Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் திருவிழாவுக்குச் செல்ல பெற்றோர் தடுத்ததால் சிறுமி சுருக்கிட்டுத் தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவிற்குச் செல்லவேண்டாமென பெற்றோர் தடுத்ததால் மனமுடைந்த சிறுமி சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நுணாவில் தெற்கைச் சேர்ந்த சாந்தகுமார் ரேணுகா என்ற 11 வயதுச் சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக தனது பேத்தியாருடன் நல்லூர் உற்சவத்துக்குச் சென்றுவந்த இச்சிறுமி நேற்றைய தினமும் செல்ல முற்பட்டபோது பெற்றோர் தடுத்ததுடன் இனி தேர்த்திருவிழாவிற்குச் செல்லுமாறும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மனமுடைந்த சிறுமி தனது வீட்டிலேயே சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இச் சிறுமியின் உறவினரான 16 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது அயலவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதனை இச்சிறுமி நேரடியாக பார்த்தாரென்றும் அந்த முறையிலேயே தானும் தற்கொலை செய்துள்ளாரென்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

ஆஆஆஆஆ.......... சுருக்கிட விட்டு விட்டார்களே!! அடித்தே கொண்டிருக்க வேண்டும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆஆ.......... சுருக்கிட விட்டு விட்டார்களே!! அடித்தே கொண்டிருக்க வேண்டும்!!!

சரியான தீர்ப்பு, இந்த பிள்ளை வளர்ந்து பெரிய ஆள் ஆகியிருந்தால் என்னவெல்லாம் செய்திருக்குமோ :rolleyes::rolleyes: ? பெற்றோர் தனது நன்மைக்குத்தானே சொல்கிறார்கள் என்றது கூட விளங்கவில்லையே இந்த பிள்ளைக்கு :( .

சரியான தீர்ப்பு, இந்த பிள்ளை வளர்ந்து பெரிய ஆள் ஆகியிருந்தால் என்னவெல்லாம் செய்திருக்குமோ :):lol: ? பெற்றோர் தனது நன்மைக்குத்தானே சொல்கிறார்கள் என்றது கூட விளங்கவில்லையே இந்த பிள்ளைக்கு :D .

என்ன சரியான தீர்ப்பு? ஏன் இப்படி வன்முறை? இறந்தவர் ஒரு 11 வயது சிறுமி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ.......... சுருக்கிட விட்டு விட்டார்களே!! அடித்தே கொண்டிருக்க வேண்டும்!!!

இப்படிச் சொன்னால் நான் எல்லாம் இப்ப உயிரோட இருக்க முடியாது. அடம்பிடித்து நானும் சிறுவயதில் நல்லூருக்குப் போயிருக்கிறேன். நல்லூருக்கு அருகில் வசித்தும் கூட திருவிழா என்றால் போகத்தூண்டும். சிறுவயதில் அது இன்பமான பொழுதுகளாக இருக்கும். அதைப் பெரியவர்கள் உணர்ந்து தகுந்த முறையில் பிள்ளையை ஆசுவாசப்படுத்த வேண்டுமே தவிர கண்டிப்பதோ தண்டிப்பதோ சரியான அணுகுமுறையல்ல..! :)

இச்சம்பவத்துக்கு பெற்றோரே முழுப் பொறுப்பு. அவர்களின் குழந்தை மீதான அணுகுமுறையில் இருந்த தவறே அந்தப் பிஞ்சுள்ளத்தை பாதிக்க செய்திருக்கிறது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இச்சம்பவத்துக்கு பெற்றோரே முழுப் பொறுப்பு. அவர்களின் குழந்தை மீதான அணுகுமுறையில் இருந்த தவறே அந்தப் பிஞ்சுள்ளத்தை பாதிக்க செய்திருக்கிறது..! :lol:

தாத்தா... சிறுமி எண்டு எழுதியிருக்கு... பொம்பிளை பிள்ளை எண்டதை கவனிக்காமல் தீர்ப்பு சொல்லி போட்டிங்கள் போல இருக்கு....தீர்ப்கை மாத்துங்கோ.... இல்லையெண்டால் முனி உங்களுக்கு தாற ஆதரவை வாபஸ் பண்ணியிடுவாராம். :)

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா... சிறுமி எண்டு எழுதியிருக்கு... பொம்பிளை பிள்ளை எண்டதை கவனிக்காமல் தீர்ப்பு சொல்லி போட்டிங்கள் போல இருக்கு....தீர்ப்கை மாத்துங்கோ.... இல்லையெண்டால் முனி உங்களுக்கு தாற ஆதரவை வாபஸ் பண்ணியிடுவாராம். :)

நீங்களும் இங்குள்ள பலரைப் போல என்னையும் முனியையும் தவறாகவே விளங்கிக் கொள்கிறீர்கள் போல் தெரிகிறது.

