Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமையில் வறுமை கொடுமை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_45265130_e0ab724e-c5fb-449b-ac86-b567108a9300.jpg

image:bbc.com

அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்று கொண்டதன் பின்னான செயற்பாட்டைக் காட்டவோ இல்லை என்றும் அதுமட்டுமன்றி prefrontal cortex பகுதியால் வழங்கப்படும் மேலதிக உத்வேகத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்..

அதேவேளை முன்னொரு ஆய்வில் வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டினும் குறைவாகப் பேசுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக வறுமைச் சூழலில் வாழும் பெற்றோரைக் குறை கூற முடியாது என்று கருத்துரைக்கும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறான சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்றும் அதற்கேற்ற வகையில் குழந்தை வளர்ப்புத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

குழந்தைகள் வறுமைச் சூழலில் வாழ்வதால் அவர்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்/ தூண்டல்களின் அளவு குறைந்திருப்பதும், அழுத்தங்கள் மத்தியில் வாழ்வதால் மூளை முற்றான அபிவிருத்தியை காட்டத் தவறுவதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றைத் தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்குரிய சரியான வளர்ப்புச் சூழலை தீர்மானிக்க வேண்டியதுடன் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குச் சரியான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதைத்தான் தமிழ் புலவர் ஒளவையார் இளமையில் வறுமை கொடுமை என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரோ..!

source: http://www.kuruvikal.blogspot.com/

நெடுக்கு இந்தப் பிரச்சனைக்கு ஆதியைப் பிடித்து ஆய்வு செய்திருக்கலாம்.

வறுமை வாயை தைப்பது சட்டென்று புரிந்து கொள்ளக்கூடியதாயிற்றே...... ஆதியைப் பாருங்க நீண்ட காலமா மௌனமாகிக் கொண்டிருகிறேன் காரணம் என்ன?........ அதே...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இந்தப் பிரச்சனைக்கு ஆதியைப் பிடித்து ஆய்வு செய்திருக்கலாம்.

வறுமை வாயை தைப்பது சட்டென்று புரிந்து கொள்ளக்கூடியதாயிற்றே...... ஆதியைப் பாருங்க நீண்ட காலமா மௌனமாகிக் கொண்டிருகிறேன் காரணம் என்ன?........ அதே...

மெளனந்தான் ஏனோ?

கறுப்பியக்கோய் ஆதி கண்ணில் ஆனந்தக்கண்ணீர் சொட்டுது.. சே கொட்டுது.

உங்களுக்குத்தான் ஆதியில எவ்வளவு அக்கறை.....!

உதுக்கை அரட்டை அடிச்சா நெடுக்கர் கல்லோட வருவார் பரவாயில்லையா?

நமக்கு இதெல்லாம் பழக்கம் உங்களுக்குத்தான்......

ஆமா என்ன கேட்டீங்க கறுப்பியக்கோவ்?

மெளனம் ஏன் என்றா?... என்னத்தை சொல்ல? ( இதுக்காக என்னத்தையைக் கேட்கக்கூடாது) ஆம்பிளையளுக்கு உத்தியோகம் புருச லட்சணமாம். அதில்லாட்ட விசிறி இழந்த சவமாம். சும்மாவா சொன்னாங்க அநுபவிச்சுச் சொல்லியிருக்காங்கோ. இந்த மடப்பயலுக்கு (அது நான்தாங்க) இது விளங்காம வேலையில லேஓப் எடுக்கிறவை எடுக்கலாம் எண்டு யூனியன் அறிவிக்க முதல் ஆளா எடுத்துக்கொண்டு வெளியேறின ஆள் நான்தான். அன் எம்பிளோய்மெண்ட் காசு எட்டு மாதத்திற்கு நான் உழைச்சதில மூன்றில் இரண்டு பங்கு தந்தாங்கள். இப்ப ஐயா போண்டி.... என்ர கையில வருமானம் இல்லையெண்டதால வீட்டில மரியாதை கெட்டுப் போச்சு. உதால மனுசியட்ட கேட்காத பேச்சு இல்லை.... இதில பகிடி என்னெண்டா யாழ்க்களத்தல திரியிறவயளுக்கும் சேர்த்து விழுது. ஆராருக்கு என்ன பேச்சு விழுது என்று கேட்டுபோட வேண்டாம். இப்ப எனக்கிருக்கிற ஒரு பிரச்சினை என்னெண்டா அரச்சதத்திற்கு வருமானம் இல்லாத உமக்கு யாழ்க்களத்தல அரட்டை கேட்குதோ என்று ஆத்துக்காரி கேட்கிறா என்றா நினைக்கிறியள்... அதுதான் இல்லை. வருமானம் இல்லாத நீர் யாழ்க்களத்தில வாய் அடிக்க வெளிக்கிட்டா 'திருமதி ஆதிவாசி' எண்ட பேரில வந்து என்ர மானத்தை வாங்கிடுவவாம். இதுக்கு மேல ஆதி அட்டகாசம் பண்ண முடியுமோ? அதான் மெளனமாகி...... மனதிற்குள் மருகி....(பெருமூச்சு)

