Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மாணவிகள் அவர்கள் அணியும் பர்தாவை களையுமாறு ஹெல உறுமய மிரட்டல்

Featured Replies

இலங்கையிலுள்ள சில சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் அவர்கள் அணியும் பர்தா மற்றும் கால் பகுதியை முற்றாக மறைத்து அணியும் உடைகளைக் களையுமாறு

சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகங்களினால் பணிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்குக் காண்பித்தார்.

கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் காண்பித்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹெல உறுமயவின் இனவாதத்திற்காக முஸ்லிம் மாணவிகளுக்குத் தொல்லை கொடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். சபாநாயகர் அனுமதி வழங்கினால் முஸ்லிம் மாணவிகள் தொல்லைக்குட்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகளைத் தாம் காண்பிக்கத் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

கால் பகுதியை முற்றாக மறைத்து அணியும் உடைகளைக் களையுமாறு

கெல உறுமய , கால் பகுதியில் ஏன் கண் வைத்தது ?

  • கருத்துக்கள உறவுகள்

அட அவர்களுக்கும் கண் வைத்து விட்டானுகளா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியாக காவியும் போகப்போகுது, அவர்களுக்கு பர்தா சாதரணமாக அணியும் உடுப்புக்கு மேலே அணியும் ஓர் மேலாடையே ஆனால் உங்களுக்கு காவி மட்டும்தான் எல்லாமே அதுவும் போனால் ............................................டங்....... :wub:

உடுப்பை மாத்தினா மதம் மாறுமா?.... எல்லாம் செருக்குத்தனம்தான், முறையா குடுத்தாத்தான் உதெடுபடும்.

இது தொடர்பான ஒளிப்பதிவு

மொட்டைகளையும் காவியை கழட்ட சொன்னால் .... ரோகராதான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டைகளையும் காவியை கழட்ட சொன்னால் .... ரோகராதான் :wub:

அதற்காகத்தான் இப்படி ஆரம்பிக்கின்றார்களோ தெரியவில்லை

அவர்களும் எத்தனை நாளைக்குத்தான் ஒரே கலரில் திரிவது

ஆசை யாரைவிட்டது????

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக காவியும் போகப்போகுது, அவர்களுக்கு பர்தா சாதரணமாக அணியும் உடுப்புக்கு மேலே அணியும் ஓர் மேலாடையே ஆனால் உங்களுக்கு காவி மட்டும்தான் எல்லாமே அதுவும் போனால் ............................................டங்....... :wub:

என்மீது உங்களுக்கு என்ன கோபம் எனக்கும் கண் வைத்து விட்டீர்களா சுப்பண்ணை :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்மீது உங்களுக்கு என்ன கோபம் எனக்கும் கண் வைத்து விட்டீர்களா சுப்பண்ணை :wub:

தாடிக்கார நண்பா எனக்கு உன்மேல் கோவம் இல்லைடா

அது மொட்டை போடும் காவிடா

அது நமக்கு வேண்டாம்டா

என்ன இது ஏதோ முழுதாக களைந்தமாதிரி குதிக்கிறார்கள். தாயகத்தில் எத்தனையோ சகோதரிகளின் ஆடைகள் முழுதாக அகற்றப்பட்டுள்ளது அதைப்பற்றி அக்கறைப்பட யாரும் இல்லை ஒரு பர்தாவிற்கு இவ்வளவு கொதிப்பு . .

சில காலங்களுக்கு முன் (தற்போது எப்படியோ தெரியவில்லை) யாழில் ஒரு கிருஸ்தவ பாடசாலையில் பொட்டு வைத்துக் கொண்டோ அல்லது விபூதி இட்டுக் கொண்டோ வர அனுமதிக்கப்பட வில்லை பாடசாலை நிருவாகம். இது யார் கண்ணிலும் படவில்லையா???

ஜானா

சில காலங்களுக்கு முன் (தற்போது எப்படியோ தெரியவில்லை) யாழில் ஒரு கிருஸ்தவ பாடசாலையில் பொட்டு வைத்துக் கொண்டோ அல்லது விபூதி இட்டுக் கொண்டோ வர அனுமதிக்கப்பட வில்லை பாடசாலை நிருவாகம். இது யார் கண்ணிலும் படவில்லையா???

ஜானா

நீங்கள் ஏன் இப்ப ஆட்டுக்குள மாட்டை கொண்டுவாறியல்?.....

ஆதாரமிருந்தா அதை முன்வையுங்கோ.......... ஒருபாடசாலையெண்டா அது நிவாகம் சம்பந்தமானது, எல்லாமெண்டா தான் பிரச்சனை.

