Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீ என் தோழியா..? இல்லை காதலியா...?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ என் தோழியா..? இல்லை காதலியா...?

கவிதை........

உன்னுடன் நட்புக்காய்

உனைச் சுற்றும்

பக்தனானேன்.....

உன் நட்பை பெறுவதற்காய்

என் நாட்கள் பல

தொலைத்தேன்....!

என் நீண்ட

போராட்டத்தில்

மெது மெதுவாய்

என் நண்பியானாய்

அதன் பின்

என் நேரங்களில்

பல மணிகளைத் தின்றாய்

எனை நடு சாமத்தில்

எழும்ப வைத்தாய்

நடு வீதியிலும்

நடக்க வைத்தாய்.....

எனை தெரு நாய்கள்

பார்த்து தினம் தினம்

குரைக்க வைத்தாய்......

நீ என்னை

நெகிழ வைத்த

நண்பியாய்...!

என் இதயத்தின்

இடங்களெல்லாம்

முழுதாக

வல்வளைத்தாய்...!

நாம் சந்திக்கும்

பொழுதுகளில்...

அந்த சந்தோச

வேளைகளில்....

உன் சிரிப்புக்காய்

சொல்லும் சில வார்த்தை

கேட்டுவிட்டு

சிறிதாக என் காதில்

வலிக்காமல் கிள்ளிடுவாய்.....

உன் விரல் படும்

போதெல்லாம்

என் மனம்

வீணையாய் ஒலியெழுப்பும்.....!

என் மன அடித்தழத்தில்

கவிதை பல

மலை போல

குவிந்து விடும்....!

எடுப்பேன்

பல காகிதங்கள்......1

கிறுக்குவேன்

என் கவி வரிகள்....!

அதை உன்னிடம்

கொடுக்க எண்ணிடவே

என் மனமெல்லாம்

குளிரினால் உறைந்து விடும்....!

இருந்தும் ஓர் நாள்

என் காதலைச்

சொல்லி விட......

உன் முகத்தில் மாற்றமின்றி

அதே விரல்களால்

என் அதே காதுகலில்

அதே கிள்ளல்..!

ஆனால் இன்று மட்டும்

உன் பதில் தெரியாமல்

என் மனதின்

மூலையிலே

சிறிது சிறிதாக

வலிகளின் துள்ளல்கள்.....!

உன் செயல்கள் எல்லாமே

என் காதலிபோல்

இருந்து கொள்ள

எங்களின் உறவில்

பெயரிலே மட்டும்

ஏன் காதலை வெறுக்கிறாய்...?

மறுபடியும் மறுபடியும்

ஏன் நட்பென்று சொல்கிறாய்....?

நீ என் தோழியா....?

இல்லை காதலியா....?

எனும் தொல்லை தரும்

என் கேள்விக்கு

காதலி என்று பதில் கூறு

என் கவிதைப் பெட்டகங்கள்

உன் வீடுவரக் காத்திருக்கு....!

அதன் பின்னால் உனக்கு

பல இன்ப அதிர்ச்சிகளும்

காத்திருக்கு......?

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் எதுக்கு அவவிடம் கேட்பான் இளங்கவி!

நீங்கள் என்ன முடிவில இருக்கிறீங்கள் அவவைப்பற்றி. தோழியா , காதலியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

suvy

நான் நல்ல முடிவில் தான் இருக்கிறேன்.... :D ஆனால் பதில் தெரியாமல் மிகவும் பக்கத்தில் போக பயமாக இருக்கிறதல்லவா...!. : :( கவிதையை ரசித்தமைக்கு நன்றி.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் வலிகள் இருக்குமென்பார்கள் இதுதான் காதல் வலியோ கவி ? :(

சரி முடிவை கேட்டவிட்டு அடுத்த கவிதையை எழுதுங்கோ. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

shanthy

கேட்டு முடிவு தெரியாத படியால் தானே இந்தக் கவிதை பிறந்தது. ரசித்தமைக்கு நன்றி shanthy.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

தோழியாய இல்லை காதலியாயா??? சூப்பர்ர் இளங்கவி, இதைபார்த்தால் அனுபவம் மாதிரி தெரிகின்றதே?

