Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் சகோதர யுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் சகோதர யுத்தம்

பாகம் ஒன்று.

ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.

சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது.

ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்டஇயக்கங்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயுள்ள ஈழ ஆதரவு தமிழக நண்பரொருவர் அடிக்கடி கேட்பார். என்னப்பா, தோற்கிறீங்க போல இருக்கே என்று. நான் சொல்வது, மு.க கூட்டம் செய்வது போல காகிதத்தில் ரத்தக் கண்ணீர் வடிக்கிற, சட்ட சபையில் வேட்டி அவிழ்க்கிற "போராட்டமாக" இருந்தால் வெல்வது சுலபம். நாங்கள் ரத்தம், சதையோடு போராடும் போது இப்படி பின்னடைவு தோல்வியெல்லாம் வரும் என்று. இந்த குளிரூட்டிய அறையிலிருந்து காகிதத்தில் நடத்தும் போருக்கே, மு.க தரவழிகள் எத்தனை பேருக்கு ஆப்பு வைத்துப் பிழைக்க வேண்டியிருக்கு எண்டால், ஒரு நாட்டை கட்டியெழுப்ப போராடும் புலிகள் எத்தனை பேரை விலக்கி வைக்க வேண்டியிருக்கும்? இதை மு.க வுக்காக எழுதாமல், மு.க வை நம்பும் தமிழக உறவுகளுக்காக எழுதி அவர்கள் அறியச் செய்யுங்கள் சாத்திரி.

சாத்திரி... முக்கியமாக இந்திய சகோதரர்களுக்கு இந்த விசயங்கள் தெளிவாக சென்றடையவில்லை.... உங்களுடைய இந்த முயற்ச்சி இன்றைய காலத்தின் தேவை... நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி... முக்கியமாக இந்திய சகோதரர்களுக்கு இந்த விசயங்கள் தெளிவாக சென்றடையவில்லை.... உங்களுடைய இந்த முயற்ச்சி இன்றைய காலத்தின் தேவை... நன்றி.

கொக்குவிலான் என்னுடைய வலைப்பூவில் போட்டு அதனை பெரும்பாலான இந்திய உறவுகளிற்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன். தமிழ்மணம் தமிழிஸ் திரட்டிகளிலும் இணைத்துள்ளேன்.

இங்கேயுள்ள ஈழ ஆதரவு தமிழக நண்பரொருவர் அடிக்கடி கேட்பார். என்னப்பா, தோற்கிறீங்க போல இருக்கே என்று. நான் சொல்வது, மு.க கூட்டம் செய்வது போல காகிதத்தில் ரத்தக் கண்ணீர் வடிக்கிற, சட்ட சபையில் வேட்டி அவிழ்க்கிற "போராட்டமாக" இருந்தால் வெல்வது சுலபம். நாங்கள் ரத்தம், சதையோடு போராடும் போது இப்படி பின்னடைவு தோல்வியெல்லாம் வரும் என்று. இந்த குளிரூட்டிய அறையிலிருந்து காகிதத்தில் நடத்தும் போருக்கே, மு.க தரவழிகள் எத்தனை பேருக்கு ஆப்பு வைத்துப் பிழைக்க வேண்டியிருக்கு எண்டால், ஒரு நாட்டை கட்டியெழுப்ப போராடும் புலிகள் எத்தனை பேரை விலக்கி வைக்க வேண்டியிருக்கும்? இதை மு.க வுக்காக எழுதாமல், மு.க வை நம்பும் தமிழக உறவுகளுக்காக எழுதி அவர்கள் அறியச் செய்யுங்கள் சாத்திரி.

ஜஸ்ரின் முடிந்தளவு தமிழகஉறவுகளிடம் சென்னடையவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும் ஆகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார்!!!

ஒருசில கேள்விகளுக்கு அடியும் முடியும் தெரியாமல் திணறியவர்களுக்கு நல்லதொரு விளக்கங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளீர்கள்.

இதன் மூலம் அறியாத பல உண்மைகளை புலம்பெயர்மக்கள் அறியக்கூடியதாக இருக்குமென நம்புகின்றேன்.

இன்றையகாலகட்டத்தில் இப்படிப்பட்ட விளக்கமான தகவல்கள் அத்தியவசியமானது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry491153

அத்துடன் உங்களின் இந்தப்பகுதியும் பலருக்கு பல விடயங்களை அறிந்து கொள்ள உதவும்.

தொடருங்கள்.

  • 2 weeks later...

சாத்திரியாரே நான் சில மாதங்களுக்கு முன் பரிஸ் சென்ற போது அங்கு ஒருவரை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது அவர் ரெலோ அமைப்பில் இருந்த ஒருவராம். பெயர் ரெலோ புறூஸ் எனவும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். இவர் வடமராட்சி பகுதியில் இருந்தவராம் சாவகசேரி பொலிஸ் நிலைய தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவராம். அவர் சொன்ன தகவல் இந்தியாவில் இருந்து ஆயுதங்களுடன் தரை இறங்கிய தமக்கு போதிய நிதி வசதி கிடைக்காததால் தாம் மிகவும் கஸ்டபட்டதாகவும் ( புலிகள் உள்ளிட) அந்த நேரத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சரால் தேசிய பாதுகாப்பு நிதி திரட்டப்பட்டதாம் அதற்கு யாழ்ப்பாணத்து பெரும் பணக்காரர்களும் பங்களித்திருந்ததாகவும் இந்த செய்தி தங்களுக்கும் வந்ததாகவும் புலிகள் அமைப்பே ஒரு சிறு சந்திப்பு ஒன்றை போராளிக்குளுக்களுக்குள் நடத்தி அப்படி பாதுகாப்பு நிதி கொடுத்த அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் முடிவெடுக்கபட்டதாம். அதன் படி ஒவ்வொருவருக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டதாம். அப்படி கொடுத்துவிட்டு பறிமுதல் செய்யும் நாட்களையும் தீர்மானித்துவிட்டு பின்னர் புலிகள் அந்த திட்டப்படி செயற்படாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோரை மக்களுக்கு அடையாளம் காட்டி கொடுத்து விட்டனராம். இதனால் தானாம் தங்களுக்கும் புலிகளுக்கும் விரோதம் தொடங்கியதாக அவர் சொன்னர்.

