Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம் - சிங்கள ராணுவ அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம் - சிங்கள ராணுவ அதிகாரி

புல்மோட்டைக்கு இந்தியப் படைகளும், அதன் தளபதிகளும் இருப்பதாகவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பகிரங்கமாகக் கூறியிருந்தார்

இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாற்ரை காட்டுபகுதியை முற்றூகை (87ஆண்டுமுற்றூகையிடப்பட்டபிர

இந்தியாவிடம் இது போன்ற நீண்ட தூர ஆயுதங்கள் இருக்குமா? :)

சிலவேளை அவர்கள் புதிதாய் கண்டுபிடித்து இருக்கலாம்.... அதை புலிகளிடம் கொடுத்து பரிசீலிக்க வந்தநரோ?????

எது எப்படி என்றாலும்.... ஆதாரம் அற்ற செய்தி இது!

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ குழு என்ற பெயரில் வந்தவர்களோ இவர்கள் :):o

எது எப்படி என்றாலும்.... ஆதாரம் அற்ற செய்தி இது!

உங்கள் கருத்தை ஒதுக்கவில்லை.... இருந்தாலும் எப்படியான ஆதாரம் இருந்தா ஒத்துக்கொள்வீர்கள்? அடிச்சவனே அந்து சொல்லவேண்டுமா?

எந்த நடுநிலையாளர்களும் போகமுடியாது.... அடிக்கிறவன் எதிரி அவனும் சொல்லமாட்டான்.. அடிவாங்கினவன் உயிரோடில்லை.... இதில ஆதாரக்துக்கு எங்க போறது? மெய்பொருளை உய்த்தறியவேண்டும்...

60 கி.மீ வீச்சுக் கொண்ட ஏவுகணை புல்மோட்டையில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு ஏவலாம்.

ஆனா ஆட்டிலறி மற்றும் பல்குழல் கணைகளை எப்படி புல்மோட்டையில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு ஏவுறது?

பாதிக்கப்பட்ட தரப்பு இதுபற்றிய எந்தத் தகவலையும் வெளிப்படுத்தவில்லை. எந்த உயிரினத்தையும் தப்ப முடியாதபடி அழிக்கும் ஏவுகணைகள் அதுவும் 5 கிலோமீற்றர் பிரதேசத்தை. அதன்படி பார்க்கப் போனால் மீதமிருக்கும் 25 சதுரக்கிலோ மீற்றரை 5 ஏவுகணைகளால் அழித்துவிடலாம். இந்திய இராணுவம் நேரடியாக போரில் சம்பந்தப்பட்டிருக்கலாம். மிகுதிக்கதைகள்?

ஆதாரங்கள் எதுவும் இணைக்காது வாய்வழி வரும் இது போன்ற செய்திகளின் பின்னணியில் உள்ள சிங்களத்தின் பிரச்சார தந்திரங்களை புரிந்து கொள்வோம்!

இன்று மிகவும் மனச்சோர்வு அடைந்த நிலையில் உள்ள சிங்கள இராணுவத்தை தட்டி எழுப்பவும் வன்னி மக்களை அச்சுறுத்தி அவர்களின் மனவுறுதியை சிதைக்கவுமே (Scare Technique) சிங்களம் தற்போது இது போன்ற செய்திகளை கசிய விடுகிறது என்பதை புரிந்து கொள்வோம்!

சிங்கள இராணுவத்தின் பொய் பித்தலாட்டங்களை இன்னும் நம்மில் சிலராவது நம்பும் நிலையில் இருப்பது ஆச்சரியமானதும் வேதனையானதும் ஆகும்.

ஆழ்ந்து சிந்திப்போம்! அவசர கருத்துக்களை தவிர்ப்போம்!!

ஆதாரங்கள் எதுவும் இணைக்காது வாய்வழி வரும் இது போன்ற செய்திகளின் பின்னணியில் உள்ள சிங்களத்தின் பிரச்சார தந்திரங்களை புரிந்து கொள்வோம்!

இன்று மிகவும் மனச்சோர்வு அடைந்த நிலையில் உள்ள சிங்கள இராணுவத்தை தட்டி எழுப்பவும் வன்னி மக்களை அச்சுறுத்தி அவர்களின் மனவுறுதியை சிதைக்கவுமே (Scare Technique) சிங்களம் தற்போது இது போன்ற செய்திகளை கசிய விடுகிறது என்பதை புரிந்து கொள்வோம்!

சிங்கள இராணுவத்தின் பொய் பித்தலாட்டங்களை இன்னும் நம்மில் சிலராவது நம்பும் நிலையில் இருப்பது ஆச்சரியமானதும் வேதனையானதும் ஆகும்.

ஆழ்ந்து சிந்திப்போம்! அவசர கருத்துக்களை தவிர்ப்போம்!!

உண்மைதான். தமிழர் போராட்ட சக்தியினையும் அங்கு இருக்கும் மக்களையும் அப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்கான தந்திரப் பயமூட்டும் பிரசாரமாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான். தமிழர் போராட்ட சக்தியினையும் அங்கு இருக்கும் மக்களையும் அப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்கான தந்திரப் பயமூட்டும் பிரசாரமாகவும் இருக்கலாம்.

