Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

வணக்கம்,

நான் இஞ்ச அஞ்சு வருசங்கள் சொச்சம் ஒருவரிட்ட பாட்டு படிச்சு (musical vocal) வருகிறன். பாடல்கள் பாடேக்க மற்றும் மேடையில கவனிக்கவேண்டிய நுட்பங்கள் எல்லாம் சொல்லித் தருவார். எனது குருவைப்பற்றி பிரிதொரு பொழுது யாழில விரிவாய் சொல்லிறன். அப்ப என்ன எண்டால்...

அண்மையில கனகாலத்துக்குப் பிறகு அவரிட்ட வகுப்புக்கு போனன். வீட்டில இருந்து சுமார் நாப்பது நிமிசங்கள் நடந்துபோக வேணும். வகுப்பில பயிற்சி செய்யேக்க அவருக்கு முன்னால வடிவாய் பாடாட்டிக்கு அவர் ஆக்களை பகிடி பண்ணுவார். அப்ப அவரிட்ட வகுப்புக்கு போகேக்க வீட்டில கொஞ்சம் பயற்சி செய்துபோட்டுத்தான் போறது.

அண்டைக்கு நேரம் கிடைக்க இல்லை, நல்ல மனநிலையும் இருக்க இல்லை. இதனால பயிற்சி செய்ய நேரம் கிடைக்க இல்லை. ஆனாலும் வகுப்புக்கு நான் தெருவால நடந்து போகேக்க வாய்க்க பாட்டுக்களை முணுமுணுத்து பயிற்சி செய்துகொண்டு போனன். நான் அவரிட்ட ஆங்கிலப்பாடல்கள்தான் பிரதானமாய் பழகிறது. ஆனாலும் வாயுக்க வந்த தமிழ்ப்பாட்டுக்கள், கொஞ்சமாய் தெரிஞ்ச கர்நாடக சங்கீதம் எண்டு வாயுக்க வந்ததை எல்லாம் வாயுக்க முணுமுணுத்துக் கொண்டு போனன்.

அப்ப என்ன நடந்திச்சிது எண்டால்... தெருவால எனக்கு எதிராக போய்க்கொண்டு இருந்த ஒருத்தர் திடீரெண்டு எனக்கு முன்னால் வந்து ஆர் யூ ஓகே? எண்டு கேட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் முரளியை கொஞ்ச நாளாய் காண வில்லை. ......நான் நினைத்தேன் ஊர்வலத்தில முமுரமாய் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் யூ ஓகே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவணம் முரளி ரோட்டால பாடிக்கொண்டு வேறயாரோட வீட்டுக்குள்ள போறதில்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் "காசு போடேல்லை எண்டு நினைச்சுச் சந்தோஷப்படுங்கோ:rolleyes:

முரளி நாங்கள் என்றால் எங்கட பாட்டுக்கு போயிடுவம். அவருக்கு எவ்வளவு அக்கறை பாருங்கள்! :lol:

சந்தேகம் வந்திருந்தா அவர் அம்புலன்சுக்கு போன் அடிச்சிருப்பார். :rolleyes::D

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

முரளி , இனிமேல் பாட்டு வகுப்பிற்கு போகும் போது , காதில் இரண்டு மெல்லிய வயர்களை கொளுவிக்கொண்டு போங்கள் .

பார்ப்பவர்கள் தொலைபேசி கதைப்பதாக நினைப்பார்கள் . :rolleyes:

:rolleyes: யோவ் முரளி, எப்படி இருந்த நீங்க இப்படி ஆயீட்டீங்களே
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன நடந்திச்சிது எண்டால்... தெருவால எனக்கு எதிராக போய்க்கொண்டு இருந்த ஒருத்தர் திடீரெண்டு எனக்கு முன்னால் வந்து ஆர் யூ ஓகே? எண்டு கேட்டார்.

முரளி என்று பெயர் மாற்றியதுமே ஒரு மார்க்கமாக தான் இருக்கிறீர்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி நலம்தானே!

முரளி,

இதனை உங்களுக்கு றோட்டில் தான் கேட்டனர். இப்பவெல்லாம் இதே கேள்வியை என் வீட்டிலேயே கேட்க ஆரம்பித்துவிட்டனர். இன்னும் கொஞ்சம் படுகொலை படங்களையும், வீடியோக்களையும் பார்த்தேன் என்றால், நிச்சயம் 911 இனை அழைப்பார்கள் என்று நினைக்கின்றேன்

ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் ரோட்டில் போகும் போது

பாடி - ஆடிக் கொண்டு போவார்கள்.

அது குறித்து அவர்கள் வெட்கப்படுவதில்லை.

அவர்கள் நடந்து போகும் போதே இசையோடு நடை பயில்வது போல இருக்கும்.

கெட் வோக்...

பெரும்பாலும் அவர்கள் காதில்தான் வோக்மென் தொங்கும்....

நம்மை விட அடிமையான ஒரு இனம்

கூச்சமில்லாமல் இருப்பதால் எல்லாவற்றிலும் முன்னுக்கு வந்துவிட்டார்கள்.

(குற்றங்களை விட்டு விட்டால்) இசை - ஆடல் - பாடல் தொடக்கம்

மக்களைக் கவரும் அனைத்திலும் , இறுதியாக உலகம் போற்றும் அதிபராக கூட ...

நம்மவர் கூனிக் கூனியே

அடுத்தவர் பின்னால வாலாய் தொங்குறாங்க.

முரளி போல போனால்

நம்மவர்கள்

சுகமில்லையா? என்பதை நேராவும் சொல்ல தைரியமில்லாமல்

நலமா எனக் கேட்டு ஒரு நையாண்டி?

நீங்க நாலு நாள் ஆடி ஆடி பாடி நடங்க முரளி

5வது நாள் ஒரு நாப்பது அந்த ஏரியாவில ஆடி ஆடி பாடி நடக்கும். :)

பிறகென்ன உலகத்துக்கே காச்சல்தான் :)

முதலில் விசர் பேர்வழி

பின்னர் உசார் பேர்வழி

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் ரோட்டில் போகும் போது

பாடி - ஆடிக் கொண்டு போவார்கள்.

அது குறித்து அவர்கள் வெட்கப்படுவதில்லை.

அவர்கள் நடந்து போகும் போதே இசையோடு நடை பயில்வது போல இருக்கும்.

கெட் வோக்...

பெரும்பாலும் அவர்கள் காதில்தான் வோக்மென் தொங்கும்....

நம்மை விட அடிமையான ஒரு இனம்

கூச்சமில்லாமல் இருப்பதால் எல்லாவற்றிலும் முன்னுக்கு வந்துவிட்டார்கள்.

(குற்றங்களை விட்டு விட்டால்) இசை - ஆடல் - பாடல் தொடக்கம்

மக்களைக் கவரும் அனைத்திலும் , இறுதியாக உலகம் போற்றும் அதிபராக கூட ...

நம்மவர் கூனிக் கூனியே

அடுத்தவர் பின்னால வாலாய் தொங்குறாங்க.

முரளி போல போனால்

நம்மவர்கள்

சுகமில்லையா? என்பதை நேராவும் சொல்ல தைரியமில்லாமல்

நலமா எனக் கேட்டு ஒரு நையாண்டி?

நீங்க நாலு நாள் ஆடி ஆடி பாடி நடங்க முரளி

5வது நாள் ஒரு நாப்பது அந்த ஏரியாவில ஆடி ஆடி பாடி நடக்கும். :(

பிறகென்ன உலகத்துக்கே காச்சல்தான் :)

முதலில் விசர் பேர்வழி

பின்னர் உசார் பேர்வழி

அது :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.