Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடையாது - தம்பியண்ணா

Featured Replies

தமிழக மக்களை நாம் சகோதரர்களாவே கருதுகிறோம். நான் கைதானதால் புலிகள் இயக்கத்திற்கு எவ்விதப் பாதிப்பபும் இல்லை. எமது இயக்கத்தில் தலைவர்கள் வீழ்ந்தாலும் ஒருபோதும் இயக்கம் வீழ்ச்சியடையாது என கடந்த புதன் கிழமை சென்னை வளசரவாக்கதில் கைதான புலிகள் இயக்க உறுப்பினர் என சந்தேகப்படும் டானியல் தெரிவித்துள்ளார்.

தம்பிஅண்ணா எனப்படும் டானியல் (வயது 40) குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையை தொடர்ந்தே இவரது வீட்டில் வைத்து கைதுசெய்யபட்டார்.

தொடர்ந்து பொலிஸார் அவரை இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் :

இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்தி வருவதை நாம் வாடிக்ககையாக கொண்டுள்ளோம். தற்போது பொலிஸ் கெடுபிடியால் இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்துவது சிரமமாக உள்ளது. இதனால் வேறிடத்தில் இருந்து கடத்த முடிவு செய்தோம். இதற்கான புதிய வியூகம் அமைப்பதற்கு நான் மட்டும் தனியாகவே படகு மூலம் ஜூலை முதலாம் திகதியன்று தமிழகத்திற்கு வந்தேன்.

தொடர்ந்து சென்னiயில் வளசரவாக்கத்தில் நண்பர் ஒருவருடன் தங்கியிருந்தேன்.

பொருட்களை கடத்துவதற்கு வசதியான இடத்தை தெரிவு செய்வதற்கு தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியான அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், தேவிப்பட்டினம், கோட்டை பட்டினம் ஆகிய பகுதிகளை சென்று பார்வையிட்டேன்.

தமிகத்தில் கோடியாக்கரை பகுதியில் இருந்து இயந்திரப் படகு மூலம் ஒரு மணி நேரத்திற்குள் இலங்கைக்கு சென்றுவிடலாம். எனவே அங்கிருந்து பொருட்கைள படகு மூலம் கடத்தலாமா என்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். அந்த விஷயத்தில் இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்குள் பொலிஸார் பிடித்துவிட்டனர்.

நான் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் சாதாரண போர் வீரனாக முதலில் பணியாற்றினேன். அப்போது இலங்கை கடற்படையினரோடு நேரடியாக பலமுறை மோதல்களில் ஈடுபட்டேன்.

புலிகள் இயக்கத்தில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தாலும் மனைவி, குழந்தைகளோடு தனியாக குடும்பம் நடத்தி கொள்ளலாம். மத நம்பிக்கை வைப்பதிலும் தடையில்லை. குழந்தைகளை படிக்க வைப்பது முதல், குடும்பம் நடத்துவதற்கான அனைத்து செலவுகளையும் புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளும்.

எனது மனைவியின் பெயர் ஸ்ரீதேவி, எனக்கு 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் இன்னோரு மகனும் உள்ளனர்.

கிறிதஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ள நான், தமிழகத்திற்கு வரும்போது வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். அதை ஒரு வேண்டுதலாகவும் வைத்திருந்தேன்.

நாம் தமிழக மக்களை எமது சகோதரர்களாகவே கருதுகிறோம். நான் பிடிபட்டதால் புலிகள் இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. என்னுடைய இடத்தில் இப்போது வேறோருவர் நியமிக்கப்பட்டிருபார்.

எனவே, விடுதலைப்புலிகள் இயக்கம் தலைவர்கள் வீழ்ச்சி அடைந்தாலும், இயக்கம் ஒரு போதும் வீழ்ச்சியடையாது.

இவ்வாறு தம்பி அண்ணா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதனைத் தொடார்ந்து இவர் நீதிமன்றில் அஜர்ப்படுத்தப்பட்டதையடுத்த

மேலும் திடுக்கிடும் தகவல்களை பெறலாம் என கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாரை பிடித்தாலும் உதுகள் உப்படித்தான் சொல்லும்................

அங்க வைக்கிற தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பியண்ணா என்ற மனிதர் அல்லது றோ நடத்தும் நாடகத்தில் பங்கேற்பவர் விடுதலைப்புலிகளில்முக்கியம

தம்பியண்ணா என்ற மனிதர் அல்லது றோ நடத்தும் நாடகத்தில் பங்கேற்பவர் விடுதலைப்புலிகளில்முக்கியம???னவர் என்று காட்டுவதற்காக இந்தியப்படைகள் அவரின் பாணியில் புகழ்வது போல ஒரு கட்டுரையை வடிவமைத்திருக்கின்றன. இதனால் சிலருக்கு உண்மையில் அவர் புலி தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்த கியுப்பிரிவு ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது உண்மை எனத் தோன்றலாம். அது அவர்களுக்குக் கிடைக்க ஒரு வெற்றியாகும்.

