Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பருவத்தே செய்யும் பயிர் .............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பருவத்தே செய்யும் பயிர் ..............

அன்று ஞாயிறுமாலை ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவ அடகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை இ எல்லாம் பணமாகி ,அவன் லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை கொஞ்சம் தணித்து .மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் .

சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்திரத்தை மீட்க பணம் அனுப்பும் படி கடிதம் வந்தது ,இவ்வாறு அவன் அனுப்பும் செலவை மீத படுத்த மூன்று மாத காசை ஒரே தடவையில் அனுப்பினான் .காசை எப்படி உழைத்தான் என்பது வேறுகதை ,படிப்பில் ஆர்வமுள்ள அவன கஷ்டத்தின் மத்தியிலும் படித்தான் ,இரவில் வேலையும் ,பகலில் படிப்பும் ,ஆகி ,நித்திரை குறைய உடல் சோர தொடங்கியது ,இதற்கிடையில் கேளசலாவின் கலியாணம நடந்து முடிந்தது ,தம்பியின் காசில் கோலாகலமாக் கலியாணத்துக்கு மாறிய கடன் கட்ட இரண்டாவது வேலை தொடங்கினான் . காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடியது .

தகப்பனும் இளைப்பாறி ,தாயக கெடுபிடியால் அவர்கள் மருமகனின் துணையுடன் கொழும்புக்கு இடம் மாறினார்கள். அதற்கும் ஒரு பெரிய தொகை நண்பர்களிடமும் ,முதலாளியிடமும் உருட்டி பிரட்டி அனுப்பி வைத்தான் , காலம் தன் கடமையை செய்ய அவனும் முப்பது வயதானான் . தந்தையின் ஓய்வு ஊதியா பணம் போதாது என்றும் மாதம் மாதம் அனுப்பும் படியும் கடிதம் மேல் கடிதம் வரும் சிலசமயம் மேசையில் உள்ள கடிதம் திறக்க படாமலே இருக்கும் .கேளசலாவும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகி ,வாழும் காலத்தில் , ஆதவனை பற்றி , அவன் உணர்வுகளை பற்றி சிறிதும் எண்ணவில்லை ,தந்தையாரும் காலமானார் . பதின் மூன்று வருடங்காளாகின.... ஒரு நாள் அதிகாலை , டெலிபோன் (தொல்லை பேசி ) சிணுங்கியது ,உடன் தங்களுக்கு அழைக்கும் படி .... சேதி இது தான் ............ அக்கா மகள் பெரியவளாகி விடாள் . ஆதவன் மனம் வேதனையால் துடித்தது. இவர்களுக்கு எந்நேரமும் காசு .....காசு என்று ,நான் என்ன காசு காய்க்கும் மரமா ? கோடியில் வெட்டி அள்ளியா காசு வரும் . எதோ கடமைக்காக அனுப்பி வைத்தான். மறு மாத மடலில் அவனது ,முகம் தெரியா மருமகளின் வித விதமான் போட்டோக்கள் (நிழல்படம் ) அன்றைய தபாலில் வந்திருந்தன . இன்னும் காலம் கடமையை செய்யா ,அவன் வந்து பதினாறு வருடங்கள் ஆயின .வயதும் முப்பதியாறானது . இப்போதெலாம் சாராசரி வாழ்கை காலம் அறுபது என்பார்கள் .அதில் முப்பத்தி ஐந்தில் மாரடைப்பு வருவது ,விதி விலக்கு .வாழ்கையின் மூன்றில் இரண்டு பகுதியை ,இழந்து விட்டான் .அக்காவோ அம்மாவோ அவனை பற்றி சிந்திபதாயில்லை .i ,உறவினர் கேட்டாலும் ,கடன் பிரச்சனை என்று சமாளித்து விடுவான் .

காலம் கரைந்து கொண்டாயிருந்தது .கடற்கரை இருள் சூழ்ந்து கொண்டது . தாயக சேதிகளை கேட்கும் அவன் மீண்டும் தாயகத்தில் ,தனது அயல்வீடு நண்பனை ....,இரண்டு மாதங்களுக்கு முன் மாவீரனான கேசவனை நினைத்து கொண்டது .அவர்களின் குடும்பம் தற்போது வவனியாவில் .இருந்தனர். . தன்வீடு நோக்கி செல்லும் அவனின் எண்ணத்தில் ,கேசவனின் அக்காவையும் குடும்பத்தினரையும் ,இந்தியாவுக்கு வரும்படி தொலை பேசியில் அழைத்து சொல்லவேண்டும் ........,கேசவனின் அக்காவுக்கு வாழ்கை கொடுக்கவேண்டும் என்று சிந்தித்தவாறு வீட்டு தொலை பேசியை சுழற்றினான் . காலம் இனிதாக கை கொடுக்க இன்று அவன் ஒரு வழி காட்டியாக ......................

யாவும் கற்பனை ..............

l

Edited by nillamathy

நல்ல கதை அக்கா. :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை தான்.. ஆனால் இப்போ எல்லாம் பெண் பிள்ளைகளே வயதாகித்தானே திருமணம் செய்யினம். படிப்பு.. வேலை.. வீடு.. வாகனம் என்று...!

மேற்குலக நாடுகளில கூட அனேக ஆண்கள்.. 20பதுகளில் திருமணம் செய்வதை விரும்புவதில்லையே...! இப்போ மனிதனின் ஆயுட்காலம்.. நீண்டு விட்டதால்.. திருமணம் என்பதும் தள்ளிப் போகிறது வழமையாகிவிட்டது.

