Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: வைகோ அறிவிப்பு

Featured Replies

ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: வைகோ அறிவிப்பு

[புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 11:22 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழ்நாடு அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைய தமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று ஒழிக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு தொடர்ந்து இனப்படுகொலை நடத்துவதைத் தெரிந்துகொண்டே இந்திய அரசு ஆயுத உதவி செய்து வந்து உள்ளது.

எனவே, இது அண்டை நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட உதவி அல்ல; சிங்கள அரசுக்கு இராணுவ பலத்தைக் கூட்டுவதற்காகவே வழங்கப்பட்ட உதவி ஆகும்.

"இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்கிறது" என்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அக்டோபர் 2 ஆம் நாள் எனக்கு எழுதி உள்ள கடிதம், ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது.

சிறிலங்கா வானூர்தி படைக்கு வழங்கி உள்ள ராடர்களை, இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்;

இலங்கைக்கு அனுப்பி உள்ள இந்திய இராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும்;

குறைந்த வட்டியில் மானிய உதவி போல சிறிலங்காவுக்கு வழங்குவதாகச் சொன்ன கடனை, இரத்து செய்வதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்;

இந்தியக் கடற்படையும், சிறிலங்கா கடற்படையும் செய்துகொண்ட தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும்;

சிறிலங்கா இராணுவத்துக்கும், வானூர்தி படையினருக்கும் இந்தியாவில் அளிக்கின்ற பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கையில் சிங்கள அரசு தன்னிச்சையாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்தது.

ஒவ்வொரு நாளும், தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி, பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவதால், உடனடியாகத் தாக்குதலை சிறிலங்கா அரசு நிறுத்திவிட்டு, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்குமாறும், சிங்கள அரசின் நடவடிக்கைகளால் முறிந்துபோன அமைதிப் பேச்சுகளை, ஏற்கனவே நடுநிலைமையோடு கடமையாற்றிய நோர்வே அரசை நடுவராகக் கொண்டு நடத்த வேண்டும் என்றும் ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தை கொழும்பில் திறப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் வற்புறுத்துவதோடு, இதைச் செய்வதற்கு சிங்கள அரசு முன்வராவிட்டால், சிறிலங்காவுடனான ராஜீய உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ளும் என்றும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தும் என்று, இந்திய அரசு சிறிலங்காவுக்கு எச்சரிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வராவிடில், அந்த அரசுக்குத் தரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களவருக்கு ஆயுதங்களை வழங்கி துரோகம் செய்த இந்திய அரசின் குற்றத்துக்கு, மத்திய அமைச்சரவைதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனவே, இலங்கையில் சிங்கள அரசு போர்நிறுத்தம் செய்வதற்கு உரிய நிர்பந்தத்தை மத்திய அரசு உடனடியாகச் செய்யாவிடில், அமைச்சரவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.

தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனக்கொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டே அல்ல! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

நன்றி ஐயா என்றும் எங்கள் மனதில் இடம்பிடித்தவர் நீங்கள் தான்!

மிக்க நன்றி :rolleyes::unsure::lol:

நன்றி ஐயா என்றும் எங்கள் மனதில் இடம்பிடித்தவர் நீங்கள் தான்!

நண்பரே இதுவும் ஒரு மலிவான அரசியல்தான். முதலமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போய் இதை சொல்லியிருக்கலாம்தானே?. அதில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. மத்திய அரசில் தி.மு.க.வின் பங்கு பெரிய அளவு அதனால் அவர்கள் அதலிருந்து கொண்டு அழுத்தத்தை கொடுப்பதுதான் சாணக்கியம். அவர்கள் விலகினால் மத்திய அரசு கவிழ்ந்து விடும் . அதன்பிறகு எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்கமுடியாது.