இது உண்மையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரே நான் சில மாதங்களுக்கு முன் பரிஸ் சென்ற போது அங்கு ஒருவரை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது அவர் ரெலோ அமைப்பில் இருந்த ஒருவராம். பெயர் ரெலோ புறூஸ் எனவும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். இவர் வடமராட்சி பகுதியில் இருந்தவராம் சாவகசேரி பொலிஸ் நிலைய தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவராம். அவர் சொன்ன தகவல் இந்தியாவில் இருந்து ஆயுதங்களுடன் தரை இறங்கிய தமக்கு போதிய நிதி வசதி கிடைக்காததால் தாம் மிகவும் கஸ்டபட்டதாகவும் ( புலிகள் உள்ளிட) அந்த நேரத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சரால் தேசிய பாதுகாப்பு நிதி திரட்டப்பட்டதாம் அதற்கு யாழ்ப்பாணத்து பெரும் பணக்காரர்களும் பங்களித்திருந்ததாகவும் இந்த செய்தி தங்களுக்கும் வந்ததாகவும் புலிகள் அமைப்பே ஒரு சிறு சந்திப்பு ஒன்றை போராளிக்குளுக்களுக்குள் நடத்தி அப்படி பாதுகாப்பு நிதி கொடுத்த அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் முடிவெடுக்கபட்டதாம். அதன் படி ஒவ்வொருவருக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டதாம். அப்படி கொடுத்துவிட்டு பறிமுதல் செய்யும் நாட்களையும் தீர்மானித்துவிட்டு பின்னர் புலிகள் அந்த திட்டப்படி செயற்படாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோரை மக்களுக்கு அடையாளம் காட்டி கொடுத்து விட்டனராம். இதனால் தானாம் தங்களுக்கும் புலிகளுக்கும் விரோதம் தொடங்கியதாக அவர் சொன்னர்.

இது உண்மையா?

:mellow: :mellow: :lol::wub::lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாவகசேரி பொலிஸ் நிலைய தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவராம்

தலைமை தாங்கியவர் கரவெட்டியை சேர்ந்தவர் என நினைக்கிறேன். களத்தில் எதிரியின் குண்டுக்கு பலியாகிவிட்டார்.

Edited by nunavilan

ஆம் நுணாவிலான் அவர் தான் வல்லிபுர கோவிலுக்கு அண்மையாக உள்ள உபயக்கதிர்காமத்தில் வசித்ததாக சொன்னார். அவர் அடித்தால் என்ன பிடித்தால் என்ன எமக்கென்ன. பூலிகளுக்கும் ரெலோ அமைப்புக்கும் விரோதம் வர இவர் சொன்னதா காரணமாக இருந்தது? ஆனால் கடந்த கால கசப்புக்களை அவர்கள் மறந்து செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தம் குழுவோடு விடுதலை நீரோட்டத்தில் மீண்டும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இவரின் முன் உதாரணத்தை அனைத்து துணை இராணுவ குழுக்களாக செயற்படும் தமிழ் குழுக்களும் இன்று பரிசீலணை செய்ய வேண்டும். ஏன் என்றால் நாம் வேறு இனம், சிங்களவர்கள் வேறு இனம். என்றுமே இரண்டும் ஒட்டப்போவதில்லை. மனமாற்றம் நிச்சயம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

படித்த ஆட்கள் தான் புளட்டில்[PLOT] இருந்தார்களாமே அது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

படித்த ஆட்கள் தான் புளட்டில்[PLOT] இருந்தார்களாமே அது உண்மையா?

உண்மையாயிருக்கும். புத்தகப் படிப்பாளிகள் எண்டைக்கும் சுய புத்தியுடன் நடந்து கொள்வதில்லை. யாராவது ஏற்கனவே எழுதி வைத்த தத்துவங்கள் மூலம் தான் நிகழ் காலத்தையும் பார்க்கப் பழகிக் கொள்பவர்கள். உண்மையாயிருக்கலாம். ஆனா நான் அறிஞ்ச வரை ஈரோஸ் தான் புத்திஜீவிகளைக் கொண்ட அமைப்பாக இருந்தது. நான் சொல்வது உண்மையான புத்திஜீவிகளை!. அவர்கள் புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

படித்த ஆட்கள் எல்லா இயக்கத்திலும் தான் இருந்தவை.PLOT இன் ஸ்திரமற்ற தலைமையால் அவ்வியக்கம் நாசமாக்கப்பட்டது. தேசப்பற்று மிக்க , பல மிக திறமையான PLOTபோராளிகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். மீண்டும் அவர்களை அரவணைக்காதது எமது துரதிஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்டேன் முன்பு யாழ் பல்கலைகளகத்தில் படித்த அநேகமானோர் புளட்டில்[plot] இருந்தவர்களாமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.