கை களநிலைமையின்படி மேற்கொள்ளப்படும்: யாழ். கட்டளைத் தளபதி

[வியாழக்கிழமை, 17 யூலை 2008, 06:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை அமையும் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்று சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

ஆனையிறவை நோக்கிய எமது அடுத்த நடவடிக்கை களநிலைமைகளை கருத்திற்கொண்டே இடம்பெறும்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எமக்கு பின்னடைவுகளை தரவில்லை. எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, எமக்கு கள உத்தியின் அடிப்படையில் பல பயன்களை தந்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் இராணுவத்தை விட புலிகளுக்கே அதிக இழப்பு ஏற்பட்டது.

புலிகள் எம்மை தாக்கும்வரை காத்திருக்க முடியாது.அதனால்தான், கடந்த தடவைகளில் நாம் தாக்குதல்களை மேற்கொண்டோம். அந்தவகையில், எமக்கு பின்னடைவே இல்லை.

இதைவிட, யாழ். முன்னணி காவலரண்களில் எமது படையினர் புலிகளுக்கு தொடர்ச்சியான இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறார்கள். வலிந்த தாக்குதல்களில் நாம் பாரிய வெற்றிகளை ஈட்டிவருகின்றோம்.

சிறப்புப் படையணியினரை தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி அவர்களின் உச்சவளத்தை பெற்றுக்கொள்கின்றோம்.

புலிகளுக்கு எதிரான போர் அநேகமாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

யாழ். நிலவரம் குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்கையில் -

யாழ்ப்பாணத்தில் அமைதியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 2005 ஆம் ஆண்டு இருந்ததை விட நிலமை இப்போது எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளது.

விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட முற்றாக அகற்றப்பட்டு விட்டார்கள். முன்பிருந்ததை விட மிக மிக குறைந்த அளவு – ஐம்பதிற்கும் குறைவான எண்ணிக்கையான புலிகளே இப்போது குடாநாட்டில் உள்ளார்கள்.

குடாநாட்டில் இடம்பெறும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களுக்கும் எமது படைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எமது படையின்ர தமது தொழிலை மட்டும்தான் செய்கிறார்கள். வேறு குழுக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனிந்த ஆள் முழு பூசனிக்காயை சோற்றுக்குள் புதைக்கிறார்?

புலிகள் எம்மை தாக்கும்வரை காத்திருக்க முடியாது.அதனால்தான், கடந்த தடவைகளில் நாம் தாக்குதல்களை மேற்கொண்டோம். அந்தவகையில், எமக்கு பின்னடைவே இல்லை.

இதைவிட, யாழ். முன்னணி காவலரண்களில் எமது படையினர் புலிகளுக்கு தொடர்ச்சியான இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறார்கள். வலிந்த தாக்குதல்களில் நாம் பாரிய வெற்றிகளை ஈட்டிவருகின்றோம்.

சிறப்புப் படையணியினரை தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி அவர்களின் உச்சவளத்தை பெற்றுக்கொள்கின்றோம்.

புலிகளுக்கு எதிரான போர் அநேகமாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை 23 வேன்டின அடி கனாது போல:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க இப்படியே பழசுகளை சொல்லி தன் புகழ் பாட வேண்டியது தான். சிங்களமும் மெது மெதுவா பிடிச்சுக் கொண்டே போவான். இப்போ விடத்தல் தீவுக்கு என்ன நடந்தது?? :wub:

அது கள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில்லை என்று இனி எழுதுவினம்.

இன்னும் சிறிது காலத்தின் பின் ஆனையிறவும் தற்போதை கள நிலவரத்தின் படி முக்கிய பகுதி இல்லை என்று சொல்லுவினம் போல இருக்கு :D

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவக் காப்பாற்ற தமிழ்லினக்ஸ் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவக் காப்பாற்ற தமிழ்லினக்ஸ் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கின்றோம்.

போகும் போது வலது காலையா அல்லது இடது காலையா முதல் வைக்கனும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தலையை வைக்க வேணும். பிறகு எல்லாம் சரியாக நடக்கும்.

போகும் போது வலது காலையா அல்லது இடது காலையா முதல் வைக்கனும் :wub:

அது கண்ணை திறந்து கொண்டா மூடிக்கொண்டா போறனீங்கள் என்பதை பொறுத்து.

போகும் போது வலது காலையா அல்லது இடது காலையா முதல் வைக்கனும் :wub:

திரும்பி வந்தாள் மீண்டும் சந்திப்போம்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க இப்படியே பழசுகளை சொல்லி தன் புகழ் பாட வேண்டியது தான். சிங்களமும் மெது மெதுவா பிடிச்சுக் கொண்டே போவான். இப்போ விடத்தல் தீவுக்கு என்ன நடந்தது?? :wub:

அது கள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில்லை என்று இனி எழுதுவினம்.

