Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா படையினரின் உறவினர்கள் கொழும்பில் முற்றுகை: கடந்த சில நாட்களில் மட்டும் வன்னியில் 800 படையினர் பலி; 700 பேர் காயம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் நடைபெற்று வரும் மோதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த சிறிலங்கா படையினரின் உறவினர்கள் பலர் கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று தமது பிள்ளைகள், கணவன்மார் குறித்து உடனடியாக தகவல் தருமாறு அழுது புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் 800-க்கும் அதிமான படையினர் உயிரிழந்தும் 700-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என்பதை கொழும்பில் உள்ள உயர் இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதுதானே ...... பார்த்தன் சத்தம் இல்லாமல் ஏதோ நடக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே ...... பார்த்தன் சத்தம் இல்லாமல் ஏதோ நடக்குது .

அது தெரியுது

ஆனால் நாம்தான்

ஆற்றில்போட்டுவதுபோல் அளந்து போட்டபடி...........

சிங்களவன் குண்டையும் எண்ணுவதில்லை

விழும் கொலையையும்எண்ணுவதில்லை

அப்போ.......எப்படி........

ஓவர் ரேக் செய்வது..................???????

தாரை தப்பட்டை உடன் வெளிக்கிட்டதுகளின் காலுக்கு கீழால் புலிகள் ஓடி கடித்துக்குதறுகிறது சத்தமில்லாமல்.. வேதனையால் சத்தமுபோடாமல் வெளியிலும் சொல்லேலாமல் பொதுசனங்களில் பொழிந்து வெறி தீர்த்துக்கொண்டு இருக்கு தப்பின சிங்கங்கள், அந்த மூன்று சிங்கங்கள் பட்டையளும் மாட்டி இருக்கும்..எல்லாம் நாட்படத்தெரியும்.. ஆயுதத்தை புடுங்க வெளிக்கிட்டவை,வைத்துவிட்டு சரண் அடையுங்கோ என்னும் போது தெரிய வேணும் எதோ சங்கதி நடக்குது என்று... எதற்கும் உதுகளை நாங்கள் விட்டிட்டு பார்க்கிற எங்கடை பரப்புரைகளை பார்ப்போம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
(..)எதற்கும் உதுகளை நாங்கள் விட்டிட்டு பார்க்கிற எங்கடை பரப்புரைகளை பார்ப்போம்...
  • கருத்துக்கள உறவுகள்

அது தெரியுது

ஆனால் நாம்தான்

ஆற்றில்போட்டுவதுபோல் அளந்து போட்டபடி...........

சிங்களவன் குண்டையும் எண்ணுவதில்லை

விழும் கொலையையும்எண்ணுவதில்லை

அப்போ.......எப்படி........

ஓவர் ரேக் செய்வது..................???????

மனதை தளர விடாதீர்கள் விசுகு ,

சிங்களவனுக்கு ........ போறவன் , வாறவன் எல்லாம் கப்பல் , கப்பலா அள்ளிக் கொடுக்கும் போது .....

குண்டை எண்ண எங்கை நேரம் இருக்கப்போகுது .

நாங்கள் விரைவில் ஓவர் ரேக் பண்ணுவம் என்று , என் உள் மனம் சொல்கிறது .

அவர் சொன்னது குண்டுகளை எண்ணச்சொல்லி இல்லை...

எண்ணுக்கணாக்கில்லாம் உதவுங்கள் எண்டுதான்...... உதவி இல்லாம் குண்டுகளை என்ன மரத்திலே ஆயுறது?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னது குண்டுகளை எண்ணச்சொல்லி இல்லை...

எண்ணுக்கணாக்கில்லாம் உதவுங்கள் எண்டுதான்...... உதவி இல்லாம் குண்டுகளை என்ன மரத்திலே ஆயுறது?

ஓ ..... இப்ப விளங்கிவிட்டது சூறாவளி . :rolleyes:

ஜனவரி 26ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரையான ஒரு வார காலத்துள் இலங்கை விமானப்படையினர் வீசிய குண்டுகளாலும் ஆட்லறி செல் தாக்குதல்களாலும் 733 அப்பாவித் தமிழர் கொல்லப்பட்டுள்ளனர். 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 26ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 2ஆம் திகதி வரையிலான ஒருவார காலத்தில் மட்டும் அப்பாவித் தமிழ் மக்கள் 733 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2615 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரையும் புலிகள் என்று அரசாங்கம் கூறிவருவது கடைந்தெடுத்த பொய்யாகும்.

கடந்த 26ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையில் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 302 பேர் கொல்லப்பட்டதுடன் 985 பேர் படுகாயமடைந்தனர்.

3ஆம் திகதி மாத்திரம் 5000 செல் வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பாரிய சேதத்துக்கு உள்ளானதுடன் அங்கு 53 பேர் கொல்லப்பட்டு 82 பேர் படுகாயமடைந்தனர். இதில் தாதியொருவரும் 11 நோயாளிகளும் அடங்குவர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் அங்கு கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்றும் அது இராணுவ இலக்கு என்றும் கூறுகின்றார். அப்படியே புலிகள் தான் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தாலும் கூட வைத்தியசாலைகள் யுத்த தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று சர்வதேச பாதுகாப்புச் சட்டம் ஒன்று இருக்கின்றது என்ற பொறுப்பு இருக்க வேண்டும்.

பாதுகாப்புச் செயலாளரின் கூற்றுப்படி பார்ப்பதென்றால் வவுனியா, அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மீது புலிகள் தமது இலக்குகளாகக் கொண்டு தாக்குதலை மேற்கொள்வார்களேயானால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது இவ்வாறு இருக்க வெளியுறவுத்துறை அமைச்சின் செயலர் பாலித்த கோஹன அவ்வாறு வைத்தியசாலையின் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவே இல்லை எனக் கூறுகிறார். இது எப்படிப்பட்ட கபட நோக்கு என்பது தெளிவாகின்றது.

வன்னியில் மூன்றரை இலட்சம் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

வடக்கிலே கடத்தல், காணாமல் போதல், கொலை, கொள்ளை, ஊடகவியலாளர் படுகொலை, அச்சுறுத்தல் என விரோத செயல்கள் தலைதூக்கியுள்ளன.

யாழ்ப்பாணத்திலே வீட்டுக்கு வீடு சிங்கக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என்ற அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கொண்டாடப்படுகின்ற சுதந்திரம், தமிழ் மக்களின் நெஞ்சத்தில் இருந்து பிறக்கின்ற சுதந்திரமாக அமையாது.

61ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இலங்கை உலகிலேயே வன்முறைகளில் முதலாவது நாடாகவும் மனித உரிமை மீறல்களில் உச்ச ஸ்தானத்தைப் பிடித்திருக்கின்ற நாடாகவும் அத்துடன் எல்லாவிதத்திலும் தோல்விகளை தழுவிக் கொண்டிருக்கின்ற நாடாகவும் திகழ்கின்றது எனத் தெரிவித்தார்.

GTN

LINK

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வன்னியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட சாதாரண படையினரின் மாதாந்த சம்பளம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே உறவினர்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, கொல்லப்பட்ட உயர் பதவியில் உள்ள படையினரின் சம்பளங்கள் மாத்திரமே அரசாங்கத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து வாசிக்க

இதில இருந்து என்ன தெரியுது சிங்கள அரசை பற்றி.. அவங்கள் உயிரோட இருக்கேக்க உறவினர வடிவா கவனிப்போம் .. செத்தா பிறக்கு கை கழிவி விட்டுடுவோம் என்ர மாரி எல்லோ இருக்கு :icon_idea::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.