நமக்கும் உதே நிலை சில மாதங்களாய் இருந்தது, இறுதியில் இரண்டும் இல்லாமல் போய்விட்டது. இறுதியாக இரண்டில் ஒன்றுக்காக போராடினேன் தோற்றுவிட்டேன்.

காதலியாக வரவேண்டும் என்று முயற்சி செய்யுங்க, அப்பதான் வாழ்க்கையின் எல்லை வரை இரண்டும் நிலைத்திருக்கும். :D

Edited by Danklas

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Danklas

செயலெல்லாம் காதலி போன்று, உறவின் பெயர்மட்டும் நண்பியென்று, காரணம் விளங்கவில்லை காலம் தான் பதில் கூறும், ரசித்தமைக்கு நன்றி

இளங்கவி

நட்பாய் ஆரம்பித்து..து காதலாக பயணித்து..து ஈற்றில்..ல் நட்பா காதலா எண்டு தெரியாமல் தவிர்க்கும் வரிகளை ரசித்தேன்..ன்.. :)

தொலைத்த இரவுகளின்

நாயகியும் அவளே

தொலைந்த என்னை

மீட்ட நாயகியும்

அவளே.. :)

என்பது போல் இருக்கிறது கவிதை..தை..கவி பயணம் விடை தெரியாமலே முடிந்து விட்டது..து நிஜத்தில் எப்படியோ இளம்கவி அண்ணா..ணா..??..வாழ்த்துக்கள் கவிதைக்கும்..ம் கவிதை உண்மையானால் அதற்கும் வாழ்த்துக்கள்..ள்.. :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கும் உதே நிலை சில மாதங்களாய் இருந்தது, இறுதியில் இரண்டும் இல்லாமல் போய்விட்டது. இறுதியாக இரண்டில் ஒன்றுக்காக போராடினேன் தோற்றுவிட்டேன்.

காதலியாக வரவேண்டும் என்று முயற்சி செய்யுங்க, அப்பதான் வாழ்க்கையின் எல்லை வரை இரண்டும் நிலைத்திருக்கும். :)

முயற்சி திருவினையாகும்.

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி வாழ்த்துக்கள் கவிதைக்கும் நல்ல முடிவு ஓன்று வருவதற்கும் :) .

கவலைபடாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிற்பா

காதலைத்தான் சேர்த்து வைப்பா கவலைபடாதே சகோதரா

  • கருத்துக்கள உறவுகள்

முதலில நண்பியா பார்ப்பியள்.. பிறகு காதலியா வரக் கேட்பியள்.. பிறகு தாலியை கட்டிட்டு ஓடுவமா.. இல்ல பெத்துக்கிட்டு கட்டுவமா எண்டுவியள்.. இறுதியில.. எப்படியோ கட்டுப்பட்டு.. பெட்டிப் பாம்பாய் அடங்கப் போறியள். அதற்குள்ள ஏன் இவ்வளவு துள்ளல்..! சோகம்.. வலி.. வடு.. ரணம்..??! திருந்தாது இந்த ஆணும் பெண்ணும் உள்ள உலகம்..! :(:)

எல்லாத்தையும் விட்டிட்டு.. ஒருவரை ஒருவர் சக மனிசனாய்.. ஜீவராசியாய் பாருங்கள். இரக்கங்காட்டுங்கள். அன்பு செலுத்துங்கள். வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள். அதுபோதும். வாழ்க்கையில் பாதி தொந்தரவு நீங்கிடும்..! உங்களுக்கு இது சாத்தான் வேதமாகத் தெரியலாம்.. ஆனால் என்றோ ஒரு நாள் இதன் உண்மையை காலம் கடந்தேனும்.. வாழ்வில் உணர்வீர்கள். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்தையும் விட்டிட்டு.. ஒருவரை ஒருவர் சக மனிசனாய்.. ஜீவராசியாய் பாருங்கள். இரக்கங்காட்டுங்கள். அன்பு செலுத்துங்கள். வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள். அதுபோதும். வாழ்க்கையில் பாதி தொந்தரவு நீங்கிடும்..! உங்களுக்கு இது சாத்தான் வேதமாகத் தெரியலாம்.. ஆனால் என்றோ ஒரு நாள் இதன் உண்மையை காலம் கடந்தேனும்.. வாழ்வில் உணர்வீர்கள். :)

