Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஞ்சியிருப்போரையும் இழப்போமா இல்லை....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....?

(11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை)

பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப்

பதுங்குளி வாசலிலும்

பாதையோரச் சகதியிலும்

உழன்ற பொழுதுகளில்

உனக்கும் சாவுவரும்

என்றெண்ணியிருப்பாயா ?

நம்பிக்கையறுந்த வாழ்வு

நாளையுனக்கு இல்லையென்று

எப்போதாவது எண்ணியிருந்தாயா ?

எங்களைப்போல உனது மகளும்

மனைவியும் அம்மாவும் அக்காவும்

மருமக்களும் பற்றித்தானே

மனசுக்குள் அழுதிருப்பாய் ?

சாவரும் நாளின் முன்னிரவு

உனக்குச் சாவு நாளையென்று

சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ?

போரின் கொடிய வாய்க்குள்

போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ?

பாழும் பொஸ்பரஸ் குண்டுகள்

உன்மேல் வீழும்வரை உனக்கு எந்த

விபரீதமும் தெரிந்திருக்காது அல்லவா ?

ஒருவயது மகளும்

உன்னையே நம்பிய அம்மாவும்

உன் அன்பினியவளும்

மட்டும்தானே - உன்

மனதில் நின்றிருப்பர்.

செத்து நீ கிடந்த தெருவில்

உனைப்பார்க்கவே முடியாமல்

யாவரும் தாண்டியோடினராம்....

பின் வந்து பார்த்த போது

குருதிச் சேற்றில் நீ

முடிந்து மணிகள் ஆகியிருந்ததாம் ?

சுண்ணமிடிக்கச் சுடுகாடு கொண்டு செல்ல

உறவு கூடி ஒப்பாரி வைத்துன்

இழப்பின் வலி குறைக்க

அவகாசமில்லாமல் ஐயனே

அருகில் மண்கிண்டி

அப்படியே புதைத்துவிட்டு

உறவெல்லாம் திசைக்கொன்றாய்

சிதறியதாம்....

ஐயனே !

அந்தக்கணங்கள்

நேரில் நின்றது போல்

நெஞ்சு வலிக்கிறது.

34வயதில் போர் உன் வாழ்வு தின்று

போய்விட்டாய் கோபி.

இங்கு நம் வீடுகளில்

உன் நினைவுகளில்

அழுகையும் ஆற்றுதலில்லாத்

துயரமுமாய்....

மிஞ்சியிருப்போரையும்

இழப்போமா இல்லை

உயிருடன் பார்ப்போமா ?

15.02.09

Edited by shanthy

மரணத்தின் கடைசித்துளிகளில் என்ன எண்ணியிருப்பார் என்று நினைக்கவே மனதை பிசைகிறது.......... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கும் விலைகள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது எத்தனை உயிர்கள் :mellow::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் கடைசித்துளிகளில் என்ன எண்ணியிருப்பார் என்று நினைக்கவே மனதை பிசைகிறது.......... :)

கடைசித்துளிகள் யாருமற்று அனாதையாய் வீதியில் இறக்கும் கொடுமை என்னென்ன அவன் மனதில் உதித்திருக்குமோ ? தமிழன் விதியிதுவென்று எழுதப்படாத சட்டமாய்ப் போயிற்று எங்கள் வதி. :)

கொடுக்கும் விலைகள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது எத்தனை உயிர்கள் :(:(

கொடியவெறி அடங்காமல் கொத்தணிக்குண்டுகளைக் கொட்டிக் கொள்கிறான் பகைவன். என்ன சொல்ல ? இந்தவிதி மாறாதா ???????????

எப்ப எங்களுக்கு விடிவு :):)

இதயத்தில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் கவிதை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்ப எங்களுக்கு விடிவு :icon_idea::)

இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறோம். விடியுமென்ற நம்பிக்கைகள் இன்னும் இருக்கிறது.

இதயத்தில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் கவிதை...

இவன் நினைவில் அழுவதா இன்னும் எவர் உயிர் பிரிந்திடுமோ என ஏங்குவதா புரியவில்லை ? தொலைபேசிகள் அழைத்தால் உயிர் வலிக்கிறது. யாரைக்கொன்ற செய்தி வருமோ என்ற ஏக்கம் :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நெஞ்சை பிழிகிறது. நாளொன்றுக்கு ஐந்தாறாக கொல்லப்பட்ட எம்மக்கள் என்று நூறு எனுமளவிற்கு கூடிவிட்டது. வன்னியில் ஒருவரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நெஞ்சை பிழிகிறது. நாளொன்றுக்கு ஐந்தாறாக கொல்லப்பட்ட எம்மக்கள் என்று நூறு எனுமளவிற்கு கூடிவிட்டது. வன்னியில் ஒருவரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

சாவுகளையும் துயரங்களையும் இடையிடை சில தொடர்புகள் சொல்லிவிடுகின்றன. இழப்புக்கள் எங்களைத் துரத்தியபடிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின் வலியை எடுத்து வந்த கவிதை கண்டு எம் ஒவ்வொருவரது இதயத்திலும் இரத்தம் கசிகிறது. எம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்

  • 4 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ak_zps61b8b11e.png

 

புஸ்பநாதன் ஜெயகாந்(கோபி)11.02.2009 அன்று எறிகணைவீச்சில் உயிரிழந்தார். இன்று 5ம் ஆண்டு நினைவுநாள்.

 

5ஆண்டு நினைவு நாளின்று எங்கள் உயிரறுந்த பொழுதின் நினைவும் இன்று....!  உனது மகள் இன்று உன்னைப்போலவே உலகை வெல்லும் சக்தியாய் வளர்கிறாள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க நினைத்தாலும் முடியவில்லை. இறக்குமட்டும் மாறாத வலி. மாற்றுவதற்கு கையிலேயே மருந்து உண்டு. மருந்தை வாய்க்குக் கொண்டுசெல்வதற்கு, ஒன்றுசேர மறுக்கும் விரல்கள் மோதிரங்கள் தேடுகின்றன. :(

 

கோபிக்கு அஞ்சலிகள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறக்க நினைத்தாலும் முடியவில்லை. இறக்குமட்டும் மாறாத வலி. மாற்றுவதற்கு கையிலேயே மருந்து உண்டு. மருந்தை வாய்க்குக் கொண்டுசெல்வதற்கு, ஒன்றுசேர மறுக்கும் விரல்கள் மோதிரங்கள் தேடுகின்றன. :(

 

கோபிக்கு அஞ்சலிகள்!!

இந்த அவலமான இழப்புகளிலிருந்து மீள்வது ஒவ்வொருவரின் மரணத்தின் பின்னரேதான். இட்ட விதி இதுவாய் போனது என்ன செய்வோம். ஈரவிழி கசிய இழந்த உயிர்களின் நினைவுகளைச் சுமப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.