ஆனால் பெண்களுக்கு அதிகம் தள்ளிப் போவது நல்லதல்ல என்பது இயற்கையின் விதிப்பு. அது ஆயுட்காலம் கூடியதற்காக மாறாத விதி..! :)

  • கருத்துக்கள உறவுகள்

கேசவனின் அக்காவுக்கு வாழ்கை கொடுக்கவேண்டும் என்று சிந்தித்தவாறு வீட்டு தொலை பேசியை சுழற்றினான் . காலம் இனிதாக கை கொடுக்க இன்று அவன் ஒரு வழி காட்டியாக

முடிவு நன்றாக உள்ளது. நன்றி நிலாமதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகைவாசன் ........,நெடுக்ஸ் ......நுனாவிலான் ,யாவருக்கும் என் நன்றிகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

தாய் நாட்டிலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு வந்து தங்களது குடும்பங்களுக்காகவே தமது வாழ்க்கைகளைத் தியாகம் செய்யும் இளைஞர் யுவதிகளின் வாழ்கையை மிகவும் யதார்த்தமாகச் சொன்னதுக்கு....வாழ்த்துக்கள்.... நிலாமதி அக்கா

இளங்கவி

ஓ..நம்ம நெலா(மதி) அக்காவின்ட கதையோ..யோ..!!.. :D

கதையோட்டம் மிக நன்றாக இருந்தது வாழ்த்து(கள்) நெலா(மதி) அக்கா..கா.. :unsure: எல்லோருக்கும் பருவத்தே பயிர் செய்ய தான் விருப்பம்..ம் ஆனா மழை பெய்யாது விடில்..ல் கடினம் தானே..னே.. :)

இவ் கதை நாயகனும் அவ்வாறு தான்..ன் போல..ல....கதையின் முடிவில் அவனின் முடிவும் அழகு..கு..!.. :D

அப்ப நான் வரட்டா!!

மேற்குலக நாடுகளில கூட அனேக ஆண்கள்.. 20பதுகளில் திருமணம் செய்வதை விரும்புவதில்லையே...! இப்போ மனிதனின் ஆயுட்காலம்.. நீண்டு விட்டதால்.. திருமணம் என்பதும் தள்ளிப் போகிறது வழமையாகிவிட்டது.

ம்ம்..தாத்தா..தா ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவது இல்லை 20 வயதில் ஆனால்..ல் அவையளுக்கு கொழந்தையும் இருக்கும்..ம் என்ன..ன.... :D

ஆனா பாருங்கோ வெள்ளைகள் இருக்கீனம் அவையள் 20 வயசில திருமணம் செய்து போடுவீனம்..ம் பிறகு கழற்றி விடுறது வேற கதை..தை :) ஆனா எங்களிண்ட ஆட்கள் 45 வயசில கல்யாணத்தை கட்டி போட்டு பிறகு 50 தில பிள்ளையை பெற்று விட்டு..டு.. :(

பிறகு உவையள் முகம் கொடுக்கிற பெரச்சினைகள் இருக்கே..கே..(முடியல).. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா பாருங்கோ வெள்ளைகள் இருக்கீனம் அவையள் 20 வயசில திருமணம் செய்து போடுவீனம்..ம்

வெள்ளையள் 20 இல கட்டிறது வலு குறைவு. காதலிக்குங்கள்.. எல்லாம் செய்யுங்கள்.. ஆனால் கலியாணம் கட்டாதுகள். குறிப்பா "ஊத்தை" வெள்ளை என்றுற.. ஊதாரி வெள்ளைகள் தான் 14 வயசிலும் கலியாணம் கட்டிக்கிறது. அது எங்கட சமூகத்திலும் இருக்குத்தானே..! :)

வெள்ளையள் 20 இல கட்டிறது வலு குறைவு. காதலிக்குங்கள்.. எல்லாம் செய்யுங்கள்.. ஆனால் கலியாணம் கட்டாதுகள். குறிப்பா "ஊத்தை" வெள்ளை என்றுற.. ஊதாரி வெள்ளைகள் தான் 14 வயசிலும் கலியாணம் கட்டிக்கிறது. அது எங்கட சமூகத்திலும் இருக்குத்தானே..! :)

இல்ல இப்ப அநேகாமன வெள்ளைகள் 20 வயசிலையே கல்யாணமும் கட்டீனம் எண்டு நெனைக்கிறன்..ன் :icon_idea: ஏன் சொல்லுறன் எண்டா யூனிக்கு..கு கூட பிள்ளைகளோட வருவீனம்..ம்

கேட்டா கல்யாணம் அகீடுச்சு எண்டு தான் சொல்லீனம்..ம்.. :rolleyes: (உண்மையோ,பொய்யோ எனக்கு தெரியாது)..ஆனாலும் கெதியில கல்யாணம் கட்டுறது நல்லது தானே..னே.. :D நான் சொல்லுற கெதியில என்பது ஒரு 26 - 28 குள்ள 30 பிறகு எல்லாம் கல்யாணம் கட்டுறது..து

பிரயோசனமே இல்ல எண்ட பார்வையில..ல... :lol: மற்றது ஊத்த வெள்ளைகள் பிள்ளைகள் பெற்று கொண்டா காசு கெடைக்கும் எண்டு செய்யிறதுகள் தனி ரகம்..அது சரி நீங்க எத்தனை வயசில கல்யாணம் கட்டுறதா உத்தேசம் தாத்தா..!!.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.