Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் நாட்டை விட்டுப் போகமாட்டார் - கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.

கருணா குழுவினரின் உதவியுடன்தான் கிழக்கு மாகாணத்தை இலங்கைப் படைகள் மீட்டன.

இந்த நிலையில் கிளிநொச்சி வீழ்ந்து விட்டதைத் தொடர்ந்து அடுத்து முல்லைத்தீவுக்கு இலங்கை படைகள் குறி வைத்துள்ளதால் பிரபாகரன் இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லக் கூடும் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

ஆனால் இதை கருணா நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்வார் என்று நான் நினைக்கவி்ல்லை. அப்படி கூறுவது தவறு.

முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவம் முன்னேறி வருகிறது. ஆனால் முல்லைத்தீவு வனப்பகுதியில் ராணுவம் புகுந்து சண்டை போடுவது இயலாத காரியம்.

தற்போது தெற்கு இலங்கைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 நெடுஞ்சாலையை தடைகளற்ற பகுதியாக மாற்றுவதே ராணுவத்தின் முக்கிய குறிக்கோள்.

பிரபாகரன் எந்தச் சூழ்நிலையிலும் இலங்கையை விட்டுப் போக மாட்டார்.

கிளிநொச்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து, அங்கு புலிகள் படையின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த ஏரியா கமாண்டர் சொர்ணத்தை தகுதி இறக்கம் செய்துள்ளார் பிரபாகரன்.

ராணுவத்தின் நெருக்குதலால் போர் முனையில் உள்ள புலிகள் இயக்கத் தலைவர்களால், பிரபாகரனின் உத்தரவுகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. அந்த சமயத்தில் என்ன முடிவெடுக்க முடியுமோ அதைத்தான் அவர்களால் செய்ய முடிகிறது என்றார் கருணா.

முல்லைத் தீவை மீட்போம்– பொன்சேகா:

இதற்கிடையே விடுதலைப் புலிகள் வசம் உள்ள முல்லைத்தீவை மீட்போம். இதற்காக 100 படை அணிகள், 50 ஆயிரம் வீரர்கள் முன்னேறி வருகின்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், புலிகள் வசமுள்ள முல்லைத் தீவை மீட்க, 100 படை அணிகள், 50 ஆயிரம் வீரர்கள் மற்றும் 6 ரெஜிமெண்டுகளுடன் இலங்கை ராணுவம் முன்னேறி வருகிறது.

வன்னிப் போர்க்களத்தில் ஈழப் போர் - 4 இல் மிகப் பெரிய அளவில் முல்லைத் தீவு போர் அமையும்.

பிரபாகரனுக்கு இரண்டே வழிகள்தான் இப்போது உள்ளன. ஒன்று நாட்டைவிட்டு தப்பியோட வேண்டும். அல்லது தற்கொலை செய்ய வேண்டும். பிரபாகரனை உயிரோடு பிடிப்பது என்பது மிக அதிக சாத்தியமற்றது.

இலங்கை படையானது ஆனையிறவை நோக்கி நகர்கிறது. பரந்தன் மற்றும் முல்லைத்தீவு இடையேயான ஏ-35 வீதியில் முரசுமோட்டையை இலக்கு வைத்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகளை மீண்டும் ஒன்று சேர விடமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

தட்ஸ்ரமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

கருணா எத்தனை தடவைகள் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். :( :(

:(:( பதவியில் இருந்தால்தானே இறக்குவதற்கு
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

நாயிலும் கேவலம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் கிளிநொச்சி வீழ்ந்து விட்டதைத் தொடர்ந்து அடுத்து முல்லைத்தீவுக்கு இலங்கை படைகள் குறி வைத்துள்ளதால் பிரபாகரன் இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லக் கூடும் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

ஆனால் இதை கருணா நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்வார் என்று நான் நினைக்கவி்ல்லை. அப்படி கூறுவது தவறு.

முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவம் முன்னேறி வருகிறது. ஆனால் முல்லைத்தீவு வனப்பகுதியில் ராணுவம் புகுந்து சண்டை போடுவது இயலாத காரியம்.

தலைவரைப்பற்றி , கருணாவுக்கு தெரியும் தானே ...... , உண்மையை தானே கூறியுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரைப்பற்றி , கருணாவுக்கு தெரியும் தானே ...... , உண்மையை தானே கூறியுள்ளார் .

அப்படியாயின்

தலைவரைப்பற்றி அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகிவிடும் நண்பரே...................??????????

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின்

தலைவரைப்பற்றி அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகிவிடும் நண்பரே...................??????????

எல்லாம் இல்லை நண்பரே .......... தற்போது அந்த அடைப்புக் குறியுக்குள்ளே உள்ளது மட்டும் .

சிலவேளை ..... காலம் கனியும் போது , கருணாவின் காட்சியும் மாறலாம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வேனுமா? விமர்சனம் வேனுமா? இந்த செய்திக்கு.

பி* ராமனிடம் கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்னர் தலைவர் பிரபாகரனின் முடிவு எப்படி அமையும் எண்று கேள்வி கேட்க்க பட்டது அதுத்து அந்த நா* சொல்லுது

தலைவர் தானாக தற்கொலை செய்து கொள்வார், அல்லது அவருடன் இருக்கும் போராளிகளே அவரை கொலை செய்வர், அல்லது இலங்கை விமான படையினர் குண்டு வீசி கொலை செய்து விடுவர் என்கிறான்...

அதிலும் தமிழ் செல்வன் அண்ணாவை கொலை செய்ததை போல ஒருவாறு தலைவரை இலங்கை விமான படையினர் குண்டு வீசி கொண்றால் தான் ஆச்சரிய பட மாட்டாராம்....

இந்த கிழட்டு நா***ரி எல்லாம் ஜோசியர் எண்டு கேள்வி கேக்கிறாங்கள்... அதுக்கு அவனும் கற்பனை குதிரையை தட்டி விடுகிறான்....!!

இதுகளை படிச்சாலே எரிச்சல் தான்..

  • கருத்துக்கள உறவுகள்

கருணா எத்தனை தடவைகள் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். :):wub:

தமிழ் மக்களின் நன்மையைக் கருதி கருணாவும் பிள்ளையானும் மீண்டும் இணைந்துள்ளனராம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.