நாம் பெண்களினதும் தவறான பக்கங்களை இனங்காட்டுவதை செய்வதால் எமக்கு பெண்கள் எதிர்ப்பாளர்கள் என்ற நாமம் சூட்டப்படுகிறது. இதையே மறைத்து.. பெண்களை புகழ்ந்தால்.. அது வரவேற்கப்படும். ஆனால் பெண்கள் பற்றிய அறிவூட்டல் அல்லது பெண்களுக்கு சொல்லப்படும் அவர்களின் தவறுகள் பற்றிய கருத்துக்கள் இல்லாமலே போய்விடும். அது பெண்கள் தம் செயற்பாடுகள் அனைத்தும் தவறானவை அல்ல.. ஆண்களுக்கு எதிரான துணிகரச் செயற்பாடுகள் என்பதாக அர்த்தப்பட்டுப் போய்விடும்.

இதையே முனியும் சொல்கிறார். நாங்கள் மனிதாபிமானத்தின் முன் ஆண் பெண் என்ற பிரிவினைகளுக்கு இடமளிப்பதில்லை. அதுமட்டுமன்றி பெண்களின் எல்லாச் செயல்களும் அல்லது எல்லாப் பெண்களின் செயல்களும் தவறானவை.. சமூக விரோதமானவை.. ஆண்கள் விரோதமானவை என்று நாம் சொல்லவும் இல்லை..! தவறான பெண்களின் நடவடிக்கைகள் தொடர்பிலேயே நாம் கருத்துக்களை.. இனங்காட்டல்களை செய்து வருகின்றோம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இங்குள்ள பலரைப் போல என்னையும் முனியையும் தவறாகவே விளங்கிக் கொள்கிறீர்கள் போல் தெரிகிறது.

சீ சீ... அது சும்மா லொள்ளுக்கு... எங்களுக்கு பொண்ணு பிறந்த நேரம், ஏதோ யோசிச்சு கொண்டிருக்க மனைவியும் "என்ன யோசிக்கிறிங்கள்" எண்டு கேக்க நானும் இருக்கமாட்டாமல் கிண்டலுக்கு "திருமணமானதில் பாதி தலைமயிர் நரைச்சு போட்டுது எனி மிச்சமும் நரைக்கபோகுது எண்டு தொடங்கி கொஞ்சம் வெட்டி விளாசி விட்டதால வந்த புயல் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா அடங்குது :) ... நீங்கள் வேற :( ..... இப்ப நல்ல பிள்ளை மாதிரி நெளிவு சுளிவெல்லாம் பாத்து தான் கதைக்கிறது. :lol:

தவறான பெண்களின் நடவடிக்கைகள் தொடர்பிலேயே நாம் கருத்துக்களை.. இனங்காட்டல்களை செய்து வருகின்றோம். :D

நீங்கள் சில நேரங்களில் நீங்கள் இதை பொதுவாக சொல்லும் போது எல்லாரையும் தாக்குவது போல இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சில நேரங்களில் நீங்கள் இதை பொதுவாக சொல்லும் போது எல்லாரையும் தாக்குவது போல இருக்கும்.

பொதுவாச் சொல்வது போல அமைந்தாலும்.. நல்லவங்க தங்களை இல்லை என்பதை இலகுவாகவே விளங்கிக் கொள்ள முடியும் தானே..! :):lol:

புகலிடத்தில் 10 - 12 வயசு ஆக்களுக்கே தலைமயிர் நரைக்குது. காரணம்.. வெந்நீரில் அடிக்கடி தலை கழுவிறது.. தலையை உலர்த்த அதிக வெப்பத்தில் கீற்றர் பாவிக்கிறது.. வீட்டு வெப்பநிலை உயர்வாக இருத்தல்.. பொடுகு.. மற்றும் சம்பூக்களில் உள்ள இரசாயனங்களால்.. மன அழுத்தம்.. சிகரெட் பிடித்தல்..! சிலருக்கு பிறப்பாலும் (ஜீன்) அமையலாம். வயதாதல் நரைப்பு என்பதை தாடி மீசையை நரைப்பை வைத்துத்தான் கொஞ்சம் என்றாலும் தீர்மானிக்க முடியும். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிறுமியின் தற்கொலையை வைத்து வேண்டா விவாதங்களை தவிர்க்கலாமே?