ஆனால் சென்ற வருடமும் இப்படி ஒரு ஆதரவு அலை கிளம்பும்போது மீனவர்களைப் புலிகள் தான் சுடுவதாக தமிழக காவல்துறைத் தலைவர் நாடகம் எழுதினார். ஆனால் மீனவச்சிறுவன் சொன்ன உண்மையால் அது தோற்றுப் போய்விட்டது. இதுவும் கியு கொண்டு;ளள வழமையான திருவிளையாடல்களில் ஒன்று.

நீங்கள் சொல்வது சரி!

இது றோவும் தமிழகத்தின் கியூ பிரிவு காவல்துறையும் சேர்ந்து ஆடும் நாடகம்.

ஆனாலும் என்ன!!! அரிச்சந்திரா நாடகம் போல் ரொம்ப பழைய நாடகம். கொட்டகையில் கியூ பிரிவினர் வழமை போல் ஈயோட்ட வேண்டியது தான் :lol:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்தி வருவதை நாம் வாடிக்ககையாக கொண்டுள்ளோம். தற்போது பொலிஸ் கெடுபிடியால் இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்துவது சிரமமாக உள்ளது. இதனால் வேறிடத்தில் இருந்து கடத்த முடிவு செய்தோம். இதற்கான புதிய வியூகம் அமைப்பதற்கு நான் மட்டும் தனியாகவே படகு மூலம் ஜூலை முதலாம் திகதியன்று தமிழகத்திற்கு வந்தேன்

பொதுவாகப் பார்த்தால் கியுப்பிரிவினர் தமிழகத்தில் விதைக்க முயன்ற செய்தி இது தான். மற்றவரை இச் செய்தியை நம்ப வைப்பதற்காக நல்லவன் போல நடத்தும் நாடகம்...

அதை விட இப்போது மன்மோகன் சிங் இலங்கையரசுக்கு உதவுவது போல நிற்கின்றார். அதனால் தமிழகத்தில் இருந்து எதிர்ப்புக்குரல்கள் வர வாய்ப்புண்டு. அதனால் இப்படி ஒரு செய்தியை வெளியிடுவதன் மூலம், தமிழகத்தில் இருந்து வர் திறப்பவர் கொஞ்ச நாள் அமைதியாக இருப்பார்கள். அதுக்குள்ள மன்மோகன் இலங்கைப் பயணத்தை முடிந்து வருவாரல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்

இடையிலை "3 சாங்; ஒரு குத்து சாங் (பாடல்) 2பைட்டு (சண்டை) சேர்த்து கொஞ்ச பஞ் வசனமும் சேர்த்து தயாரிச்சால் சும்மா பிரமாண்டமாய் இருக்கும்.

இந்தியாவில எங்க இருந்து ஆயுதம் வாங்குறது?

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய தமிழ் நாட்டு மக்களின் கருத்து கணிப்பு றோவின் பயறு வேகாது என்பதை கோடிட்டி காட்டியுள்ளார்கள். மாறாக இவர்களை கருத்தில் எடுக்காமல் விடுவது புத்திசாலித்தனம்.

அண்மைய தமிழ் நாட்டு மக்களின் கருத்து கணிப்பு றோவின் பயறு வேகாது என்பதை கோடிட்டி காட்டியுள்ளார்கள். மாறாக இவர்களை கருத்தில் எடுக்காமல் விடுவது புத்திசாலித்தனம்.

இல்லை நான் எடுப்பேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலி உறுப்பினர் தம்பியண்ணா கைதையடுத்து புதுகை முகாமில் இருந்த 100 அகதிகள் மாயம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியி ருந்த 100 பேர் மாயமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங் கலம் அருகே உப்பூரில் கியூப் பிரிவு மற் றும் உள்ளூர் பொலிஸார் நடத்திய வாக னச் சோதனையின்போது, இலங்கைக்குக்கடத்திச் செல்லப்படவிருந்த ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந் தப் பொருள்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தது யார் என்பது பற்றிப் பொலிஸார் விசாரணை நடத்தியதில், சென்னையில் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளின் தளபதி டேனியல் (வயது 46) கடந்த புதன்கிழமை கைதுசெ#யப்பட்டார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் மையமாகக் கொண்டு செயற்பட்டவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம்தோப்புகொல்லை, அழியாநிலைதேக்காட்டூர் ஆகிய முகாம்களில்பொலிஸார் புதனன்று இரவு திடீர்சோதனை மேற்கொண்டனர். அங்கீகார அடையாள அட்டை பெற்றுள்ள 974 குடும்பங்களைச்சேர்ந்த 3,600 அகதிகள் பற்றிய விவரங்களை புதுக்@காட்டை பொலிஸார் சரிபார்த்தனர்.

இந்தச் சோதனையில் நூற்றுக்கும் சேமற்பட்ட அகதிகள், உரிய முகாம்களில் தங்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிப் பொலிஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

http://www.innovaylk.com/uthayan/FullView.php?ntid=4512

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.