Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவ விமான நிலையம் முற்றுகை. -பெண்கள், குழந்தைகள் கைது

Featured Replies

26559574hz1.jpg

இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழின அழிப்புக்கு இந்திய இராணுவம் ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. அந்த ஆயதங்களை தாய்தமிழகம் வழியாக அனுப்பிவைக்கப்படுகிறது.

இதை கண்டித்து தஞ்சையில் உள்ள அரசுக்கு சொந்தமான இராணுவ விமான தளத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள்.

விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார், டி.எஸ்.பி இளம்பரிதி ஆகியோர் தலைமையிலான 100 போலிஸார் போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர்.

தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி சென்ற குழவினரை போலிஸார் மீண்டும் தடுத்ததால் அங்கேயே உட்கார்ந்து விட்டார்கள்.

அக்கூட்டத்தில் மணியரசன் பேசும்போது, தமிழர்களை கொல்லும் இந்திய அரசே உடனே போரை நிறுத்து தமிழர்களை கொல்லாதே, ஈழதமிழர்களை கொல்ல ஆயுதம் அனுப்பிய இந்த விமான படைதளத்தை உடனே மூட வேண்டும். இல்லையேல் பொதுமக்களே இந்த விமான படை தளத்தை மூடுவார்கள் என எச்சரித்தார்.

aaaaln6.jpg

மணியரசன் பேசும்போதே போலிஸார் அதை தடுக்க போராட்ட குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது.

உடனே போராட்ட குழவினர் மணியரசன், கொளத்தூர் மணி உட்பட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து வல்லத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இன்று மாலை அவர்களில் 244 பேரை ரிமாண்ட் செய்து திருச்சி சிறைக்கு காவல்துறை அனுப்பியுள்ளது. இந்த கைதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.

Nakkheeran

Edited by vasisutha

  • தொடங்கியவர்

...............

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க ஜனநாயகம். ஒழிக பயங்கரவாதம்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ் பொதுவுடமை கட்சி ......தொடர்க உங்கள் பணி ..........

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு எங்கே நோக்கி செல்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கான பொறுப்பை மத்திய அரசுதான் ஏற்கவேண்டும்.

இலங்கைக்கா இந்தியா தனது மானிலங்களில் ஒன்றை வேகவிடுகிறது.. சூடு படரும்போதுதான் வேதனை தெரியும். வாழ்க சனநாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்திய அரசு உண்மையான புலி வாலைப்பிடித்துள்ளது.உறவுகளே உங்களுக்கு கோடி நன்றிகள்.தொடரட்டும் உங்கள் அதரவுப்போராட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டம்:ஒரு வயதுக் குழந்தை உட்பட 600 பேர் கைது!

இலங்கை ராணுவத்திற்கு தஞ்சை விமானப் படைத்தளத்திலிருந்து ஆயுதங்கள் அனுப்பப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி தஞ்சையில் உள்ள விமானப் படைத்தளத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கெடுத்துக் கொண்ட இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இம்முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெ.மணியரசன் , கொளத்தூர் தா.செ.மணி, உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களுள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரை கிளையைச் சேர்ந்த இளமதியும் அவரது 1 வயதுக் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நாளை அதிகாலை திருச்சி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த பத்திரிக்கையாளர் முத்துக்குமாருக்காக சென்னையில் இன்று நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தஞ்சையிலிருந்து ஆயுதங்கள் அனுப்புவதைக் கண்டித்தும், விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டத்தில் கைது செய்ய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு பெண்களும் குழந்தைகளும் மட்டும் இன்று நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழ்செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒய்யார கொண்டையில் தாழம்பூவாம் உள்ளே இருப்பதுவோ ஈரும் பேனும் என்பது போல்

உலகின் பெரிய ஜனநாயக நாடு என்ற தம்பட்டம்;

மனிதவுரிமை என்னும் சொல்லை உச்சரிக்க தெரியாத அரசியல் வாதிகளால் ஆளப்பட்டு வருகிறது

ஜனநாயக ரீதியாக மேற் கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் கூட அனுமதிக்க படுவதில்லை.

இதில் காந்தீயம் வேறு

ஒன்றை அடக்கப்போய் ........... இன்னொன்றை .............??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.