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சரியான தீர்ப்பு? ஏன் இப்படி வன்முறை? இறந்தவர் ஒரு 11 வயது சிறுமி.

வன்முறையா :) . ஏன் பெற்றோரா சிறுமியின் கழுத்தில் தூக்கு மாட்டி விட்டார்கள் :lol: ? இந்த சிறுமி இந்த முடிவு எடுத்தது கவலைக்கிடமே தான் :D . ஆனால் இந்த சிறுமியின் இந்த முடிவுக்கு பெற்றோர் மட்டுமா காரணம்? நிச்சயமாக இல்லை . நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் சில காலங்களுக்கு முன்பு இந்த சிறுமியின் உறவினர் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் அதை இந்த சிறுமி நேரடியாக பார்த்திருக்கிறார் அதுவும் ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கமுடியும் . எல்லோரும் பெற்றோரை குறை சொல்கிறீர்களே இந்த சிறுமி திருவிழாவுக்கு போய் ஏதாவது இந்த சிறுமிக்கு நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் அப்பொழுதும் பெற்றோரையே குறை சொல்லியிருப்பீர்கள் ...... ஒவ்வொரு பிள்ளையும் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர் எப்பொழுதும் அவர்களுக்கு பின்னால் திரியமுடியாது பிள்ளைகளுக்கு உணவு தயாரிக்கவேண்டும் வீட்டு வேலைகள் இருக்கும் இப்படி பல சோலி இருக்கு ஆகவே பெற்றோரை மட்டும் எப்பொழுதும் குறை சொல்லாதீர்கள். மற்றைய வீட்டில் இருக்கும் பிள்ளைகள் இப்படி செய்கிறதா? இல்லை அவர்கள் போகவிடாவிட்டால் அழுது போட்டு இருப்பார்கள் ஆனால் இந்த பிள்ளை செய்திருக்கின்றது என்றால் இந்த முடிவை எடுத்ததுக்கு பிள்ளையே காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா... சிறுமி எண்டு எழுதியிருக்கு... பொம்பிளை பிள்ளை எண்டதை கவனிக்காமல் தீர்ப்பு சொல்லி போட்டிங்கள் போல இருக்கு....தீர்ப்கை மாத்துங்கோ.... இல்லையெண்டால் முனி உங்களுக்கு தாற ஆதரவை வாபஸ் பண்ணியிடுவாராம். :)

வணக்கம் சபேஸ் அண்ணேய் எப்படி இருக்கிறியள்

அதாவது நான் யாருக்கும் சார்பாக பேசமாட்டேனுங்க அது யாராக இருந்தாலும் சரி

Edited by muneevar

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் சில காலங்களுக்கு முன்பு இந்த சிறுமியின் உறவினர் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் அதை இந்த சிறுமி நேரடியாக பார்த்திருக்கிறார் அதுவும் ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கமுடியும் . எல்லோரும் பெற்றோரை குறை சொல்கிறீர்களே இந்த சிறுமி திருவிழாவுக்கு போய் ஏதாவது இந்த சிறுமிக்கு நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் அப்பொழுதும் பெற்றோரையே குறை சொல்லியிருப்பீர்கள் ......

உண்மை தான் சுப்பண்ணை . பதினொருவயது சிறுமிக்கு நன்மை , தீமையை முடிவெடுக்கும் பக்குவம் தெரியாது . சில காலத்திற்கு முன் நடந்த உறவினரின் தற்கொலையை நேரில் பார்த்ததால் , அதன் தாக்கம் மனதில் ஒரு மூலையில் பதிந்திருக்கும் . அதன் மூலம் பெற்றோரை பணியவைக்க விளையாட்டாக தூக்கு போட போக வினையாக முடிந்திருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இளம் கன்று பயமறியாதது.................முன்னர் நடந்த சம்பவம் போல யாராவது காப்பாத்த வரலாம்

..........என நினத்திருக்கலாம்

இப்படிச் சொன்னால் நான் எல்லாம் இப்ப உயிரோட இருக்க முடியாது. அடம்பிடித்து நானும் சிறுவயதில் நல்லூருக்குப் போயிருக்கிறேன். நல்லூருக்கு அருகில் வசித்தும் கூட திருவிழா என்றால் போகத்தூண்டும். சிறுவயதில் அது இன்பமான பொழுதுகளாக இருக்கும். அதைப் பெரியவர்கள் உணர்ந்து தகுந்த முறையில் பிள்ளையை ஆசுவாசப்படுத்த வேண்டுமே தவிர கண்டிப்பதோ தண்டிப்பதோ சரியான அணுகுமுறையல்ல..! :rolleyes:

நீங்கள் எல்லாம் கடவுள் பக்தி முத்தி கோயிலுக்கு போனீர்கள் எண்று சொன்னா நம்பவா முடியுது..??

