Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லையில் பொது மக்கள் மீது கிளஸ்ரர் தாக்குதல் வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான் படையின் விமானங்கள் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டுகளை வீசி வருகின்றன. இதில் சில குண்டுகள் வெடிக்காமல் காணப்படுகினறன.

மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய, சர்வதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள இக் குண்டுகளை சிறிலங்கா தொடர்ச்சியாக வீசி வருகின்றது.

கடந்த வாரம் இக்குண்டு வீச்சினை சிறிலங்கா மேற்கொண்ட காட்சிகளையும் சிறிலங்கா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.அந்த ஒளிக்காட்சியைக் காண

Cluster202.jpg

Cluster201.jpg

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகளை எடுத்து வைத்து வெடிக்கக்கூடிய மாதிரி சரிப்பண்ணி போட்டு எங்கட விமானத்தில கொண்டுபோய் அவங்களுக்கு ஒருக்கால் போட்டால் தான் தெரியும் சோளம் இப்படி பொரியுதென்று :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாச்சொன்னீங்கள் சுப்பண்ணை. ஆனா நம் தலைவர் அதை செய்யமாட்டார்.

காரணம் அப்படி செய்தால் பாதிக்கப்படுவது சிங்கள மக்களே..........

இதுவரை வான்தாக்குதலில் சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை. அதனால் தான் அவனுக்கு அந்த வலி தெரியவி்ல்லை....

எதிரிக்கும் வேண்டாமே இந்த வலிகள் என்பது தான் நம் தலைவரின் நிலை... ஆனால் அவன் திருந்துறமாதிரி தெரியல... குறைஞ்சது கோல்பேசில ஆவது கொண்டுபோய் போடவேணும். (அலரி மாளிகையிலும்)

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை எடுத்து வைத்து வெடிக்கக்கூடிய மாதிரி சரிப்பண்ணி போட்டு எங்கட விமானத்தில கொண்டுபோய் அவங்களுக்கு ஒருக்கால் போட்டால் தான் தெரியும் சோளம் இப்படி பொரியுதென்று :unsure:

உண்மை தான் சுப்பண்ணை , ஆனால் அந்த நேரம் உலகத்திலுள்ள அத்தனை நாடுகளும் எம்மை கண்டிக்கும் .

அத்துடன் குண்டை வித்தவனும் சேர்ந்து கண்டிப்பான் .

அது சரி ஜே . வி . பி . வெடிக்காத குண்டை யாரிட்டை வாங்கினது எண்டு அறிக்கை இன்னும் விடவில்லையோ ........ ?

கிளாஸ்ரர் குண்டை வீசும் இலைங்கை போர் விமானம்....

வீடியோவை நேரடியாக இணைக்க முடியவிலை

http://www.tamilkathir.com/news/890/58//d,view_video.aspx

உந்த காணொளியில எப்பிடி கிளஸ்டர் குண்டு எண்டு தெரியுது? :unsure:

கீழே விழும் போது ஒரு குண்டு ஒரு முறைக்கு மேலா வெடிப்பது தெளிவாக தெரிகிறது... வயசு போய் கண்பார்வை மங்கினால் கண்ணாடியை போட்டு பார்க்க வேண்டியதுதானே... :unsure:

உதுதான் கிளஸ்டர் குண்டா?.....

ஒரு முறை பதியும் போது 1 மேற்பட்ட குண்டுகளை கழட்டி விடுறான். அந்த காட்சியை வெட்டி ஒட்டி 2...3 தரம் காணொளியில repeat பண்ணினால் அது கிளஸ்ரர் குண்டு ஆகாது :unsure:

ஒரு முறை பதியும் போது 1 மேற்பட்ட குண்டுகளை கழட்டி விடுறான். அந்த காட்சியை வெட்டி ஒட்டி 2...3 தரம் காணொளியில repeat பண்ணினால் அது கிளஸ்ரர் குண்டு ஆகாது :unsure:

அப்ப மேல உள்ளாது என்னகுண்டு?... நிங்கள் ஏதோ கிளஸ்ரரோட ரீ குடிச்சு பழக்கமோ? தெரிந்தா அடகி இங்க போடுறது?

அதொண்டும் இல்லை எலும்பை துக்கி எறியிற எசமானுக்கு விசுவாசம் அப்பிடி... :unsure:

நான்கு குண்டுகளை கழட்டி விடுகிறான்... அதில் ஒவ்வொன்றும் வெடித்து மீண்டும் வெடிப்பதும் அதனால் தீ பரவுவதும் தெளிவாகவே இருக்கிறது...

Edited by தயா

பல்வேறு பட்ட வகையான கொத்தணி குண்டுகள் வெடிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற கதைகள் வேண்டம் சகோதரங்களே!...

சிறிலங்கா அரசு பாவித்த குண்டுகள் ரசியத் தயாரிப்புக்கள் எனச் சொல்லப்படுகின்றது

ஆக, இச் சமயத்தில் நாம் தலைவன் குறித்துப் பெருமைப்பட வேண்டும். பல்வேறு நாடுகள் அனைத்திடம் இருந்தும் உதவிகளைப் பெற்று, தமிழ்மக்கள் மீது போர் தொடுக்கின்ற சிங்கள அரசினைத் தனிய உதவிகள் இன்றி 2 வருடங்களாகத் தினமும் போர் மேகங்கள் சூழச் சந்தித்து வருகின்றார்.

சதாம் அரசால் கூட ஒரு மாதம் அமெரிக்காவைச் சமாளிக்க முடியவில்லை.