அப்படிஎன்றால் அடுத்த சந்ததி இல்லையா ? :(:)

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிஎன்றால் அடுத்த சந்ததி இல்லையா ? :):)

சுப்பண்ண.. நாங்கள் 22ம் நூற்றாண்டை நோக்கிப் போயிட்டிருக்கிறப்போ.. ஒரு சந்ததிக்காக... நட்பைக் கொச்சைப்படுத்தி.. காதலை அதுக்குள்ள திணிச்சு.. கலியாணம் என்று சடங்கால கட்டி வைச்சு.. உடல்களால உதைபட்டு.. உள்ளத்தால வதைபட்டு.. சந்ததி காணனும் என்ற நிலை இப்ப இல்லை.

இப்ப எல்லாம்.. செயற்கையாகவே உருவாக்கிக் கொள்ளக் கூடியதாக அறிவியல் எம்மை வளர்த்திட்டு வருகுது. காசும் கருவியும் இருந்தா சந்ததி வரும் சுப்பண்ண. காதலும் தேவையில்ல கலியாணமும் தேவையில்ல.. சுதந்திர வாழ்வையும் இழக்கத்தேவையில்ல..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ண.. நாங்கள் 22ம் நூற்றாண்டை நோக்கிப் போயிட்டிருக்கிறப்போ.. ஒரு சந்ததிக்காக... நட்பைக் கொச்சைப்படுத்தி.. காதலை அதுக்குள்ள திணிச்சு.. கலியாணம் என்று சடங்கால கட்டி வைச்சு.. உடல்களால உதைபட்டு.. உள்ளத்தால வதைபட்டு.. சந்ததி காணனும் என்ற நிலை இப்ப இல்லை.

இப்ப எல்லாம்.. செயற்கையாகவே உருவாக்கிக் கொள்ளக் கூடியதாக அறிவியல் எம்மை வளர்த்திட்டு வருகுது. காசும் கருவியும் இருந்தா சந்ததி வரும் சுப்பண்ண. காதலும் தேவையில்ல கலியாணமும் தேவையில்ல.. சுதந்திர வாழ்வையும் இழக்கத்தேவையில்ல..! :)

அப்ப உடம்பில தேவையில்லாததை எல்லாம் வெட்டி எறியலாமோ உதுகள் இருந்து தானே கரைச்சல் :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உடம்பில தேவையில்லாததை எல்லாம் வெட்டி எறியலாமோ உதுகள் இருந்து தானே கரைச்சல் :)

சுப்பண்ண.. காது இருக்குது அது கேட்கிறதுக்கு உதவுது. மூக்கு இருக்குது அது மணக்க.. காற்றை இழுக்க வெளிய விட உதவுது. இப்படி.. உடலில உள்ளதுகள் எல்லாத்துக்கும் இயற்கையா இரண்டு மூன்று தொழில் வைச்சிருக்குது. ஒரு தொழிலைக் குறைக்கிறதால மற்றத் தொழில்களை அவை செய்யா என்று ஏன் நினைக்கனும். இயற்கையே ஒன்றுக்கு பல தொழிலை செய்ய கற்றுக் கொடுத்திருக்கேக்க.. ஒரு தொழிலைச் செய்ய முடியல்ல என்றதுக்காக அவற்றை ஏன் வெட்டி எறியனும் என்று கதைக்கனும்..! அதுபோலத்தான் உலகத்தில கலியாணம் கட்டி பிள்ளை குட்டி காணாமல் யாரும் உயிர் வாழ முடியாது என்று இயற்கை விதிக்கல்லையே சுப்பண்ண.

