Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு சென்றார் மேனன் - ராஜபக்சேவுடன் பேசுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு சென்றார் மேனன் - ராஜபக்சேவுடன் பேசுகிறார்

வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009, 9:43 [iST]

கொழும்பு: மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வந்துள்ளார். அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுகிறார்.

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நிறுத்த வேண்டும். இதை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்று நேரில் வலியுறுத்த வேண்டும் என தமிழகத்திலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரணாப் கொழும்பு செல்வது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கதவை உடைத்துக் கொண்டு கொழும்புக்குப் போய் விட முடியாது. போர் நிறுத்தம் குறித்தும் பேசும் மன நிலையில் இலங்கை இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்குப் பதில் மேனனை மத்திய அரசு கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.

நேற்று இரவு மேனன் கொழும்பு புறப்பட்டுச் சென்றார். இன்று அதிபர் ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, இலங்கைப் பிரச்சினையில் தீர்வு, அமைதியை ஏற்படுத்துவது ஆகியவை குறித்து மேனன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்துவாரா என்பது தெரியவில்லை.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: கேக் வெட்டி கொண்டாடுவாங்கள்....

வேறென்னத்தை செய்வாங்கள்..... குசலம் விசாரிச்சு கும்மியடிச்சிட்டுபோங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: கேக் வெட்டி கொண்டாடுவாங்கள்....

வேறென்னத்தை செய்வாங்கள்..... குசலம் விசாரிச்சு கும்மியடிச்சிட்டுபோங்கள்.

நிச்சயமாக இது எல்லாம் நடக்கும்

ஏன் ஐயாவுக்கு என்ன...??? கேட்டாலும் பரிசளிக்கப்படும்

அவங்கள் சேர்ந்து திட்டம் போட்டார்கள்

வெற்றியடைந்து விட்டார்கள்

கொண்டாடுவது இயல்புதானே.....???

இதில் உங்களுக்கு ஏன் எரிச்சல்.......???

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த - சிவ்சங்கர் மேனன் சந்திப்பு: சந்திப்பு தொடர்பான விடயங்கள் இருட்டடிப்பு

வெள்ளி, 16 ஜனவரி 2009, 14:29 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]

இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று நள்ளிரவு கொழும்பை வந்தடைந்த சிவசங்கர் மேனன் இன்று காலை சந்தித்து தற்போது முன்னெடுக்கப்படும் யுத்த நடவடிக்கைகள் பற்றியே உரையாடியுள்ளனர். எனினும் சிவசங்கர் மேனனின் கொழும்பு வருகை மற்றும் அரச அதிபருடனான சந்திப்பு தொடர்பான விடங்களை சிறீலங்கா அரசு இருட்டடிப்புச் செய்துள்ளது.

பதிவு

இலங்கை இந்தியா விரிசல் ஆரம்பமாகும் நாள்,வடக்கையும் கிழக்கையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கவிரும்பும் இந்தியா தனக்கு நம்பிக்கையுள்ளவர்களான வரதரை முதலமைச்சராக்கும் திட்டத்துடன் தான் இன்று வருகைதந்துள்ளது,இது பலிக்காதவிடத்து விரிசல் ஆரம்பமாகும்.இதற்கு முன்னோடியாகத்தான் றோ வின் இலங்கை வான் வெளியில் அத்துமீறிய பிரவேசம்.இதைத்தான் ரஜீவ் முன்பு செய்து ஒப்பந்தம் செய்தார் பொறுத்திருந்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

டெயிலிமிரர் போன்ற சிங்களவர்களின் ஆங்கில ஊடகங்கள் கூட இவ்விஜயம் தொடர்பில் அக்கறை செய்யவில்லை. மாறாக இரணைமடு அணைக்கட்டை பிடிச்சது.. பற்றித்தான் கதைக்கினம்..! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) கேக் வெட்டி கொண்டாடுவாங்கள்....

இந்தியாவின் பங்களிப்பு மிகவும் திருப்திகரமாக இருக்கிறது எண்டு அறிக்கை வரும்... :(

யுத்த நிறுத்தம் பற்றி பேச்சு நடைபெறவில்லை.

http://www.lankaenews.com/English/news.php?id=6987

http://www.hindu.com/thehindu/holnus/000200901161921.htm

எதிர்பார்த்தது தானே!

இந்தியனை நம்ப்பினோர்/? போங்கப்பா பெரிய கொட்டாவீ மீண்டும் வருது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவ்சங்கர் மேனனுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி: இரா. சம்பந்தன்

இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாம் திருப்தியடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கு அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், இலங்கை அரசாங்க தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு சென்றுள்ளார்.

அங்கு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து வருகின்றார்.

இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தித்த சிவ்சங்கர் மேனன், இருதரப்பு உறவுகள் குறித்தும் இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலை குறித்தும் கலந்துரையாடியிருக்கிறார்.

இதுகுறித்து இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இருநாடுகளுக்கிடையான இருதரப்பு நட்புறவு வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு உச்சக்கட்டத்தில் இருப்பதாக மேனன் இந்தச் சந்திப்பின்போது தெரிவித்திருப்பதாகத் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கை-இந்திய ஒப்பந்தம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வொன்றினைத் தேடுவதற்கு திறவுகோலாக இருப்பதாகவும், புலிகளுக்கெதிராக அரசு பெற்றுவரும் தொடர் வெற்றிகள் இதனடிப்படையில் சகலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினைக் காண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியிருப்பதாகவும் வெளிநாட்டமைச்சர் ரோஹிந்த போகொல்லாகம தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேனன் நாளைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேனன் - போகொல்லாகம சந்திப்பில் தெற்காசிய தலைவர்கள் மாநாடுபற்றி மட்டும்தான் பேசப்பட்டது என்கிறது சக்தி செய்திகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேனன் போர் நிறத்தம் பற்றி பேசியதாக செய்தி கூறுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன்செய்தி சொல்கிறது

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.