இவர்கள் மத்திய அரசு கவிழ்ந்து தேர்தலை எதிர்பார்ப்பவர்கள். இப்படித்தான்் சொல்வார்கள். தி.மு.க விலகக்கூடாது. ஆனால் கூடிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். அப்படியான சூழ்நிலையை இவர்கள் கொண்டு வர வேண்டும் அதைவிட்டு விட்டு பதவி விலகு என்பது இவர்களுடைய அரசியல் வறட்சியை காண்பிக்கின்றது.

என்னதான் மகிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் வேறுபாடு வெட்டு குத்து நிகழ்ந்தாலும் அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக தானே செயல்படுகின்றார்.வாக்களிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே இதுவும் ஒரு மலிவான அரசியல்தான். முதலமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போய் இதை சொல்லியிருக்கலாம்தானே?. அதில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. மத்திய அரசில் தி.மு.க.வின் பங்கு பெரிய அளவு அதனால் அவர்கள் அதலிருந்து கொண்டு அழுத்தத்தை கொடுப்பதுதான் சாணக்கியம். அவர்கள் விலகினால் மத்திய அரசு கவிழ்ந்து விடும் . அதன்பிறகு எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்கமுடியாது.

இவர்கள் மத்திய அரசு கவிழ்ந்து தேர்தலை எதிர்பார்ப்பவர்கள். இப்படித்தான்் சொல்வார்கள். தி.மு.க விலகக்கூடாது. ஆனால் கூடிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். அப்படியான சூழ்நிலையை இவர்கள் கொண்டு வர வேண்டும் அதைவிட்டு விட்டு பதவி விலகு என்பது இவர்களுடைய அரசியல் வறட்சியை காண்பிக்கின்றது.

சோழன்.. வைகோ ஈழத்தில் அல்ல கட்சி நடத்துகிறார். அவரைப் பொறுத்தவரை ஈழத்தமிழரின் நலன் என்பது கட்சி நலனுக்கு அப்பால் பட்டதாகவே எப்போதும் கருதி வருகிறார். அதை நாம் பணிந்து வரவேற்க வேண்டும். அதற்காக நாம் வரலாற்றுக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அவருக்கு என்று சுதேசிய அரசியல் கொள்கைகளும்.. பணிகளும் உள்ளன. அவர் அவற்றையும் பாதுகாக்க வேண்டியவராகவே இருக்கிறார். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டக்கிளஸ் தேவானந்தாவுக்கு 20 ஆயிரம் வாக்குப் போட யாழ்ப்பாணத்திலும் பிள்ளையானுக்கு வாக்குப் போட மட்டக்களப்பிலும் கருணாவுக்கு வால் பிடிக்க லண்டனிலும் ஈழத்தில் பிறந்த மானங்கெட்ட கூட்டம் இருக்கும் போது.. நீங்கள் வைகோ அரசியல் செய்கிறார் என்பது நிச்சயம் பொருத்தமற்ற கருத்து இந்த இடத்தில்.

முதலில் எங்கள் முதுகில் உள்ள அழுக்கைப் பார்ப்போம். அவற்றை அகற்றிக் கொள்வோம். அவர்களின் அரசியல் எதுவாகவும் இருந்திட்டுப் போகட்டும்.

தமிழகத்தின் எழுச்சியை... எமக்கான விடிவுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அரிய சந்தர்ப்பம் இது. எனவே.. வீணான.. அலட்டல்களை விடுத்து உருப்படியாக உங்கள் கருத்துக்களை... முன்மொழிவுகளைச் செய்யுங்கள்..! :rolleyes:

இந்த காலநிலைமாற்றத்திற்கு கால்கோளிட்ட ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா என்றும் எங்கள் மனதில் இடம்பிடித்தவர் நீங்கள்

அதுமட்டுமல்ல

தலைவர் மனதில் அமர்ந்தவர்களில் முக்கிமானவர்

தங்களுக்கு தெரியாததா??? எந்த இடத்தில் எப்படி காய்நகர்த்தவேண்டுமென.................

நன்றி ஐயா

இந்த காலநிலைமாற்றத்திற்கு கால்கோளிட்ட ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றிகள்!