சாப்பிடாமல் உயிர்வாழ முடியாது. காற்றைச் சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாது. ஆனால் காதல்.. கலியாணம் பண்ணாம.. உயிர் வாழலாம். ஏன் சுப்பண்ண அப்படி இயற்கை வைச்சிருக்கு. காதல் கலியாணம் செய்யாட்டிலும்.. உயிர் வாழ முடியாது என்று ஏன் வைக்கல்ல..???! because sex is cheap :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ண.. காது இருக்குது அது கேட்கிறதுக்கு உதவுது. மூக்கு இருக்குது அது மணக்க.. காற்றை இழுக்க வெளிய விட உதவுது. இப்படி.. உடலில உள்ளதுகள் எல்லாத்துக்கும் இயற்கையா இரண்டு மூன்று தொழில் வைச்சிருக்குது. ஒரு தொழிலைக் குறைக்கிறதால மற்றத் தொழில்களை அவை செய்யா என்று ஏன் நினைக்கனும். இயற்கையே ஒன்றுக்கு பல தொழிலை செய்ய கற்றுக் கொடுத்திருக்கேக்க.. ஒரு தொழிலைச் செய்ய முடியல்ல என்றதுக்காக அவற்றை ஏன் வெட்டி எறியனும் என்று கதைக்கனும்..! அதுபோலத்தான் உலகத்தில கலியாணம் கட்டி பிள்ளை குட்டி காணாமல் யாரும் உயிர் வாழ முடியாது என்று இயற்கை விதிக்கல்லையே சுப்பண்ண.

சாப்பிடாமல் உயிர்வாழ முடியாது. காற்றைச் சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாது. ஆனால் காதல்.. கலியாணம் பண்ணாம.. உயிர் வாழலாம். ஏன் சுப்பண்ண அப்படி இயற்கை வைச்சிருக்கு. காதல் கலியாணம் செய்யாட்டிலும்.. உயிர் வாழ முடியாது என்று ஏன் வைக்கல்ல..???! because sex is cheap :(

நான் தேவையில்லாதது என்று சொன்னது உங்களுக்கு விளங்குது தானே இதுக்கு மேல சொன்னால் என்னை வெட்டி எறிந்திடுவாங்கள் அந்த தேவையில்லாததுகளை நீக்கி விட்டால் உடம்பு நல்ல ப்ரீயாக இருக்கும் எந்த நினைப்பும் வராது உந்த கலியாணம் காதல் என்று யாரும் ஜோசிக்கமாட்டினம் தானே :) .நீங்கள் சொன்னமாதிரி சிலதுகளை விட்டால் அப்படியும் சிலதுகள் மீதமாக இருக்குதே அதை நீக்கலாமே உடம்பில பாரமாவது குறைந்தமாதிரி இருக்கும். இயற்கைக்கு தெரியும் கூடுதலான சுகதேகிகள் காதல் கலியாணம் இல்லாமல் இருக்காதுகள் என்று அதுதான் வைக்கல நெடுக்ஸ். அத்தோட இயற்க்கை ஏன் அவற்றை படைத்திருக்கு காதலிச்சோ அல்லது கலியாணம் செய்தோ அல்லது வேறு எப்படியோ உங்கட இனத்தைவிருத்தி செய்யுங்கோ என்று தானே இயற்க்கைக்கு முதல் தெரியாதே நீங்கள் இப்படியெல்லாம் கண்டுபிடிப்பிங்கள் இப்படியெல்லாம் இனத்திவிருத்தி செய்விங்கள் என்று :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முபேபி

என் கவிதையை ரசித்ததையிட்டு மகிழ்ந்தேன் உங்கள் பதிலில் வந்த வரிகளையும் ரசித்தேன். மிக்க நன்றி

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Shanthy

Danklas க்கு ஆறுதல் சொன்னதுக்கு உங்களுக்கு மிக்க நன்றி, அவருக்கு நானும் ஒன்று கூறுகிறேன்.., விடா முயற்சியிருந்தால் எந்த விடைக்கும் பதில் கிடைக்கும்.

இளங்கவி

சுப்பண்ணாவுக்கு

கவிதைக்கு வாழ்த்துச் சொன்னதுக்கும் நல்ல முடிவுக்காய் ஆறுதல் சொன்னதுக்கும் மிக்க நன்றிகள்

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

neduks

நீங்கள் ஒரு நட்புடன் ஏன் இப்படி கஸ்ரப் படுவானேன் என்று சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் கஸ்ரத்திலும் சுகம் தருவது தானே காதல்...!, மற்றும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டால் தானே வாழ்க்கையும் சுவாரசியமாக இருக்கும்.

அறிவுரைக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது முடிவு வந்ததா :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sagevan

''அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்''........ :lol: அடித்துக் கொண்டிருப்போம் எப்ப நகருது என்று பார்போம்.... :D இது தான் உங்கள் கேள்விக்குப் பதில்....

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.