ஏன் சைவப்பாடசாலைகளில வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைகளில மூனா கீனா கானா எண்டில்லாமல் எத்தினை தமிழ்ப்பாடசாலைகளில பலவந்தம்மா கொண்டுபோய் சிவபுராணத்தை பாட வைச்சவை? இதை என்னவெண்டு சொல்லுறது...... எந்தக்குப்பையை கிண்டினா நாத்தந்தான் வருது தேவையா இது?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

தேரர்களின் இக்கோரிக்கையில் பேரினவாதம் இருக்கின்றது. தேரர்களின் இக்குரலை பேரினவாத்தின் அடக்குமுறையின் தொனியாகவே பார்க்க வேண்டும்.

ஆனாலும் பர்தா உட்பட இஸ்லாமியப் பெண்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளையும் நான் வன்மையாக எதிர்கிறேன்.

சிறீலங்காவில்... தமிழீழத்தில் இஸ்லாமிய சகோதரிகள்.. வெறும் தலையை மட்டும் தான் மறைக்கின்றனர். ஆனால் மத்திய கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளில் வாழும் பல இஸ்லாமியப் பெண்கள்.. கண் மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். விலங்குகளை விட மோசமாக அடைத்து வைக்கப்படுகின்றனர்.

பிற ஆண்களுடன் பேசத்.. தொடர்பாடல் கொள்ளக் கூட அனுமதிக்கப்படாத நிலை இருக்கிறது. இவ்வாறான காட்டுமிராண்டித் தனங்களை இஸ்லாமிய சமூகம் கைவிட்டு 21/22ம் நூற்றாண்டுக்குரிய வகையில் அவர்களின் மதம் சார்ந்து மாற்றங்களையும்.. மனித உரிமைகளை சமனாக மதிக்கும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்..!

பெண்கள் தமக்குரிய வகையில் தாம் விரும்பும் வடிவில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அதற்காக இருக்கிற உடுப்பையெல்லாம் கழற்றிட்டு நிற்கனும் என்பதல்ல அர்த்தம். அது கூட ஒருவகையில் மற்றவர்களின் செளகரிக வாழ்வை குலைப்பது போன்றதே. கண்ணியமான.. ஆனால் அவர்களின் சொந்த விருப்புக்குரிய வகையில் அவர்கள் உடையணியவும்.. சுதந்திரமாக அடிப்படை மனித உரிமைகளை அனுபவித்துக் கொண்டு மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவான சட்டத்துக்குள் நின்று.. மற்றவர்களைப் போலவே.. உலாவவும் உரையாடவும்.. தொழில் செய்யவும்.. வேண்டிய விரும்பிய இடங்களுக்குப் போகவும்.. வழிபாடு செய்யவும்.. வேண்டியவரை திருமணம் செய்யவும்.. மகிழ்ந்திருக்கவும்.. அனுமதிக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தில் மத அடிப்படையில்.. ஆண்கள்.. பெண்கள் மீது செய்யும் திணிப்புக்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏன் இப்ப ஆட்டுக்குள மாட்டை கொண்டுவாறியல்?.....

ஆதாரமிருந்தா அதை முன்வையுங்கோ.......... ஒருபாடசாலையெண்டா அது நிவாகம் சம்பந்தமானது, எல்லாமெண்டா தான் பிரச்சனை.

ஏன் சைவப்பாடசாலைகளில வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைகளில மூனா கீனா கானா எண்டில்லாமல் எத்தினை தமிழ்ப்பாடசாலைகளில பலவந்தம்மா கொண்டுபோய் சிவபுராணத்தை பாட வைச்சவை? இதை என்னவெண்டு சொல்லுறது...... எந்தக்குப்பையை கிண்டினா நாத்தந்தான் வருது தேவையா இது?

இக்குற்றச்சாட்டை நான் யாழ் முன்னணி பாடசாலைகள் சில சார்பில் மறுதலிக்கிறேன்.

யாழ்ப்பாண முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் மதச் சுதந்திரம் தேவையான அளவுக்கு அளிக்கப்பட்டே இருந்தது. இருந்தும் வருகிறது.

ஆனால் யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி தொடர்ச்சியாக கிறிஸ்தவரல்லாத மாணவர்கள் மீது இறுக்கமான நிலைப்பாடுகளை எடுத்து வருவதும்.. இருந்தும் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் குடா இருந்த போது.. பல தளர்வுகள் அங்கு இருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அது சில பாடசாலை நிர்வாகிகளின் சொந்த விருப்புக்கமைய நடந்தனவே அன்றி.. ஒட்டுமொத்தமாக அப்பாடசாலையை அதன் நிர்வாகத்தை.. மாணவர்களைப் பாரபட்சமாக நடத்துவதாக நான் குற்றம் சுமத்தமாட்டேன்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொறுத்தவரையில் இந்தவிடயத்தை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதுதான் சிறப்பு இந்தவிடயத்தில் நாம் பேரினவாதிகள் சொல்வதை எதிர்க்கவேண்டும் ஆனால் முஸ்லீம் சகோதரிகளே எமக்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடும் போது எல்லோரும் குரல்கொடுப்போம் இப்பொழுது நடுநிலைமை நியாயம் எல்லாம் கதைக்கவேண்டாமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.