Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சார்க் மாநாட்டு பாதுகாப்பு நடைமுறையில் பாரிய ஓட்டைகள்: இந்திய தூதரகம் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவகார அமைச்சிடம் இந்திய தூதரகம் கவலை தெரிவிப்பு

05.08.2008 / நிருபர் வானதி

கொழும்பில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்குனின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பில் கொழும்பிலுள்ள

இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது கவலையை வெளிவிவகார அமைச்சிடம் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனுக்கு சார்க் மாநாட்டின் போது விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை வெளிவிவகார அமைச்சை கேட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற எம். கே.நாராயணனது பாதுகாப்பில் அதிர்ச்சியளிக்கும் வகையிலான குறைபாடு காணப்பட்டது.

அன்றைய தினம் நிகழ்வு முடிந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் வாயிலுக்கு வந்த நாராயணன் வெகு நேரம் காத்திருந்தபோதும் அவரது காரோ பாதுகாப்புக்கான வாகன தொடரணியோ வரவில்லை.

இதனையடுத்து அவர் வாடகைக்கு கார் ஒன்றின் மூலம் தான் தங்கியிருந்த ஹோட்டலை சென்றடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தனது அதிருப்தியையும் கவலையையும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் நேரடியாக தெரியப்படுத்தியுள்ளது.

இந்திய அரசின் பாதுகாப்பு, வெளிவிவகாரம் என்பவற்றில் முக்கிய கொள்கை வகுப்பாளராக உள்ள எம்.கே. நாராயணனின் பாதுகாப்பில் ஏற்பட்ட மேற்படி குறைபாடு எமக்கு மிகவும் அதிர்ச்சியளித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

sankathi.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு நெடுக அதிர்ச்சியும் , கவலையும் தானே ?

இது உலகத்திலே ஒருத்தருக்கும் இல்லாத புது வியாதியாய் கிடக்குது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாலைந்து போர்க்கப்பலை கரையிலை கொண்டுவந்து விட்டு யாரை பாதுகாத்தவை? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

உவரைச் சி ரி பி பஸ்ஸிலயெல்லோ அனுப்பியிருக்க வேணும். உவரென்ன மக்கள் தலைவரே பெரிய எடுப்பெடுக்கிறதுக்கு. வாடகைக் கார் விட்டதே பெரிய விசயம்.

வந்த பிரதமருக்குப் பிடரியில குடுக்காமல் விட்டாங்களேயெண்டு சந்தோசப் படுறதை விட்டுப் போட்டுச் சும்மா சில்லறையளுக்கெல்லாம் பாதுகாப்புக் குடுக்கையில்லையெண்டு இந்தியத் தூதரகம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிற

இந்திய அரசை இலங்கையரசு ஒரு துரும்பாகவும் மதிப்பதில்லை.....

ஆனால் இந்தியா போய் நின்றுகொண்டு என்னை மதி, நான் அயல்னாடு என்று கொண்டு இருக்கிறது.....

இலங்கை மதிப்பது எவ்வித நிபந்தனையுமின்றி ஆயுதம் வழங்கும் பாகிஸ்தான், சீனா, ஈரான்....

போன்ற நாடுகளே..தற்போதைய நிலைமையில்....

இப்ப இந்தியாக்குவுக்கு சிறிது சிறிதாக புரிகிறது... ஆனால் நிலைமை கைமீறி விட்டது....

இனி இலங்கையை மடக்க தமிழர்களை ஆதரிப்பதே ஒரே வழி.....

ஆனால் இலங்கையின் கையில் மாட்டி இருக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இனியாவது திருந்துவார்களா?....

இந்திய அரசை இலங்கையரசு ஒரு துரும்பாகவும் மதிப்பதில்லை.....

ஆனால் இந்தியா போய் நின்றுகொண்டு என்னை மதி, நான் அயல்னாடு என்று கொண்டு இருக்கிறது.....

இலங்கை மதிப்பது எவ்வித நிபந்தனையுமின்றி ஆயுதம் வழங்கும் பாகிஸ்தான், சீனா, ஈரான்....

போன்ற நாடுகளே..தற்போதைய நிலைமையில்....

இப்ப இந்தியாக்குவுக்கு சிறிது சிறிதாக புரிகிறது... ஆனால் நிலைமை கைமீறி விட்டது....

இனி இலங்கையை மடக்க தமிழர்களை ஆதரிப்பதே ஒரே வழி.....

ஆனால் இலங்கையின் கையில் மாட்டி இருக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இனியாவது திருந்துவார்களா?....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலை தெரிவிப்பது, கடுமையான கண்டனம் தெரிவிப்பது, உன்னிப்பாக எல்லாவற்றையும் இந்தியா பார்த்துக்கொண்டிருக்கு என்று கூறுவது இவை எல்லாம் இந்தியாவின் அரசியலில் முக்கியமான கலைச்சொற்கள் இதைவிட்டால் எதுவும் தெரியாது :lol: . காணாததுக்கு செய்திகளில இன்றைய முக்கிய செய்திகள் சிறிலங்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் என்று உடனே கத்துவாங்கள் ஏதோ இன்றைக்கு கண்டனம் நாளைக்கு ஏதோ புடுங்கப்போறாங்கள் மாதிரி ஆனால் அவங்கள் தங்கட வேலையை மட்டும் பார்த்திட்டு போவாங்கள் :lol::lol: .

சார்க் மாநாட்டு பாதுகாப்பு நடைமுறையில் பாரிய ஓட்டைகள்: இந்திய தூதரகம் தெரிவிப்பு

[புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2008, 05:23 பி.ப ஈழம்] [க.நித்தியா]

சார்க் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடைமுறைகளில் பாரிய ஓட்டைகள் காணப்பட்டன என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கென இந்திய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலவற்றை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் -

இவை தொடர்பாக இரண்டு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் பேசியுள்ளனர் என்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய பிரதமர் கொழும்பு வந்திருந்தபோது அவருடைய வாகனத்துக்கு ஓட்டுனராக நியமிக்கப்பட்டவர் திடீரென காணமற்போன சம்பவம் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் சார்க் மாநாடு நடைபெற்ற பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து தாஜ் சமூத்ரா ஹோட்டலுக்கு வாடகை காரில் வந்தமை போன்ற சம்பவங்கள் இந்திய பாதுகாப்பு தரப்பினரை மிகுந்த அதிருப்பதிக்குள்ளாக்கியுள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார்க் மாநாட்டு பாதுகாப்பு நடைமுறையில் பாரிய ஓட்டைகள்: இந்திய தூதரகம் தெரிவிப்பு

அப்பிடி இருக்குமெண்டுதானே உங்கடை நாய்களை அட சீ இராணுவத்தை பாதுகாப்புக்கு கொண்டுபோனீங்க...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஓட்டைகளை சாக்கால அடைக்கலமோ? :rolleyes:

அந்த ஓட்டைகளை சாக்கால அடைக்கலமோ? :o

நக்கல்? :rolleyes::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்கல்? :rolleyes::o

கொஞ்சம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.