கடைத்தெருவிலை போய் கச்சான், விளையாட்டு சாமான் வாங்கத்தானே போவீர்கள்...??? ( நான் எல்லாம் அப்பிடித்தான். கோயிலுக்கு உள்ளை கூட போவது கிடையாது வெளியிலை இருந்தே கைகூப்பினால் பெரிய விசயம். )

அந்த பிள்ளைக்கும் அப்பிடித்தான்... அண்று பிள்ளையை கோயிலுக்கு அனுப்பி செலவு செய்ய பெற்றோரிடம் பொருளாதார வசதி இல்லாமல் இருந்து இருக்கலாம்... (அனேகமாக அதுதான் காரணம்)

எனது தேசத்தவர் வறுமையால் அல்லல் படுவது வேதனையானது.....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் கடவுள் பக்தி முத்தி கோயிலுக்கு போனீர்கள் எண்று சொன்னா நம்பவா முடியுது..??

கடைத்தெருவிலை போய் கச்சான், விளையாட்டு சாமான் வாங்கத்தானே போவீர்கள்...??? ( நான் எல்லாம் அப்பிடித்தான். கோயிலுக்கு உள்ளை கூட போவது கிடையாது வெளியிலை இருந்தே கைகூப்பினால் பெரிய விசயம். )

அந்த பிள்ளைக்கும் அப்பிடித்தான்... அண்று பிள்ளையை கோயிலுக்கு அனுப்பி செலவு செய்ய பெற்றோரிடம் பொருளாதார வசதி இல்லாமல் இருந்து இருக்கலாம்... (அனேகமாக அதுதான் காரணம்)

எனது தேசத்தவர் வறுமையால் அல்லல் படுவது வேதனையானது.....

நான் ஒன்று கோவிலுக்குப் போனால் சாமி குடும்பிடுவன். அந்த அலுவல் முடிச்சிட்டுத்தான் மிச்ச அலுவல்கள்.

நாங்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் செலவுக்கு என்று உண்டியல் வைச்சு வருடத்துக்கும் பணம் சேர்க்கிறது. அதில அப்பா அம்மா தாறதை செலவு செய்வம். ஆனால் அநாவசிய செலவுக்கு வீட்டில தடா.

அது உண்மையில் இப்போதும் கூட செலவை கணக்குப் பார்த்து செய்ய வைக்குது. பணத்தின் பெறுமதியைச் சொல்லித் தருகுது. :unsure:

நான் பார்க்கிறேன் புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள பிள்ளைகளுக்கு (யுனி போற ஆக்களுக்கு) வங்கிக் கிரடிட் காட்டில கடன் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கும். அவர்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டது கிடையாது. அதற்குக் காரணம்.. அவர்களின் வளர்ப்பு முறை..! இறுதியில் கடனுக்கும் வரிக்கும் ஓய்வின்றி உழைப்பதே அவர்களின் வாழ்க்கை. அத்தோடு குடியும் கூத்தும் இதை விட்டால்.. அவர்களின் வாழ்க்கையில் என்ன புதிய விசயம் இருக்குது..???! :rolleyes:

Edited by nedukkalapoovan

அநியாயமாக போய்விட்டாரே..

11 வயது சிறுமி எப்படி தூக்கு மாட்டினார்?? முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக போய்விட்டாரே..

11 வயது சிறுமி எப்படி தூக்கு மாட்டினார்?? முடியுமா?

கண் கண்டால் கை செய்யும் தூயா

உதாரணம் ...தை பொங்கல் அன்று நான் வெடி வெடிச்சதை பார்த்து எனது தம்பி ஏழு வயது கடை வைத்திருந்த

படியால் ஒரு வெடி கட்டை எடுத்து குத்து விளக்கில் கொழுத்திவிட்டு உள்ளே போட்டு விட்டான் பிறகென்ன

அன்று நல்ல கைவிசேஸம் எனக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.