இருப்பினும், இது மட்டுமே பெருமைகள் பேசிக் கொண்டிருக்காமல், தலைவரிடம் அப்பாவிப் பொதுமக்கள் குறித்தான சுமைகளை எங்கள் பங்கிற்கு ஏற்றி, அவரை மறுபக்கம் நாங்கள் கஸ்டப்படுத்தி அவரின் துன்பங்களைக் கூட்டாமல் இருக்க, ஒவ்வொரு புலம்பெயர்த் தமிழனும், இம்மக்களைக் காப்பதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும்

அஞ்சல் அனுப்புங்கள், ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்... மனித உரிமை அமைப்பினரைச் சந்தித்து எடுத்தியம்புங்கள்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பங்களிப்புகளை வழங்குங்கள்...உங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் பாவியுங்கள்..

நாம் இந்தச் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றால், போரில் வெற்றிபெறுவதற்கான வழிகளை மட்டுமே சிந்தித்து நடக்க வைக்கின்ற நிலைக்குப் தலைவரை உற்படுத்தி, இதர அனைத்துப் பொறுப்புக்களையும் நாம் எடுக்க வேண்டும்.

இது தான் நாட்டுக்கு உதவுவதற்காக எமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம். இதைத் தவறவிட்டால் என்றைக்கும் கிடைக்காது.

Edited by தூயவன்

ஜோர்ஜியாவில் தென் ஒசற்றியாவில் இப்போதும் வெடிக்கும் கிளாஸ்ரர் குண்டுகள் பற்றிய விபரணம்....

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குப் பிரச்சார அளவு போதாமையும் ஒர காரணமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் நாட்டுக்கு உதவுவதற்காக எமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம். இதைத் தவறவிட்டால் என்றைக்கும் கிடைக்காது.

உண்மை தூயவன் , இனி பிறக்கப்போகும் தலைமுறை கூட எம்மை மன்னிக்காது .

அதற்குப் பிரச்சார அளவு போதாமையும் ஒர காரணமாக இருக்கும்

CNN , BBC , Aljazera செய்த பிரச்சாரங்கள் போதாதா...?? :unsure:

SLAF Jan2009 தாக்குதல்கள் தொகுத்த காணொளி. இதில இறுதியில தமிழ்கதிர் வெளியிட்ட பகுதி வருகுது.

2ஆம் நிலை வெடிப்புகள் குண்டு வெடித்த இலக்கில் இருக்கக் கூடிய எரிபொருள் குண்டுகள் போன்ற ஏனைய flamable/explosive பொருட்கள் காரணமாக இருக்கலாம்.

கிளஸ்டர் குண்டு போட்டால் 2 ஆம் நிலை வெடிப்புகளாக 2...3 தரம் வெடிக்காது. அதைவிட அதிகமாக வெடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பிரச்சாரங்களும் போதுமான அளவு எடுபடாவிட்டால், அது பற்றிய மாற்றங்களைச் செய்ய வேண்டியது எம் தேவையே தவிர, அவர்களுக்குரியது அல்லவே.

குறித்தவை செய்த பிரச்சாரங்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மக்களிடம் சென்றவடையவில்லை என்பதே அதன் அர்த்தமாகும்.

Edited by தூயவன்

நீங்கள் என்ன சொல்ல விளைகின்றீர்கள்?

இலங்கை அரசு கிளஸ்ரர் குண்டை வன்னியில் தமிழ்மக்கள் மேல் போடவில்லை என்கின்றீர்களா?

நீங்கள் என்ன சொல்ல விளைகின்றீர்கள்?

இலங்கை அரசு கிளஸ்ரர் குண்டை வன்னியில் தமிழ்மக்கள் மேல் போடவில்லை என்கின்றீர்களா?

அண்ணை சொல்ல வாறது அது கிளாஸ்ரர் வகை குண்டுகள் அல்ல அதையும் விட மோசமான fuel air explosives எனப்படும் Thermobaric weapon வகையை குண்டுகளாக சொல்கிறார்...

வளியமுக்க குண்டும்..... கொத்தணி குண்டும்.....

மொட்டை வாளாள் வெட்டப்படுவதை விட இவை பரவாயில்லை... :)

வளியமுக்க குண்டும்..... கொத்தணி குண்டும்.....

மொட்டை வாளாள் வெட்டப்படுவதை விட இவை பரவாயில்லை... :unsure:

உண்மை தான் சாதிச் சண்டை கோயில் சண்டை காதல் சண்டை எண்டு கத்தி அலவாங்கு கோடலியளாலை ஆளை ஆள் வெட்டுப்பட்டு சாகாமல் சிங்களவன் ஊபதைகள் வலிகள் குறைந்தாக சாகக் கூடிய நவீன ஆயுதங்களை பாவிச்சு கொலை செய்யிறதுக்கு நன்றி சொல்ல வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான் சாதிச் சண்டை கோயில் சண்டை காதல் சண்டை எண்டு கத்தி அலவாங்கு கோடலியளாலை ஆளை ஆள் வெட்டுப்பட்டு சாகாமல் சிங்களவன் ஊபதைகள் வலிகள் குறைந்தாக சாகக் கூடிய நவீன ஆயுதங்களை பாவிச்சு கொலை செய்யிறதுக்கு நன்றி சொல்ல வேணும்.

என்ன குறுக்கர்? ஊர் உலகத்திலை இல்லாதது முழுக்க எங்கடை நாட்டிலை இருக்கிறமாதிரியெல்லே உங்கடை கதை கிடக்கு.

சாதிப்பிரச்சனை காதல்பிரச்சனை,மதப்பிரச்சனை எண்டு உலகம் முழுக்க இருக்கேக்கை

அதென்ன உங்களுக்கு மட்டும் எங்கடை நாட்டிலை இருக்கிற சின்னப்பிரச்சனையளை தூக்கிப்புடிக்கோணும் போலை கிடக்கோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.