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஆதியண்ணையின் கதி :wub: இதுக்குத்தான் கல்யாணம் கட்டக்கூடாது என்று சொன்னா கேட்டால்தானே வாங்கோ ஆதிவாசி நம்மட ஆஸ்ரமம் இருக்கு ஏதாவது தயாரிப்போம் :blink::unsure: [சாப்பிடத்தான்]

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆதி நீங்கள்! இதுக்குப்போய் விசனப்பட்டுக்கொண்டு! இதென்ன காட்டில நாட்டில இல்லாத விடயமா? நானும் உம்மைப்போல்தான் ஆனால் ஒருநாளும் வெளில சொல்லமாட்டன் தெரியுமா?

முனிவர்! ப்ளீஸ் எனக்கும் ஒரு இலை!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆதி நீங்கள்! இதுக்குப்போய் விசனப்பட்டுக்கொண்டு! இதென்ன காட்டில நாட்டில இல்லாத விடயமா? நானும் உம்மைப்போல்தான் ஆனால் ஒருநாளும் வெளில சொல்லமாட்டன் தெரியுமா?

முனிவர்! ப்ளீஸ் எனக்கும் ஒரு இலை!!!

இரண்டு பேரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது போல வாங்கோ உங்களுக்கு இல்லாததா......... :lol::lol:

[நான் இலையை சொன்னேன்] <_<

Edited by muneevar

எங்க ரெண்டு பேருக்கு மட்டுமே இந்தப் பிழைப்பு என்று நெச்சீங்க முனி.... வரிசையா கொஞ்சப்பேர் இருக்கினம் ஆனா நான் சொல்லமாட்டன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்டை பந்தியிலை நானும் குந்தியிருக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கஸ்டகாலம் நானும் , அனுபவிச்சனான் சரியான வேதனையான காலம் அது . :)

  • கருத்துக்கள உறவுகள்

அட ஒரு கூட்டமே இருக்கு போல :D:D [பாவம் கு.சாமி அண்ணை , தமிழ் சிறி] :)

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக அதிகமா பீல் பண்றதில பிரயோசனம் இல்லை ஆதி. இன்ன வேலை தான் செய்வேன் எண்டிராமலம், தற்போதைக்கு ஏதாவது ஒரு வேலையை தேடி செய்துகொண்டு உங்களின் துறையில் வேலையை தேடுங்கோ. அப்பிடி செய்திங்கள் எண்டால் அதிக மனச்சலிப்பு வராது. தற்போதைக்கென போகும் வேலையை முடிந்தளவுக்கு மாலை, கிழமைமுடிவுகளில் செய்யிற மாதிரி பார்த்தால், உங்கள் துறைக்கான வேலையை தேடுவது சுலபம், நேர்முக பரீட்சைகளுக்கு போவதற்கும் இலகுவாக இருக்கும். எல்லாத்துக்கும் மேல வீட்டில நச்சரிப்புக்கு வசதி இல்லாமல் இருக்கும்(உங்கள் மனைவியும் வேலை செய்யிறா எண்டால்).

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக அதிகமா பீல் பண்றதில பிரயோசனம் இல்லை ஆதி. இன்ன வேலை தான் செய்வேன் எண்டிராமலம், தற்போதைக்கு ஏதாவது ஒரு வேலையை தேடி செய்துகொண்டு உங்களின் துறையில் வேலையை தேடுங்கோ. அப்பிடி செய்திங்கள் எண்டால் அதிக மனச்சலிப்பு வராது. தற்போதைக்கென போகும் வேலையை முடிந்தளவுக்கு மாலை, கிழமைமுடிவுகளில் செய்யிற மாதிரி பார்த்தால், உங்கள் துறைக்கான வேலையை தேடுவது சுலபம், நேர்முக பரீட்சைகளுக்கு போவதற்கும் இலகுவாக இருக்கும். எல்லாத்துக்கும் மேல வீட்டில நச்சரிப்புக்கு வசதி இல்லாமல் இருக்கும்(உங்கள் மனைவியும் வேலை செய்யிறா எண்டால்).

உங்களுடைய தகவலுக்கு நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.