நானும் இதைத்தான் நினைத்தேன்...!! :rolleyes:

நீங்கள் கால்கோள் எண்டது "" ஆழிப்பேரலையை" தானே...???

நானும் இதைத்தான் நினைத்தேன்...!! :rolleyes:

நீங்கள் கால்கோள் எண்டது "" ஆழிப்பேரலையை" தானே...???

ஓம் ஓம்... :unsure: ஆழிப்பேரலையா.. இல்லை வீசி ஓயும் ஆடிக்காற்றா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேணும்!

Edited by சாணக்கியன்

நெடுக்கண்ணா

மழைத்துளிகள் தனித்தனியாகத்தான் பூமியில் விழுகின்றது. அந்த துளிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து ஓடும்போது அதன் வேகம் குறைவு. அவை யாவும் ஒன்றாக சேர்ந்து ஓடும்போது அது பெரும் அழிவையே ஏற்படுத்திவிடுகின்றது. எல்லா துளிகளும் ஒன்று சேரும்போது அதன் வேகமே தனி.

வெளிநாடுகளில் பல ஊர்வலங்கள் நடைபெறுகின்றது. ஒரே நாளில் அது நடைபெறுவதால்தான் அது பலமானதாக தெரிகிறது. இன்றைக்கு ஒரு நூறுபேர் நாளைக்கு ஒரு 200 பேர் அடுத்த நாளைக்கு இன்னும் கொஞ்சப்பேர் என்று போனால் நன்றாகவா இருக்கும். உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் தாயகம் என்று வரும்போது ஒன்று சேரமுடிகின்றதல்லவா?

இதை பாருங்கள்

இதை படியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அவர்களே மிக்க நன்றி . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலநிலைமாற்றத்திற்கு கால்கோளிட்ட ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றிகள்!

உண்மையில் கம்னியூஸ்ட் கட்சியின் கூட்டம் தான் சடுதியாக தமிழக அரசியலில் ஈழ ஆதரவு பற்றி பல மாற்றங்கள் ஏற்பட்டது.

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வை.கோவுக்கு நன்றிகள்.

உண்மையில் கம்னியூஸ்ட் கட்சியின் கூட்டம் தான் சடுதியாக தமிழக அரசியலில் ஈழ ஆதரவு பற்றி பல மாற்றங்கள் ஏற்பட்டது.

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வை.கோவுக்கு நன்றிகள்.

கம்னியூஸ்ட் கட்சி ஏற்கனவே பல கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறது!

ஜெயா அக்கா வாய்திறக்கும் வரை காத்திருந்த கலைஞர், பின் தடாலடியா நடவடிக்கை எடுத்த மாதிரித்தான் தெரியுது!

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஜெ.. இப்ப பின்வாங்கிறா!

Edited by சாணக்கியன்

கம்னியூஸ்ட் கட்சி ஏற்கனவே பல கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறது!

ஜெயா அக்கா வாய்திறக்கும் வரை காத்திருந்த கலைஞர், பின் தடாலடியா நடவடிக்கை எடுத்த மாதிரித்தான் தெரியுது!

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஜெ.. இப்ப பின்வாங்கிறா!

அவவுக்கு ஒரு வகையான வருத்தம். கலைஞர் சம்மா இருந்தால் சொல்வா கலைஞர் படுகொலைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கின்றார் எனஇறு கூச்சலிடுவாள். கலைஞர் ஏதாவது செய்ய தொடங்கினாலஇ பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார் ஆட்சியை கலையுங்கள் என்று.

எப்படித்தான் வை.கோ இந்த நோயாளியின் பக்கத்திலிருக்கின்றாரோ. சிலவேளை கண்களை பொத்திக்கொண்டு வாயை மூடிக்கொண்டு காதுகளையும் மூடிக்கொண்டிருக்கின்றாரோ என்னவோ?

நெடுக்கண்ணாவைகேட்டால் இவவுக்கு என்ன வருத்தம் என்பதை சொல்வார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.