இதுபோன்று நாமும் சிங்களவனுடைய மனவுறுதியை உடைக்கும், இன்னும் சோர்வடைய வைக்கும் பிரசார உத்திகளை முன்னெடுக்க முடியாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தச்செய்தியின் மூலத்தை அனுப்பியவர் யார் என்று சொன்னால் சிலவேளை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதைச் சொல்லப்போவதில்லை. இது ஆதாரமற்ற செய்தியாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஒன்று மட்டும் உண்மை, நீங்கள் ஆதாரமற்ற செய்தி என்று ஒதுக்கிவிடும்போது இன்று ஈழத்தில் இந்தியா நடத்தும் இன அழிப்புப் போரையும் மறுதலிக்கிறீர்கள் என்பதும் உண்மை.

எனது பார்வையில் இது அரசாங்கத்தின் ஒரு பிரச்சார யுக்தி என்று தான் தென்படுகிறது! இந்திய இராணுவம் இலங்கையில் இது போன்ற தாக்குதல்கள் மேற்கொள்ளுது என்றால்.... தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்கமாட்டார்கள்...

மற்றும் ரகுணாதன் உங்களுக்கு யார் இத்தகவலை அனுப்பினாகள் என்று தெரியவில்லை.... நிச்சையம் தமிழர் தரப்பில் இருந்து வந்திருக்க வாய்ப்பு இல்லை!!!!

இந்த செய்தியை நானும் இன்னொரு இணையத்தில் வாசித்தேன்.. தற்போது உள்ள நிலையில் தமிழ்மக்களின் உயிர்கள் மதிப்பில்லாமலும் அரசியலும், பலிவாங்கல்களும் தான் முதலிடம் வகிக்கும் இலங்கையிலும், இந்தியாவிலும் எதுவும் சாத்தியமே..

எதனையும் ஒதுக்கிவிடமுடியாது.. அப்படி எதாவது உண்மையானால் 5கி மீற்றர் அழிக்கும் ஆயுதங்கள் உண்மையானால் தமிழக மக்களுக்கு உடன் செய்தி சொல்லப்படவேண்டும். உடன் இந்திய மத்திய அரசை முடக்கும் நடவடிக்கைகளை தமிழகமக்கள் செய்யவைக்கவேண்டும்..

இரண்டாவது உலகின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்..

இந்திய அரசு இவ்வளவு காலமும் நரித்தந்திரம் இலங்கையில் தீர்வுகள் வரவும் விடாமல், பிரச்சனை உண்டுபண்ணி இலங்கை முழுவதையும் தனது தயவில் இருக்க வைப்பதே சாத்தானின் வேலைகள்..

எமக்கு முக்கியம் தமிழக மக்களே அரசியல்வாதிகளோ இந்திய மத்திய கொள்கைகளே இல்லை..

ஆனால் இப்போது இருக்கும் 20 சதுர கிலொ மீட்டருடன் பார்க்கும் போது இவ்வகையான ஆயுதங்களுக்குத் தேவை இராது. அதைவிட இராணுவம் இப்பொது பாதுகாப்பு வலயத்தை அண்மிப்பதாக் கூறுகிறது, என்வே இனி நடக்கப் போவது தலைவருக்கு மட்டும் தான் வெளிச்சம். ஆனால் இரசாயன் ஆயுதம் பாவிக்க சந்தர்ப்பம் உள்ளது.

1.ஆனால் ஒரு விடய்த்தில் மட்டும் இராணுவத்தின் பொய் தெரிகிறது, இவர்கள் கொல்லும் புலிகளின் உடல்களை கானவில்லை.

2.வன்னிக்கு: இவ்வளவு தூரம் வந்தும் உருப்பாடியாக எந்த ஆயுத தளவாடத்தையும் காணவில்லைய். காட்டுவது எல்லம் துருப்பிடித்த பாவனைக்கு உதவாத பொருட்களாவே உள்ளன. இராணுவத்தின் செயற்பாடுகளிளும் முன்னர் இருந்த வேகத்தை காணோம். daily mirror இல் இப்போது இராணுவச் செய்திகள் வருவது மிகக் குறைவு

என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் இருக்குக்ம் வரை எந்த நல்ல செய்தியும் வராது, அது வரை எம்மை காப்பாற்றுவது எப்படி ????

  • கருத்துக்கள உறவுகள்

60 கி.மீ வீச்சுக் கொண்ட ஏவுகணை புல்மோட்டையில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு ஏவலாம்.

ஆனா ஆட்டிலறி மற்றும் பல்குழல் கணைகளை எப்படி புல்மோட்டையில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு ஏவுறது?

1928ம் ஆண்டே ஜேர்மனியில் இருந்து பாரிஸ்இற்கு ஆட்லறி அடித்தான் கிட்லர். நீங்கள் எங்கே இருந்து வாறீங்கள்?

இன்றைய சூழ்நிலையில் இந்தியா இவ்வாறான நகர்வை மேற்கொள்ளாது. காரணம் இது இந்தியத் தேர்தல் காலம். தற்போதைய நிலையில் இந்திய இராணுவத்திற்கு தமிழீழத்தில் ஏற்படும் சிறிய இழப்புக்களும் காங்கிரஸின் வீழ்சிக்கான அடிப்படையாகத்தான் பிரசாரப்படுத்தப்படும்.

இந்திய இராணுவம் போரில் ஈடுபடாது என்று கூறவரவில்லை. எம் மீதான உக்கிரமான போரை இந்தியா என்பதைவிடவும் காங்கிரஸ் கட்சியே முன்னின்று நடத்துகிறது என்பது வெளிப்படை. ஏனைய கட்சிகளின் பிரசாரங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.