Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் காலில் பிரபாகரன் மண்டியிடும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: மகிந்த ராஜபக்சே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என் காலில் மண்டியிடும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஆவேசம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டையொட்டி விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தத்துக்கு இலங்கை இராணுவம் மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அரசும் போர் நிறுத்தத்துக்குச் சம்மதிக்கப் போவதாக, "டி வி' சேனல்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. விடுதலைப் புலிகளுடனான போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காயமடைந்து அனுராதபுரம் இராணுவ முகாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர்களிடம், இலங்கை அதிபர் ராஜபக்சே, உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார். அப்போது ஒரு இராணுவ வீரர், போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசும் சம்மதிக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து ராஜபக்சேவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஆவேசமடைந்த ராஜபக்சே, "விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், என் காலில் மண்டியிடும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறினார்.

இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை இராணுவ செயலருமான கோத்தபாய ராஜபக்சே, "விடுதலைப் புலிகள் சீட்டுக்கட்டுப் போல குலைந்து வருகிறது. இன்றோ, நாளையோ அவர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடுவர்' என்று கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இராணுவத்தில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் வீரர்களை மீண்டும் இராணுவத்துக்குத் திரும்பும் படியும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஏராளமான நேரமும், பணமும் செலவிடப்பட்டுள்ளது. அது பயனற்றதாகப் போய்விடக் கூடாது' என்று கோத்தபாய அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை இலங்கை இராணுவத்தில் இருந்து 30 ஆயிரம் பேர் இடையிலேயே பணியில் இருந்து விலகி உள்ளனர். வீரர்கள் விலகுவதால் புலிகளுடனான போரில் அவ்வப்போது இராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு வந்தது. தற்போது முழுவீச்சில் போர் நடந்து வருகிறது

www.tamilwin.com

கண்ட கண்ட நாய் எல்லாம் குரைக்கிறத கேட்கிற நேரம் இது,,,,

கேட்டுத்தான் ஆகனும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,

  • கருத்துக்கள உறவுகள்

என் கால் எனக்கு எப்போதும் சொந்தமாக இருக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா தாங்களாவே களத்தில நிக்கிற போராளிகளை உசுப்பேத்தி விடுறாங்களே

இதை இதைத்தான் சொல்லுறது பொல்லைக் குடுத்து அடி வாங்கிறது எண்டு

என்ன நான் சொல்லுறது

சரிதானே

தலைவரின் பொறுமைக்கு பின்னுள்ள பூகம்பத்துக்கும் மேலான ஒன்று தான் இதற்கு பதிலடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரையில் இருக்கும் குட்டைநாய் வானத்தில் இருக்கும் நிலாவை பார்த்து குரைக்கிறது. விரைவில் கல்லெறி வேண்டப்போகுது

ஓயாத அலைகள் 3 இல் சந்திரிக்கா இந்தியாவிடம் மண்டியிட்டது மகிந்தாவுக்கு தெரியதா????? :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறகாலம் நெருங்க வர்ற சன்னி உளறல் போல இருக்கே!

ஒப்பாரி அள்ளி எடுத்தா? கூட்டி எடுத்தா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்பதன் அர்த்தம்..................

இவருக்கு புரியும்போது..............

போர் வேறுதிசையில் சென்றிருக்கும்...........

அப்போ இவர்போய் தலைவர் காலில் விழவேண்டிவரும்.

பிரேமதாசா விழுந்ததுபோல்..............

ரணில்விழுந்ததுபோல்..............

சந்திரிகா காணாமல் போனதுபோல்..............

???????????????????????????????????

அந்தளவுக்கு ஆணாவம் கூடிப்போச்சு

போரினால் வாழ்க்கை நடத்துபவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இவர் அளவுக்கதிகமாக இந்தியப் படங்களைப் பார்க்கிறார் போல கிடக்கு. வசனமெல்லாம் அந்த மாதிரி வரூது.

இப்பவே அவசரப்பட்டா எப்படி ? இன்னும் திருவிழாவே தொடங்கவில்லையே? இன்னும் எவ்வளவு இருக்கு, கொடியேற்றம் மட்டும் இருந்து பாக்காமல்...??

  • கருத்துக்கள உறவுகள்

சார்க் மாநாட்டில் ஈழத் தமிழரின் பிரச்சினையை பற்றி கதைத்து ஒரு முடிவுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை .

அது மட்டும் மார் தட்டட்டும் , மாநாட்டுக்கு வந்தவை பத்திரமாக ஊர் போய் சேர்ந்தால் பிறகு தான் பூசை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.