இன்னும் சிறிது காலத்தின் பின் ஆனையிறவும் தற்போதை கள நிலவரத்தின் படி முக்கிய பகுதி இல்லை என்று சொல்லுவினம் போல இருக்கு :unsure:

இல்லை இல்லை அப்படியில்லை

எம்மை பொறுத்தவரை எல்லா பிரதேசங்களுமே முக்கியமானவை தான்

ஆனாலும் சில தருணங்களில் இப்படியான பின்வாங்கல்கள் அவசியம் தான்

என்ன நான் சொல்வது?????? :D

  • கருத்துக்கள உறவுகள்

:D:lol: தம்பி தமிழ்லினக்ஸ் உங்களுக்கு ஈழ வரலாறு தெரியுமே

மூன்று நாள் பிடிச்ச வரலாறும் உண்டு பாருங்க

அதை நமது தமிழீழ தலைவர் அதற்கேற்றால் போல் வகுத்து கொடுப்பார்

பாருங்க அதற்கு பிறகு தெரியும் துண்ட காணும் துணியை காணும் என்று சிறி லங்கா

படைகள் ஓடுவதை.... ஆஆஆஆ

அனித்தா பிரதாப் என்ற ஒரு பத்திகை ஆசிரியர்

கூறி இருக்கிறார் தலைவரைப்பற்றி வாசித்து பாருங்ககள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:lol: தம்பி தமிழ்லினக்ஸ் உங்களுக்கு ஈழ வரலாறு தெரியுமே

மூன்று நாள் பிடிச்ச வரலாறும் உண்டு பாருங்க

அதை நமது தமிழீழ தலைவர் அதற்கேற்றால் போல் வகுத்து கொடுப்பார்

பாருங்க அதற்கு பிறகு தெரியும் துண்ட காணும் துணியை காணும் என்று சிறி லங்கா

படைகள் ஓடுவதை.... ஆஆஆஆ

அனித்தா பிரதாப் என்ற ஒரு பத்திகை ஆசிரியர்

கூறி இருக்கிறார் தலைவரைப்பற்றி வாசித்து பாருங்ககள்

யாரும் பப்பாவில ஏத்திய உடன் ஊச்சி குளிர்ந்து போவிங்களே. விடத்தல் தீவின் படங்கள் வீடியோவை சிங்கள இராணுவம் வெளியிட்டிருக்கு பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் பப்பாவில ஏத்திய உடன் ஊச்சி குளிர்ந்து போவிங்களே. விடத்தல் தீவின் படங்கள் வீடியோவை சிங்கள இராணுவம் வெளியிட்டிருக்கு பாருங்கோ

வலிக்குதில்லை

அதற்காக

அதை தவிர்ப்பதற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்????

யோவ் உந்த பப்பாவில ஏத்துற கதை கதையாதையுங்கோ பாருங்கோ ! ஓரு கதை ஓன்று சொல்லுறன் குறை நினையாதையுங்கோ !

போன வருடம் ஊருக்கு போய் நின்ற பொழுது வீட்டில கனக்க ப்பா மரம் நிக்குது பாருங்கோ ! அப்ப தேங்காய் புடுங்குற ஆள் வந்த பொழுது தேங்காயை புடுங்கிப் போட்டு கொக்கத்தடியையும் குடுத்து அண்ணை பப்பாப் பழம் புடுங்கித் தாங்கோ என்று கொக்கத் தடியை கொடுத்தன் பாருங்கோ! மனிசன் சொல்லிச்சுது " தம்பி தடியை உதில போட்டு நான் புடுங்கித் தான் நீர் நான் போடுற பழத்தை புடியும் " என்று போட்டு பப்பாவிலை ஏறிட்டுது .

எனக்கு சிரிப்பாத் தான் கிடக்கது அதோட பயமாயும் கிடக்குது பழத்தை புடிக்கிறதோ ? இல்லை விழப்போற ஆளை புடிக்கிறதோ ? அல்லது தொடரணி பாதை முடுவதற்குள் எந்தப் பாதையால ஆளை வைத்தியசாலக்கு கொண்டு போறது என்று சோசித்துக் கொண்டு நிற்க " தம்பி யோசியாதையும் பழத்தை புடியும் " என்று போட்டு பழத்தை போட நான் பிடிக்க ஆள் கொஞ்ச நேரத்திலை இறங்கி வந்திட்டுது.

அப்ப பாருங்கோ ! இனமேலாவது பப்பாவிலை ஏத்திற கதையெண்டு புலம்பாதையுங்கோ ! விளண்டிச்சோ !!!

ஆனாலும் எங்கட பத்திரிகை காரர் கொஞ்சம் தூக்கலாதான் எழுதுவினம் இது முக்கியமில்லை அது முக்கியமில்லை எண்டு கொஞ்சம் யோகிக்க வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.